இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை


24. தகழி சிவசங்கரம் பிள்ளை - தோட்டியின் மகன்

முனைவர் சு. நாகேஸ்வரி

இன்றைய நூற்றாண்டில் மக்களால் பெரிதும் போற்றப்படும் கலை வடிவம் கதை இலக்கியம். வாழ்க்கையைக் காட்டும் ஏனைய இலக்கிய கலை வடிவங்களைப் போன்று கதைகள் கடந்த கால வாழ்வையும், நிகழ்காலச் சமுதாயத்தையும் எதிர்கால உலகையும் நமக்குக் காட்டுகின்றன. இக்கட்டுரையில் தகழி சிவசங்கரன் பிள்ளையின் “தோட்டியின் மகன்“ என்ற நாவல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

தகழி சிவசங்கரன் பிள்ளையின் “தோட்டியின் மகன்” நாவல் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தைப் பற்றிய கதையாக இல்லாமல், தனி மனிதனின் கதையாகவும் அவனைச் சுற்றி நிகழ்கின்ற நிகழ்வுகள் தொடர்பானதாகவும் கதை பின்னப்பட்டுள்ளது. மலையாள நாவலை சுந்தர ராமசாமி மொழி பெயர்த்திருந்தாலும், மலையாள எல்லையைப் பின்னணியாக கொண்டதாக நாவல் திகழ்கின்றன. இந்நாவலை தனி மனிதனின் நாவல் என்றும், தலித்திய நாவல் என்றும் தனித்து கூற இயலாதபடி இரண்டும் ஒன்றாகப் பின்னப்பட்ட கதைச் சூழலையுடைய நாவல் என்றே கூற வேண்டும்.

தலித் என்று அழைக்கப்படும் தாழ்த்தப்பட்ட சேரியில் வாழும் தோட்டியின் வாழ்க்கைச் சூழல் குறித்து எடுத்துக் கூறுவதாகவும் அதற்கு மூலமாக தகழி சிவசங்கரன் பிள்ளையின் தோட்டியின் மகன் நாவலில் இடம் பெறும் சுடலை முத்து கதாபாத்திரத்தினை மட்டும் எடுத்துள்ளேன். சுடலை முத்து பிறந்த வளர்ந்த சூழல், வேலை பார்க்க நேர்ந்த சூழ்நிலை தனது எதிர்காலத்தில் தான் எப்படி இருக்க வேண்டும் என்ற எண்ணம், சுடலை முத்துவின் கடைக்கால நிலை ஆகியன எடுத்துக் கூறப்பட்டுள்ளன.

தோட்டியின் மகன்

தோட்டிகளும் தொழிலாளி வர்க்கம்தான் என்று ஜி. நாகராஜன் வார்த்தையை எத்தனை உள்ளங்கள் மனம் நெகிழ்ந்து ஏற்றுக் கொள்வார்கள் தோட்டியின் வாழ்விலும் அன்பு, ஸ்பரிசம், காதல் ஆசை, விருப்பம் ஆகியன உண்டு அவர்கள் வகிக்கும் வாழ்விடம் சேரியாக இருந்தாலும் ஒரு சிலரின் எண்ணங்கள் மேலோங்கி உள்ளன. அவ்வாறு ஆராயும் இடத்து தோட்டியின் மகன் நாவலில் இடம் பெறும் முக்கிய கதாபாத்திரமான சுடலை முத்துவின் பல்வேறு கோணங்கள் கதை முழுவதும் விரவிக் கிடக்கின்றன.



இசக்கி முத்து

இசக்கி முத்து சுடலை முத்துவின் தந்தை தனது இறப்பிற்குப் பின் தன் இடத்தில் தன் மகனையே நியமிக்க வேண்டும் என்ற ஆசை அதிகம் இருந்தது. முப்பது வருடமாகத் தான் சுத்தம் செய்யும் கக்கூசுகளை மூன்றாமவன் செய்வதா என்றா எண்ணம் இக்குலத்தொழில் முறையை ஒழித்தால் தான் தீண்டாமை ஒழியும் என்று பாடுபட்டவர் தந்தை பெரியார். தற்சமயம் முற்றிலுமாக ஒழிக்கப்படாவிட்டாலும் ஓரளவிற்கு இக்குலத்தொழில் முறை மறைந்து இருக்கிறது எனலாம்.

