இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
வரலாறு

மகாகவி ஸ்ரீ நீலகண்ட தீட்சிதர்

அப்பையா கணபதி


1582ம் ஆண்டு ஐப்பசி மாதம் அனுசம் நட்சத்திரத்தில் சிவபெருமானின் அவதாரமாகக் கருதப்பட்ட அப்பைய தீட்சிதரின் தம்பி ஆச்சான் தீட்சிதரின் புத்திரர் ஸ்ரீ நாராயணத்வரிக்கும் பூமிதேவி அம்மையாருக்கும் இரண்டாவது மகனாக ஸ்ரீ நீலகண்ட தீட்சிதர் பிறந்தார். நீலகண்ட தீட்சிதர் சிறிய வயதிலேயே தகப்பனையும் பாட்டனையும் இழந்து விட்டமையால் அவருடைய பெரிய பாட்டனாராகிய ஸ்ரீ அப்பைய தீட்சிதரால் வளர்க்கப்பட்டார்.

ஸ்ரீ நீலகண்ட தீட்சிதருக்கு 12வயதாகிய பொழுது ஸ்ரீ அப்பைய தீட்சிதர் தன் அந்திம காலத்தை சிதம்பரத்தில் கழிக்க விரும்பி குடும்பத்துடன் சிதம்பரத்திற்கு சென்றார். அங்கு சொத்தைப் பாகம் செய்த போது அவர்கள் குடும்பத்தில் கருத்து வேறுபாடு தோன்றியது. அப்போது, ஸ்ரீ நீலகண்ட தீட்சிதர் தாத்தாவிடம், தங்கள் சந்ததிகளை இறைவனிடம் நீங்கள் அடைக்கலம் செய்து விட்டபடியால் ஈஸ்வரன் எங்களை கைவிடமாட்டார். மேலும் தனக்கு பிதாவாகவும் போஷகராயும் விளங்கும் தங்கள் அன்பும் ஆசியும் போதும் என்றாராம். இதைக் கேட்டு பெரியவர் அப்பைய தீட்சிதர் 12வயதே நிரம்பிய ஸ்ரீ நீலகண்டரின் இறை பக்தியையும் அவர் மேதமையையும் கண்டு வியந்தார். பின் தன்னிடமுள்ள சிறந்த கிரந்தங்களாகிய தேவீ மகாத்மியத்தையும் ரகுவம்சத்தையும் தான் அதுவரை பூஜை செய்து வந்த பஞ்சலிங்கங்களையும் அவருக்கு அளித்து ஆசிர்வதித்தார்.

ஸ்ரீ அப்பைய தீட்சிதர் மறைவிற்குப் பின் ஸ்ரீ நீலகண்ட தீட்சிதர் தஞ்சையில் வாழ்ந்த ஸ்ரீ கோவிந்த தீட்சிதரின் குமாரராகிய ஸ்ரீ வேங்கடேஸ்வரமகீ என்னும் பெரியாரை தன் குருவாகக் கொண்டார், பின்பு ஸ்ரீ கீர்வாணேந்திரர் என்னும் பெரியவரிடம் ஸ்ரீ வித்யா உபதேசமும் பெற்றார், இவரை புகழ்ந்து குருராஜஸ்தவம் என்னும் நூலையும் இயற்றினார்.



பின்பு மதுரையை அக்காலத்தில் ஆண்ட திருமலை நாயக்க மன்னனிடம் மந்திரியாகப் பணியாற்றினார். அப்போது, மன்னன் உத்தரவின்படி பட்டத்து ராணியின் சிலையை ஒரு சிற்பி செதுக்கி வந்தார். அந்த சிலையின் இடது தொடைப்பகுதியில் தற்செயலாக ஒரு சிறு அளவு பெயர்ந்ததால் சிற்பி மனம் வருந்தினான். இதைக் கண்ட தீட்சிதர் இதற்காக நீ வருந்த வேண்டாம். கடவுளின் விருப்பப்படிதான் அப்படி நடந்துள்ளது. அப்படியே இருக்கட்டும் என்று தெரிவித்தார். மறுநாள் சிலையைக் கண்ட அரசன் சிலையில் உள்ள பின்னத்தைப் பற்றி கேட்க சிற்பி நடந்தவற்றை அப்படியே அரசனிடம் சொன்னான். தனக்கு மட்டும் தெரிந்த ரகசியம் ஸ்ரீ தீட்சிதருக்கும் தெரிந்திருந்ததை எண்ணித் தீட்சிதர் மேல் விபரீதமான சந்தேகம் கொண்ட மன்னர் தீட்சிதரைத் தண்டிக்க எண்ணி காவலாளிகளை அனுப்பி அவரை அழைத்து வரச் சொன்னார். இதைத் தன் ஞானதிருஷ்டியால் ஸ்ரீ தீட்சிதர் உணர்ந்தறிந்தார். தீட்சிதர் எரியும் கற்பூரத்தால் தன் கண்களைத் தானே பொசுக்கி கொண்டார். இதைக் கேட்ட அரசன் தன் சந்தேகத்தின் விளைவாக ஒரு ஞானியைப் புண்படுத்தியதற்கு வருந்தினான். தீட்சிதர் கால்களில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டினான். இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மையின் மேல் பக்தியுடன் இயற்றியதுதான் ஆநந்தஸாகரஸத்வம் என்னும் அரிய நூல்.

