இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

தொல்காப்பியம் - பாலவியாகரணம் கலைச்சொல் ஒப்பீடு

த. சத்தியராஜ்


தமிழில் தொல்காப்பியமும், தெலுங்கில் பாலவியாகரணமும் அவ்வம்மொழிகளைக் கற்கும் மாணவர்களாலும் அறிஞர்களாலும் பெரிதும் வாசிக்கப்படுவன; வாசிக்கப்பட்டும் வருவனவாம். தொல்காப்பியம் கி.மு.5ஆம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டதாக கருதப்படுகின்றது. பாலவியாகரணம் கி.பி.1858ஆம் ஆண்டு வெளிவந்த நூலாகும். இவ்விரு நூல்களும் காலத்தால் மிகவும் வேறுபாடுடையன. இருப்பினும் வெவ்வேறு மொழிகளுக்குரிய இலக்கணங்கள் என்பதால் ஆய்விற்கு உட்படுத்தப்படுகின்றன. அவ்விரு நூல்களில் காணலாகும் கலைச் சொற்கள் குறித்து ஒப்பிட்டு விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.

பெறுநர் என்ற சொல் எவ்வாறு உருப்பெற்றது. அது பெறு எனும் அடிச்சொல்லுடன், அர் எனும் பலர்பால் ஈறு இணைய பெறுநர் என்றாயிற்று. இம்மாற்றத்திற்கு எவ்வாறு பொதுப் பெயரிடுவது. அவ்விரு சொற்களும் ஒன்றோடொன்று இணைவது, ஆணும் பெண்ணும் இணைவதற்கு ஒப்பாகும். அதனைப் புணர்தல் என்பர். அதன் அடிப்படையில்தான் அதற்குப் புணர்ச்சி எனும் கலைச்சொல் (பொதுப்பெயர்) உருவாகியிருக்க வேண்டும். அவ்வாறே ஒவ்வொரு கலைச்சொற்களும் உருவாயிருக்கக் கூடும் என எண்ணுவதற்கு இடமளிக்கின்றது. இக்கலைச்சொற்கள் ஒரு கருத்தைப் புரிந்து கொள்வதற்கான குறியீடு. இக்குறியீட்டைப் பயன்படுத்தியே பல விளக்கங்கள் விதிகளாக அமைகின்றன.

அறிவுலகம் பலதிறப்பட்ட பிரிவுகளுடன் திகழும் பான்மையது. அப்பிரிவுகளுள் ஒன்றின்கண் பயில்வார்க்கு மட்டும் ஒரு குறிப்பிட்ட பொருளை உணர்த்தும் ஆற்றலுடைய சொற்களை அல்லது சொற்றொடர்களையே நாம் குறியீட்டுச் சொற்கள் என்று அழைக்கலாம். தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய பெருமக்களாகிய இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார் முதலானோர் இச்சொற்களைக் ’குறி’ என்றும் ‘குறியீடு’ என்றும் கூறுவர். இவற்றை இக்கால அறிஞருலகம் ‘கலைச் சொற்கள்’ என்று பேசும். இக்குறியீட்டுச் சொற்களைத் தேவைக்கேற்ப அறிவுலகச் சிற்பிகள் தாமே படைப்பதும் உண்டு; அல்லது உலகவழக்கில் உள்ள சொற்களையே எடுத்து தேவையான பொருளில் பயன்படுத்துவதும் உண்டு. சில வேளைகளில் இக்குறியீடுகள் சில சொற்களைச் சுருங்கச்சொல்லி விளக்க வைக்கும் சிறப்புடையனவாக, ஆற்றல் உடையனவாக அமைகின்றன (சுப. திண்ணப்பன், தொல்காப்பியத்தில் இலக்கணக் குறியீட்டுச் சொற்கள், 1972:363 - 364)



