இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
அறிவியல் & தொழில்நுட்பம்

நுண்ணறிவை செயற்கை நுண்ணறிவு விஞ்சியுள்ளதா….?

திரவியராசா நிறஞ்சினி
உதவி விரிவுரையாளர், மெய்யியல் மற்றும் தத்துவ விழுமியக்கற்கைகள் துறை,
கலை கலாசார பீடம், கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை.


அறிவு என்பது ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைவதற்கான வழியை கையாள்வதில் இருக்கும் திறன் ஆகும். இதில் நுண்ணறிவு என்பது அறிவுத் திறனில் திட்டமிட்டு செயல்படும் ஒரு பகுதியாகும். மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையான அனைத்து வகையான செயற்பாடுகளிலும், வெற்றி வாய்ப்புக்களிலும், அனுபவப் பகிர்வுகளிலும் நுண்ணறிவு முக்கிய இடத்தினை வகிக்கின்றது. மனிதனின் முழு வாழ்க்கையினையும் சிறப்பான முறையில் வழி நடத்திச் செல்வதற்கும் இது உதவுகின்றது. இதனடிப்படையில் நோக்கும் போது நுண்ணறிவு என்பது “நோக்கோடு செயற்படுதல், பகுத்தறிவுடன் சிந்தித்தல், சூழ்நிலைகளை சமாளித்தல், போன்றவைகள் சேர்ந்த கூட்டுச் செயற்பாடு” என்று வரைவிலக்கணப்படுத்தப்படுகிறது. அத்துடன் நுண்ணறிவைக் குறிக்கும் “intelligence" என்ற ஆங்கிலச் சொல்லானது “நுண்மதி, விவேகம், உளத்திறன், உள ஆற்றல், உளச்சார்பு, புத்திக்கூர்மை, அறிதிறன்” எனப் பலவாறாக அறியப்படும்.

செயற்கை நுண்ணறிவு என்பது கணினி அல்லது இயந்திரங்களை மனிதன் நுண்ணறிவினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்குகின்ற செயன்முறையாகும். அதாவது, இயற்கையாக இல்லாமல் மனிதனால் உருவாக்கிய இயந்திரங்களும் பொறிமுறைகளும் நுண்ணறிவுடன் செயற்படுவதாகும். இது கணினி விஞ்ஞானத்தின் ஒரு பகுதியாக விளங்குகின்றது. மனிதர்களுக்கு ஒத்த அல்லது மனிதர்களை விட அறிவுத் திறன் கொண்ட கணினிகளையும், இயந்திர மனிதர்களை உருவாக்குவது இத் துறையின் நோக்கமாகும்.

இன்று அறிவியலில் “செயற்கை நுண்ணறிவு விருத்தி” என்பது தனித்துறையாக வளர்ச்சிபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது என்பதுடன் மனிதனுக்கு மட்டும் அறிவு, நுண்ணறிவு இருக்கிறது என்று எண்ணுதல் தவறானது. அதாவது எல்லா உயிரினங்களுக்கும் இந்த அமைப்பு இயற்கையில் இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு உயிரினமும் தனது சூழலில் உருவாகும் சவால்களுக்கு ஏற்ப இலக்குகளை அமைத்துத் தன்னிடம் இருக்கும் அறிவுத்திறனைப் பயன்படுத்தி இலக்கை அடைகிறது. உதாரணமாக ஒரு கல பக்ரீரியாக்கள் அல்லது நுண்ணுயிர்கள் தான் உயிர் வாழத் தேவையான உணவைப் பெற்றுக் கொள்ளவும், தொடர்ந்து சந்ததியைப் பெருக்கவும் அறிவைப் பயன்படுத்துகிறது. அதேப்போல் பல்வேறு உயிரினங்கள் வெவ்வேறு தளங்களில் தனது அறிவுத்திறனைப் பயன்படுத்துகின்றன.

