இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

சங்க இலக்கியங்கள் காட்டும் உமணர் வாழ்வியல்

கு. ஜீவாலட்சுமி


முன்னுரை

தமிழ்ச் சமூகம் என்பது தொன்மையான வரலாற்றை உடையது. இச்சமூகம் தங்களது உணவுத் தேட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு ‘இனக்குழு’வாக வாழும் இயல்பினை உடையது. இச்சமூகத்தின் ‘பண்டமாற்று’ முறையிலான உணவுத் தேட்டத்தின் விளைவாக உப்பு விற்கும் தொழிலை மேற்கொண்ட இனக்குழுவை ‘உமணர்’ என சங்ககால இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. உப்பு, உப்பு விற்றல், உமணர் பற்றிய வாழ்வியலை அடையாளப்படுத்தும் விதமாக இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகிறது.

உப்பும் நெல்லும்

சகடுகள் வரிசையாகச் செல்லும் ஒழுங்கு உடைய உமணர் ‘நோன்புகட்டுமணர் ஒழிகை’ எனச் சிறுபாணாற்றுப்படையிலும், ‘பல் எருத்து உமணர்’ என பெரும்பாணாற்றுப் படையிலும் கூறப்படுகிறது. இந்த உமணர்கள் உப்பு மூட்டைகளை வண்டிகளில் ஏற்றிச் சென்று பல ஊர்களில் விலை கூறி விற்று, அங்கு கிடைக்கும் பொருட்களை பண்டமாற்றாகப் பெறும் பழக்கத்தை உடையவர்கள் என்பதை;

“சில்பத உணவின் கொள்ளை சாற்றி,
பல்எருத்து உமணர் பதிபோகு நெடுநெறி”

எனும் பாடல் வழி அறியமுடிகிறது.

“சில்பத உணவு - உணவிற்குச் சிறிதாக
இடப்படும் உப்பு; கொள்கை சாற்றி - விலை கூறி” (செ.கு.-8)

உப்பை விற்று, நெல்லைப் பெற்று அதனை உரலில் இட்டு குற்றி அரிசியாக்கி சமைத்து உண்ணும் பழக்கம் இப்பகுதியில் விளக்கப்படுகின்றது.

“நெல்லும் உப்பும் நேரே ஊரீர்
கொள்ளீரோ”

என வரும் அகநானூற்றுப் பாடலும், உமணர் பண்டமாற்றுக் கொண்டு சமைத்து உண்ணும் இயல்பினர் என்பதை எடுத்துக் கூறும்.



நெய்தல் நிலமக்கள் மீனையும், கள்ளையும் கொடுத்து அதற்கு விலையாக குறிஞ்சி நிலத்தாரிடம் தேன், கிழங்கு வாங்கிவந்த செய்தியை

“தேன் நெய்யோடு கிழங்கு மாறியோர்
மீன் நெய்யோடு நிறவு மறுகவும்”

எனப் பொருநராற்றுப்படை கூறுகிறது.

உப்பு விற்றல்

உப்பெடுத்தல் தொழிலும் இவர்களுடையது ஆகவே இவர்களை ‘உமணர்’ (பெரும்.-65, அகம்-102:4, புறம்:116-7) என்று அழைத்தனர்.

இப்பரதவர்களின் முக்கியத் தொழில் மீன்பிடித்தலும் அவற்றை உலர்த்துதலும், உப்பு எடுத்தலும் ஆகும். இவர்கள் தூண்டிலை இட்டும் வலை வீசியும் மீன் பிடிப்பர்.

“உப்பு விளைவித்தல் இவர்களது பெருந்தொழில்களில் ஒன்று. உழாமலேயே உவர் நீரைப் பாத்திகளாகக் கட்டி உப்பை விளைவித்ததலினால் ‘உவர் விளைவு உப்பின் உழா உழவர்’ என்கிறார் உலோச்சனார். உப்பெடுத்து வணிகம் செய்யும் மக்கள் ‘உமணர்’ என்று கூறப்படுவர்’ (பெரும்.45-65)

குறுந்தொகையில் உமணர்

உப்பு வணிகர்கள் கூட்டம் கூட்டமாக பல ஊர்களுக்கு இடம்பெயர்ந்து சென்று உப்பு விற்றனர் என்கிறது. குறுந்தொகை,

“உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின்” (குறுந்.124:1)

காற்றடிக்கும் காலத்தில் எருது பூட்டிய உப்பு வண்டிகளைச் செலுத்தாது நிறுத்தி வைத்தனர் என்பதை,

“உமண் எருத்து ஒழிகைத் தோடு நிரைத்தன்ன” (குறுந்.388:4)

என்று கூறுவதன் வழி அறியமுடிகிறது.



