இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

கலித்தொகை காட்டும் பண்பு நலன்கள்

முனைவர். மா. தியாகராசன்


முன்னுரை

சங்கத் தொகை நூல்களாகிய எட்டுத் தொகை நூல்களுள் ஆறாவது நூலாக அமைந்திருப்பது கலித்தொகை ஆகும். “கற்றறிந்தார் ஏத்தும் கலி” என்று போற்றப்படுகின்ற சிறப்புக்குரிய இந்நூலில் மதுரையாசிரியர் நல்லந்துவனார் இயற்றிய கடவுள் வாழ்த்துச் செய்யுள் ஒரு பாடல். சேரமான் பாலை பாடிய பெருங்கருங்கோ பாடிய பாலைக் கலிப் பாடல்கள் முப்பத்தைந்து கபிலர் இயற்றிய குறிஞ்சிக்கலிப் பாடல்கள் இருபத்தொன்பது. மதுரை மருதன் இளநாகனார் புனைந்துள்ள மருதக் கலிப்பாடல்கள் முப்பத்தைந்து,, சோழன் நல்லுருத்திரன் இயற்றிய முல்லைக் கலிப் பாடல்கள் பதினேழு. கடவுள் வாழ்த்துப்பாடிய மதுரை ஆசிரியர் நல்லந்துவனாரே எழுதி முடித்துள்ள நெய்தற் கலிப் பாடல்கள் முப்பத்து மூன்று ஆக மொத்தம் நூற்றைம்பது பாடல்கள் இந்நூலின் கண் அழகுற அமைந்துள்ளன.

இந்நூலின் மூலமாகப் பண்டைய தமிழர் தம் வாழ்வியல். பழக்க வழக்கங்கள், பண்பு நலன் முதலியவற்றைத் தெள்ளிதின் உணர முடியும். இக்கட்டுரையின் வழியாகக் கலித்தொகை காட்டுகின்ற பண்பு நலன்களில் சிலவற்றை ஆய்ந்தறிவோம்.

பண்பு பற்றிய விளக்கம்

பொதுவாகப் ‘பண்பு’ என்னும் சொல்லுக்குக் ‘குணம்’ என்பது பொருள், பலவகையான குணங்களையும் ‘பண்பு’ என்னும் சொல் குறிக்கும் எனினும் பண்பு என்னும் சொல்லுக்குத் தனிப்பட்ட ஒரு பொருளையும் கலித்தொகை விளக்கி கூறுகிறது. மதுரை ஆசிரியர் நல்லந்துவனார் புனைந்துள்ள நெய்தற் கலியில் “மாமலர் முண்டகம்” (கலித்தொகை பாடல் எண் 133, நெய்தற்கலி பாடல் எண் 16) என்று தொடங்கும் பாடலில் பலவகையான குணநலன்களுக்குரிய விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன. “ஆற்றுதல் என்ப தொன்று அலந்தவர்க்கு உதவுதல்” என்னும் அடி. “இல்லறம் நடத்துதல் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது. வறுமையுற்றவர்க்கு ஏதாவது ஒரு பொருளைக் கொடுத்து உதவுவதேயாகும்” என்னும் பொருள் அமையப் புணையப்பட்டுள்ளது. அடுத்ததாகப் “போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை” என்னும் தொடர். இது ‘பாதுகாத்தல்’ என்று சிறப்புறக் கூறத்தக்கது தன்னுடன் கூடியவரைப் பிரியாமல் இருப்பதுவே யாகும்’ என்னும் பொருளில் அமைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து ‘பண்பு’ என்னும் சொல்லுக்குரிய விளக்கமாகப் “பண்பெனப்படுவது பாடறிந்தொழுதல்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘மக்கட்பண்பு என்று சிறப்பித்துக் கூறப்படுவது. உலக நடையை அறிந்து அதற்கேற்ப நடத்தல்” என்பது அதன் பொருளாகும்.



இதனை அடுத்து அன்பு, அறிவு, செறிவு, நிறை, முறை பொறை ஆகிய சொற்களுக்குரிய பொருள்கள் விளக்கப்பட்டுள்ளன. அன்பு என்று கூறப்படுவது தன் சுற்றத்தாரைத் துன்புறுத்தாமல் பாதுகாத்தல். அறிவு எனப்படுவது. அறிவிலார் தன்னைப் பழித்துப் பேசியவற்றைப் பொறுத்துக் கொள்ளுதல், செறிவு என்பது, கூறிய ஒன்றை மறுத்துக் கூறாமல் இருத்தல். நிறை என்பது, ஒரு செயலைப் பிறர் அறியாதாவாறு மறைந்து செய்தல். முறை என்பது நியாயம் வழங்கும்போது வேண்டியவர், வேண்டாதவர் என்னும் கண்ணோட்டம் இல்லாமல் அவர் செய்த தவறுக்கேற்ற தண்டணை வழங்குதல் பொறை எனப்படுவது பகைவரை வீழ்த்துவதற்கு உரிய காலம் வரும் வரையில் பொறுத்திருத்தல் என்று விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. எனினும் இந்தக் கலித்தொகைப்பாடல் ‘பண்பு’ என்பதற்குத் தனிப்பட்ட விளக்கம் வழங்கியுள்ளது சிறப்பாகக் குறிப்பிடத் தக்கதாகும்.