செயற்கை நுண்ணறிவின் வரலாறு பற்றிய நிலைப்பாட்டை நோக்கும் போது, ஆதிகாலத்தில் இருந்தே மனிதனுக்குத் தன்னைப் போல் சிந்திக்கக் கூடிய, செயலாற்றக்கூடிய உயிரினங்கள் அல்லது இயந்திரங்களை உருவாக்குவதில் ஈர்ப்பு இருந்தது. இதனைக் கிரேக்ககாலப் புனைகதைகளில் காணலாம். உதாரணம் செயற்கை அறிவுத்திறன் கொண்ட க்ரிட்டின் டேலோஸ், கிபேஸ்டஸின் “தங்கரோபோக்கள்” மற்றும் பிக்மேலியனின் கேலாட்டியா, போன்ற சிந்திக்கும் இயந்திரங்கள், செயற்கை உயிர்கள் முதலியனவற்றைக் குறிப்பிடலாம். மேலும் மனிதர்களைப் போன்ற அறிவுள்ள இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பான குறிப்புக்கள் கிரேக்க எகிப்திய நாகரிகங்களில் காணப்படுகின்றன. மத்தியக்காலத்தில் ஜாபிர் இப்னுகயான், பிரான்ஸியஸ், யூட்காலோவ் போன்றவர்கள் இயந்திர மனிதர்களை உருவாக்கியவர்களாகக் கருதப்படுகின்றனர்.



பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் நாவல்களிலும் புனைகதைகளிலும் இயந்திர மனிதர்கள் இடம் பெற்றார்கள். உதாரணம் மேரிசெலினுடைய “பிராங்ஸ்டைன்” பாத்திரத்தை குறிப்பிடலாம். இத்தகைய நிலையில் செயற்கை நுண்ணறிவு என்ற பதத்தை “Johe; macarthy" (1956) என்பவர் தான் முதன் முதலில் உருவாக்கினார். இதனை அவர் “நுண்ணறிவுள்ள இயந்திரங்களை உருவாக்குகின்ற விஞ்ஞானம் மற்றும் பொறிமுறை” என்றும் அழைத்தார்.

இன்றைய உலகில் கைத்தொழில் சார்ந்த தொழில்நுட்பத் துறைகளிலும், கணினி விஞ்ஞானங்கள், இயந்திர மனிதன் (ரோபோட்கள்), முதலியனவற்றின் உருவாக்கத்தில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. செயற்கை நுண்ணறிவானது மனித மனத்தின் திறன்களைச் செயற்கையாக உருவாக்க முடியும் என்ற வலியுறுத்தலால் மெய்யியலில் ஒரு சவாலாக அடையாளப்படுத்தப்படுகின்றது. நுண்ணறிவுத் திறன் உள்ள இயந்திரங்களை மனிதர்கள் உருவாக்கியதன் விளைவாகவே மனம் பற்றிய மெய்யியல் ரீதியான, ஒழுக்கவியல் ரீதியான பிரச்சினைகளும் எழுப்பப்படுகின்றன.

இதனடிப்படையில் நோக்கும் போது நுண்ணறிவு என்பது எங்கே இருக்கின்றது? என சிந்திக்கும் போது அது மனிதனின் மூளையில் இருக்கின்றது. அது இயற்கையாகப் படைக்கப்பட்டது. அவ்வாறெனின் செயற்கை நுண்ணறிவு எங்கே உள்ளது? அது இயந்திர மூளையில் இருக்கின்றதா? அல்லது இயந்திரங்கள் செய்வதை ஏற்றுக் கொள்வதில் இருக்கின்றதா? மனிதனால் நுண்ணறிவு செய்வதை செய்ய முடியாதா? இயந்திரங்களுக்குச் செயற்கை நுண்ணறிவைக் கொடுப்பது மனிதன் என்றால் ஏன்? மனிதனால் இயந்திரங்கள் செய்வதைச் செய்ய முடியாமல் உள்ளது.