பழந்தமிழிலக்கண உரைகாரர் கலைச்சொல்லைக் ‘குறி’ என்றும் ‘குறியீடு’ என்றும் குறிப்பிடுவர். தமிழ் இலக்கணங்களில் காணப்படும் இக்குறியீடுகள் முந்தைய இலக்கணக் காலந்தொட்டே வழங்கி வருவன. தொல்காப்பியர் இக் குறியீடுகளை அறிமுகப்படுத்தும்போதும் கையாளும்போதும் பலவிடங்களில் எனப்படுப, என்ப, என்மனார், மொழிப எனப் பிறர் கூற்றாக அமைப்பதை இங்குச் சான்றாகக் கூறலாம். ‘என்மனார் ஆசிரியர் எனவே, உயர்திணை, அஃறிணை என்பன தொல்லாசிரியர் குறியாம் (ப.4) என்று சேனாவரையர் தொல்காப்பியச் சொல்லதிகார முதற் சூத்திர உரையில் கூறுவார்.

இவ்வகை குறியீடுகளைத் தவிரப் பிறமொழி இலக்கணச் சிந்தனைகளின் தாக்கத்தால் அயல்மொழிக் குறியீடுகள் தற்சமமாகவோ தற்பவமாகவோ வழங்குவதும், சில வேளைகளில் கடன்மொழி பெயர்ப்பாக வழங்குவதும் உண்டு. மொழிகளிடையே ஏற்படும் தொடர்பினால் இலக்கணங்களிடையே இத்தகைய கொடுக்கல் வாங்கல் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இக் கொடுக்கல் வாங்களின் அளவு அநேகமாக இருமொழிகளிடையே நிலவும் நெருக்கத்தின் அளவிற்கேற்ப இருக்கும் இந்திய மரபிலக்கணங்களிடையே காணப்படும் ஒற்றுமைக்கு ஆதாரமாக இருப்பன இக் கலைச் சொற்கள் என்றால் மிகையில்லை
(சு. இராசாராம், 1992: 248 - 249)

கலைச்சொல் பயன்பாடு மொழி வளர்ச்சியில் இன்றியமையா இடம் வகிக்கின்றது. மொழி வளர்ச்சியில் சமூக வளர்ச்சியும் பங்கு பெறுவதால் சமூக நிகழ்வுகளுக்குத்தக கலைச்சொற் பயன்பாட்டில் மாற்றங்கள் நிகழ்கின்றன (இரா. அறவேந்தன், 2003: 189)

எனும் கருத்துகள் கலைச்சொற் பயன்பாடு எந்த அளவிற்கு இலக்கணக் கலைஞர்களுக்குத் தேவை என்பதை வலியுறுத்துவதோடு மட்டுமின்றி கலைச்சொல் குறித்த புரிதலையும் தருகின்றன. ஆக, கலைச்சொல் பயன்பாடு கொள், கொடை மொழிகளின் இணைப்புப் பாலமாக இருப்பதோடு மட்டுமின்றி சமூக மாற்றங்களையும் ஏற்படுத்தின; ஏற்படுத்தி வருகின்றன.

தமிழர்களுக்கும் தெலுங்கர்களுக்கும் அரசியல், மதம், கலை, பண்பாடுகளில் தொன்னெடுங்கலமாகவே தொடர்பு இருந்து வந்திருக்கின்றது (2005:337) இருந்தும் வருகின்றது.



தொல்காப்பியம் எழுதப்பட்ட காலத்தில் சமசுகிருதம், பிராகிருதம், பாலி ஆகியன தமிழ்மொழிச் சூழமைவுகளில் அமைந்த மொழிகள் என்பது அறிஞர்களின் கருத்து. ஆனால் அம்மொழிகளின் எக்கலைச் சொற்களும் தொல்காப்பியத்தில் இடம்பெறவில்லை என்பது அறிஞர்களின் கருத்து. இருப்பினும் தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ள அந்தம் (487), கருமம் (568), காரம், கரம், காரை ஆகியன பிறமொழிக்குரிய கலைச்சொற்கள் (சுப. திண்ணப்பன், 1972) எனக் கருதும் ஒரு கருத்தும் உண்டு. அஃது ஆராயற்பாலது.

