இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை


37.சு. சமுத்திரத்தின் 'மானுடத்தின் நாணயங்கள்' காட்டும் பெண்மனம்

முனைவர் செ. தட்சிணாமூர்த்தி

முன்னுரை

இலக்கிய வடிவங்களுள் சிறுகதை என்பதும் ஒன்று. இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியப் பரப்பில் பெரும்பகுதியைத் தழுவிக் கொண்டிருக்கும் சிறுகதை, நாவல், நாடகம், கவிதை என்ற நான்கு கோணங்களுள் சிறுகதையின் பரப்பு குறிப்பிடத்தக்கதாக உள்ளது. சமுதாயச் சிக்கல்களையே கருப்பொருளாகக் கொண்டு விளங்கும் சிறுகதைகளைப் படைக்கும் எழுத்தாளர்களில் சு.சமுத்திரம் குறிப்பிடத்தக்கவர். அவருடைய படைப்புகளில் ‘மானுடத்தின் நாணயங்கள்’ என்னும் சிறுகதையினை இக்கட்டுரை ஆராய்கிறது.

இலக்கியங்களில் பெண்மை

வாழ்க்கையை வகுத்துக் காட்டிய தொல்காப்பிய நூலில் காதல், காதல் மண உரிமை கூறியபோதும் குடும்பத்தில் கட்டுப்பாடுகள் இருந்தன. புற உலகில் வேலை செய்யவோ, கணவனுடன் கடல் கடந்துச் செல்லவோ உரிமை அளிக்கப்படவில்லை. 'முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை' என்று (தொல்காப்பியம்-பொருள் அகத்திணையில்) இலக்கணம் வகுத்துள்ளார்.

சங்க இலக்கியங்களில் 'மகளிர்க்கு ஆடவரே உயிர்' ஆகவும், குடும்பப் பொறுப்புகளே பெண்ணின் கடமையாகவும் உடைமையாகவும் போற்றப்பட்டன. திருக்குறளில் திருவள்ளுவர் வாழ்க்கைத் துணை நலம் எனும் அதிகாரமே வகுத்துப் பெண்ணின் கடமையை வகுத்துள்ளார். சங்ககாலச் சமுதாயத்திலும் சரிநிகர் சமத்துவம் காணப்படவில்லை என அறியமுடிகிறது.

பெண்ணின் பெருமையைப் பேச வந்த முதற்காப்பியம் சிலப்பதிகாரம். மணிமேகலையும் பெண்ணையே காவியத் தலைவியாகக் கொண்டது. ஓர் ஆண் எட்டு பெண்களை மணக்கலாம் என்பதை சீவகசிந்தாமணி காப்பியம் காட்டுகிறது. ஆனால் பெண்களின் பெருமைகளும் பேசப்பட்டன. குடும்பக் கடமைகள், கணவனைப் பேணுதல், விருந்தோம்பல், இல்லறத்தைச் சிறப்பாக நடத்துதல் ஆகியவை மகளிரின் பொறுப்புகள் ஆயின. முழு உரிமை பெற்ற பெண்ணுலகு காட்டப்பெறவில்லை.

சமய நிலையில் பெண்களை சமயத்திற்குத் தடை எனக் கருதினர். பெண்களின் வாழ்வை இருளடையச் செய்தனர். ஆண் பிறப்பு உயர்வாக மதிக்கப்பட்டது. பெண்களின் வாழ்வும் வளமும் இடைக்காலத்தில் ஒளிமங்கி இருந்தன என்பதும் அறியத்தக்கது. இக்காலத்தில் பெண் உரிமை, பெண் விடுதலை, சமத்துவம் பற்றி கவிஞர் பெருமக்கள் தம் எழுத்தாலும், பேச்சாலும் போராடி பெண் மக்களின் உயர்வுக்கு பாடுபட்டனர்.



பாரதி கண்ட இலட்சியப்பெண்,

'நிமிர்ந்த நன்னடையும்
நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத
நெறிகளும்...'

உடையவள் எனச் சுட்டியுள்ளார்.

இவரைத் தொடர்ந்து பாரதிதாசன், கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை அவர்கள் பெண்ணின் பெருமையை நன்கு உணர்ந்தவர்கள். அதனால்தான்,

'மங்கையராகப் பிறப்பதற்கே -
நல்ல மாதவஞ் செய்திட வேண்டுமம்மா...'

எனக் கவிமணி பெண்ணின் அருமையைக் கவிதை நயத்தாலே 'மலரும் மாலையும்' என்ற நூலில் பெண்மையைப் போற்றியுள்ளார். சிறுகதை ஆசிரியர்களும் பெண்ணின் பெருமையை உணர்ந்து தமது படைப்புகளில் உயர்வாகப் படைத்துள்ளனர்.

நாவல் மற்றும் சிறுகதைப் படைப்பாளர்களில் சற்று வித்தியாசமானவர் சு.சமுத்திரம். இவர் மன உறுதியுள்ள பெண்கள் உருவாக வேண்டும் என்ற ஆவலும் அக்கறையும் கொண்டு எழுதி உள்ளார். ‘மானுடத்தின் நாணயங்கள்’ எனும் சிறுகதையில் வரும் சிவகாமி பாத்திரமும் பழைய மரபை மீறிப் புதுமரபை உருவாக்கும் புரட்சிப் பெண்ணாகப் படைத்துள்ளார்.

சிறுகதையின் சுருக்கம்

சு. சமுத்திரம் தனது படைப்புகளில், குடும்பக் கதைகளில் பணக்காரக் குடும்பம், நடுத்தரக் குடும்பம், ஏழைக்குடும்பம் என மூன்று பிரிவாகப் பிரித்துள்ளார். இவ்வாறு அமைத்துக் கொள்வது அவரது படைப்பாற்றலின் தனித்தன்மையைக் காட்டுகின்றன. 'மானுடத்தின் நாணயங்கள்' எனும் சிறுகதையினை நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்த கதையாக எழுதியுள்ளார்.

