இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

தமிழ் கிறித்தவக் கீர்த்தனைகள்

பேராசிரியர். சிட்னி சுதந்திரன்


இந்தியச் சீர்திருத்தக் கிறிஸ்தவ சமயவரலாற்றில் மறக்க முடியாத நாள், ஜூலை மாதம் 9ம் தேதி, 1706 ஆம் ஆண்டாகும். அன்று தான், அதாவது, 300 ஆண்டுகளுக்கு முன்பு, ஜெர்மன் நாட்டு லுத்தரன் சபையைச் சேர்ந்த, 23 வயது பர்த்தலோமேயு சீகன்பால்கும், அவரோடு ஹென்ரிக் புளுச்சோவும், முதல் சீர்திருத்தக் கிறிஸ்தவ மிசனெரிகளாக டென்மார்க் மன்னன் நான்காம் பிரடெரிக்கால் இந்தியாவுக்கு கப்பலில் அனுப்பப்பட்டு, தஞ்சாவூருக்கு கிழக்கே உள்ள தரங்கம்பாடியில் காலடி எடுத்து வைத்தனர். அதன் பின்பு ஐரோப்பியர்களின் SPCK, SPG சங்கங்கள், மற்றும் அமெரிக்கன் மிஷன், CMS போன்ற இயக்கங்களால், தமிழகத்தில் சீர்திருத்தத் திருச்சபைகள் பல்வேறு பகுதிகளில் வேரூன்றி வளர்ந்து வந்தன. இந்தக் காலத்தில், கிறிஸ்துவ மத வழிபாட்டிற்கு பாடல்கள் இன்றியமையாத தேவையாய் அமைந்திருந்தன.

கவிதையின் வலிமை

கவிதை என்பது உணர்ச்சியின் பிரவாகம். கட்டவிழ்ந்து துள்ளி வரும் சிந்தனைகளை, சொற்களால் கோலமிடுவதே கவிதை என்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.

“கிழக்குக்கு வலியெடுத்தால்
அது சூரியனைப் பிரசவிக்கிறது..
மொட்டு முதிர்ந்து விட்டால்
பொட்டென்று மலர்ந்து விடுகிறது..”

கவிஞனும் அப்படித்தான். உள்ளே ஏதோ ஓர் வலி...! ஏதோ ஓர் சுமை...! அதை இறக்கி வைக்க அவன் மொழியைத் துணைக்கு அழைக்கிறான். கலை வண்ணம் பூசி, தன் வலிகளை, தன் சுமைகளை, தன் கனவுகளை அழகு செய்கிறான். அது கவிதையாகிறது..!



பாடல்கள் கவிஞர்களின் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஊற்றெடுத்து வருகின்றன. கவிதைகள் நெஞ்சின் ஒலிகள். உள்ளத்தின் உணர்வுகளுக்கு ஒரு வடிகால். காலத்தால் அழிக்க முடியாததாய் காகிதத்தில் பதிக்கப்படும் படிமங்கள். பதிப்போரையும், படிப்போரையும் இணைத்திடும் உணர்ச்சிப் பாலம்.

“கவிதை” என்றால் கற்பனை என்ற எண்ணம் பொய்த்துப் போகிறது. கவிதைகள் வாழ்க்கை நிகழ்ச்சிகளோடு ஒன்றியவைகள். ஒவ்வொரு கவிதைக்கும் பின்னால் ஒரு உண்மைச் சம்பவம் ஒளிந்து கொண்டிருக்கிறது. சுருங்கச் சொன்னால் கவிஞர்கள் தங்கள் அனுபவங்களையே கவிதை வடிவில் தருகிறார்கள். கவிஞன் மனித வாழ்வோடு ஒன்றுபட்டவன். அவன் கண்டு, கேட்டு, ரசித்து, அனுபவித்த உணர்ச்சிகளையே கவிதையில் வடித்துத் தருகிறான். நிகழ்வுகளை நினைவுபடுத்தும் ஒருசில வார்த்தைகள் தான் கவிதை வடிவம். தரமான கவிதைகள் சாகாவரம் பெற்றவைகள். கவிதை சுவையானது..! சுகமானது..!