பிறமொழி இலக்கணக் கலைஞர்களை விடத் தொல்காப்பியர் மக்களின் புரிதல்களில் அமைந்த சொற்களையே இலக்கணக் கலைச்சொற்களாக உருவாக்கித் தந்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள இலக்கணக் கலைச்சொற்கள் அனைத்தும் பேச்சு வழக்கு மொழியினின்று தோன்றிய இயல்பான சொற்களாம்.

பாணினீயத்தில் உள்ள குறியீட்டுச் சொற்களை அதன் உரையாசிரியர் பதஞ்சலியின் ‘க்ருத்ரிமா’ (kritrima) (செயற்கையானவை) என்றும் ‘அக்ருத்ரிமா’ (akritrima) (இயற்கையானவை) என்றும் இருவகைப்படுத்திப் பேசுவர். பேச்சு வழக்கில் இல்லாது நூலாசிரியரால் தேவைக்கேற்ப படைத்துக்கொள்ள பெற்றவை செயற்கையானவை. அவை சொற்களாகவே கருதப்பெறும் பெற்றியன அல்ல. எடுத்துக்காட்டாக ’டி’ (ti), ‘கு’ (ghu), ‘ப’ (bha) என்று வடமொழியில் வழங்குவனவற்றைச் சொல்லலாம். இயற்கையான குறியீடுகள் பேச்சுவழக்கு மொழியினின்று தோன்றி இயல்பகப் பொருள் விளக்கும் தன்மையன ஆகும். பாணினீயத்திலுள்ள குறியீட்டுச் சொற்களை ஒப்பிட்டு ஆராய்ந்தால் செயற்கையான குறியீட்டுச் சொற்களைத் தொல்காப்பியத்தில் காணமுடியாது. தொல்காப்பியக் குறியீட்டுச்சொற்கள் இயல்பாக (natural) அமைந்த தமிழ்ச் சொற்களே ஆகும். மேலும், அவை தம் அமைப்பாற்றலால் தாமே பொருளைப் புலப்படுத்தும் (self explanatory) தனித்தன்மை வாய்ந்தவைகளாகும். இளம்பூரணரும் ‘தொல்காப்பியர் காரணம் பற்றியின்றிக் குறியிடார்’ என்று கூறுவர் (1972: 365 - 366)



தொல்காப்பியத்திற்குப் பின்பு எழுதப்பட்ட வீரசோழியம் தொடக்கம் முதலே பிறமொழிக்குரிய இலக்கணக் கலைச் சொற்கள் இடம்பெறுவது நினைக்கத்தக்கது. அதனைப் பின்வரும் அட்டவணைத் தெளிவுபடுத்தும்.

தொல்காப்பியம் வீரசோழியம் சமசுகிருதம்
புணர்ச்சி சந்தி சந்தி
மிகுதல் (தோன்றல்) ஆகமம் ஆகம
மெய்பிறிதல் (திரிதல்) ஆதேசம் ஆதேச
குன்றல்(கெடுதல்) உலோபம் லோபய
உரிச்சொல் தாது தாது

தொல்காப்பியத்தில் எழுத்து, திரிபு, பெயர், வினை, இடை, உரி, எச்சம், திணை, இருதிணை, அஃறிணை, உயர்திணை, இயற்பெயர், சினைப்பெயர், அசைநிலைக் கிளவி, ஆக்கக் கிளவி, இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் போல்வன செந்தமிழ்ச் சொற்களே இலக்கணக் கலைச் சொற்களாக இடம்பெறுகின்றன. ஆனால் பாலவியாகரணத்தில் தூய தெலுங்கு மொழிக்குரிய இலக்கணக் கலைச்சொற்களைக் காட்டிலும் சமசுகிருத இலக்கணக் கலைச் சொற்களே மிகுதியாக எடுத்தாளப்பட்டுள்ளன. அக்கலைச் சொற்கள் தற்சமமாகவோ தற்பவமாகவோ இடம் பெறுகின்றன.

சின்னயசூரி, முந்துநூல்களின் கலைச்சொற்களையே மிகுதியாக எடுத்தாண்டுள்ளார். அவர் புதிய கலைச்சொற்களை உருவாக்கியதாகத் தெரியவில்லை. இங்கு ஆந்திரபாசாபூசணத்தின் கலைச் சொற்களையும், பாலவியாகரணக் கலைச்சொற்களையும் (சில மட்டும்) ஒப்ப வைத்துப் பார்த்தால் புலப்படும்.

