இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை


34.கந்தர்வன் படைப்புகளில் குடும்ப உறவுகள்

மு. சண்முகம்

ஐரோப்பியர்களின் வருகையினால் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மாபெரும் மாற்றம் உருவாகியது. அதற்குக் காரணம் அச்சு வடிவமே ஆகும். இதன் வருகையினால் தமிழ் மொழியில் கவிதை, சிறுகதை, நாவல் எனப் பலதரப்பட்ட மொழி வடிவங்கள் தோன்றின. இவ்வகையில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பல்வேறு பொருண்மையில் சிறுகதை இலக்கியம் வளர்ச்சி அடைந்தது. சிறுகதையின் வளர்ச்சியில் முக்கியப் பங்களிப்பினைச் செலுத்தியதில் மணிக்கொடி இதழே ஒரு கருவியாக திகழ்ந்தது. இவற்றின் மூலம் தான் சிறுகதை எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட்டு வளரத் தொடங்கினார்கள்.

சிறுகதைக்குப் பலர் புகழ்ப் பெற்று இருந்தாலும், தன்னுடைய கிராமிய வாழ்வின் அனுபங்களோடு தான் பணிபுரிந்த இடத்தில் கண்ட தொழிலாளரின் இன்னல்கள், வேதனைகள், அவர்களுடைய குடும்ப உறவுகள் ஆகியவற்றைத் தன்னுடைய எளிய படைப்புகளின் வழி சமுதாயத்திற்கு எடுத்துரைத்தவர் கந்தர்வன் ஆவார். சாதாரண குடும்பத்தில் பிறந்து தன்னுடைய இளமைக் காலத்தில், குடும்பத்தில் உறவாடிய உறவுகளைப் பற்றியும் அனுபவ ரீதியாக தன்னுடைய படைப்புகளில் வெளிப்படுத்தியவர். அவருடைய படைப்புகளில் காணப்படும் குடும்ப உறவுகளைப் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.



குடும்பம்

குடும்பம் என்பது சமுதாயத்தின் ஒரு அங்கமாகும். மனிதன் அவனுடைய வாழ்க்கையில் பலவகையான குழுக்களோடு சேர்ந்து செயல்படுகிறான். அவ்வாறு செயல்படும் குழுக்களில் ஒன்றுதான் குடும்பம். மனிதன் வாழ்வின் பெரும்பாலான நேரங்கள் குடும்பத்தோடு அமைவதை நாம் அறிந்த ஒன்றே.

சங்க காலத்தில் மனிதர்கள், மனிதர்களை மனிதர்களாகவே போற்றி வந்தனர் என்பதனையும் அவர்கள் வாழ்ந்த ஊரையும் வேறுபடுத்திக் காணாமல் ஒன்றாகக் கருதினர் என்பதனையும்,

யாதும் ஊரே யாவரும் கேளிர்

என்ற புறநானூறு பாடல் மூலம் அறியப்படுகின்றது.

குடும்பம் என்பது எல்லாச் சமுதாயங்களிலும் உள்ள அடிப்படையான அமைப்பு. சமுதாயத்தில் உள்ள பல்வேறு அமைப்பு. சமுதாயத்தில் பல்வேறு பிரிவுகளுக்கும் குடும்பம் முக்கியமானது. சமுதாய நடவடிக்கைளுக்குச் சட்டத்திட்டங்களை ஏற்படுத்தி அவைகளைப் பின்பற்றச் செய்கின்றது குடும்பம் என்று கலைக்களஞ்சியம் (தொ.4 ப-8) குறிப்பிடுகின்றது. திருக்குறள் குடும்பத்தைப் பற்றி குறிப்பிடும் போது,

இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு (குறள் - 1029)

இக்குறளுக்குப் பரிமேலழகர் உரை எழுதும் போது குடும்பத்தினைக் குடி, இல்லறம், மனை, வீடு என்ற பொருளில் உரை எழுதியிருப்பதையும் காண முடிகின்றது.

குடும்ப உறவு

கந்தர்வன் அவர்கள் தன்னுடைய கதைகளில் குடும்ப உறவு சார்ந்த பதிவுகளைச் செய்துள்ளார். அவற்றில் கணவன் மனைவி, பெற்றோர் பிள்ளை, சகோதரன் சகோதரி போன்ற உறவுகளின் உரிமைகளையும், அவற்றின் சிறப்புகளையும் வெளிப்படுத்தியுள்ளார்.