இதில் அவர் 61வது ஸ்லோகத்தில் அன்னையே மிக அழகிய உன் பாதாரவிந்தங்களை என் மேல் உள்ள அபரிமிதமான கருணையால் நீ காண்பித்தாலும் அதை என்னால் பார்க்க இயலாதே என்று வருந்திப் பாடியிருந்தார். இதனால் மனம் இரங்கிய மதுரை மீனாட்சி மீண்டும் கண் பார்வை அளித்ததாக கூறப்படுகிறது.

இதேபோல் ,வைராக்ய சதகம். நள சரித்திர நாடகம். கங்காவதரணம். சிவலீலார்ணவம். கலிவிடம்பனம். ஆநந்தஸாகரஸத்வம். சாந்தி விலாசம். சிவோத்கர்ஷ மஞ்சரி. முகுந்த விலாஸம். ரகுவிரஸ்தவம். சண்டீரகஸ்யம். அன்யாபதேச சதகம். நீலகண்ட விஜய சம்பூ. கையட வியாக்யானம். ஸபார்ஜன ஸதகம். குருராஜஸ்தவம். வைராக்ய ஸதகம். சிவ தத்வ ரகஸ்யம் முதலிய நூல்களை எழுதியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இவரது ஒவ்வொரு படைப்பும் வடமொழி இலக்கியத்தில் மிக மிகச் சிறந்த படைப்பாகத் திகழ்கின்றன. இவரது படைப்புகளில் இவருடைய புலமை, சொல்லாட்சி, நகைச்சுவை, அறிவுப் பூர்வமான விளக்கம், பல்வேறுபட்ட அனுபவம், ஆழந்த இறை பக்தி, மேன்மையான பண்புகள் ஆகியவை நன்கு விளங்கும்.



அதன் பிறகு, தற்போது திருநெல்வேலி மாவட்டத்திலிருக்கும் தாமிரபரணி நதியின் வடக்கு கரையில் பாலாமடை ( திருநெல்வேலியிலிருந்து வடகிழக்கே 15 கி.மீ தொலைவில் உள்ளது.) கிராமத்தையும் சுற்றியுள்ள நிலங்களையும் திருமலை மன்னன் ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதருக்கு மான்யமாக அளித்தான். அரசின் ஆவணங்களில் இது நீலகண்ட சமுத்திரம் என்றும் வழங்கப்படுகிறது. (See Archaelogical Survey of India Annual Report 1976-77 Epigraphy Sl.No. 243 to 244). இந்த கிராமத்தில் தன் சந்ததிகளுடன் தன் அந்திம நாட்களை இறை பணியிலேயே கழித்து பின் சந்நியாச ஆஸ்ரமம் மேற்கொண்டு ஒரு மார்கழி மாத சுக்லாவஷ்டமியில் ஜீவ சமாதியடைந்தார்.

இவருடைய சமாதியில் ஒரு நல் அதிர்வை இப்போதும் உணரமுடியும், இவருடைய சமாதியின் மேல் ஸ்ரீ தீட்சிதரே காசியில் இருந்து எடுத்து வந்த ஸ்ரீ காசி விஸ்வநாதரும் அருகில் ஸ்ரீ காசி விசாலாட்சி அன்னையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் இந்த கிராமம் இன்றும் சுபிட்சத்திற்கு குறைவில்லாமல் இருக்கிறது. இந்த இரண்டு விக்ரகங்களும் 1926ம் ஆண்டு ஸ்ரீ சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ சந்த்ரசேகர பாரதீ மகாஸ்வாமிகள் பாலாமடைக்கு விஜயம் செய்த பொழுது அதிவக்ஷ்டானத்தில் கோயில் இல்லாததால் உடன் கோயில் கட்ட விரும்பினார்கள், 1930ம் ஆண்டு கோயில் ஸ்ரீ நீலகண்ட தீட்சிதர் காசியிலிருந்து எடுத்து வந்த ஸ்ரீ காசி விஸ்வநாதரும் அருகில் காசி விசாலாட்சி அன்னையும் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிசேகமும் செய்யப்பட்டன(ஸ்ரீ சிருங்கேரி சங்கரமடம் கும்பாபிசேக நினைவு மலர் பக்கம் 73 முதல்77) என்கிறார்கள்.

