இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

கள்ளிக்காட்டு இதிகாசத்தில் அன்பு

முனைவர் பி. வித்யா
மதுரை - 625016


முன்னுரை

உலகை ஆளும் ஒரு சொல் அன்பு. பலவிதமான அன்பு மனிதர்களால் பரிமாறப்படுகிறது. இத்தகைய அன்பே மனிதர்களை நல்அறங்களோடு வளர்த்தெடுக்கிறது. மனிதர்களுக்கிடையேயான அன்பு உறவு நிலைகளில் தொடங்கி உலகளாவியதாக உயருகிறது. அதேபோன்று மனிதர்களும் வேறுவகை உயிரினங்களையும் அன்பு செய்கின்றனர். எல்லாவகையான உயிர்களும் அன்பைக் காட்டினால் தூண்டல்களையும் துளங்கல்களையும் காட்டும் என்கின்றனர் அறிவியலாளர்கள். இவை இவ்வாறிருக்க, சமூகக் கட்டமைப்பிற்கு அடிப்படையான இவ்வன்பு நெருங்கிய நிலையில் மனிதர்களைப் பிரதிபலிக்கும் புதினங்களில் எவ்வாறு காட்டப்படுகின்றன என்பது ஆராயத்தக்கது. அந்தவகையில் ‘அன்பு’ என்கிற உய்ப்புநிலை எவ்வாறு கள்ளிக்காட்டு இதிகாசத்தில் காட்டப்பட்டுள்ளது எனக் காண்பது இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.

அன்பு

அன்பு மனிதரிடையேயும் பல்வேறு உயிரினங்களிடையேயும் எவ்விதமான தாங்கங்களை ஏற்படுத்தியதாகக் கள்ளிக்காட்டு இதிகாசம் புதினம் பதிவு செய்துள்ளது என்பதனை அறிய;

1. மனிதர்கள் மீதான அன்பு

2. தாவரங்கள் மீதான அன்பு

3. பறவைகள் மீதான அன்பு

4. விலங்குகள் மீதான அன்பு

என்பனவாகப் பகுத்துக் கொண்டு ஆராயலாம்.


மனிதர்கள் மீதான அன்பு

மனிதன் ஒரு சமூக விலங்கு என்பர் சமூகவியலாளர்கள். மனிதர்களை மனிதர்களாகக் காட்டுவது இந்த சார்பு நிலையும், அதனால் அவன் மனதில் எழும் அன்பு நிலையுமே ஆகும். இதனை மனிதநேயம் என்றும், மனிதம் என்றும் குறிப்பிடுவர். மனிதம் போற்றும் சில நிகழ்வுகள் பதிவு செய்யப் பெற்றுள்ளன.

கிராமங்களில் விசப்பூச்சிகளின் தீண்டல்கள் அடிக்கடி நிகழும். அதற்கான உடனடித் தீர்வாகக் கடிப்பட்ட இடத்தில் சுண்ணாம்பினைப் பூசுவர். அதே நேரத்தில் மாலை ஆறுமணிக்கு மேல் சில பொருட்களைக் கிராமங்களில் வீட்டிற்கு வெளியே கொடுக்க மாட்டார்கள். இந்நிலையில் மனிதம் உயிர் பெறுவதனை வைரமுத்து, “செல்லத்தாயி! செல்லத்தாயி! கிழவிக்குப் பூரான் கடிச்சிருச்சு வெடுக்வெடுக்கின்னு வெசம் ஏறுது. கடிவாயில வைக்கணுமாம், சுண்ணாம்புக்குடு… சுண்ணாம்பு” திடுக்கிட்டாள் செல்லத்தாயி கொடுக்கக்கூடாது சாஸ்திரப்படி. ஆனால் சாஸ்திரம் தள்ளிவைத்து தர்மம் காத்தாள். ஓடிச்சென்று சுண்ணாம்புச் சட்டியில் சுட்டுவிரல் விட்டழுத்தி கொள்ளைச் சுண்ணாம்பு கொடுத்தனுப்பினாள்” (1) என்று பதிவு செய்கிறார்.