“குடும்ப உறவு என்பது இரத்த உறவு என்றும் மண உறவு என்றும் பகுத்துக் கூறலாம் என்கிறார்" சு. சண்முகசுந்தரம். (திருநெல்வேலி மாவட்ட நாட்டுப்புறப் பாடல்களில் சமுதாய அமைப்பு பக்- 140)



கணவன் மனைவி உறவு

மனித குலத்தில் கணவன் மனைவி உறவு என்பது மிக முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது. திருமணத்திற்குப் பின் தங்களுடைய வாழ்க்கைக்கு மூலதனமாக தங்களுடைய உறவினை வளர்த்துக் கொள்கின்றனர்.

கந்தர்வன் அவர்கள் தன்னுடைய படைப்புகளில் கணவன், மனைவி உறவினைப் பற்றிக் குறிப்பிடுகிறார். “காடுவரை" என்ற கதையில் பெஞ்ஜமினும் விஜயலட்சுமியும் ஆராம்பத்தில் இருந்தே ஒரே அலுவலகத்தில் வேலை செய்கின்றனர். பின் இருவரும் காதலித்துத் திருமணம் செய்துக் கொள்கின்றனர். இரு வீட்டார் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவிப்பதால் இவர்கள் தனியாக வாழ்கின்றனர். விஜயலட்சுமி பிரசவத்தின் போது இறந்து விடுகிறாள். அவளுடைய இறுதிச் சடங்கின் போது சிலுவை நடப்படுகின்றது. அப்போது அச்சிலுவையின் ஒரு புறம் உடைத்துவிடுகிறது. அதைக்கண்டு பெஞ்ஜமின் மேலும் கதறி அழுகின்றான். இக்கதையின் மூலம் அறியப்படுவது தன் வாழ்க்கைக்குத் துணையாக வந்த அவளின் இறப்பானது தான் ஒரு கையினை இழந்தது போன்று எண்ணுவதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

இதைப் போன்றே குடும்பத்தின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் மனைவியின் ஆசைகளையும், அவளுடைய தேவைகளையும் பூர்த்தி செய்வதில் அருணாசலம் ஒரு சாதரண அலுவலகப் பணியாளராக இருந்தாலும் மனைவி, பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து தான் ஒரு நல்ல கணவனாக விளங்குவதை “அடுத்தது" என்ற சிறுகதை தெளிவுப்படுத்துகிறது.

“சாசனம்" என்ற கதை ஒரு புளியமரத்தின் கதையாகும். இக்கதையில் ஒவ்வொரு முறையும் புளியம்பழங்களை உலுக்கும் போதும் அந்தப் பகுதியில் உள்ள கிழவி ஒருத்தியும் அவளது மகளும் மரத்தடியில் வந்து நிற்பார்கள். அந்தக் கிழவியின் மகள் தாத்தாவின் சாடையிலே இருப்பாள். அப்பா பேசும்போது வாஞ்சையாகக் கேட்பார்கள். பழம் உலுக்கி முடிந்ததும், அப்பா தன் காலால் கொஞ்சம் ஒதுக்கி அந்தக் கிழவியை நோக்கி எடுத்துக் கொள்ளச் செய்வார். உண்மையில் அந்தப் புளியமரம் தனக்குச் சொந்தமானதுதானா என்று அப்பாவுக்கே சந்தேகமாகத்தான் இருந்தது. இக்கதை மறைமுகமாக வெளிப்படுத்துவதெல்லாம், அந்தக் கிழவி தாத்தாவின் மனைவிகளில் ஒருத்தி என்பதுதான். இவ்வாறாக இக்கதையில் கணவன், மனைவி உறவினை வெளிப்படுத்துவதைக் காணமுடிகிறது.



பெற்றோர் பிள்ளை உறவு

கணவன் மனைவியின் இல்லற வாழ்வின் முக்கியச் செல்வமாகக் கருதப்படுவது குழந்தைச் செல்வம். இந்தச் செல்வத்தைக் காட்டிலும் சிறந்த செல்வமில்லை. பெற்றோர் பிள்ளை உறவு என்பது அப்பாவுக்கும் பிள்ளைகளுக்கும், அம்மாவுக்கும் பிள்ளைகளுக்கும் ஆகியோருக்கும் உள்ள உறவாகும். பெற்றோர்கள் பிள்ளைகள் மீது பாசமாக இருப்பதென்பது இயல்பு, ஆனால் பிள்ளைகள் பெற்றோர்கள் மீது அன்பாக இருப்பதென்பது அரிது. இது தான் உலக வாழ்வின் இயல்பும்.

“பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கள்ளு" என்பார்கள். ஆனால் பெத்த மனமே கள்ளாக இருப்பதை கந்தர்வன் காடுவரை - என்ற கதையில் விளக்கியுள்ளார். தன் மகள் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட பின்பு, அவள் தனியாக வாழ்கிறாள். அவளின் இறப்புச் செய்தி கேட்டதும் ஈரைந்து மாதங்கள் சுமந்த தாய் தலை முழுவதும் பூக்களை வைத்துக் கொண்டும், முகத்தில் மஞ்சள் பூசி பொட்டு வைத்தும் வருவதைக் கண்டு ஊர் மக்கள் புலம்புவதைக் ஆசிரியர் சிறப்பாக எடுத்துரைப்பதைக் காடுவரை என்ற கதை விளக்குகிறது.

