இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

சங்க இலக்கியத்தில் சந்தனம்

முனைவர் தி. கல்பனாதேவி
கௌரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை,
ஆ. கோ. அ. கலைக்கல்லூரி, திண்டிவனம்.


முன்னுரை

சங்க இலக்கியத்தில் இடம் பெற்றிருக்கும் சந்தனம் குறித்த பல்வேறு செய்திகளை இக்கட்டுரையில் காணலாம். குறிப்பாக;

1. சாந்து பூசுதல், கொங்கைகளில் சந்தனம் பூசுதல், மைந்தர் சந்தனம் அணிதல், சாந்தின் தன்மை உன்னமரம், மார்பு வடு - சந்தனம் பூசுதல், சாந்தம் பூசுதல், சந்தனத் தேய்வைப் பூசுதல், சாந்தம் நுண்துகள் அணிதல்

2. சந்தன மணமேற்ற காற்று - கமழ்புகை, சந்தனத்தின் பயன், சந்தன மரங்கள் நீரின் தன்மை, சந்தனத்தின் தன்மை, வயிரம் முற்றிய சந்தனமரம்

3. சந்தனம் பூசப்பெற்ற கட்குடம்

4.சந்தன மாலை

5.சந்தனக் கட்டைகள், சந்தனக்கட்டை எரிக்கப் பெறல், சந்தனக்கட்டைகள் - விருந்தினர்கட்கு அளித்தல், சாந்தம் ஞெகிழி - கொள்ளிக்கட்டை, சாந்தப்புகை - சாந்தம்பூ, அகில், சந்தனக் கட்டைக் கட்டுப்பரண்

6. சந்தன விறகின் புகை சந்தனம் - விறகாகப் பயன்பட்டமை - சந்தனப் புகை சாந்தம் விறகு

7. சந்தனத்தாது

8. சந்தன உரல் - உலக்கை

9. சந்தன உலக்கை

ஆகியவற்றின் பயன்பாட்டினைப் பற்றியும் காண்போம்.



1. சாந்து பூசுதல்

சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியின் பாடலில் சாந்தமைந்த மார்பின் கண்ணே நெடியவேல் பாய்ந்தனவாக அரசரும் பொருது அக்களத்தின் கண்ணே மடிந்தனர் என்பதை,

'சாந்தமை மார்பி னெடுவேல் பாய்ந்தென
வேந்தரும் பொருதுகளத் தொழிந்தன ரினியே” (1)

எனும் வரிகள் இதனைச் சுட்டுகின்றன.

இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியைப் பாண்டரங் கண்ணனார் பாடிய பாடலில், புலால் நாறும் வாளினையும், பூசிப் புலர்ந்த சாந்தினையும் உடையவன் என்பதை,

'புலவிவாட் புலர்சாந்தின்
முருகற் சீற்றத் துருகெழு குருசில்” (2)

என்று இப்பாடலடிகள் சான்று பகர்கின்றன.

வல்விலோரியைக் குறிப்பிடும் இடத்து, சந்தனம் பூசிப் புலர்த்திய அழகிய பரந்த மார்பினை உடையவன் என்பதை,

'ஆரந் தாழ்ந்த வம்பகட்டு மார்பிற்” (3)

எனும் இவ்வடி இதனை மெய்ப்பிக்கும்.

ஐங்குறுநூற்றில்;

'சாந்தம் நாறும் நின் மார்பு’ என தலைவனைக் குறிப்பிடுகின்றது.

“சாந்த நாறு நறியோள்
கூந்த னாறுநின் மாrபே தெய்யோ” (4)

என்பதால் அறியலாம்.