சுடலை முத்து

இசக்கி முத்துவின் மகன் தொழிலில் தந்தைக்கு வாரிசு மட்டும்தான் சுடலைமுத்து, அவன் செயல், நடை, உடை, பழக்க வழக்கம் அனைத்துமே தன் தந்தை மற்றும் பிற தோட்டிகளிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டவன். தன் தந்தைக்குப் பிறகு தானும் தோட்டியாகி விட்டால் தான் எப்படி நடந்து கொள்ள வேண்டும். என்பதை அவன் சிந்தித்து வைத்திருந்தான்.

தனது தந்தைக்குப் பிறகு தான் தோட்டியாகக் கூடாது என்று, ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை அவனையும் தோட்டியாக்கியது. தனது தந்தையின் தோற்றத்தை கண்டு தனது முகம் தன்னையறியாமல் இப்படி வக்கிரமாக இழுத்துக் கொண்டு விடுமோ? அதாவது அப்பனுக்கு மூக்கைச் கூழ்ந்துள்ள சதை, நாசித்துவாரத்தை அடைத்து விடுவது போல் சுருங்கி, கோணிப்போயிருந்தது. அதோடு மேலுதடும், மேல்நோக்கி வளைந்திருந்தது. முதன் முதலாவதாக வாளியும், மண்வெட்டியும் ஏந்தியபடி கக்கூசினுள் நழைந்த போது முகம் வலித்துப் போயிருக்கலாம். தனக்கும் அப்படி நேரும் என அச்சப்பட்டான். மேலே கூறியது போல தோட்டிகளின் தோற்றம் இவ்வாறு இருக்க, சுடலைமுத்து முற்றிலும் வேறுபட்டு காணப்பட்டான். பொடி மீசை வைத்துக் கொண்டு, உடம்பு சற்றுப் பருந்திருந்தது. அவனது பனியனும் நிஜாரும் துவைத்துக் கட்டியது. பார்ப்பவர்களுக்கு அவன் சாதாரணத் தோட்டியல்ல என்று கூறும் படியும், தொழிலுக்குரிய உபகரணங்களை ஏந்திச் சென்றிராவிடில் அவன் தோட்டிதாளை என்றுகூடச் சந்தேகம் வரும் அளவிற்கு அவன் தோற்றம் இருந்தது.



பணத்தைச் சேர்த்து வைத்துக் கொள்ளத் தெரியும், மேலும் அதைப் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளவும் தெரிந்து கொண்டான். கள் குடிக்க மாட்டான். முன் தினம், குடி போதையில் நினைவில்லாமல் வீதியோரம் எங்காவது படுத்துறங்கிவிட்டு, காலையில் வேலைக்கு வரும் பிற தோட்டிகள் போன்று இல்லை சுடலைமுத்து. அவனை நுட்பமாகக் கவனித்தால், அவன் கண்களில் தோட்டியின் பேடித்தனமும், தன்னையே கல்லியாக, அற்பமாக எண்ணிக் கொள்ளும் தாழ்ந்த மனப்போக்கும் இல்லை. அதே போன்று அவசியமில்லாமல் யாருக்கும் தலைகுனிய பண்பு மிகவும் முக்கியமாக ஒன்றைக் குறிப்பிட வேண்டுமென்றால் அவனைத் தொடர்ந்து வரும் அடுத்த தலைமுறை ஒருநாளும் தோட்டிகளாக இருக்கக் கூடாது என்று அவன் திடமாக எண்ணினான்.

இல்லற வாழ்க்கைக்கு காதல் மிக முக்கியமானது தோட்டிகள் ஒன்று சேரும் மலக்கிடக்கில் வள்ளி என்பவளைச் சந்திக்கின்றான். அவளிடம் பேசும் போதே தனது ஆசைகள், எதிர்காலத்தில் நிறைவேற்ற வேண்டியவை என ஏராளம் இருப்பதாகச் சொன்னான்.

வள்ளிக்கும், சுடலைமுத்துவிற்கும் திருமணம் முடிந்தது. மணம் முடிந்த மறுநாளே பழங்குடிசை செப்பனிடப்பட்டது. தட்டிகளால் மறைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. தரைக்கும் புதியசிமிண்டு மொத்தத்தில் அந்த வீடு மற்றைய சேரி வீடுகளிலிருந்து மாறுபட்டிருந்தது. இப்படிப் புதுப்பிக்கப்பட்ட வீட்டுக்குத்தான் சுடலை தன் மனைவியை அழைத்துச் சென்றான்.