மனிதன் கொடுக்கும் நுண்ணறிவைக் கொண்டு செயற்கை நுண்ணறிவு செயற்படுகிறது. ஆனாலும் அந்தளவு திறமை மனிதனுக்கு இருக்கும் போது, ஏன் அச்செயற்பாட்டை மனிதனால் நிகழ்த்த முடியாது. இயந்திரங்கள் எந்தளவு நுண்ணறிவுடன் இருக்க முடியும். என்பதற்கு எல்லைகள் உள்ளதா? மனித நுண்ணறிவிற்கும் செயற்கை நுண்ணறிவிற்கும் ஏதேனும் முக்கியமான வித்தியாசங்கள் உள்ளனவா? அத்துடன் ஓர் இயந்திரம் மனம் மற்றும் உணர் நிலை ஆகியவற்றைப் பெற்றிருக்க முடியுமா? ஓர் இயந்திரத்தை நுண்ணறிவு கொண்டதாக உருவாக்க முடியுமெனில் அதனால் உணரமுடியுமா? அதனால் உணர முடியுமெனில் மனிதனைப் போல அதற்கும் உணர்வுகள் உள்ளதா? என்ற வினாக்கள் மெய்யியல் ரீதியாக எழுப்பப்படுகின்றது.



இன்றைய நிலையில் ரொபோட்கள் தொழிற்சாலைகளில் பணிபுரிதல், வேலைகளை விரைவாகச் செய்தல், மனிதர்களால் செய்யமுடியாத நுணுக்கமான, கடினமான செயற்பாடுகளை ஆற்றுதல், உற்பத்தியைப் பெருமளவில் கிடைக்க வழி செய்தல், வரவேற்பாளராகச் செயற்படுதல். அலுவலகங்களில் பணிபுரிதல், வீட்டுப் பணிகளை நிறைவேற்றுதல், நபர்களை வரவேற்றல், பிள்ளைகளுடன் விளையாடுதல், ஆபத்து வேளைகளில் அபாய ஒலி எழுப்புதல், ஆபத்துக்களைத் தடுத்தல், வெடிகுண்டுகள் அகற்றுதல், யுத்தமுனைகளுக்குப் பயன்படுதல் முதலானவைகளை நிறைவேற்றுகின்றது.

உதாரணமாகச் சீனாவின் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மனிதர்களுடன் உரையாடும் பெண் ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளனர். மனிதர்களைப் போலவே பேசிப் பழகும் இந்த ரோபோவிற்கு “ஜியாஜியோ”எனப் பெயரிட்டுள்ளனர். இந்த ரோபோவின் முகபாவங்கள் உடல் மற்றும் வாய், அசைவுகள் மனிதர்களைப் போன்று உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ரோபோ பல பணிகளை மேற்கொள்ளுகிறது. மேலும் ரோபோட்கள் உலக வரலாற்றில் முதல்முறையாக கண் பார்வையினை இழந்த பிரித்தானியாவைச் சேர்ந்த“பில்பியர்” என்பவரின் கண்ணின் விழித்திரையில் இருந்து ஒரு மில்லி மீட்டரில் நூறில் ஒருபகுதி தடிமனான மிகவும் மெல்லிய படலத்தை வெற்றிகரமாக உரித்து எடுத்து கையிலிருக்கும் வடிகட்டிகள் மென்மையான செயன்முறைகள் மூலம் அறுவைச் சிகிச்சையை நிறைவேற்றியுள்ளது.