கொங்கைகளில் சந்தனம் பூசுதல், மைந்தர் சந்தனம் அணிதல்

செவ்வேள் பற்றிய பாடலில், பரங்குன்றத்தின் கண் ஆடல் மகளிரொருத்தி ஆடிய ஆடலை இரசித்துத் தன் கணவன் அவள் பக்கம் செல்லாதிருக்க அவ்வாடல் மகளினும் மிகுந்த அழகுடையவளாக தன்னை அலங்காரம் செய்பவள் ஆனாள். பின்னும் ஒருத்தி அப்பரத்தையை விரும்பாதிருக்கச் செய்யும் பொருட்டு தன் கொங்கைகளில் சந்தனத்தைப் பூசி உதிர்த்துப் பின்னும்; பூசி மணமேற்றி நின்றாள். (5)

இதனை,

'பொதிர்த்த முலையிடைப் பூசிச் சந்தனம்
உதிர்த்துப் பின்னுற வூட்டுவாள் விருப்பும்” (6)

என்பது சான்று பகரும்.

வையை பற்றிய பாடலில், வையை நீரில் நீராடிய அம்மக்கள் அணிந்திருந்த சந்தனமும், மாலைகளும், மலர்களும், நெகிழ்ந்து நிறைந்தமையாலே தன்னிறம் தோன்றாது மறைந்தது. (7)



இதனை,

'சாந்துங் கமழ்தாருங் கோதையுஞ் சுண்ணமும்
கூந்தலும் பித்தையுஞ் சோர்ந்தன பூவினு மல்லாற்” (8)

என்றும் இதே பாடலில்,

'சாந்துங் கமழ்தாருங் கோதையுஞ் சுண்ணமும்” (9)

என்றும் குறிப்பிடுகின்றது.

சாந்தின் தன்மை உன்னமரம்

புலாஅம் பாசறை எனும் தலைப்பில் உள்ள பாடலில், பலா மரத்திலே பழுத்து வெடித்த பழத்தின் வெடிப்பில் இருந்தொழுகும் தேனை, வாடைக்காற்று எரியும், பறம்பு நாட்டில் பொருந்திய பெரிய விறல் படைத்தவனும், ஓவியத்தில் எழுதியது போன்ற வேலைப் பாடமைந்த நல்ல மனையின் கண்ணே இருக்கும் பாவை போன்ற நல்ல அழுகும் நலமும் உடையாட்குக் கணவனும், பொன் போலும் நிறமுடைய பூவினையும், சிறிய இலையினையும், புல்லிய அடிப்பகுதியினையும் உடைய உன்னமரத்துக்குப் பகைவனும், எமக்கு அரசனும், பூவிப்புலஉந்த சாந்தினையுடைய அகன்ற மார்பினையும், குன்றாத ஈகையால் பெரிய வள்ளன்மையினையும் உடையானுமாகிய பாரி என்று கபிலர் பாடியுள்ளார்.

பூசிய சாந்தின் ஈரம் புலர்ந்தாலும், ஈதற்குக் கொண்ட நெஞ்சின் ஈரம் எஞ்ஞான்றும் புலராது - ஈகை வினையைப் புரிவித்தல் பற்றி, 'புலர்ந்த சாந்திற் புலரா வீகை” என இயைத்துச் சொன் முரணாகிய தொடையழகு தோன்றக் கூறினார்.

சாந்து பூசுவதற்கு இடனாவது மார்பும், ஈகை வினைக் கிடனாவது வண்மைய மாதலின், 'புலர்ந்த சாந்தின் மலர்ந்த மார்பு” என்றும் “புலரா வீகை மாவண் பாரி” இயைத்துப் பொருள் கூறப்பட்டுள்ளது. (10)

'புலர்ந்த சாந்திற் புலரா வீகை
மலர்ந்த மார்பின் மாவண் பாரி” (11)

எனும் பாடலடிகள் இதனை மெய்ப்பிக்கின்றன.

மார்பு வடு - சந்தனம் பூசுதல்

வெண்போழ்க் கண்ணி எனும் தலைப்பில் பூசிய சந்தனத்தின் பொலிவு தோன்றாதபடி மறைத்த மார்பினை உடைய சான்றோர்க்குத் தலைவன் எனுமிடத்து,

'எஃகா டூனங் கடுப்பமெய் சிதைந்து
சாந்தெழின் மறைந்த சான்றோர் பெருமகன்” (12)

மெய்யானது சிதைந்து அச்சிதைந்த வடுக்களானே பூசின சாந்தின் அழகை மறைத்தது. (13)



ஔவையார் பாடலில், தலைவன் தன் மார்பில் குறிய புள்ளிகள் அமைந்த பூசிய சாந்தத்தினை உடையவன் என்பதை,

'இடைச்சுரத்து எழிலி உரைத்தென மார்பில்
குறும்பொறிக் கொண்ட சாந்தமொடு” (14)

எனும் வரிகள் இதனை உணர்த்துகின்றன.

