இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

சோழர்கால இசைக் கருவிகள்

மு. கயல்விழி
உதவிப் பேராசிரியர் (தமிழ்),
பச்சையப்பன் மகளிர் கல்லூரி, காஞ்சிபுரம்.


முன்னுரை

இசை நுட்பமான கலைவடிவமாகும். இதற்கு உருவம் கிடையாது. இது அனுபவித்து அறியக்கூடியது. காற்றின் உராய்வே ஓசையாக எழுகின்றது. இனிய ஓசையே இசையாகின்றது. இசை நாடு, மொழி, மதம், இனம் கடந்தது. கேட்போர் அனைவரையும் பிணைக்கக்கூடியது. இசையை மீட்ட இசைக்கருவிகள் உருவாக்கப்பட்டன. பழந்தமிழர்கள் பலவிதமான இசைக்கருவிகளை உருவாக்கிப் போந்தனர். சங்ககாலத்தில் குழல், முழவு, தண்ணும்மை, முரசு, யாழ், பதலை, தொண்டகப்பறை, குளி, தடாரி போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டன. அதன் பின் வந்த பல்லவர் காலத்திலும், சோழர் காலத்திலும் பலவித இசைக்கருவிகள் இசைவாணர்களால் உருவாக்கப்பட்டன. உருவமற்ற கானத்தை உருவமுடைய இசைக்கருவிகள் உருவாக்கிப் போந்தன.

சோழர் கால இசைக் கருவிகளின் வகைகள்

தமிழிசையின் பொற்காலமாகக் கருதப்பட்ட சோழர் காலத்தில் பலவித இசைக்கருவிகள் இசைக்கப்பட்டன. அவை இயல்புக்கேற்ப பல வகையாக வகைப்படுத்தப்பட்டன. அவை வருமாறு;

1. தோல்கருவி

2. நரம்புக்கருவி

3. கஞ்சக்கருவி

4. துளைக்கருவி

5. மிடற்றுக்கருவி

அக்காலத்தில் காணப்பட்ட பக்கவாத்தியங்கள் வருமாறு;

1. சித்தமத்தளம்

2. எலத்தாளம்

3. கொம்பு

4. திமில்


சோழர்கால இசைக்கருவிகள்

காளம்

இது ஒரு வகை துளைக்கருவியாகும். கங்கில், குழல், மோதிரம் போன்ற பகுதிகளை உடையது. கங்கிலையும், குழலையும் இணைக்கும் திருகுச்சுறையே மோதிரமாகும். இவை ஒற்றைக் குழலுடையவை, இரட்டைக் குழலுடையவை என்று இரு வகைப்படும். குறிப்பாக கோயில் திருப்பலி நிகழ்வின் போதும்,கோயில் வழிபாட்டின் பொழுதும், திருவிழாக்களிலும் காளம் ஊதப்பட்டது. தஞ்சை பெரிய கோயிலில் காளம் சிறப்புடன் ஊதப்பட்டது. (1)

வங்கியம்

இது குழல் போன்ற இசைக்கருவியாகும்.இராகத்தையும் வர்ண மெட்டையும் குரலிசை போன்று இசைக்கச் செய்யும் திறனுடையது. மூங்கில், சந்தனம், வெண்கலம், செங்காலி, கருங்காலி போன்ற மரத்தால் இது செய்யப்பட்டது. இது ஆடற்கலையில் பக்கவாத்தியமாகப் பயன்பட்டது. நிர்ணயிக்கப்படும் இசை ஸ்வரங்களைக் கொண்டு இதில் ஸ்ருதி சேர்க்கப்பட்டது.

சங்கு

சங்கு ஆடற்கலைக்குப் பக்கவத்தியமாகப் பயன்படுத்தப்பட்டது. பலவிதமான சங்குகள் கோயில்களில் ஊதப்பட்டாலும் வலம்புரிச்சங்கு தனித்தன்மை வாய்ந்தது. இது திருவாரூர் தியாகேசர் சிவாலயத்தில் சிறப்பாக ஊதப்பட்டது. (2)

சேகண்டிகை

இது வெண்கலத்தட்டை வளைத்து செய்யப்படும் தட்டு போன்ற கருவியாகும். இதைத் தொங்கவிட்டுக் கொண்டு அடிப்பர். திருமணஞ்சேரி கோயிலில் சேகண்டிகை இசைக்கப்பட்டது. (3)

குடமுழா / பஞ்சமுகவாத்தியம்

இது பித்தளை அல்லது செம்பினால் செய்யப்பட்டது. இதன் மேற்புரத்தில் ஐந்து முகங்கள் காணப்படும். இது அகமுழவு, புறமுழவு, நான்முழவு, காலைமுழவு, பண்ணமை முழவு என்று ஐந்து வகைப்படுத்தப்பட்டன. இது பாடற்துறையிலும், ஆடற்துறையிலும் பயன்படுத்தப்பட்டது. திருத்துறைப்பூண்டி கோயிலில் 12ஆம் நூற்றாண்டைச் சார்ந்த குடமுழாக் கருவி இன்றுமுள்ளது. இது சிவனது ஆட்டத்துக்கு சிறப்புடன் இசைக்கப்பட்டது.