1997இல் Deep Blue என்ற கணினி மயப்படுத்தப்படுத்தப்பட்ட சதுரங்க இயந்திரம் உலகின் முதல் வரிசை சதுரங்க ஆட்டக்காரனான Garry Kasparor தோற்கடித்தது. 2005 இல் Stand Ford Robot மனித இயந்திரம் 131 மைல்கள் கொண்ட ஒரு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றது. இதே போல 2011இல் ஒருமனித இயந்திரம் புதிர் போட்டியில் மிகச்சிறந்த போட்டியாளர்களான Brad Rutter, Kenjeeepngs ஆகியோரைத் தோற்கடித்தது. அத்துடன் மனித உருவம் கொண்ட “கிராபோ” எனும் பெயரினையுடைய ரோபோ முதன் முதலில் தனது வார்த்தையை விண்வெளியில் பதிவு செய்து புதிய சாதனை படைத்துள்ளது. இந்த ரோபோ நிலவில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதரான “நீல் ஆம்ஸ்ரோங்” இற்கு அஞ்சலி செலுத்தியதும் குறிப்பிடத்தக்கது.



கணணியின் செயற்பாடுகள் பற்றி நோக்கும் போது வீட்டுப் பயன்பாடு, குழந்தைகளுக்கான கல்வி, விளையாட்டு, இணையத் தொடர்பு, தொழிற்சாலை உற்பத்திகள், பயன்பாடுகள், ஏற்றுமதிகள், வருமானங்கள், வரவுசெலவுகள், அலுவலகப் பயன்பாடு, தொடர்புகள், வியாபாரப் பயன்பாடு, இணையத் தொடர்பு, வியாபாரம், மருத்துவம், கல்வி, அரசியல், அதிநவீன தொழில்நுட்பப் பயன்பாடு, கிரபிக்ஸ், மல்டி மீடியா தொழில் நுட்பம், பொழுதுபோக்கு, பொருட்களை விற்றல், வாங்குதல், மின்னஞ்சல் (தகவல் பரிமாற்றங்கள்), (இணையத்தில் இணைந்துள்ள ஆயிரக்கணக்கான செய்திக் குழு, தகவல் தொகுப்புக்கள், விரும்பிய பக்கங்களில் உரையாடல்கள், விவாதங்களை மேற்கொள்ளுதல்) இணைய அட்டை சேமிப்புக்கள், (கோடிக்கணக்கான புத்தகங்களில் கிடைக்கப் பெறும் கல்வி, பொது அறிவு) முதலிய செயற்பாடுகளைச் செயற்கை நுண்ணறிவு கொண்டு படைக்கப்பட்ட இயந்திரங்கள் நிறைவேற்றுகின்றன.

மனிதனுடைய மூளையின் வெளிப்பாடான கணினிகள் மனித மூளையை விடப் பல மடங்கு ஆற்றலுடன் செயல்படுகின்றது. மனித மூளையை விடத் தீவிரமாக வேலைகளை மேற்கொள்ளுகிறது. கணினிகள் தொழிற்சாலைகளில் இயந்திரங்களின் இயக்கங்களை ஒருங்கிணைத்து அவற்றைக் கட்டுப்படுத்துகின்றது. மேலும் பல இலட்சம் செய்திகளைப் பதிவு செய்யும் ஆற்றல் மிக்கனவாக விளங்குகிறது. அத்துடன் கடினமான பல பணிகளையும் மனித முயற்சியால் இதுவரை முற்றிலும் முடியாமல் போன பல ஆராய்ச்சிகளையும் வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றன. ஆனால் மனித மூளையால் அத்தகையச் செயற்பாடுகளை நிறைவேற்ற முடியாமல் உள்ளது. கணினி இயந்திரத்திற்கு, இயந்திர மனிதனுக்குச் செயற்கை நுண்ணறிவினை மனிதன் வழங்கினாலும் கூட, மனிதனால் செய்யமுடியாதவற்றை இத்தகைய இயந்திரங்கள் நிறைவேற்றுகின்றது. இதனடிப்படையில் நுண்ணறிவைச் செயற்கை நுண்ணறிவு விஞ்சியுள்ளது என்று கூறுவதுதான் பொருத்தமானது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/scienceandtechnology/p7.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License