உப்பு வணிகர்கள் உப்பை விலைகூறி விற்றனர் என்று நற்றினை கூறுகிறது. இதனை,

“வெண் கல் உப்பின் கொள்ளை காற்றி
கண நிரை கிளர்க்கும் நெடு நெறிச் சகடம்” (நற்.4: 7-8)

செல்லும் ஓசையைக் கேட்டு நெய்தல் நிலத்துப் பறவைகள் அஞ்சின எனக் கூறுவது கொண்டு உப்பு விலை கூறி விற்கப்பட்டதையும், நெய்தல் நிலத்தில் உப்பு விளைவிக்கப்பட்டது என்பதை அறியமுடிகிறது. உப்பு உவர் நிலத்தில் விளைவிக்கப்பட்டு குன்றுபோல் குவிக்கப்பட்டிருந்தது என்பதை

“உவர் விளை உப்பின் குன்று போல் குப்பை” (நற்.138:1)

என நற்றிணை கூறுகிறது.

மருதநிலத்தில் உள்ள உப்பு வாணிகர் வெண்ணெல்லை வண்டிகளிலே ஏற்றிக் கொண்டு போய் விற்று, அதற்கு விலையாகப் பிற நாடாகிய நெய்தல் நிலப்பகுதியில் விளைந்த உப்பைப் பெற்று வந்து விலை கூறுவர் என நற்றிணை கூறுகிறது. இதனை,

“தம் நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து,
பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி,
நெடு நெறி ஓழுகை நிலவு மணல் நீந்தி” (நற். 183:1-3)

நெல்லைத் தந்து உப்பைப் பெற்று வந்தனர் எனும் செய்தியை நற்றிணை வழி அறியமுடிகிறது.

நேரிய இடத்தையுடைய சீறிய உப்புப் பாத்திகளில் கடல்நீரை ஊற்றி மழையை எதிர்பாராது செய்யும் வேளாண்மையை உடையதும் கடற்கரைச் சோலை எனக் கூறும் நற்றிணையில் உப்பு விளைவிக்கும் முறைபற்றிய செய்தியை அறியமுடிகிறது.

“உமணர் தந்த உப்பு நொடை நெல்லின்
அயினி மா இன்று அருந்த” (நற்.254:6-7)

புலால் மணம் பொருந்திய மீனை உப்பிட்டு வற்றலாய் உணர்த்தும் செய்தியையும், உப்பு வணிகர்களின் வண்டிகள் வரிசையாகச் செல்வதை உமணர் ஒழிகை என்பர். (சிறு. 55, புறம் 116:7-8)

எருதுபூட்டிய வண்டியில்,
உமணர் தம் மகளிருடன் சென்று
உப்பை விலை கூறி விற்பர்.
“சில்பத உணவின் கொல்லை சாற்றி,
பல் எருத்து உமணர் பதிபோகு நெடுநெறி” (பெரும். 64-65)

உமணர்கள் உப்பு மூட்டைகளை வண்டியில் ஏற்றிப் பல ஊர்களுக்குப் சென்று விற்று, அவ்விடத்து விளையும் பொருள்களைப் பண்டாற்றாக பெறும் கொள்கையை உடையவர்கள்.

“நெல்லும் உப்பும் நேரே ஊரீர்
கொள்ளிரோ” (அகம், 140:5-9)

என உப்பை பெற்று நெல்லைப்பெற்று உண்டு வாழ்ந்தனர்.



வெள்ளிய மணற்பரப்பில் கடல்பரந்து ஏறுகின்ற நெய்தல் நிலத்தைக் கிடந்த நெடுவழியிடத்தே உப்பங்களிகள் சூழ்ந்த ஊர்கள் இருந்தன.