தன் காதலி மற்றொருவனை மணந்து அவனும் இறந்து போக அவளுடைய அப்பாவும் சில நாளில் இறக்க, அதனை நினைந்து நினைந்து அவளது அம்மாவும் இறந்துபோக, எந்தவித ஆதரவும் இல்லாமல் அனாதையாக நின்றவளைக் கண்டு மனிதம் விழித்தெழ பேயத்தேவர் என்கிற கதாப்பாத்திரம் தன் வீட்டிற்கே அழைத்து வருவதனை “கேட்டுக்கடி அழகம்மா. இன்னிக்கிருந்து இவளும் நம்ம குடும்பத்தில ஒருத்தி. நீ குடிக்கிற கஞ்சியில கொஞ்சம் இவளுக்கும். நான் மொதல்ல செத்தா நீங்க கூடி என்ன தூக்கிப் போடுங்க. நீங்க மொதல்ல செத்தா நான் தூக்கிப் போடுறேன்” (2) என்று குறிப்பிடுவதே காதலை விடவும் மனிதமே உயர்ந்து நிற்பதை உணர முடிகிறது.

இவற்றிற்கும் மேலாக தன் கணவனின் காதலி என்று அறிந்தும் அனாதையாக்கப்பட்ட நிலையில் தம்மை போன்ற பெண் என்று மட்டுமே கருதி அவளைத் தன்வீட்டில் அனுமதிக்கும் நிலையினை “எந்திரியாத்தா…எந்திரி. நீ எதச் சொல்ல நெனக்கிறியோ அத முப்பது வருசத்துக்கு முன்னாலேயே எங்கிட்டச் சொல்லிருச்சு எஞ்சாமி” கீழே விழுந்து கிடந்தவளைச் சேர்த்து அள்ளினாள் அழகம்மாள்” (3) என்று பெண்ணின் உயர் மனதைக் காட்டி விடுகிறார் வைரமுத்து.

தன்அம்மா மறுமணம் செய்து தன்னை விட்டுச் சென்றதைத் தாங்க முடியாமல் தற்கொலைக்கு முயலும் நிலையில் அவனைக் காப்பாற்றுவது மனிதத்தின் பொருட்டே ஆகும். இதனை “மொக்கராசை மூக்கில் குத்தி மூர்ச்சையாக்கித் தோளில் ஏற்றிக் கரைசேர்த்தான் காவல்காரன். முகத்தில் டார்ச் அடித்தான் ஒருவன் “ஏய்! நம்ம பேயத்தேவர் பேரன் மொக்கராசு. இப்பதானப்பா இவுக ஆத்தாளுக்குக் கூடக் கல்யாணமாச்சு” இடுப்பில் கட்டியிருந்த கயிற்றைச் சாட்சிவைத்து அவன் தற்கொலைக்கு வந்தவன் என்பதனை அனுமானித்து தலைகீழாய்க் கவிழ்த்துத் தண்ணீர் கக்கவைத்து பேயத்தேவர் வீட்டில் கொண்டு சேர்த்தபோது ஊரே கூடிவிட்டது” (4) என்று காட்டுகிறார். இத்தகைய மனிதர்களின் மனிதத்தின் காரணமான உதவிகளால் தாம் கிராமங்கள் மனிதத்தின் பிறப்பிடமாய் இருக்கின்றன.


தாவரங்கள் மீதான அன்பு

தாவரங்கள் (பயிர்கள்) என்றாலே விவசாயிகளின் வாழ்வு என்று அர்தத்தம். பயிர்களில்லா விவசாய வாழ்வு இல்லை. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரை விடவும் வாடிப்போவது நம் விவசாயிகள் தாம். இதனைப் பாதுகாத்து அதற்குத் தேவையானவற்றைச் செய்யும் விவசாயி குறித்து “மட்டைக்குள்ள இருந்த வண்டு புழு பூச்சிகளையெல்லாம் எடுத்துவிட்டாரு. பெறகு மேல் மட்டையப் புடிச்சிக்கிட்டு கீழ்மட்டையில கால் வச்சு பலங் கொண்டமட்டும் மிதிச்சுக் குதிச்சாரு. இருகிக் கெடக்கிற மட்டைக விரியணுமாம் கலகலன்னு காத்தாடணுமாம். குறுமணலையும் வேம்பம் பிண்ணாக்கையும் கலந்து மயக்கம் போட்டுக் கிடக்கிறவன் மூஞ்சியில தண்ணி தெளிக்கிற மாதிரி மட்டைக்குள்ள அடிச்சாரு” (5) என்கையில் விவசாயி எங்ஙனம் மரங்களைப் பாதுகாத்தனர் என்பது புலனாகிறது.