போற்றி உரைத்த பண்புகள்

“அருள் செய்து வந்த அறவோர், தாபதர் முதலியோர்க்குத் தலைவன் அறவுணர்வுடன் வேண்டுவன கொடுக்கக்கூடயவன்” என்னும் கருத்து. பாலைக்கலி 11ஆம் பாடலில். “அரிதாய அறனெய்தி அருளியோர்க்கு அளித்தலும்” என்று கூறப்பட்டுள்ளது. கொடை கொடுக்கும் அறவுணர்வு கொண்டவன் தலைவன் என்பதால், கலித்தொகையில் கொடைப்பண்பு பாராட்டிக் கூறப்பட்ட ஒரு பண்பாக விளங்குகிறது. அறத்திறனைப் பாராட்டி கலித்தொகை அடுத்த அடியில் ‘பெரிதாய பகை வென்று பேணாரைத்தெறுதலும்” எனத் தலைவனது. மறத்திறன் பாராட்டப் பெற்றுள்ளது. கொடைப் பண்பு போற்றுதற்குரியது. மேலும் கொடையளிப்போர் தம் செல்வம் தழைத்துச் செழிக்கும் என்னும் நம்பிக்கையும் அக்காலத்தில் இருந்ததைக் கலித்தொகை எடுத்தியம்புகிறது. இதோ கலித்தொகை கூறும் கருத்து “நீர்வளம் மிக்க ஓர் ஆற்றங்கரையில் மரங்கள் செழித்துத் தழைத்திருந்தன. அந்தக் காட்சிக்கு உவமையாகக் கலித்தொகை, “ஈகைத்திறம் மிக்க தீதற்றோர் செல்வம் வளர்ந்து செழிப்பதை” எடுத்துக் காட்டியுள்ளது. “ஈதலிற் குறைகாட்டாது அறனறிந்து ஒழுகிய தீதிலான் செல்வம் போல் தீங்கரை மரநந்த” (பாலைக்கலிபாடல் எண் 27) என்பன கலித்தொகைப் பாடல் வரிகளாகும்.

உலகம் நிலையாமை உடையது; அந்த நிலைமையை உணர்ந்தோர், தம்மிடம் உள்ள செல்வங்களை வாரி வாரி வழங்குவார்கள். அதுபோல மரங்கள் மலர்ந்த மலர்களைச் சொரிந்தன. என்பதனை. “உணர்ந்தவர் ஈகை போல் இணர் ஊழ்த்த மரத்தொடும்’ (பாலைக்கலி-31) என்று கலித்தொகை கூறியுள்ளது.

கல்வி, கேள்வி, ஒழுக்கங்களால் சிறந்த ஆன்றோர் அடக்கம் உடையவர்களாக இருப்பார்கள் என்னும் கருத்து. “ஆன்றவர் அடக்கம் போல் அலர் செல்லாச் சினையொடும்” (பாலைக்கலி-31) கிளைகளில் உள்ள அரும்புகள் மலராகின்ற வரையில் அடக்கமாக இருக்கும் காட்சிக்கு ஆன்றோர் அடக்கமாக இருத்தல் உவமை கூறப்பட்டுள்ளது.



‘மேலோர் தம்முடைய புகழை மற்றவர் கூறக்கேட்கும் போது நாணத்தால் தலை குனிந்து இருப்பார்கள். அதுபோல இரவில் மரங்கள் தலை சாய்த்து உறங்கின” என்றும் கருத்தினைத் “தம்பு கழ் கேட்டார் போல் தலை சாய்த்து மரம் துஞ்ச” (நெய்தற் கலி பாடல்-2) எனக் கலித் தொகை விளக்கிக் கூறுவது சான்றோர் தம் அடக்கப் பண்பை எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது.

‘சான்றோர் பிறர் துன்பத்தையும் தம் துன்பமாகக் கருதி அதனைப் போக்க அறம் செய்யும் பண்பு உடையவர்’ என்பதைப் “ பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறன் அறிதல் சான்றோர்க்கு எல்லாம் கடன்.” (நெய்தல் கலிப்பாடல் 22) என கலித்தொகை எடுத்துக் கூறியுள்ளது.