கரடிகை

இது கரடி கத்துவது போல் ஓசையெழுப்பும் இசைக்கருவியாகும். இது அகமுழவு வகையைச் சார்ந்த கருவியாகும். நிறுத்த வகையிலான ஆடற்கலைக்கு இதைப் பயன்படுத்தினர். சிவபெருமான் திருநடனத்தின் பொழுது இது இசைக்கக் கூடியது. திருவான்மியூர் வேதபுரீஸ்வரர் கோயிலில் இது இசைக்கப்பட்டது. (4)

திமிலை

இது பம்பை போன்ற தோல் கருவியாகும். இது உருளை வடிவமுள்ள இரு பறைகளைச் சேர்த்துக் கட்டி வாசிக்கப்படும். இதனை இடுப்பருகேக் கட்டிக்கொண்டு வளைந்த கோல் கொண்டு இசைப்பர். இதை மரத்தினால் அல்லது பித்தளையால் செய்தனர். இது பண்ணமை முழவு, வீரமுழவு என்று இருவகைப்படும். திருக்கோயில் உவச்சு கொட்டும் பொழுது இதை இசைப்பர். திமிலையும், பம்பையும் ஒன்றே என்று சில ஆய்வாளர்கள் கருதுவர். திருவிடைமருதூர் மகாலிங்கஸ்வாமி கோயிலில் இது இசைக்கப்பட்டது. (5)


தண்ணுமை

இது மத்தளம் போன்ற இசைக்கருவியாகும். இதைக் கழுத்தில் கட்டித் தொங்கவிட்டுக் கொண்டு இடுப்பருகே இரு கைகளைக் கொண்டு கொட்டி முழக்குவர். இதை பறையாகவும், உடுக்கையாகவும் சிலர் கருதுவர். சிலப்பதிகார நூலில் தண்ணுமை பற்றிய குறிப்புகள் உள.

செண்டை

இது உருளை வடிவிலான பறைக்கருவியாகும். இதனைப் பலா மரத்தினால் செய்வர். இதன் உருண்டை வடிவப் பறையின் இருபுறமும் தோல் போர்த்தப்பட்டிருக்கும். ஆனால் ஒரு புறம் மட்டுமே வாசிக்கப்படும். இது நேராகத் தொங்கவிட்டுக் கொண்டு மேல் தோலை இரு கோல் கொண்டு அடிப்பர். திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் இது இசைக்கப்பட்டது.(6) இன்றும் கேரளாவில் இது சிறப்புடன் இசைக்கப்படுகின்றது.

வீணை

யாழ் என்ற இசைக்கருவி வழக்கொழிந்து அதனிடத்தை வீணை பிடித்தது. இது பல இசை வடிவங்களை இசைக்கக் கூடிய சிறப்பு வாய்ந்தது. வீணையின் இசையை “இன்னிசை” என்று கருதுவர். கர்நாடக சங்கீதத்துக்கு வீணையே ஆணி வேர். இது மனிதனைப் போன்று உயிர்த்துடிப்புள்ள இசைக் கருவியாகும். சிவன் வீணாதரமூர்த்தியாய் பல ஆலயங்களில் காட்சியளிக்கின்றார். திருமயானம் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் இது சிறப்புடன் இசைக்கப்பட்டது. (7)


உடுக்கை / டமரு / தமருகம்

இது பறை வகையைச் சார்ந்த இசைக்கருவியாகும். இது இடைச் சுருக்கும் பறை என்பர். சிவனின் அசபா நடனத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. கோயில்களில் திருப்பதிகம் வாசிக்கும் பொழுது இது இசைக்கப்பட்டது. திருவிடைமருதூர் கோயிலில் இது சிறப்புடன் இசைக்கப்பட்டது. (8)

துடி

துடி பழங்கால இசைக்கருவியாகும். இது உடுக்கை, பறை ஆகியவற்றின் இசைநயங்களை ஒருங்கேக் கொண்டது. இதற்கு வலக்கண், இடக்கண் இரண்டும் உண்டு. ஆனால் வலது பக்கம் மட்டுமே இசைக்கப்படும். இதை இடது தோளில் தொங்கவிட்டுக் கொண்டு, இடது கையால் பிடித்துக் கொண்டு, வலது கையால் ஜதிக்கோவைகளைக் கொண்டு இசைப்பர். இது நடனக்கலைக்குப் பக்க வாத்தியமாகப் பயன்பட்டது.

