இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

ஆவணங்கள் உணர்த்தும் அரசகுடும்பத் திருமண வழக்காறுகள்
(ஆவண எண்: CR88/002/70,71)

முனைவர் த. கண்ணன்
பேராசிரியர் மற்றும் தலைவர், அரிய கையெழுத்துச்சுவடித்துறை,
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் 613 010.


அரசியல் வரலாற்றுடன் சமூக வரலாற்றையும் அறிவதற்கு ஆவணங்கள் பெரிதும் துணை செய்கின்றன. அவ்வகையில் மோடி ஆவணத் தொகுப்பில் உள்ள தமிழ் ஆவணங்களின் (எண் : CR88/002/70,71) வழி அறியப்படும் அரசகுடும்பத் திருமண வழக்காறுகள் குறித்து இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

மோடி ஆவணங்கள் - அறிமுகம்

1676 முதல் 1855 வரை தஞ்சாவூரை அரசாண்ட மராத்திய மன்னர்கள் அரசு நடைமுறைகள், கணக்கு விவரங்கள், கடிதங்கள், அரசியல் குறிப்புகள், ஆணைகள், மக்கள் கோரிக்கைகள் முதலியவற்றை மராத்திய மொழியில் மோடி எழுத்துருவில் எழுதினர். மராத்திய மொழியில் எழுதப்பட்ட ஆவணங்களுக்கு இடையில் அதன் விளக்கங்கள் சுருங்கிய குறிப்புகளாகத் தமிழ் மொழியில் பதிவு செய்யப்பட்டன. அத்தமிழ் மொழிப்பதிவுகள் மோடிப் பலகணி என்றழைக்கப்படுகிறது. மோடிப் பலகணி அன்றி, மோடி ஆவணத் தொகுப்பில் தமிழில் எழுதப்பட்ட ஆவணங்களையும் காணமுடிகிறது.

மோடி எழுத்துருக்களில் எழுதப்பட்ட ஆவணங்கள் மோடி ஆவணங்கள் என்றழைக்கப்படுகின்றன. மராத்தி மொழியை எழுதுவதற்கு தேவநாகரி எழுத்துருவில் இருந்து மோடி என்ற எழுத்துருவை ஹேமாட்பந்த் என்பார் கி.பி. 13ஆம் நூற்றாண்டில் உருவாக்கினார் என்பர். (1) கைகளை எடுக்காமலும் விரைவாகவும் எழுதுவதற்கு ஏற்ப இந்த எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. (2)

ஆவண எண்: CR88/002/70,71)

ஆவண எண்: CR88/002/70,71) என்பது ஒரு ஆவணத்தின் இரண்டு பக்கங்களைக் குறிக்கிறது. இந்த ஆவணம், இரண்டாம் திருமணத்தைத் தடுப்பதற்குத் தஞ்சாவூர் அரசு முகவர் அலுவலக சர்க்கீல் கோவிந்தராயர் அவர்களுக்கு கண்டி தேசம் சின்னசாமி நாயக்கர் வேண்டிக்கொண்ட கோரிக்கையாக உள்ளது. இக்கோரிக்கை 1875 ஆம் ஆண்டில் எழுதப்பட்டுள்ளது.

கண்டி தேசத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு அத்தேசத்து அரசு ஓய்வூதியம் வழங்கியது. அவ்வாறு கண்டி தேசத்து ஓய்வூதியம் பெறும் நாகப்பட்டணம் துரைசாமி நாயக்கருக்கு ராமசாமி நாயக்கர் என்ற மகன் உண்டு. நாகப்பட்டணத்தில் வசித்துவரும் கண்டி தேச ஓய்வூதியதாரரான வெங்கிடராமசாமி, அவர் மனைவி பங்காரு சுப்பம்மாள்.



கண்டி தேசத்து ராச வம்சத்தைச் சேர்ந்த சாயாதேவியை நாகப்பட்டணத்தில் இருக்கும் துரைசாமி நாயக்கர் மகன் ராமசாமி நாயக்கருக்குத் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் நாகப்பட்டணம் வெங்கிடராமசாமியின் மனைவி பங்காருசுப்பம்மாள் தனது மகளை, சாயாதேவியின் கணவனான ராமசாமி நாயக்கருக்கு இரண்டாம் திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ளார். இத்திருமணம் ஆவணி 6ஆம் நாளில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. இத்திருமணம் நடக்கக் கூடாது என்று சாயாதேவியின் பக்கமாக எழுதப்பட்ட கோரிக்கையாகும்.