வேண்டியவர் வேண்டாதவர் என்னும் கண்ணோட்டம் இல்லாமல் நடுநிலையாக நின்று நீதி வழங்கும் பண்பு கலித்தொகையில் போற்றி கூறப்பட்டுள்ளது. “ஓர்வுற் றொருதிறம் ஒல்காத நேர்கோல் போல் அறம் புரி நெஞ்சத்தவன்” (குறிஞ்சி கலிப்பாடல் எண்.6) என்பது கலித்தொகைத் தொடர். “ஒரு பக்கம் சாயாமல் நடுநின்று தன்பால் வைக்கப்படும் பொருளுக்கேற்ப சாய்கின்ற துலாக்கோல் போல நடுநிற்கின்ற அறிவுணர்வு கொண்டவன் தலைவன்” என்பது இத்தொடரின் பொருளாகும்.

பகைத்து வருபவன் கூற்றுவன் ஆனாலும் அஞ்சாமல் எதிர்த்து நிற்கின்ற வீரமும், நட்புக் கொண்டவர்களிடம் தோற்பதற்கு நாணம் அடையாத பெருந்தன்மையும் உயர்ந்த பண்புகள் என கலித்தொகையில் சுட்டிக் காட்டியுள்ளது. “பகை எனின் சுற்றம்வரின் தொலையான்றவன் நட்டார்க்குத் தோற்றலை நாணாதோன்” (குறிஞ்சிக் கலிப்பாடல் எண். 7) என்பவை கலித்தொகையின் வரிகள்.

மேலும் ‘தலைவன்’ தன் மீது பொறாமைக் கொண்டவர்கள் தன்னைப் பற்றி குறைகளை கூறினாலும், தான் யார் மீதும் குறை கூறாதவன்’ என்று தலைவன் பண்பு பாராட்டப்பட்டுள்ளது.

“மாறு கொண்டாற்றாரெனினும் பிறர் குற்றம் கூறுதல் தேற்றாதோன்” (குறிஞ்சி கலிப்பாடல் எண்.7) என்பவை கலித்தொகை வரிகள்.



வெறுத்து ஒதுக்கிய பண்புகள்

ஒருவர் தம் அருகில் இருக்கும்போது அவரை புகழ்ந்து பாராட்டுவதும், அவர் எதிரில் இல்லாதபோது அவரைப் பற்றிய பழி தூற்றிக் கூறுவதும் இன்று பரவலாக நாம் பார்க்கக்கூடிய பண்பு இதனைக் கலித்தொகை எடுத்துக் காட்டுவதற்கும் இழித்து கூறுவதற்கும் தயங்கவில்லை. “சிறப்பு செய் துழையராப் புகழ் போற்றி மற்றவர் புறக்கொடையே பழி து’ற்றும் புல்லியார்” (பாலைக்கலி பாடல் எண்.24) என கலித்தொகை புறங் கூறுபவர்களை புல்லியர் எனக் கூறியுள்ளது.

ஒருவர் செல்வராக இருக்கும்பொழுது அவருடன் சேர்ந்து அவர் செல்வத்தை எல்லாம் துய்த்து மகிழ்ந்து, பின்னர் அவர் வறுமையை அடைந்தபோது அவருக்கு உதவாமல் புறக்கணித்து பிரிகின்ற பண்பைப் கலித்தொகை, குற்றமென்று குறித்து காட்டுகிறது.

“செல்வத்துல் சேர்ந்தவர் வளனுண்டு மற்றவர் ஒல்கிடந்து உலப்பிலா உணர்விலார்” (பாலைக்கலிப் பாடல் எண்.24) என்பது கலித்தொகை.

ஒருவருடன் மனம் ஒன்றி நட்புக் கொண்டு அதன் காரணமாக அவர் நம்மைப் பற்றிய மறைபொருளையெல்லாம் கூறக் கேட்டறிந்து கொண்டு அவரைப் பிரிந்து பின்னர் தம் கேட்டறிந்தவற்றை பிறருக்கு எடுத்துக் கூறுகின்ற பண்பை கலித்தொகை இழித்துக் கூறுகிறது.

“பொருந்திய கேண்மையின் மறையுணர்ந்து அம்மறை பிரிந்தகால் பிறருக்கு உரைக்கும் பீடிலார்” (பாலைக்கலிப் பாடல் எண். 24) கூடியிருந்தபோது அறிந்து கொண்ட மந்தணச் செய்திகளை பிரிந்தவுடன் பிறர்க்கு எடுத்துக் கூறுபவரை பெருமையற்றவர் என்று கலித்தொகை இழித்து கூறியுள்ளது.