சாந்தம் பூசுதல்

சிறிய கிளைகளிலே பூங்கொத்துகளையுடைய பெரிய குளிர்ச்சி பொருந்திய சந்தன மரத்தின் குறையோடு பலவாய பொருள்களையும் சேர்ந்து அமைக்கப் பெற்ற சாந்தம் பூசிய கூந்தல் என்பதை,

'சிறுகோல் இணர பெருந்தண் சாந்தம்
வகைசேர் ஐம்பால் தகைபெற வாரிப்
புலர்விடத்து உதிர்த்த துகள்படு கூழைப்” (15)

என கூந்தல் வாரிய செய்தியினைப் புலப்படுத்துகின்றது.

தலைவன், சந்தனம் தவழும் மார்பினை உடையவன் என்பதை இப்பாடலடிகள் சான்று தருகின்றன.

'ஆரங் கமழும் மார்பினை
சாரல் சிறுகுடி ஈங்குநீ வரலே” (16)

உடையவன் என்பதை இப்பாடலடிகள் சான்று தருகின்றன.



சந்தனத்தேய்வைப் பூசுதல்

கொற்றங்கெற்றனார் தமது பாடலில், கரிய பக்க மலையின் கண்ணுள்ள அருவியில் நீர் விளையாட்டயர்ந்து மலைச்சாரலில் எழுந்த சந்தனமரம் நறுமணங் கமழ்தலால் வண்டு வந்து விழும்படி அச்சந்தனத் தேய்வைப் பூசிப் பெரிதும் விரும்பியச் செய்தியை,

'பெருவரை அடுக்கத்து அருவி ஆடிச்
சாரல் ஆரம் வண்டுபட நீவிப்” (17)

எனும் பாடல் அடிகள் இதனை மெய்ப்பிக்கின்றன.

சேந்தன் பூதனார் பாடலில் வயிரம் பொருந்திய மரத்துடனே சேரப் பிணித்து மிகப் புரட்டா நிற்கும் சந்தன மரத்தினின்றும் போந்த நறுமணங் கமழ்கின்ற மலைப்பிளப்பினை உடைய மலரைச்

'சாந்தம் போகிய தேங்கமழ் விடர்முகை
எருவை நறும்பூ நீடிய” (18)

எனும் பாடலடிகள் குறிப்பிடுகின்றது.

நெடிய கணுக்களையுடைய சந்தனமரத்தின் அசைகின்ற கிளையிலே சுற்றிய நிறம் பொருந்திய இலையுடைய நறிய தமாலக்கொடி என்பதை,

'நெடுங்கண் ஆரத்து அலங்குவினை வலந்த
பசுங்கேழ் இலைய நறுங்கொடித் தமாலந்” (19)

எனும் இவ்வடிகள் சுட்டுகின்றன.

மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் பாடலில், தலைவன் 'ஆரம் நீவிய அணிகிளர் ஆகம்” (20) பொருந்தியவன் என்பதை இவ்வரி சுட்டுகின்றது.

சாந்தம் நுண்துகள் அணிதல்

முல்லை நிலப்பாடலில், தண் கமழ் சாந்தம் நுண்துகள் அணிய தண்ணிய கமழும் சாந்தினொடு நுண்ணிய பொடிகளை அணிந்தச் செய்தியினை,

'புகழ்குறி கொண்ட பொலந்தார் அகலத்துத்
தண்கமழ் சாந்தம் நுண்டுகள் அணிய” (21)

எனும் வரிகள் சுட்டுகின்றன.