ஆவணத்தின் அமைப்பு

இரண்டு பக்கங்களில் எழுதப்பட்டுள்ள இத்தமிழ் ஆவணத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்துக் காணலாம்.

1. யாருக்கு யார் எழுதியது என்ற தொடக்கப்பகுதி.

2. கேரரிக்கை குறித்த விளக்கப்பகுதி.

3. ஆண்டு மாதம் முதலியன குறிப்பிட்டுக் கையொப்பமிடும் இறுதிப் பகுதி.



ஆவணத்தின் தொடக்கப்பகுதி

தஞ்சாவூர் அரசு முகவர் அவர்கள் அலுவலகத்தில் சர்க்கீலாகப் பணியாற்றும் ஸ்ரீமான் கோவிந்தராயர் அவர்களுக்கு கண்டி தேசம் முதல் மற்றும் இரண்டாம் ராணியின் சகோதரரும் கண்டி தேச மகாராசாவின் பேரப்பிள்ளைகளான தர்மராசா, சாயாதேவி இவர்களின் பாதுகாவலருமாகிய சின்னசாமி நாயக்கர் எழுதிக்கொண்டது என்ற விவரம் இந்த ஆவணத்தின் தொடக்கப்பகுதியாக உள்ளது.

“தஞ்சாவூர் கவுனர்மேண்டு ஏஜெணடு
துரைஅவர்கள் ஆபீஸ் சர்க்கீல்
ஸ்ரீமான்-கோவிந்தறாயர் அவர்களுக்கு
கண்டீ தேசம் முதலாவது
இரண்டாவது றாணிமார் சகோதரமும்
மேல்படி கணடி மஹாறாசாவின் பேரப் பி
ள்ளையான தர்மறாஜா, சாயா தேவி வினு
டைய சவரகஷகள கர்த்தனான சின்ன
சாமி நாயக்கர் எழுதிக் கொண்டது ”

இத்தொடக்கப்பகுதி யாருக்கு யார் எழுதியது என்ற விவரத்துடன் அமைகிறது. எனினும் இப்பகுதியில் இடம்பெறும் அறிமுக விளக்கங்கள் அடுத்து இடம்பெறப் போகும் செய்திகளுக்குத் தொடர்புடையனவாக உள்ளன என்பது கவனத்திற்குரியதாகும்.

ஆவணத்தின் இடைப்பகுதி

கண்டி மகாராசாவின் பேத்தி சாயாதேவியை நாகப்பட்டணத்தில் இருக்கும் கண்டி ஓய்வூதியதாரா் துரைசாமி நாயக்கரின் மகன் ராமசாமி நாயக்கருக்குத் திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு ஆண்குழந்தையும் பிறந்து மூன்று மாதங்கள் ஆன நிலையில் சாயாதேவி கண்டி தேசத்தில் இருக்க, நாகப்பட்டணத்தில் இருக்கும் ராமசாமி நாயக்கருக்கு நாகப்பட்டணத்தில் இருக்கும் வெங்கிட ராமசாமியின் மனைவி பங்காருசுப்பம்மாள் தன்மகளை இரண்டாம் திருமணம் செய்துவைக்க முயற்சிப்பதைத் தடுக்க வேண்டும் என்று வேண்டப்படுறது.

இக்கோரிக்கையில் தங்கள் உறவுமுறைகளில் மனைவியும் குழந்தையும் உள்ள ஒருவர் இரண்டாம் திருமணம் செய்வது வழக்கம் இல்லை என்றும், ராமசாமி இரண்டாந் திருமணத்திற்கு உடன்படும் அளவில் அவருக்கு தவறான கருத்துகளைக் கூறியுள்ளனர் என்றும், ராச வம்சத்தில் தோன்றிய பெண்ணைத் திருமணம் செய்பவர் அப்பெண்ணுடன் அரண்மனையில் இருக்க வேண்டும். அவ்வாறே சாயா தேவியின் சகோதரிகளின் கணவர்கள் 15 ஆண்டுகளாக அரண்மனையில் வசித்து வருகின்றனர் என்றும் குறிக்கப்படுகிறது.