நெய்தல் கலி 32ம் பாடலில் “தனக்கு கற்பித்த ஆசிரியருக்கு பொருளளிக்காமல் அவரை வருத்தமுற செய்தவன் கற்ற கல்வியை தவறாக பயன்படுத்துபவன் ஆகியோர் செல்வம் அழியும் தக்க நேரத்தில் தனக்கு உதவியவனுக்கு திரும்ப உதவாதவன் செல்வம் அவன் பிள்ளைகளிடத்து சென்றாலும் அச்செல்வம் அவர்களையும் துன்புறுத்தாமல் விடாது. சுற்றத்தார் மனம் வருந்துமாறு சேர்ந்த செல்வமும் அழியும். ஒருவன் தான் கொடுத்த வாக்குறுதியை தவற விட்டு விட்டால் அவன் அப்போது வெற்றி பெற்றாலும் பின்னர் அத்தவறுதல் அவனை அழிக்காமல் விடாது” என்பவை நெய்தற்கலி இடித்துரைக்கும் பண்புகள்.

இதோ நெய்தற்கலிப்பாடலில் மேறகூறிய கருத்தமைந்த பகுதி.

“கற்பித்தான் நெஞ்சு அழுங்கப் பகிர்ந்து உண்ணான். ருவிச்சைக்கண் தப்பித்தான் பொருளே போல் தமியவே தேயுமால்” இப்பகுதியில் கற்ற கல்விக்கு மாறாக நடப்பவன் பொருள் அழியும் என்னும் கருத்து சிந்திக்கத்தக்கது. கற்று அறியாதவன் அறியாமையால் தவறு செய்தால் அது மன்னிக்கப்பட்டாலும், அறிந்தவன் செய்யும் தவறு அறவே மன்னிக்க இயலாது. அதனால்தான் கடந்த நூற்றாண்டு கவிஞன் மகாகவி பாரதியாரும் “படித்தவன் சூதும் வாதும் பண்ணினால் போவான்! போவான்! ஐயோவென்று போவான்” என்று சீற்றத்துடன் பாடினார். எனவே கற்றக் கல்விக்கு மாறாக நடப்பதை கலித்தொகை சாடுகிறது - அவர் செல்வம் அழியும் என்று கவிதை பாடுகிறது.

“ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதவன் மற்று அவன் எச்சத்துள் ஆயினும். அஃது எறியாது விடாதே காண்; கேளிர்கள். நெஞ்சழுங்கக் கெழுவுற்ற செல்வங்கள் தான் இலான் குடியே போல் தமியவே தேயுமால் சூள்வாய்த்த மனத்தவன் வினை பொய்ப்பின் மற்று அவன் வாள்வாய் நன்று ஆயினும் அஃது எறியாது விடாதே காண்” என்பவவை கலித்தொகை பாடல் அடிகள்.

முடிவுரை

கடைப் பிடித்தற்குரிய உயரிய பண்புகளும் வாழ்வில் கடைப்பிடிக்கக் கூடாத தீய பண்புகளும் கலித்தொகையில் அகப்பொருளை எடுத்துக் கூறும் பாடல்களுக்கு இடையிடையே ஏற்றவகையில் கற்போர்க்கு ஏற்றம் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பண்புகள் கவினார்ந்த உவமைகள் வழியாகவும் கவர்ச்சி மிகு நிகழ்ச்சிகள் வாயிலாகவும் விளக்கிக் கூறப்பட்டுள்ளன. இவற்றால் பண்டைத் தமிழர் தம் பண்பாட்டு நலனை நாம் அறிந்தும் மகிழவும். அவற்றை நம் வாழ்விலும் கடைப்பிடித்து ஒழுகவும் வாய்ப்பு ஏற்படுகிறது.

கலித்தொகை காட்டுகின்ற பண்புகளுக்குள் சில பண்புகள் மட்டுமே கட்டுரையின் அளவு கருதிக் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த கட்டுரையின் போக்கினையும் நோக்கினையும் தொடர்ந்து கலித்தொகை நூல் முழுவதையும் ஆழ்ந்து கற்றால் எல்லாப் பண்புகளையும் படித்தறிந்து இன்புறலாம். பண்பாடு மிக்க சங்க காலத் தமிழர் வாழ்வு மீண்டும் தழைக்கவும் அதனால் அன்பும் அறனும் செழிக்கவும் புதிய உலகம் பூக்கவும் வழிபிறக்கும்! இந்த வழிக்குரிய கதவுகளை நம் தமிழ் மொழி திறக்கும்!

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/literature/p20.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License