“கானல் வெண்மணல் கடல் உலாய் நிமிர்தர,
பாடல் சான்ற நெய்தல் நெடுவழி” (சிறுபாண். 151-152)

என சிறுபாணாற்றுப்படை கூறுகிறது.

விளைவிக்கும் நெய்தல் நில உழாது மக்களாகிய பரதவர் உவர் நிலத்து விளைந்த உப்பினை, உப்பு வணிகர் வரும் காலம் நோக்கி கடற்கரைச் சோலையின் குவிப்பர் என்று நற்றிணை கூறுகிறது. இதனை,

“உவர் விளை உப்பின் உழாஅ உழவர்
ஓழிகை உமணர் வரு பதம் நோக்கி,
கானல் இட்ட காவற் குப்பை”

எனக் கூறுவது கொண்டு உப்பை விளைய வைப்பவர் பரதவர், அதனை விலை கூறி விற்பவர் உமணர் என்பதை அறியமுடிகிறது. முடம்பட்ட காளையை உப்பு வணிகர்கள் விட்டு நீங்கினர், என

“நீரும் புல்லும் ஈயாது, உமணர்
யாரும்இல் ஒருசிறை முடத்தொடு துறந்த
வாழா வான்பகடு ஏய்ப்ப” (புறம். 307:7-9)

உப்பு வணிகர்கள் உப்பை ஏற்றிக் கொண்டு காட்டு வழியில் வண்டிகளைச் செலுத்தினர், என

“உப்புஓய் சாகாட்டு உமணர் காட்ட
கழிமுரி குன்றத்து அற்றே” (புறம்: 313:5-6)


உப்பு வாணிகமாக உள்நாட்டுக்குள்ளேயே பண்டமாற்று முறையில் நடைபெற்றது என்பதை அறியமுடிகிறது.

தெளிந்த உப்பங்கழியிடத்து விளைந்த வெண்மையான கல் உப்பினைப் பலர் அறிய விலை கூறி விற்ற உப்பு வணிகர்கள், எருதுகள் பலவற்றையும் பரந்து மேயும்படி அவிழ்த்து விட்டுச் சமைத்து உண்டு இளைப்பாறி அவ்விடத்தை விட்டும் செல்வர் என

“தெண்கழ விளைந்த வெண்கல் உப்பின்
கொள்ளை சாற்றிய கொடுநுக ஒழிகை
உரனுடைச் அவல பகடுபல பரப்பி
உமண்உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின்” (அகம்: 159:1-4)

உப்பு வணிகரது மகள் உப்பை விலைகூறி விற்றாள் எனும் செய்தியை
“கதழ்கோல் உமணர் காதல் மடமகள்
சில்கோல் எல்வளை தெளிர்ப்ப வீசி
நெல்லின் நேரே வெண்கல் உப்பு எனச்
சேரி விலைமாற கூறலின், (அகம்: 140:5-8)

பெண்களிடம் வீதிகளில் விலை கூறி உப்பு விற்றனர் எனும் செய்தியை அறியமுடிகிறது. “வௌ; உப்பு” என (மது:கா:318) கூறுகிறது. உமணரை “உப்பு பகர்ந்ரொடு” என கூறுகிறது. (மது:கா:117)

முடிவுரை

உப்பு விற்றவர்கள் ‘உமணர்’ எனப்பட்டனர். உப்பு ‘நெல்’ முதலிய உணவுப் பொருட்களுக்கு மாற்றாக விற்கப்பட்டது. அந்தந்த நிலங்களில் கிடைக்கும் பொருட்களைப் பெற்றுக் கொண்டு அதற்கு ‘உப்பை’ விலையாக விற்றனர். உப்பை விளைவிக்கும் குழுவிடமிருந்து நெல் முதலியன கொடுத்து உப்பை விலைக்கு வாங்கிச் சகடங்களில் கொண்டு சென்று, பிற நிலங்களில் உப்பை விற்பவர்கள் ‘உமணர்’கள் என்பதை அறியமுடிகிறது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/literature/p102.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License