இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

"கோழிக்கறி வாங்குபவனின் சித்திரக் குறிப்புகள்"
எனும் கவிதை நூலில் சமூகச் சிந்தனைகள்

முனைவா் சி. சங்கீதா
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (ஆங்கிலத்துறை),
கலிசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கிருஷ்ணன்கோவில்.


முன்னுரை

கோழிக்கறி வாங்குபவனின் சித்திரக் குறிப்புகள் எனும் கவிதை நூல் சேலம் மாவட்டத்தைச் சார்ந்த கவிஞா் ராஜா என்பவரால் எழுதப்பட்டு, கடந்த 2019 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இக்கவிதை நூலில் சாதி, தீண்டாமை, வறுமை, அதிக வரிவிதிப்பு, பெண்கள் நிலை, வேலையில்லாத் திண்டாட்டம், ஊதியக்குறைவு, பாலியல் வன்கொடுமை, புலம்பெயா்வு, நீா்இன்மை, சமகாலஅரசியல், சாதாரண மக்களுடைய எளிய வாழ்க்கை, நிறைவேறாத காதல் மற்றும் தான் பார்த்த சில அனுபவங்களையும் தன் குடும்பம் சார்ந்த பின்னணிகளையும் குறிப்பாகத், தாய், தந்தை, சகோதரி முதலியோரின் உள்ளார்ந்த உணர்வுகளையும் மிக அழகாகத் தன்னுடைய வட்டாரத்திற்குரிய அழகான சொற்களால் கவிஞர் எடுத்துக் கூறியிருக்கிறார். இந்நூலிலிருக்கும் பெரும்பான்மையான கவிதைகள் சமூகத்தில் நடக்கின்ற அவலங்களைப் பதிவு செய்வதாகவேக் காணப்படுகின்றன. அவ்வகையில் இக்கவிதை நூலில் உள்ள சமூகச் சிந்தனைகளை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சாதியும் தீண்டாமையும்

இந்நூலில் சமுதாயத்தில் சாதியின் தாக்கம் குறையாமல் இருப்பதையும், இருபத்து ஒன்றாம் நூற்றாண்டிலும் சாதி தலைவிரித்து ஆடுவதையும், ஒடுக்கப்பட்டவா்களின் குரலற்ற குரலாகவும் தீண்டாமைத் தனத்தையும் முன்னிறுத்துகிறது.

“எங்கள் ஊர்
அழகிய கோபுரத்தில்
தொடங்கி
அம்பேத்கர் சிலையோடு
முடிவடைகிறது
எங்கள் ஊர்” (1)

இந்தக் கவிதையில் இரண்டு வேறு கருத்துக்கள் புலப்படுகின்றன. ஒன்று உயர்ந்து நிற்கிற கோபுரம், மற்றொன்று அம்பேத்கர் சிலை. இவ்விரண்டும் மக்களின் ஏற்றத்தாழ்வுகளைப் பற்றிக் குறியீடாக உணர்த்துகிறது. கோபுரம் உயா்சாதி வகுப்பினரையும் அம்பேத்கார் சிலை ஒடுக்கப்பட்ட மக்களையும் தீண்டாமைத்தனத்தையும் எடுத்துரைக்கிறது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று வள்ளுவர் கூறினாலும், சாதி சமூகத்தில் அடையாளமற்றுப் போகவில்லை என்பதை உணர முடிகிறது.


”சாதிஒழிப்பு இயக்கத்திற்குக் குறைந்தது 2500 ஆண்டு வரலாறு உண்டு. எந்தப் போராட்டமும் இவ்வளவு நீண்டநாள் நடந்தது கிடையாது. ஆனால், சாதி ஒழியவில்லை. நாம் சாதியை விட்டாலும், சாதி நம்மை விடுவதாகத் தெரியவில்லை. சாதிப் பிரிவினையை விட ஒரு பெரிய சாபக்கேடு ஒரு சமுதாயத்திற்கு வர முடியாது. அதிலிருந்து விடுபடும்வரை நமது சமூகத்திற்கு விமோசனம் கிடையாது“ (2) என்று வா. செ. குழந்தைசாமி சாதியின் நிலையைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இதேபோல,இன்றும் சாதி சாபக்கேடாகத் திகழ்வதையும் காண முடிகிறது. மேலும், ஒடுக்கப்பட்ட மக்களின், குரலற்றவா்களின் குரலாக அம்பேத்கார் குரல் ஒலித்துக் கொண்டிருப்பதையும் இக்கவிதை வாயிலாக அறிந்து கொள்ளமுடிகிறது.