கவிதையின் தனிச்சிறப்பு தாளமும், சந்தமும் நிறைந்திருப்பது தான். தமிழ் இலக்கணம் தாளங்களை வைத்தே வரையறுக்கப்பட்டுள்ளது. ஓசையை அடியாகக் கொண்டே எதுகையும், மோனையும் தோன்றியுள்ளன. அதனால் கவிதைகள் இசையோடும், தாளத்தோடும் இணைந்து பாடல்களாய்ப் பாடப்படும் போது மனித இதயங்களை மெய் மறக்கச் செய்கின்றன. பாடல்கள் இளந்தென்றலாய் இதயங்களை வருடிச் செல்லும் சுகம் தெரிகிறது. பாடல் ஒரு தீச்சுடர். அது எந்த உருவத்தில் பற்றுகிறதோ, அந்த உருவமாய் கொழுந்து விட்டெரிகிறது. அது தனக்கு சுலபமாய் இருக்கும் எல்லா இடங்களிலும் புகுந்து கொள்கிறது. பாடல்களிலுள்ள கருத்துக்கள் வெகு எளிதாய் நெஞ்சுக்குள் நுழைந்து, பதிந்து விடுகிறது. பிடித்த பாடல் என்றால் வாய் மெல்ல அதை அசை போடத் தொடங்குகிறது. ராகத்தோடு வார்த்தைகளும் பண்படுத்தப்பட்ட நிலத்தில் விழுந்த விதைகளாய் முளைத்து துளிர்விட ஆரம்பிக்கின்றன. நெஞ்சில் பதிந்த பாடல்கள் அநேகருக்கு குளிக்கும் அறையிலிருந்தும் குதூகலமாய் வெளிப்படுகின்றன.



கிறித்துவப் பாடல்களின் தேவை

ஆலயங்களிலும், ஜெபக்கூட்டங்களிலும், பாடல்களால் தேவனைப் போற்றிப் புகழ்வதும், அவரிடம் மன்றாடுவதும், அவருடைய பிறப்பை, இறப்பை, உயிர்த்தெழுதலை பாடல்களால் நினைவு கூறுவதும் ஒரு முக்கியப் பகுதியாய் அமைந்திருந்தது. அத்தோடு கிறிஸ்தவ திருமணப் பாடல்கள், மரணத்தில் பாடும் பாடல்கள், ஞானஸ்நான ஆராதனைப் பாடல்கள் என பல விழாக் காலத்திற்கான பாடல்களும் தேவையாயிருந்தன. இன்று அன்றாட கிறிஸ்தவ வாழ்க்கைக்கும், கிறிஸ்தவ வழிபாட்டிற்கும் அமைந்து விட்டன. இன்றைய காலகட்டத்தில் ஆராதனைகளில் பாடல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததோடல்லாமல், மூன்றில் ஒருபகுதி காலத்தை எடுத்துக் கொள்கிறது என்றால் அது மிகையாகாது.

கிறித்துவப் பாடல் நூல்கள்

1853ம் ஆண்டில், “கிறிஸ்தவ இலக்கியச் சங்கம்” (Christian Literary Society - CLS), தமிழகத்தில் பல்வேறு சபைகளில் பாடப்பட்டு வந்த பாடல்களிருந்து நல்ல பாடல்களைத் தேர்வு செய்து, எல்லா சீர்திருத்தத் திருச்சபைகளும் பயன்படுத்தும் விதமாக கிறிஸ்தவப் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூல் ஒன்றினை வெளியிட்டது. இதனைத் திறம்பட செய்தவர் அருள்திரு. வெப் ஐயர் ஆவார்கள்.

அதன் பின்பு, 1870ம் ஆண்டில், கனம். வாஷர்பான் ஐயர் தலைமை வகித்து நடத்திய கிறிஸ்தவ இலக்கியச் சங்கக் கூட்டத்தில், புதிய பாடல்கள் சேர்க்கப்பட்டன. பழைய பாடல்கள் திருத்தப்பட்டன. இதனால் நூல் பெரிதானது.