ஸ்ரீ சிருங்கேரி ஜகத்குருக்கள் தங்கள் விஜய யாத்திரைகளின் பொழுது முக்கியமாக இரண்டு அதிஷ்டானங்களுக்கு விஜயம் செய்வதை ஒரு நியதியாக கொண்டுள்ளார்கள், அவை முறையே நெரூரில் ஸ்ரீ ஸதாசிவ ப்ரம்மேந்திராளின் அதிஷ்டானமும் பாலாமடையில் உள்ள ஸ்ரீ நீலகண்ட தீட்சிதரின் அதிஷ்டானமுமாகும். மேலும் ஸ்ரீ அப்பைய தீட்சிதரால் பூஜை செய்யப்பட்டு பின்னர் நீலகண்ட தீட்சிதராலும் ஆராதிக்கப்பட்டு வந்த ஸ்ரீ சந்திரமௌரீஸ்வரர் லிங்கம். பஞ்சலோக மகாகணபதி மற்றும் ஸ்ரீ சக்கரமும் தற்பொழுது ஸ்ரீ சிருங்கேரி ஜகத்குரு அவர்களின் பூஜையில் உள்ளன.



மேலும் இங்கு பார்த்தனால் ஸ்தாபிக்கப்பட்டு கந்தர்வர்களால் பூஜிக்கப்பட்ட வட மொழியில் ஸ்ரீ மங்களாங்குரேஸ்வரர் என்றும் தமிழில் அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் என்றும் அழைக்கப்படும் பரமேஸ்வரன் அருள்பாலித்து வருகிறார், இங்கு இறைவன் தனித்து இருந்தமையால் ஸ்ரீ நீலகண்ட தீட்சிதர் மதுரையில் தான் தினமும் வழிபட்ட மதுரை மீனாட்சி அம்மையை போன்ற ஓர் அழகிய சிலையை வடிக்கச்செய்து ஸ்ரீ மங்களேஸ்வரி என்ற அழகிய நாமம் சூட்டி இறைவனுக்கு தெற்கே பிரதிஷ்டை செய்தார், இக்கோயிலில் மேலும் கணபதியும். முருகன் வள்ளி தெய்வயானையுடன் அழகாய் காட்சிதருகின்றனர், ஆனால் இக்கோயிலில் நவக்கிரஹங்கள் இல்லை.



இந்த பாலாமடை கிராமத்தில். ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட ஸர்வக்ஞபீடமான தக்க்ஷிணாம்னாய ஸ்ரீ சாரதாபீடத்தின் ஆச்சாரியார் வழிவந்த ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ அபிநவ வித்யாதீர்தர் ஸ்வாமிகள் அருளாசியுடன் ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த ஸ்வாமிகள் திருக்கரங்களால் ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடம் மற்றும் பளிங்கு கல்லால் மிக நேர்த்தியுடன் வடிக்கப்பட்ட ஸ்ரீ ஆதிசங்கரர் சிலை பிரதிஷ்டையும் கும்பாபிசேகமும் 24.1.1992 அன்று நடந்தேறியது, அது நாள் முதல் பூஜைகளும் தவறாது நடந்து வருகிறது.



ஸ்ரீ மீனாஷியின் இறையருளை வாழ்க்கையில் நேரில் அனுபவித்த மகானாக ஸ்ரீ நீலகண்ட தீட்சிதர் கருதப்படுகிறார், சிறந்த ஆட்சி வல்லுனரும். தூயத்திருத் தொண்டரும். சிறந்த கவிஞரும். மதுரை மன்னர் திருமலை நாயக்கரிடம் அமைச்சருமாக இருந்த ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதரின் நினைவை மறவாதிருக்க செய்யும் பொருட்டு மகாகவீ ஸ்ரீ நீலகண்ட தீட்சிதர் அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளது.

இந்த மகாகவி ஸ்ரீ நீலகண்ட தீட்சிதர் அறக்கட்டளை ஸ்ரீ நீலகண்ட தீட்சிதரின் பிறந்த மற்றும் நினைவு நாட்களை சிறப்பான முறையில் கொண்டாடுதல். அவர் அருளிய எல்லா கிரந்தங்களையும் (இயன்ற வரை. மொழிபெயர்ப்புடனும் பதவுரையுடனும்) வெளியிடுதல். வருடாந்திர நினைவு சொற்பொழிவு. அவர் வாழ்ந்த பாலாமடையில் அவர் நினைவு கூறும் நிகழ்ச்சிகளை நடத்தும் வண்ணம் நினைவு கட்டிடம் எழுப்புதல் மேலும் அவர் அதிஷ்டானத்தை பராமரித்து நித்ய பூஜைகளை தவறாது நடத்துதல் அகிய பணிகளை தன் நோக்கமாய் கொண்டுள்ளது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/history/p1.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License