சில மரங்கள் சந்ததிகள் தாண்டி நிலை பெற்றிருக்கும். அதன் பயன் கருதி மட்டுமல்ல அதன் இருப்பு தவிர்க்க முடியாததாகி அதுவே தெய்வமாகும் நிலையையும் எட்டிவிடுகிறது. அந்நிலை குறித்து “பொழுது மசங்க அங்கே அடைய வரும் கிளிகள் பறந்து பறந்து பாடும் போதும் பலிஞ்சடுகுடு ஆடும் போதும் புளியமரமே குரலெடுத்து பேசுவதாய்த் தோன்றும். சாலையை ஒட்டித் தோட்டத்தோடு சேர்ந்திருப்பதால் பேயத்தேவர் அந்த மரத்தைக் குல தெய்வமாகக் கும்பிட்டு வந்தார்” (6) என்று பதிவு செய்கிறார்.

அணைத் தண்ணீர் வந்து விளைந்த பயிர்களெல்லாம் மூழ்கப் போகும் நிலையில் ஒரு விவசாயியின் மனம் தாங்கிக் கொள்ளுமா? தாங்க முடியா விவசாயியின் நிலையினை;

“தெக்குத்தோட்டம்
வெளைஞ்சு நிக்குது கம்பங்காடு.
கடைசி அறுவடை
பேயத்தேவரு கண்ணுல கண்ணீரு.
நடுங்குது ஈரக்கொல: ஒடுங்குது உசுரு” (7)

எப்பொழுது வேண்டுமானாலும் அணையின் நீர்மட்டம் ஊரையே முழுகிவிடும் என்று அறிந்தும் கதிரறுவாள் கொண்டு அறுவடைக்குச் செல்லும் விவசாயியின் ஒப்புப் பாடலினை வைரமுத்து;

“சடை சடையாய்த் தானியங்க
சரஞ்சரமாத் தட்டாங்க
நச்சுன்னு புடிச்சகாடு
நாளைக்கு என்னதில்ல
கடைசி அறுவடைக்குக்
கையோட தெம்புமில்ல
கருதறுக்கும் பண்ணருவா
கழுத்தறுத்தாத் துன்பமில்ல” (8)

என்று குறிப்பிடுகையில் பயிர்களின் நினைவும் அணையின் நீரில் கரைசேராமல் போகப் போகும் கடைசி அறுவடையும் விவசாயியின் மனதில் வேதனை விதைப்பதை உணர முடிகிறது.


பறவைகள் மீதான அன்பு

பறவைகள் என்றாலே ருசி பார்க்கத்தான் என்று ஒரு சிலர் நினைக்கையிலே அவைகளும் உயிர்கள் தாம் என அவற்றைச் சிலர் பாதுகாக்கவும் முற்படுகின்றனர். காடையினைச் சாப்பிட பிடித்துச் செல்லும் காதலனிடம் கனிவாகவும் அதே நேரத்தில் கொல்லக்கூடாது என்பதனைக் காட்டும் விதமாகவும், சமைக்கக் கொடுத்த காடையினை திரும்ப அவரிடமே ஒப்படைக்கும் சூழலினை, “கொழ கொழன்னு கொழந்த மாதிரி இருக்கு காடை. கொல்லமனசில்ல… குடுத்திரு” காடைய ஒப்படைச்சிட்டா கத்தாழ நாரோட” (9) என்று பதிவு செய்கிறார்.

