இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

திருக்குறளில் கலைச்சொற்கள்

முனைவர் சி. இராமச்சந்திரன்
ஆராய்ச்சி உதவியாளர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை - 600 113.


முன்னுரை

திருவள்ளுவரால் இயற்றப்பெற்று உலகம் முழுமைக்கும் பொதுமறையாக விளங்கக்கூடிய திருக்குறள் இன்றைக்கும் பேசுபொருளாக இருக்கின்றது. இது மக்கள் இலக்கியமாகத் திகழ்கின்றது என்பதே இதற்குக் காரணம். இதில் பொதிந்திருக்கும் கருத்துக்கள் மானுட சமூகம் பரவியிருக்கின்ற திசைகளுக்கெல்லாம் பொருந்தி போகக்கூடியதாகும். தமிழுக்கும் தமிழர்க்கும் மட்டுமல்லாமல் எல்லோருக்குமான வழிகாட்டி நூலாகத் திருக்குறள் திகழ்கின்றது. விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பாற்பட்டும் மதம் சார்ந்த சித்தாந்தங்களைச் சேர்க்காமலும் யார் பக்கமும் நில்லாமல் பொதுவாக நீதி சொல்லும் திருவள்ளுவர், தாமியற்றிய குறட்பாக்களில் சொற்களைச் சிறப்பாக கையாண்டிருக்கின்றார். அவர் பயன்படுத்தியிருக்கும் சொற்களில் அழகியலும், சொல் நயமும், பொருள்நயமும், அணிநயமும் இயல்பாகவே காணப்படுகின்றன. அதேபோன்று அரிய பொருள்தரும் பல சொற்களையும் காணமுடிகின்றது. இன்றைக்கும் பயன்பாட்டில் இருக்கும் பல சொற்கள் திருக்குறளில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு திருக்குறள் பொருட்பால் மற்றும் காமத்துப்பாலில் இடம்பெற்றிருக்கும் நாற்பது அரிய சொற்கள் இக்கட்டுரையில் தொகுத்தளிக்கப்படுகின்றன.

திருக்குறளில் கலைச்சொற்கள்

1. வாய் (vāy) - மனை/இடம்/வாசல் (குறள்.1001:1)

2. ஈட்டம் (īṭṭam) - சம்பாதிக்கை (குறள். 1003:1)

3. பொறை (poṟai) - பாரம் (குறள். 1003:2)

4. தமியள் (tamiyaḷ) - தனியாயிருப்பவள் (குறள். 1007:2)

5. துனி (tuṉi) - வெறுப்பு / வறுமை (குறள். 1010:1)

6. வறம் (vaṟam) - வற்றுகை / வறுமை (குறள். 1010:2)

7. திரு (tiru) - அழகு (குறள். 1011:1)

8. மடி (maṭi) - ஆடை (குறள்.1023:2)

9. உஞற்று (uñaṟṟu) - முயற்சி (குறள்.1024:2)

10. தோல் (tōl) - புகழ் (குறள்.1043:1)

11. நெருநல் (nerunal) - நேற்று (குறள். 1048:1)

12. நிரப்பு (nirappu) - வறுமை (குறள். 1049:1)

13. கண்பாடு (kaṇpāṭu) - நித்திரை (குறள். 1049:2)

14. காடி (kāṭi) - கஞ்சி (குறள்.1050:2)

15. கரப்பு (karappu) - மறைக்கை (குறள். 1051:1)

16. கரவு (karavu) - மறைவு (குறள். 1061:1)

17. புற்கை (puṟkai) - ஒருவகை கஞ்சி / சோறு (குறள். 1065:1)

18. ஊங்கு (ūṅku) - மேம்பட்டது (குறள். 1065:2)

19. பக்கு (pakku) - பிளப்பு (குறள். 1068:2)

20. அகப்பட்டி (akappaṭṭi) - காவலினிறித் திரிவோன் (குறள். 1074:1)

21. அஞர் (añar) - அச்சம் (குறள். 1086:1)

22. கட்படாம் (kaṭpaṭām) - யானைமுகத் தணியாடை/யானை முகத்து அணியும் முகமூடி (குறள். 1087:1)

23. ஞாட்பு (ñāṭpu) - போர்க்களம் (குறள். 1088:1)

24. அடுநறா (aṭunaṟā) - காய்ச்சிய சாராயம் (குறள். 1090:1)

25. யாப்பு (yāppu) - அன்பு (குறள். 1093:2)

26. கதுப்பு (katuppu) - தலைமயிர் (குறள். 1105:2)

27. அறுவு (aṟuvu) - முழுமை (குறள். 1117:1)

28. தூவி (tūvi) - பறவையிறகு (குறள். 1120:1)

29. வால் (vāl) - வெண்மை (குறள். 1121:2)

30. வேபாக்கு (vēpākku) - வேகுகை (குறள். 1128:1)

31. கரப்பு (karappu) - மறைக்கை (குறள். 1129:1)

32. புணை (puṇai) - மரக்கலம் (குறள். 1134:2)

33. மறுகு (maṟuku) - தெரு (குறள். 1139:2)

34. இன்கண் (iṉkaṇ) - இன்பம் (குறள். 1152:1)

35. நீப்பு (nīppu) - பிரிவு (குறள். 1154:1)

36. இனன் (iṉaṉ) - உறவினன் (குறள். 1158:1)

37. உயல் (uyal) - சீவிக்கை (குறள். 1174:1)

38. படல் (paṭal) - உறக்கம் (குறள். 1175:1)

39. பெட்டார் (peṭṭār) - விரும்பியவர் (குறள். 1178:1)

40. அஞர் (añar) - மனவருத்தம் (குறள். 1179:1)

முடிவுரை

திருக்குறள் ஒரு சொற்களஞ்சியமாகும். அதிலிருந்து சில சொற்கள் திரட்டப்பட்டு மேற்கண்ட பகுதியில் வழங்கப்பட்டுள்ளன. மேலும், நறுக்குத் தெறித்தாற் போல் இரண்டு மூன்று எழுத்துக்களில் கூட ஒரு அரிய பொருள்தரக்கூடிய சொல் இருக்கின்றது என்பதைத் திருக்குறளை ஆழ்ந்து படிப்பவர்கள் உணர்ந்துகொள்ளலாம். அதனடிப்படையில் அரிய பொருள்தரக்கூடிய புதுப்புது சொற்கள் இக்கட்டுரையில் திரட்டித் தரப்பட்டுள்ளன. இச்சொற்களைக் கொண்டே திருவள்ளுவரின் மொழியறிவையும் இலக்கியப் புலமையையும் உணர்ந்துகொள்ளலாம். ஒன்றே முக்கால் அடிக் குறளில் தாம் கூற வந்த கருத்து அறுபட்டுவிடாமல் இருப்பதற்கு மணிகள் கோர்த்தார்போன்ற சொல்லாக்கத்தைத் திருவள்ளுவர் கையாண்டுள்ளார். எந்த ஒரு சொல்லையும் விட்டுவிட்டு அவர் கூறும் கருத்துக்களை உணர்ந்துகொள்ளுதல் கடினம்.

துணைநின்ற நூல்கள்

1. திருக்குறண் மூலமும் பரிமேலழகருரையும், வாணிநிகேதனவச்சுக்கூடம், சென்னபட்டணம்.

2. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி, சென்னைப் பல்கலைக்கழகம், 1936, சென்னை.

3. தமிழ் - தமிழ் அகரமுதலி, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/general/p219.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License