நல்லியக்கோடன் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடலில் நறிய பூக்களையுடைய சரபுன்னையையும், அகிலையும் சந்தனத்தையும், நீராடும் துறையிலே நீராடு மகளிர்க்குத் தெப்பமாக நீர் கொணர்ந்து தருகின்றது. (22) என்பதனை,

'நறுவீ நாகமும் அகிலும் ஆரமும்
துறையாடு மகளிர்க்குத் தோட்புணை யாகிய” (23)

எனும் பாடலடிகள் இதனை மெய்ப்பிக்கின்றன.

குறவர்கள் மார்பினில் சந்தனம் அணிதல் குன்றுதோறாடல் பதிகத்தினுள், நறிய சந்தனத்தைப் பூசிய நிறம் விளங்கும் மார்பினை உடைய கொடிய தொழிலை உடைய வில்லாலே கொல்லுதலைச் செய்த குறவர்கள் (24) என்பதனை,

'நறுஞ்சாந் தணிந்த கேழ்கிளர் மார்பிற்
கொடுந்தொழில் வல்விற் கொலைஇய கானவர்” (25)

எனும் பாடலடிகள் இதனை மெய்ப்பிக்கின்றன.

குறிஞ்சி நிலப்பாடலில் 'ஆர நாற அருவிடர்த் ததைந்த” (26)

என்பதன் மூலம் சந்தனம் பூசப் பெற்றச் செய்தியும் அறியலாம்.

தேன் மணங் கமழும் மார்பிலே பூசிப்புலர்ந்ததையுடைய இருங்கோ வேண்மான் என்று

மருதநிலப் பாடல் சான்று பகர்கின்றது.

'தேங்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின் இருங்கோ வேண்மான்” (27)

என்பது இதனைச் சுட்டும்.

நெய்தல் நிலப்பாடலில், நறுமணம் கூட்டி அரைக்கப் பெற்று முடிந்த சந்தனத்தைப் பூசியவன் தலைவன் என்பதை,

'அரையுற் றமைந்த ஆரம் நீவிப்
புரையப் பூண்ட கோதை மார்பினை” (28)

எனும் பாடலடிகள் சுட்டுகின்றது.

மேலும் 'ஆர மார்பின் அரிஞிமி றார்ப்பத்” (29)

எனும் அடியும் மேற்குறிப்பிட்டச் செய்தியை மெய்ப்பிக்கும்.



நம்பி நெடுஞ்செழியன் குளிர்ந்த மணம் நாறும் சாந்தைப் பூசினான் 'தண்கமழுஞ் சாந்து நீவின்ன” (30) என்பதை இவ்வடியினை புறம் சான்று பகர்கின்றது.

சந்தனத்தின் மணங்கமழும் மார்பினையுமுடைய மறம் பொருந்திய போரைச் செய்யும் அகுதை என்றும் புறம் சான்று பகர்கின்றது. (31)

குளிர்ந்தனவாகி நறுமணங் கமழ்கின்ற ஒள்ளிய நுதலையுடையவளே! என்பதனை,

'தண்ணிய கமழும் ஒண்ணுத லோயே” (32)

எனும் இவ்வடி மெய்ப்பிக்கின்றது.

மலையின் கண் பிறந்த சிவந்த சந்தனத்தையும், முத்துமாலையையும் உடைய மார்பினன் என்பதனை,

'மலைசெஞ் சாந்தின் ஆர மார்பினன்” (33)

எனும் வரி மெய்ப்பிக்கின்றது.

'ஆரம் நாறும் மார்பினன்” (34)

எனும் இவ்வடியினால் சந்தனம் மார்பினில் பூசப்பெற்றதை அறியலாம்.

பதிற், கல்கால் கவணை எனும் தலைப்பில் உள்ள பாடலில்,

'புகன்ற மாண்பொறிப் பொலிந்த சாந்தமொடு” (35)

என்பதற்கு, ஆடவர்க்குச் சீர்த்த இலக்கணமாக நூல்களில் கூறப்பட்ட மாட்சிமைப்பட்ட வரிகள் பொருந்திய பூசப்பட்டு விளங்கும் சந்தனத்தோடு, தண்ணிதாய் மணங் கமழும் முத்துமாலையை அணிந்தச் செய்தியைத் தெரிவிக்கின்றது.

(தொடரும்...)


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/literature/p158.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License