கனம். ஜே.எஸ். சாண்ட்லர் ஐயர், மூன்றாம் பதிப்பில் இன்னும் பல புதிய கீர்த்தனைகளைச் சேர்த்தார். 1926ம் ஆண்டில் வெளிவந்த நான்காம் பதிப்பை, லுத்தரன் சபையைத் தவிர மற்ற எல்லா சீர்திருத்தத் திருச்சபைகளும் உபயோகப்படுத்தின.

1950ம் ஆண்டு, மே மாதம், எச்.ஏ. பாப்லி அவர்கள் தலைமையில், கிறிஸ்தவ இலக்கியச் சங்கம்; குன்னூரில் கூடி, லுத்தரன் சபைக்கான 35 பாடல்களையும், அத்தோடு, திருப்பத்தூர், “ஆசிரம பாமாலை“, சங்கை ஜே. ஏ. சாமுவேல் இயற்றிய “கைப்பிரதிப் பாடல்கள்”, கருணாகரபுரியில் அச்சிடப் பெற்ற “கிறிஸ்தவக் கீர்த்தனை மாலை”, “திருமறையூர் இன்னிசைப் பாக்கள்”, ஆசிரியர் எஸ். மாசிலாமணி இயற்றிய “கிறிஸ்தவ இன்னிசைப் பாக்கள்” ஆகிய நூல்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட கீர்த்தனைகளையும் சேர்த்து, மொத்தம் சுமார் 70 கீர்த்தனைகள், புதிய பொது கீர்த்தனை நூலில் இடம் பெறச் செய்தனர். அத்தோடு, அநேக பழைய, பயன்படுத்தாத கீர்த்தனைகளையும் நூலிலிருந்து நீக்கினர். இந்தப் புத்தகம் “கிறிஸ்தவக் கீர்த்தனைகள்”, என்கிற பாடல் புத்தகமாக வெளியிடப்பட்டது. இதில் இடம் பெற்ற அத்தனைப் பாடல்களும் கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்டு, ராகத்தோடும், தாளத்தோடும் அமைந்தவையாகும். இப்புத்தகத்தில் 400 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள், 132 பாடல்கள், 23 குருமார்களால் (ஐயர்), இயற்றப்பட்டவை.



1988ல், வழக்கில் இல்லாத பாடல்கள் நீக்கப்பட்டு, புதுப் பாடல்கள் சேர்க்கப்பட்டு, பதினான்காவது திருத்திய, விரிவாக்கப் பதிப்பு, “கிறிஸ்தவக் கீர்த்தனைகளும், புத்தெழுச்சி கீதங்களும்”, என்ற பாடல் புத்தகம் வெளியிடப்பட்டது. இத்தொகுப்பில் புதிதாக சேர்க்கப்பட்ட பெரும்பான்மையான பாடல்கள், தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் சுமார் இருபது ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பாடல்களாகும். இப்பாடல்கள் கர்நாடக இசையில் அமையாதவைகளாகும்.

1980ல், நெல்லை திருச்சபையின், இருநூறாண்டு நிறைவு விழா நினைவாக, திருநெல்வேலி திருமண்டலம், “கீதங்களும் கீர்த்தனைகளும்”, என்ற பாடல் புத்தகத்தை வெளியிட்டது. இதில் பாமாலைப் பாடல்கள், கீர்த்தனைப் பாடல்கள், புத்தெழுச்சிப் பாடல்கள், ஜெபப்புத்தகம் ஆகியவைகள் அடங்கும். இது ஒரு நல்ல புத்தகம். நாம் பாடும் அனைத்துப் பாடல்களும் ஒரே புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது போற்றுதற்குரியது. ஆனாலும் இந்நூலில் ஒரு குறை, அது யாதெனில், பாடலாசிரியர் அகராதி அல்லது கவிஞர் அகராதி விடுபட்டுப் போயிருப்பதுதான்.