கிணற்றுக்கு நீரிறைக்கச் சென்ற செல்லத்தாயி கூட்டிலிருந்து கீழே விழுந்து தத்தளித்த காகத்தினை கூடு சேர்த்த நிகழ்வினை “கிணற்றுக்குள் கதறிப் பறந்தது காகமொன்று. கிணற்றின் உள்வட்டப் பொந்தில் அதுகட்டிய கூட்டிலிருந்து தவறி விழுந்த குஞ்சு தண்ணீரில் கிடந்தது. பதறிப் போனாள் செல்லத்தாயி “யாத்தே” என்ற நெஞ்சில் ஒருகணம் கைவைத்து நின்றாள். மிதக்கும் குஞ்சருகே வாளியை வீசினாள். என்னதான் முயன்றும் சின்னக் குஞ்சு வாளியில் சேரவில்லை. அவள் கொஞ்சங்கூட அஞ்சவில்லையே உருளையில் கயிற்றை உருவாஞ் சுருக்கிட்டுச் சரசரவென்று கிணற்றிலிறங்கினாள். குஞ்சைக் கூடுசேர்த்து காகத்திடம் ‘கொத்தும் பெத்து’ சொட்டச் சொட்டக் கரையேறினாள்” (10) என்று காட்டுகிறார்.

கோழி போன்ற வீட்டில் வளர்க்கும் பறவைகளைச் சொத்து எனவே மக்கள் மதித்ததனை “அய்யோ! ஏன் ஆஸ்தி போச்சே!” என்று அலறினாள். “என்கோழிய எந்தநாய் தூக்குச்சோ? இல்ல எந்தத் தூமச்சீல வந்து தூக்கிட்டுப் போனானோ?” (11) என்று திருடு போன தன் கோழி தன் சொத்தெனவும் அதனைத் திருடியவர்களை திட்டித்தீர்க்கும் பெண்ணை படைத்துக் காட்டியிருக்கிறார் வைரமுத்து. அதேபோன்று வீட்டில் வளர்க்கப் படாதகாட்டுப் பறவைகளுக்கும் இரங்கும் விவசாயியின் மனதை “வெவசாயம் பண்றது காக்கா குருவிக்கும் சேத்துத்தான்! நம்மளும் வெரட்டிட்டா அதுக எங்கிட்டுப் போகும்?” (12) என்று நினைப்பதாகப் பதிவு செய்கிறார்.

விலங்குகள் மீதான அன்பு

மனிதனின் முதல் முயற்சிகள் பலவும் விலங்குகளின் மூலமாகவே பரிசோதிக்கப்பட்டது. விலங்குகளை பழக்கப்படுத்தி அவன் தொடர்ந்து முன்னேறிக் கொண்டேயிருக்கிறான். ஏதேனும் ஒரு விலங்கினை தனது வீட்டில் வளர்க்கவும் பழகிக் கொண்டான். சக்கரக் கண்டுபிடிப்பின் உச்சமாக எருதுகளைப் பூட்டியதும் தான் போக்குவரத்து உண்டானது. இத்தகைய எருதுகள் இன்றும் விவசாயத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. காளைகள் உழவுக்கும் மனிதருக்கும் நண்பன் ஏதாவதொரு விதத்தில் அதன்மீது கோபத்தைக் காட்டிவிட்ட உழவனின் மனநிலையை “ரெண்டு மூணுநாளாய்ப் பேயத்தேவருக்கு அன்னந்தண்ணி செல்லவில்லை காடுகரை போகவில்லை ‘ஏம்பத்தி கெட்டுப் போச்சே! ஏம்புத்தி கெட்டுப் போச்சே!’ என்று புலம்பிக் கொண்டே இரவும் பகலும் கொட்டத்திலேயே விழித்துக் கொண்டு மாட்டின் காயத்தின் மீது கண்ணீர் விட்டுக் கழுத்தைக் கட்டிக் கொண்டே கிடந்தார்” (13) என்று கூறுகையில் மாடுகளின் மீதான அன்பு புலப்படுகிறது.