கண்டி தேச மகாராவினுடைய பேத்தி சாயா தேவியை நாகப்பட்டணத்திலிருக்கும் கண்டி ஓய்வூதியதாரா் துரைசாமி நாயக்கர் மகன் ராமசாமி நாயக்கருக்குத் திருமணம் செய்து கொடுத்து ஆண்குழந்தையும் பிறந்து மூன்று மாதங்களாவதை;

”இப்பவும் மேல்படி மஹா
றாஜாவினுடைய பேத்தியாகிய சாயா
தேவியை நாகப்படடணத்திலிருக்கும்
கண்டி பென்ஷனர் துரைசாமி நாயக்க
ர் குமாரன் றாமசாமி நாயக்கருக்கு வி
வாகம் செய்து கொடுத்து ஆண் கொழந்
தையும் பிறந்து மூண்று மாசகாலமாகி
றது.”

என்றும், இந்நிலையில் நாகப்பட்டணத்திலிருக்கும் வெங்கிடராமசாமியின் மனைவி பங்காரு சுப்பம்மாள் தன் மகளை மேற்படி ராமசாமி நாயக்கருக்கு நாகப்பட்டணத்தில் ஆவணி மாதம் வெள்ளிக்கிழமை 6 ஆம் நாளில் திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள் என்ற விவரத்தை இக்கோரிக்கை ஆவணம்,

”இப்படிருக்க நாப்பட்டணத்திலிருக்
கும் வெங்கிட ராமசாமி பெண்சாதி பங்கா
ருசுப்பம்மாள் தன்மகளை மேல்படி றாமசா
மினுருக்கு நாகப்பட்டணத்தில் நாளது ஆவணி
மாசம் 6 தேதி வெள்ளிக் கிழமை விவாகம்
செய்ய எத்தனப்படுகிறார்கள்”

என்றும் நாயக்கர் உறவுமுறைகளில் ஏழையாய் இருக்கப்பட்டவர்கள் கூட மனைவி, குழுந்தைகள் இருக்கும் போது வேறு திருமணம் செய்யக்கூடாது (செய்யமாட்டார்கள்) என்பதை;

”எங்கள் உறைமுறையாயில் ஏழை
யாய் இருக்கப்பட்டார்கள் கூட
பெண்சாதி பிள்ளை இருக்கும் போது
வேறு கலியாணம் செய்யகூடாது”

என்றும், ராச வம்சத்தில் தோன்றிய பெண்ணை ராமசாமி (நாயக்கர்) திருமணம் செய்துகொண்டு தவறான சொற்களைக் கேட்டு, அதன்படி அறமற்ற முறையில் மேல்குறிப்பிட்டபடி திருமணம் செய்வதற்கு முடிவு செய்துள்ளனர் என்பதை,

”அப்படிருக்க இராஜ வமிசத்தில் தோன்றிய
பெண்ணை கலியாண மேல்படி றாமசாமி
கலியாணம் செய்து கொண்டு துர்ப்போ
தணைகிணங்கி அக்கிறமமாய் மேல்கண்ட
மாதிரி ஆரம்பத்திருக்கிறார்கள்”


என்றும் இதுநாள் வரையில் நடைபெற்றுவரும் ராச குடும்பத்து வழக்கம் என்னவென்றால், ராச குடும்பத்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டால் அந்தப் பெண் இருக்கும் அரண்மனையிலே இருக்க (வேண்டும்) மேற்படி சாயாதேவி சகோதரிகளாகிய மந்தாளசாமி, பார்கவி தேவி, ஆண்டாளதேவி எனும் இவர்களின் கணவர்கள் எல்லோரும் அந்த அம்மாக்கள் இருக்கும் சாகையிலே திருமணமான நாள் முதல் 15 வருடங்களாக அரண்மனையிலேயே உள்ளார்கள். இரு ராச குடும்பத்தின் வழக்கம் என்பதை,