கவிஞர்கள் விடுபடும் அவலம்

கவிதைகள் முன் நிற்க கவிஞர்கள் பின் நிற்கிறார்கள். அதனால் தான் அநேக கவிஞர்களின் பெயர்கள் அகராதியிலிருந்தே விடுபட்டுப் போகின்றன. இதற்கு நல்ல எடுத்துக்காட்டு, “கிறிஸ்தவக் கீர்த்தனைகள்”, பாடல் புத்தகத்தில், ஒரு சில கவிஞர்களின் பெயர்கள் தரப்படவில்லை அல்லது தெரியாமலே போய் விட்டதைப் பார்க்கிறோம். அனாதைக் குழந்தைகளாய் பாடல்கள் காட்சி தருகின்றன.

உதாரணமாக, “கிறிஸ்தவக் கீர்த்தனைகள்” (மூன்றாம் பதிப்பு-1956 ) எனும் பாடல் புத்தகத்தில்,



எனது கர்த்தரின் ராஜரீக நாள் -074

விசுவாசியின் காதில்பட, யேசுவென்ற நாமம் - 128

பாதம் ஒன்றே வேண்டும் - 201

உனக்கொத்தாசைவரும் நல் உயர் பருவதம். இதோ! -227

செய்ய வேண்டியதைச் சீக்கிரம் -261

கர்த்தருக்குக் காணிக்கையிதோ! தம்மையே தந்த - 275

ஐயனே! இவர்க் காசி ஈகுவாய் - 303

இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய், யேசு நாதையா -331

வினை சூழா திந்த இரவினில் காத்தாள் -339

ஓய்வு நாள் இது – மனமே -340

யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார் - 388

மேற்கூறிய பாடல்களின் ஆசிரியர்கள் யார் என்று தெரியாத ஒரு அவல நிலை. இன்னும் கொடுமை என்னவென்றால், இந்தப் பாடல்களில் அநேகப் பாடல்கள் கிறித்துவர்களுக்குப் பிடித்த, நாம் அடிக்கடி பாடும், மிக இனிமையான பாடல்களாகும்.

திரைப்படப் பாடல்களில் கவிஞர்களுக்கு கிடைக்கும் சிறிதளவு பெயர் கூட கிற்த்துவ மதப் பாடல்களில் கிடைப்பதில்லை. அநேக சந்தர்ப்பங்களில், ஒலிநாடாவில் நாம் கேட்கும் கிறிஸ்தவப் பாடல்கள், பாடலைப் பாடிய பாடகருக்குச் சொந்தம் என்ற முத்திரையில் தான் விற்பனைக்கு வருகின்றன. அப்படியென்றால், அந்தப் பாடல் பாடியவருக்கு மட்டும்தான் சொந்தம் என்பதாக இருக்கிறது. பாடலை எழுதிய கவிஞன் காணாமலே போய் விடுகிறான்.

இன்றைய கால மாற்றத்தில், தொலைக்காட்சியில் கிறிஸ்தவப் பாடல்கள் நிறைய ஒளிபரப்பப்படுகின்றன. நல்ல ஒரு வளர்ச்சி, முயற்சியும் கூட..! அந்தப் பாடல் காட்சிகளில் வருபவர்கள், பாடகர்களா? அல்லது வாயசைப்பவர்களா? என்று தெரியவில்லை! ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம் -அவர்கள் பாடலாசிரியர்கள் அல்ல. பாடல் காட்சிகளில், நம்மால் பார்க்க முடியாத கடல்களையும், காடுகளையும், பள்ளத்தாக்குகளையும், பாலைவனங்களையும், மலைகளையும், மலர்களையும் காட்டுகிறவர்கள், கவிஞர் பெயரைத் திரையில் ஒரு ஓரமாய்க் காண்பிக்கலாமே! கவிதை ஒரு குழந்தை..! அதை ஈன்றெடுத்தத் தாயின் பெயரை வெளியிடுவதில் என்ன தயக்கம்? கவிஞர்களை கனம் பண்ணுவோம்..!

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/literature/p17.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License