பல வருடங்களாக வளர்த்த மனிதர்களை மாடுகளும் மறக்காமல் அவர்களின் வாசனை தேடிவருவதும் நிகழ்வதுண்டு. மாடுகளை வேறு ஒருவர் ஒட்டிக் கொண்டு போன பிறகும் அவை வீடுவந்து சேர்ந்த நிகழ்வினை, “பாதி அறுந்த கயிற்றோடு மயிலக்காளையும் பிய்த்துக் கொண்டோடி வந்த முளைக் குச்சியோடு செவலைக் காளையும் ‘வந்துட்டம்யா’ என்று கண்ணில் நீர் பெருக்கி நின்றன. “வந்துட்டீங்களா… என் செல்லங்களா!” மாடுகளின் மீது விழுந்து-புரண்டு -தடவி -வருடி -அழுது -புலம்பி -அணைத்து -அரற்றி அவற்றின் வாயோடு முத்தமிட்டுப் பைத்திய நிலையில் பரவசமானார் பேயத்தேவர்” (14) என்று கூறும்போது விலங்குகளின் மீதான அன்பின் உச்சநிலையை காணமுடிகிறது.


விலங்குகளில் விவசாயியின் நண்பனான மாடுகள் கன்றுகளாக இருப்பது முதல் அவை வளர்க்கப்பட்டு வருகின்றன. இவை ஒன்றின் ஒன்றாக தொடரும் நினைவுகளின் வழி பேயத்தேவரின் கதாப்பாத்திரம் மூலமாக வைரமுத்து “ரெண்டாளு மட்டம் தண்ணிபோகுது ‘கன்டு’ மருகுது என்ன பண்ண…? இந்த ரெண்டு தோள்ல தூக்குனேன் கன்னுக் குட்டிய “தண்ணியோட நான் போனாலும் பரவாயில்ல கன்டக் கரசேத்துரு சாமி”ன்னு பாரத்த சாமிமேல போட்டுக் கன்ட என்தோள்ல போட்டுக் கரைசேத்தன்டா…! அன்னைக்கி அது என் ஒடம்புல ஒட்டுனவாசன இன்னைக்கி வரைக்கும் மணக்குதடா” (15)

மாடுகள் மனிதர்கள் மீது தனது அன்பினை வெளிப்படுத்துகிறதா என்றால் அவையும் தனது அன்பினை காட்டவே செய்கின்றன என்பதனையும் “அரைகுறையாய் அரைத்த மருந்தை எடுத்துக் கொண்டோடி மாட்டின் வாயை அகலத் திறந்து புகட்டக் கொஞ்சம் கொஞ்சமாய் விசம் இறங்கியது. விசம் நீங்கிய மாடு அன்றைக்கு அவரை ஒரு பார்வை பார்த்ததே! இப்படி ஒரு நன்றியுள்ள பார்வை எந்தமனுசக் கண்ணிலாவது உண்டா?” (16) என்று மாடுகளின் அன்பினையும் பதிவு செய்கிறார்.

முடிவுரை

இப்படியாக மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், பறவைகள் ஒன்றின் ஒன்றாக பிணைந்துள்ள இந்த அன்புணர்வே இன்னும் மனித இனம் நிலை பெற்றிருப்பதற்கான அடிப்படை. மனிதமில்லாத மனிதன் இருந்த மனிதன் இருப்பதலால் இந்த பிரபஞ்சத்திற்குக் கூட எந்த நன்மையும் விளையப் போவதில்லை. ஆகவேதான் சமூகம் கருதும் எழுத்தாளர்கள் மனிதத்தையும் அன்புணர்வையும் முன் வைத்து படைப்புகளைப் படைக்கின்றனர். அந்த வகையில் அமைந்தது தான் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் எனும் புதினம் என்பது மேற் சொன்ன காரணங்களால் புலனாகிறது.

அடிக்குறிப்புகள்

1. வைரமுத்து, கள்ளிக்காட்டுஇதிகாசம், ப.34

2. மேலது, ப.253

3. மேலது

4. மேலது, ப.56

5. மேலது, ப.256

6. மேலது, ப.122

7. மேலது, ப.354

8. மேலது, ப.355

9. மேலது, ப.242

10. மேலது, பக். 33-34

11. மேலது, ப.162

12. மேலது, ப.200

13. மேலது, ப.131

14. மேலது, ப.135

15. மேலது, பக்.127-128

16. மேலது, ப.133.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/general/p206.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License