தாளம்

இது பித்தளை மற்றும் வெண்கலத்தால் செய்யப்பட்டது. இதை இரு கைகள் கொண்டு இசைப்பர். இது மிருதங்கத்துக்கு இணையாக இசைக்கப்பட்டது. இதற்கு ஜால்ரா, ஜல்லரி, கரதாளம், தாலி, எலத்தாளம், குழித்தாளம், ஜஞ்ஜ், பிரத்தாளம், பிரம்மதாளம், போர்த்தால் என்று பல பெயர்கள் உண்டு. இது சச்சச்புடத்தாளம், துகம்தாளம், விமடத்தாளம், சமதாளம், கும்பதாளம், வர்மத்தாளம், சதுரசுரதிரிபுடைத்தாளம், அனுமத்தும்பதாளம் என்று பல வகைப்படும். அரையர் சேவைகளில் தாளம் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டது.

பாடவியம்

இது ஆடலுக்கு மட்டும் பக்கவாத்தியமாக இசைக்கக் கூடிய இசைக்கருவியாகும். இதை இசைப்பது மிகவும் கடினமானது. இதைப் பல பேர் ஒன்று சேர்ந்து இசைப்பர். இதை இசைத்தவர்கள் “வாத்தியமாரார்” என்று அழைக்கப்பட்டனர். திருவிடைமருதூர் கோயிலில் இது இசைக்கப்பட்டது. (9)

மேராவியம் / மேர்வியம் / மெரவியம் / மோர்வியம்

இது துளையிட்டு இசைக்கக்கூடிய இசைக்கருவியாகும். இதை முகவீணை என்றும் அழைப்பர். இது நாட்டியத்திற்குப் பக்கவாத்தியமாக இசைக்கப்பட்டது. இது தொழில்நுட்பத்தில் மேம்பட்டக் கருவியாகத் திகழ்ந்தது. திருக்கண்டியூர் கோயிலில் இது இசைக்கப்பட்டது. (10)

பூரகம் / பெருவடகம்

இது தோல் வகையைச் சார்ந்த இசைக்கருவியாகும். இதை பாடகம் என்றும் அழைப்பர். இது அகமுழவு வகைக் கருவியாகும். கோயில் திருப்பள்ளியெழுச்சியின் பொழுது இது இசைக்கப்படும். சிவனின் ஆடவல்லான் நாட்டியத்திற்கு இசைக்கும் சிறப்பு வாய்ந்தது. கல்வெட்டுகள் இதை பெருவடகம் என்று அழைக்கின்றன.

முடிவுரை

இசை என்ற உயிருக்கு உடல் போன்றது இசைக்கருவிகள். இசையையும், இசைக் கருவிகளையும் பிரிக்கவியலாது. தமிழர்கள் இசைக்கருவிகளை மீட்டி இன்னிசையால் இறைவனை வழிபட்டனர். சோழர்கால இசைவாணர்கள் சிறந்த இசைக்கருவிகளை உருவாக்கி கான இன்பத்தை மக்களுக்கு வாரி வழங்கினர். அக்காலக் கோயில்களிலும், அரண்மனைகளிலும், அந்தப்புரங்களிலும், கூத்துமேடைகளிலும், திருவிழாக் கூட்டங்களிலும் இசைக்கருவிகள் முழங்கின. சோழர்காலத் தமிழர் பயன்படுத்திய இசைக்கருவிகள் அவர்கள் உருவாக்கிய சிற்பங்களிலும், ஓவியங்களிலும் காணக் கிடக்கின்றன. தம் கால இசைக்கருவிகளைப் பின்வரும் தலைமுறையினர் அறியவேண்டும் என்பதற்காக அவற்றை உருவங்களாக உருவாக்கிப் போந்த நம் முன்னோர்கள் போற்றுதற்குரியவர்கள். தமிழர்கள் நுண்கலை வித்தகர்கள் என்பதற்கு அவர்கள் உருவாக்கியளித்த இசைக்கருவிகளே சாலச்சிறந்த சான்றுகளாகும்.

விரிவாக்கம் (Abbrevations)

SII-South Indian Inscriptions

ARE-Annual Report on Indian Epigraphy

சான்றெண்விளக்கம் (Foot Notes)

1. SII VOL:2 NO:1

2. SII VOL:7 NO:485

3. SII VOL:13 NO:14

4. SII VOL:24 NO:86

5. SII VOL:23 NO:258

6. SII VOL:19 NO:30

7. ARE NO:54/1906

8. SII VOL:5 NO:721

9. SII VOL:23 NO:264

10. SII VOL:5 NO:579

பார்வை நூற்பட்டியல்

1. சீனி வெங்கடசாமி. மயிலை, தமிழர் வளர்த்த அழகுக்கலைகள், சென்னை, 1989.

2.நாகசாமி.இரா & சத்தியமூர்த்தி.மா, தமிழகக் கோயிற்கலைகள், சென்னை, 1976.

3. ஞானகுலேந்திரன், பழந்தமிழர் ஆடலில் இசை, தஞ்சாவூர், 1990.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/general/p207.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License