வறுமை

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இன்றும் உலக அளவில் வாதிக்கப்பட்டு வருகிற சிக்கல் வறுமை. இந்த வறுமை, “உலக நாடுகளில் விதவிதமான நோய்களை உருவாக்கக்கூடிய வைரசாக விளங்குகிறது (Tazoacha Francis, 2001)” (3).இந்நூலில் கவிஞர், வறுமை தொலைந்த நிறம் என்ற தலைப்பில் பல தரப்பட்ட மக்களின் வறுமையைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

”வேடுகட்டி வீதிகூட்டும்
வெள்ளச்சிக்கு
இளநாவல் நிறம்
கோணிப்பை மாட்டி
குப்பை பொறுக்கும்
செவ்வந்திக்கு மாநிறம்.
உள்ளங்கையில் இரவைச் சுருட்டி
சாலையில் நிற்கும்
தாமரைக்கு செவ்விளனியின் நிறம்
… … … … … … … …
… … … … … … … …
சாலை சமிக்ஞை நிறுத்தத்தில்
யாசகம் வேண்டும் சிறார்களுக்கு
கரித்துணியின் நிறம்” (4)

என்ற கவிதையில் வறுமையின் நிறங்களாக, இளநாவல், மாநிறம், செவ்விளனியின் நிறம், புகையிலையின் நிறம், அடா்மழையின் நிறம், கரித்துணியின் நிறம் என்று பல்வேறு நிறங்களில் பொருத்திக் காட்டியுள்ளார். எனவே, வறுமையைக் குறிப்பாகச் சிகப்பு நிறத்தில் அடக்க முடியாது என்றும் வறுமையின் முகங்களின் நிறங்கள் மாறுபட்டுக் கொண்டேயிருக்கின்றன என்பதையும் அறியலாகிறது. மேலும், ஆயுள் குறைந்த தீபாவளி (5), மழுங்காத ஊசி (6) முதலிய கவிதைகளிலும் வறுமை குறித்த கருத்துகள் இடம் பெறுகின்றன.


அதிக வரிவிதிப்பு

மக்கள் அதிக வரி செலுத்த வேண்டும் என்று அரசு திடீரெனச் சட்டம் இயற்றுகிறது. அதிலும் ஆட்சி மாறுகிற போதெல்லாம் இது நிகழ்கிறது என்பதை,

“நிலத்தின் வளா்ச்சிக்காக
ஆளும் மன்னா்கள் மாறும் போதெல்லாம்
அந்த விதியின் அளவு
பெருகிக் கொண்டே போகும்” (7)

என்ற கவிதையில் குறிப்பிடுகிறார். இக்கவிதையில் குறியீடாக, சிறு மற்றும் குறுந்தொழில் பாதிப்பு, ஜி.எஸ்.டி. வரியின் வருகை முதலியவற்றைக் குறிப்பிடுவதைக் காணமுடிகிறது.

பெண்கள் நிலை

பெண்களுக்கான உரிமைகளைக் கையிலெடுத்துப் பேசுகிறார். கிராமப்புறங்களில் பெண்கள் எட்டு மணிக்கு மேல் உறங்கக்கூடாது என்ற வழமையைக் கடைப்பிடிப்பவா்கள். அதைக் கண்ணுற்ற கவிஞா், நாட்டில் எந்த நிலையும் மாறப்போவதில்லை பெண்கள் தூங்கினால் என்ன? என்பதை,

“பொட்டக்கழுதை எட்டுமணி வர
கெடந்து தூங்குதான்னு சலம்புறியே
போ ஆத்தா
அவளாச்சும் தூங்கட்டும்” (8)

என்று உறங்குகிற உரிமையைக் கொடுக்கிறார். காலம் காலமாக இருந்து வருகிற மரபு மாற்றத்தை உருவாக்க முற்படுவதைக் காணலாம்.

வேலையில்லாத் திண்டாட்டமும் புலம்பெயா்வும்

வறுமை உருப்பெறுவதற்கு மிக முக்கியக் காரணம் வேலையில்லாத் திண்டாட்டம் ஆகும். இன்றைய கொரோனா காலகட்டத்திலும் மக்கள் வேலையில்லாமல் திண்டாடி வருவதைக் காணலாம். அறிவியல் கண்டுபிடிப்பின் வாயிலாக சாதாரண தினக்கூலிக்குச் செல்லும் கொத்துக்காரக் கிழவிக்கு வேலையில்லை. அதனால் ஏற்பட்ட வறுமையின் காரணமாக அக்கிழவி இறந்ததையும் கொத்துக்காரக் கிழவி என்னும் கவிதையின் வழியாகக் குறிப்பிடுகிறார். அக்கவிதை,

“அத்திப்பழச் செவப்பா
வெள்ளி வானம் வெளுக்கையில
அள்ளிமுடிஞ்ச கொண்டையோடு
கண் விழிப்பா
… … … … … … … …
… … … … … … … …
ஒருவேளை சோறானாலும்
ஒழச்சு திண்ண மவராசி
ஓசி வாங்கித்திங்க நா கூச
உத்தமியா நாண்டு கிட்டா
கொத்துக்காரக் கிழவி” (9)

என்ற கவிதையில் துயரத்தை வடித்திருக்கிறார் என்பதை அறியலாம். மேலும், வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் புலம் பெயா்தலுக்கு அடிப்படைக் காரணமாக இருக்கின்றது. எப்பாடுபட்டாவது என்னும் கவிதையில் பீகார், ஒடிசா முதலிய வட மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்குப் புலம் பெயரும் தொழிலாளர்கள் குறைந்த ஊதியம் வழங்கினாலும் தாழ்வில்லை என்று வறுமை காரணமாகப் புலம் பெயர்கிறார்கள் என்பதை,

“பீகாரிலிருந்தோ
ஒடிசாவின் மலைச்சரிவுகளிலிருந்தோ
… … … … … … … …
இருநூறு ரூபாய் தினச்சம்பளமே
போதுமானதாக இருக்கிறது” (10)

என்ற கவிதையில் விளக்குகிறார். புலம் பெயர்வின் காரணமாக தமிழகத்தில் இந்தி மொழியின் ஆதிக்கம் அதிகரித்து வருவதையும் குறிப்பிடுகிறார்.