ஒரு வீட்டுக்குத் தேவையான எல்லாச் சாமான்களும் அங்கிருந்த செம்புப் பாத்திரங்கள், தவலைகள், குவளைகள் எல்லாம் இருந்தன. கட்டிலும் பெட்டிகளும் கூட இருந்தன. அறையின் ஒரு மூலையில் முருகக் கடவுளின் படம் ஒன்று மாலை அலங்காரத்துடன் காட்சியளித்தது.

வள்ளி பூரித்துப் போனாள். இங்கு மட்டுமல்ல தன் அத்தையுடன் அவன் வசித்து வந்த கடலோரத்துத் தோட்டிகள் காலனியிலும் கூட இவ்வளவு நல்ல வீடு கிடையாது. இவைகளை நோக்கும் போது வள்ளி தனது கணவன் பணக்காரன் தான், அவன் வீட்டில் இருக்கும் அனைத்துப் பொருட்களும் அவளுக்குச் சொந்தம் என்று எண்ணும் போது பெருமை மீறிட்டது.

சுவைக்கும் சக்தி தோட்டியின் நாவிற்கும் உண்டு. தோட்டியின் நாசிக்கும் நறுமணங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. தோட்டியின் சருமத்திற்கும் ஸ்பரிச உணர்வு இருக்கிறது. நல்ல இன்பமான இராகங்களை அவனும் கேட்டு அனுபவிக்கின்றான். இந்த உண்மைகளை உலக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.



தனது மனைவி வள்ளியை சுடலைமுத்து முழுவதுமாக மாற்றி இருப்பதைக் கண்டு வள்ளியை வளர்த்த அத்தை மிகவும் பூரித்துப் போனாள். அழகாக உடுத்தி, தலை சீவிக் கொண்டை போட்டு, பொட்டு இட்டுக் கொண்டு, வாளிப்பான தேகக் கட்டுடன் நிற்கும் ஒரு புதிய பெண்ணைப் பார்த்தாள்.

சுடலை முத்துவின் மகன் பெயர் மோகன் அவன் வேலை செய்யும் அனைத்து வீடுகளிலும் குழந்தையின் பெயரைச் சொன்னான். மோகன் என்பது பெயர் செல்லப்பெயர் பேபி என்று, பலரும் ஏளனம் செய்தார்கள். தோட்டியின் மகனுக்கு மோகன் என்று பெயரா?

குழந்தைக்கு நல்ல பெயர் சூட்ட கூட உரிமை இல்லை. ஒரு தோட்டி ஒரு குடும்பத்தைக் கட்டி வளர்த்துத் தன் குழந்தையைப் பெரிய மனிதனாக்கி விடலாம் என்று எண்ணுவது சாத்தியம் இல்லை என்பதைச் சுடலை புரிந்து கொண்டு, சுடலை தன் மகனைப் பள்ளியில் சேர்ப்பது கூட தடையாக இருந்தது. ஆனால் அந்தப் பள்ளியில் அவ்வளவு சுத்தமக வரும் குழந்தை வேறு யாரும் கிடையாது.

சுடலை முத்து வசித்து வந்த சேரியில் காலரா பரவியது. அங்கு வசித்த ஒவ்வொருவரும் இறந்து போனதால் பயந்து தனது மனைவி, குழந்தைகளை அழைத்துக் கொண்டு அந்த இடத்தைக் காலி செய்துவிட்டு வேறு ஊருக்குப் போகலாம் என்ற தீர்மானித்தான். தன் குழந்தையும் தாய் தகப்பனை இழந்து அனாதை ஆகக் கூடாது என்று எண்ணினான்.

ஆனால், அவனுடைய எந்த ஆசையும் நிறைவேறாமல் காலரா நோயினால் தாக்கப்பட்டு சுடலை, வள்ளி இருவரும் இறந்து போனார்கள். மோகன் தோட்டியின் மகனாக அந்த நகரத்தில் உலா வந்து கொண்டிருந்தான். சுடலை பயந்து நடந்து விட்டது.

இக்கதை நிகழ்ந்த கால கட்டம் 1957ம் ஆண்டு சூழ்நிலை. ஆனால், இன்னும் இதில் மாற்றம் இல்லை.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/seminar/s2/p24.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License