பெற்றோரின் பாசத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் தன்னுடைய பதிவினையும் காட்டியுள்ளார். பேண்ட்காரர் என்ற கதை மாந்தர் தான் சொந்தமாக ஒரு வீடு கட்ட ஆசை கொண்டு, கடன் வாங்கி அலைந்து திரிந்தாலும் கூட வீட்டிற்குத் தன் பெயரை வைத்து அழகு பார்க்காமல் தன்னுடைய மகனான குமாரின் பெயரையே தன் வீட்டிற்கு “குமார் இல்லம்" என வைத்தும், அப்பெயரையும் ஒரு சான் உயர எழுத்துகளாகச் சிமெண்டில் உருவாக்கி மொட்டை மாடிச் சுவரில் ஏற்றி வைத்துத் தன் மகன் மீது கொண்ட பாசத்தை பேண்ட்காரர் புலப்படுத்துவதை “ஒவ்வொரு கல்லாய்" என்ற கதையின் மூலம் அறியப்படுகின்றது.

“அடுத்தது" என்ற கதையில் வரும் கதை மாந்தர் அருணாசலம் என்பவர் சாதாரண அலுவலக ஊழியராக இருந்தாலும் தன்னுடைய பிள்ளைகளின் ஆசைகளை, பத்து காசு வட்டிக்கு பணம் வாங்கி நிறைவேற்றும் சிறந்த அப்பாவாக இருப்பதை இக்கதையின் மூலம் காண முடிகின்றது.


உடன்பிறப்பின் உறவு

பொதுவாக உலக வாழ்க்கையில் அனைத்து மக்களும் கூறும் பழமொழியானது “அடித்தாலும் புடித்தாலும் அண்ணன் தம்பி தான்" என்பது உலக வாழ்க்கைக்கு மிகவும் பொருந்தக் கூடிய உண்மையாகும். தன் உடன்பிறப்பிற்கு ஒரு துன்பம் வரும் போது அவர்களுடைய இரத்த பாசத்திற்கே வலிமை அதிகம் என்பது நாம் அறிந்த ஒன்று. இக்கூற்றுகளை மெய்பிக்கும் விதமாக கந்தர்வன் தன்னுடைய “பத்தினி ஓலம்" என்ற கதையில் ஒரு பெண்ணிற்கு நிகழ்த்த மாபெரும் அநீதி ஒன்றை ஆற்றமுடியாத துயரமாகக் குறிப்பிடுகிறார். இதன் காரணமாக அப்பெண் மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கும் போது, அவளுடைய தம்பி உடன் அவனுடைய மனைவியும் ஒன்று சேர்ந்து பராமரிப்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டியிருப்பதைக் காணமுடிகின்றது.

“காடுவரை" என்ற கதையில் வரும் ஒரு பெண் கதாபாத்திரம் தன் அக்காளுடைய இறப்பின் போது அவளைத் தவறாகத் திட்டுவதுடன் தன்னை முழுமையாக அலங்கரித்து வருவதைப் பொதுமக்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டியிருப்பதையும் வெளிப்படுத்துகிறார். நிறைவாக, கந்தர்வன் அவர்கள் தன்னுடைய வாழ்க்கையில் தான் கண்ட அனுபவங்களையும் நிஜங்களையும் படைப்புகளில் வெளிப்படுத்தியுள்ளார். சமுதாயத்தில் காதல் திருமணத்தினால் ஏற்படும் இன்னல்களையும் மிக ஏழ்மையான குடும்பத்தில் வாழும் சிறிய தொழிலாளர்கள் தம் குடும்பத்தார் மீது கொண்டிருக்கும் அன்பினையும் தம்முடைய பிள்ளைகளின் முன்னேற்றத்தில் துணைபுரியும் பெற்றோர்களின் உழைப்பினையும் கந்தர்வன் அவர்கள் பல கதைகளில் எளிய மொழிநடையோடு சிறந்த படைப்பாற்றலையும் வெளிப்படுத்தியிருப்பதைக் காணமுடிகின்றது.

பயன்பட்ட நூல்கள்

1. கந்தர்வன் கதைகள் தொகுப்பு - பவாசெல்லதுரை

2. கலைக்களஞ்சியம் தொகுதி - 4

3. திருக்குறள்

4. திருநெல்வேலி மாவட்ட நாட்டுப்புறப் பாடல்களில் சமுதாய அமைப்பு -சு.சண்முகசுந்தரம்.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/seminar/s2/p34.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License