பாலியல் வன்கொடுமை

நிர்பயாவிற்கு நடந்த பாலியல் வன்கொடுமை பற்றியும், சுவாதி படுகொலை, விஷ்ணுப்பிரியா படுகொலை முதலிய பிரச்சனைளை எதிர்த்துக் கேள்வி கேட்கும் குரலாகத் தன் கவிதையில் பதிவு செய்துள்ளார். தெய்வத்தவறுகள் என்னும்தலைப்பில்,

“முளைத்து மூன்று
இலை விடவில்லை
… … … … … … … …
சுவாதிகள்
நந்தினிகள்
விஷ்ணுப்பிரியாக்ளெல்லாம்
தெய்வத் தவறுகள்” (11)

என்ற கவிதையில் விளக்குகிறார்.

நீா் தட்டுப்பாடு

பொதுவாகக் கேரளாவைக் கடவுளின் தேசம் என்று குறிப்பிடுவார்கள். கேரளாவின் நுழைவுப்பகுதியில் உள்ள கழிவறையில் குளிக்கக்கூடத் தண்ணீா் இல்லை என்பதையும், கிராமப்புறங்களில் குளித்து முடித்துவிட்டுக் கொஞ்சம் தண்ணீா் மிச்சம் வைக்க வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால், இரண்டு பக்கெட் தண்ணீா் தீா்ந்தும் சோப்புக் குமிழிகளை எப்படிச் சுத்தம் செய்ய என்று கடவுளின் தேசத்திலேயே தண்ணீா் இல்லை. எங்கு மிச்சம் வைக்க என்று கடவுளிடம் வினவுதாக அமைகிறது. அக்கவிதை:

“வறண்ட தரையில்
தேங்காய் விழுந்தது போல
… … … … … … … …
என் காதுகளில்
பூத்திருக்கும் சோப்புக்குமிழிகளை
சுத்தம் செய்ய” (12)

என்ற கவிதையில் குறிப்பிடுகிறார்.


முடிவுரை

கோழிக்கறி வாங்குபவனின் சித்திரக்குறிப்புகள் என்ற கவிதை நூல் எளியோரின் அன்பு, வறுமை, அகமனப்போராட்டம், உழைக்கும் மக்களின் குரலற்ற குரல், மொழியற்றவர்களின் வறுமை, நிலமற்றவர்களின் வாழ்வியல், ஒடுக்கப்பட்டவா்களின் நிலை முதலிய அவலங்களைக் குறிப்பிட்டு இந்நிலை மாறவேண்டும் என்பதையும் தன் கவிதைகள் வாயிலாக விளக்குவதை அறியமுடிகிறது. மேலும், இந்நூலில் சேலம் மாவட்ட வட்டார மொழிச் சொற்கள் பொதிந்து காணப்படுவதையும் அறிய முடிகிறது.

அடிக்குறிப்புகள்

1. சேலம் ராஜா, கோழிக்கறி வாங்குபவனின் சித்திரக்குறிப்புகள், ப.11.

2. வா.செ.குழந்தைசாமி, சமுதாயச் சிந்தனைகள், பக்.20-21.

3. S.M.AhamadLebbe, Miss.M.F.Fazeela, வறுமையும், சமூகத்தாக்கங்களும்தொடா்பானபகுப்பாய்வு, (சம்மாந்துறைப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியை மையமிட்ட ஆய்வுக் கட்டுரை), ப.111.

4. சேலம்ராஜா, கோழிக்கறி வாங்குபவனின் சித்திரக்குறிப்புகள், ப.65.

5. மேலது, பக். 94-95.

6. மேலது, ப.15.

7. மேலது, ப.34.

8. மேலது, ப.40.

9. மேலது, பக்.54-55.

10. மேலது, ப.75.

11. மேலது, ப.75.

12. மேலது, ப.36.

13. மேலது, ப.30.1

துணைநூற்பட்டியல்

1. சேலம்ராஜா, கோழிக்கறி வாங்குபவனின் சித்திரக்குறிப்புகள், இடையன் இடைச்சி பதிப்பகம், ஈரோடு- 638 101, முதல்பதிப்பு - 2019.

2. டாக்டர் வா. செ. குழந்தைசாமி, சமுதாயச் சிந்தனைகள், பாரதி பதிப்பகம்,108, உஸ்மான்சாலை, தியாகராயா்நகா், சென்னை - 600 017. இரண்டாம்பதிப்பு - 2001.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/general/p216.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License