”மேலும் றாஜ குடும்பத்தின் வழக்கம் நாளது
வரையில் யென்னமென்றால்
இராஜ குடும்பத்து பெண்ணை கலியாணம்
செய்து கொண்டால் அவர்கள் இருக்கப்ப
ட்ட அரண்மணைலேயே இருக்கிறவச…
மேல்படி சாயாதேவி தமைக்கைகளா
கிய மந்தாளசாமி, பார்காவீ தேவி ஆண்
டாளதேவி, இவர்கள் புருஷர்கள் எல்லோ
ரும் அந்த அம்மாக்கள் இருக்கும் சாகைலே
யே கலியாணமான நாள்முதல்கொண்டு
நாளது வரையில் சுமார் 15 வருஷகால
ங்களாய் அவடத்திலேயே இருக்கிறார்கள்.
இது றாஜ குடுபத்தின் வழக்கம்”

என்றும் அதனால் நாகப்பட்டணத்தில் ஓய்வூதியம் பெற்றுவரும் மேற்படி இறந்து போன வெங்கிட ராமசாமி மனைவியாகிய பங்காருசுப்பம்மாள் அறமற்ற முறையில் தன் மகளை, கண்டி ஓய்வூதியதாரா் மேற்படி ராமசாமி நாயக்கருக்கு மறுபடியும் திருமணம் செய்விப்பது அறமற்றதாய் இருப்பதால் தாங்கள் தயவு செய்து மேற்படி திருமணத்தை நடக்கவிடாமல் செய்ய வேண்டும் என்றுத் தங்களை மிகவும் மன்றாடிக் கேட்டுக்கொள்ளுகிறேன் என்பதை,

“ஆகையால் நாகப்ப
ட்டணத்தில் பென்ஷன் வாங்கிவரும் மேல்
படி இரந்து போன வெங்கிட றாமசாமி
பெண்சாதியாகிய பங்காருசுப்பம்மாள்
அக்கிறமயாய் தன் மகளை கண்டி பென்ஷ
னர் மேல்படி துரைசாமி நாயக்கர் மகன்
றாமசாமி நாய்க்கருக்கு மருபடியும் கலியா
ணம் செய்விப்பது அக்கிறமமாய் இருப்பதால் தாங்கள் தய
வு செயது மேல்படி அக்கிறமமான கலியாண
த்தை நடக்கவெயிடடாமல் செயய
வேண்டுமென்று தங்களை மிகவும்
மன்றாடிகேட்டுக்கொள்ளுகிறேன்”

என்றும் குறிக்கப்படுகிறது.

ஆவணத்தின் இறுதிப் பகுதி

இந்த ஆவணத்தின் இறுதிப் பகுதியில் இக்கோரிக்கை எழுதப்பட்ட நாளாக 15.08.1875 குறிக்கப்பட்டுள்ளது. இது ஆவணி 1 ஞாயிற்றுக் கிழமையாகும். (3) இன்னும் ஐந்து நாளில், அதாவது (20.08.1875) ஆவணி 6 வெள்ளிக்கிழமையில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள திருமணத்தை நிறுத்துவதற்கான கோரிக்கையாக அமைவதை இப்பகுதியில் குறிக்கப்பட்டுள்ள நாள் விவரங்களின் வழி அறியமுடிகிறது. நாளினைத் தொடர்ந்து கையொப்பம் இடம் பெறுகிறது.


முடிவுரை

அரசகுடும்பத்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டவர் அப்பெண் வசிக்குமிடத்திலே வசிப்பது வழக்கமாகும். மணந்துகொண்ட பெண்ணும் அவர்களின் குழந்தையும் இருக்கும் நிலையில் இரண்டாம் திருமணம் செய்தல் வழக்கமன்று. இவ்வாறான வழக்காறுகளில் தவறி நடக்கும் நிலையில் அதனைத் தடுத்து நிறுத்துவதற்கான உரிமை உண்டு என்பதையும் இந்த ஆவணத்தின் வழி அறிய முடிகிறது.

சான்றெண் விளக்கம்

1. Besekar, D. N., and R. J. Ramteke. "Study for Theoretical Analysis of Handwritten MODI Script-A Recognition Perspective." International Journal of Computer Applications 64.3 (2013): 45-49.

2. Joseph, Solley, and Jossy George. "Feature extraction and classification techniques of MODI script character recognition." Pertanika J Sci Technol 27.4 (2019): 1649-1669.

3. https://www.drikpanchang.com/tamil/tamil-month-panchangam.html?date=15/08/1875

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/general/p224.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License