ஆந்திரபாசாபூசணம் தமிழ் பாலவியாகரணம்
ஆகமமு தோன்றல் ஆகமமு
ஆதேசமு திரிதல் ஆதேசமு
அச்சதெனுகு தூயதெலுங்கு அச்சதெனுகு
அச்சுலு உயிர்கள் அச்சுலு
அடுகு இழத்தல் அடுகு
லோபமு கெடுதல் லோபமு
தத்சமமு தற்சமம் தத்சமமு
தத்பவமு தற்பவம் தத்பவமு
அர்(ற்)று/அத்வமு அகரம் அர்(ற்)று/அத்வமு
அர்த்தமு பொருள் அர்த்தமு
ஜட்ட இரட்டை -----
ஜங்கம உயர்திணை, உயிருள்ள -----
குறுசலு குறில் ஹ்ரஸ்வமு

இவ்வொப்பீட்டு அட்டவணை ஓரளவிற்கு முந்துநூல்களின் இலக்கணக் கலைச்சொற்களையே எடுத்தாண்டுள்ளமையும், குறிப்பாகச் சமசுகிருதச் சொற்களையே எடுத்தாண்டுள்ளமையும் குறித்து நிற்கக் காணலாம். பாலவியாகரணமும் ஆந்திராபாசாபூசணமும் மொழித்தூய்மையை வலியுறுத்த நினைத்தாலும் அதனால் சமசுகிருத பிடியிலிருந்து விலக முடியவில்லை என்பது வெளிப்படை.

இதுவரை விளக்கப்பட்ட கருத்துகளின்வழி, தொல்காப்பியம் பன்மொழிச் சூழல்களை எதிர்கொண்டாலும் தனித்தமிழை நிலை நாட்டுவதில் முக்கியப் பங்கு வகித்தது. ஆனால், பாலவியாகரணம் பன்மொழி சூழமைவுகளிலிருந்து தூய தெலுங்கை மீட்டெடுக்க நினைத்தாலும் முடியவில்லை. இதற்கு ஆந்திர சப்த சிந்தாமணித் தொடக்கம் முதல் சமசுகிருதம் தெலுங்கோடு ஒன்றிவிட்ட நிலையே காரணமாகும்.

துணைநின்றவை

தமிழ்

1. அகத்தியலிங்கம் ச. முருகையன்.க., 1972 தொல்காப்பிய மொழியியல், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்
2. அறவேந்தன் இரா., 2003, தமிழ் சிங்கள இலக்கண உறவு, தாயறம், திருச்சி.
3. இளவழகன் கோ.(பதி.), 2003, தொல்காப்பியம் எழுத்ததிகாரம் (இளம்பூரணம்) சொல்லதிகாரம் (சேனாவரையம்), தமிழ்மண் பதிப்பகம், சென்னை.
4. இராசாராம் சு., 1992, வீரசோழிய இலக்கணக் கோட்பாடு, இராகவேந்திரா, நாகர்கோவில்.
5. சாவித்ரி சி. (மொ.ஆ.), ஆந்திரசப்தசிந்தாமணி, பாலவியாகரணம்.
6. ஜகந்நாதராஜா மு.கு., 2005, தமிழக ஆந்திர வைணவத் தொடர்புகள், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.

தெலுங்கு

7. நரசிங்க ரெட்டி சி. (உரை.), 2011, பாலவியாகரண வியாக்கியன சகிதம், தெலுங்கு அக்காதெமி, ஐதராபாத்து.
8. பரவத்து சின்னயசூரி, 2005, பாலவியாகரணம், பாலசரசுவதி புத்தாலயம், சென்னை.

ஆங்கிலம்

9. Usha Devi Ainavolu (Tran.), 2009, Andhra Bhaashaa Bhuushanamu, Emesco Publisher, Vijayawada.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/literature/p65.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License