சிவகாமி சராசரி மாந்தர்களைப்போல், குடும்பத்தில் வாழ்ந்து வருபவள். சிவகாமியின் கணவன் மார்த்தாண்டம் தகாத உறவை (ராக்கம்மாவுடன்) ஏற்படுத்திக் கொண்டு, தன்னை நம்பி வந்த மனைவியை அடித்துத் துன்புறுத்தி வரதட்சணைக் கேட்டு, அவளது தம்பி (தங்கராஜா)யிடம் விட்டுச் சென்றான். தங்கராஜா தன் அக்காவிடம் தான்படும் துன்பத்தையும் எடுத்துக் கூறினான். பிறந்த வீட்டை நோக்கி பயணம் செய்த சிவகாமி தன் நிலை அறியாது இருந்தாள். பின்பு தன் நிலையை உணர்ந்த பிறகு குழந்தையை தூக்கிக் கொண்டு எவருக்கும் சுமையாக இருக்கக்கூடாது என எண்ணி மானுடத்தின் நாணயங்கள் எங்கே உள்ளது என்பதைத் தேடி புறப்பட்டாள்.



சிவகாமியின் அமைதி

உலகில் மிகப்பெரிய ஆயுதம் 'அமைதி' ஆகும். இக்கதையில் வரும் சிவகாமியும் அமைதிப் புரட்சி செய்திருக்கிறாள். இல்லறத்தின் அடிப்படை 'அன்பு' ஆகும். அது பிற உயிர்கள்மேல் அருள் பிறக்கச் செய்யும் காரணியாக அமைந்துவிடுகிறது. இதனைத் திருக்குறள்,

'அருளென்னும் அன்பீன் குழவி'

அருளைக் குழந்தையாகவும், அன்பைத் தாயாகவும் குறிப்பிட்டுள்ள வள்ளுவர்,

'தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்'

எனக் கூறிய பெண்ணாக விளங்குபவள் சிவகாமி ஆவாள். தெய்வமாக எண்ணிய கணவன் கேட்க கேட்க, தன்னிடம் இருந்த இருபது பவுன் தங்க நகைகளையும், ரூபாய் பத்தாயிரத்தையும் கொடுத்த பின்பு எங்கே பொருள்கள் என கேட்காது, அமைதியாக விளங்கிய மற்றொரு கண்ணகியாக சிவகாமி விளங்கினாள்.

கணவன் மார்த்தாண்டம் தகாத உறவை ராக்கம்மாவிடம் ஏற்படுத்தி உன் அப்பாவால் எனக்கு இரண்டாயிரம் நஷ்டம் ஆனது. உன் அப்பாவிடம் சென்று 2000 ரூபாய் வாங்கி வா எனக் கூறும்போது,

'அப்பாவும் நீங்களும் கூட்டா வியாபாரம் பாத்தீங்க அவரு... நீங்க ரெண்டாயிரம் ரூபாய் தரணும்னு சொல்றார். நீங்க அவர்தரணுமுன்னு சொல்றீங்க... அந்தக் கூட்டு உடைஞ்சதுக்கு இந்தக் கூட்டை ஒடைச்சால் எப்படி' எனச் சொல்லப் போனாள்.

ஆனால், சிவகாமி ஆணின் ஆதிக்கத்திற்குப் பயந்து அமைதியாக இருந்தாள். ஆனால், பிறகு அனைத்தும் கெட்டு அழிந்து மார்த்தாண்டம் இந்த சிவகாமியைத் தேடி மீண்டும் வருவான் என்பது மட்டும் உண்மை.

அன்பு

கணவனால் துரத்தப்பட்டு தம்பியிடம் விட்டுச்சென்ற பின் தம்பி தங்கராஜைப் பார்த்தாள். உழைப்பாளியான தங்கராஜா தன் அக்கா கைக்குழந்தையோடு நிற்பதைக் கண்டான்.

'சிவகாமியின் தம்பி தங்கராஜா இரண்டு வாழைக்குலைகள் சைக்கிள் பாரில் கட்டப்பட்டிருக்க கேரியரில் ஒரு மூட்டை கத்திரிக்காய் சவாரி செய்ய, ஹாண்ட்பாரில் இரண்டு பெரிய பைகள் தொங்க வந்து கொண்டிருந்தான். அக்காவைப் பார்த்த அதிர்ச்சியிலோ அல்லது ஆனந்தத்திலோ பாலன்ஸ் போக, கீழே விழுந்தான். கடைப்பையன் ஓடிப்போய் அவனைத் தூக்கிவிட்டான் முழங்காலில் ரத்தம் கசிந்தது.

சிவகாமி தம்பியை ஏறிட்டுப் பார்த்தாள். லேசாகத் துடித்த உதடுகளைக் கடித்துக் கொண்டே மீண்டும் பாதாளச் சாக்கடைக்குள் கண்களை விட்டாள். கீழே விழுந்து அடிப்பட்டு ரத்தம் கசிவதைக் கண்ட சிவகாமியின் உள்ளம் துடித்தது. ஆனால், வெளிக்காட்டாது அமைதியாக இருந்த பெண்ணின் அன்புள்ளத்தை படம் பிடித்துக் காட்டியுள்ளார்.



தன்னை அறிந்த சிவகாமி

தன் தம்பியைச் சந்தித்த பின் பொறந்த வீட்டின் கஷ்டத்தையும் நினைத்து, தான் யாருக்கும் சுமை ஆகிவிடக்கூடாது என எண்ணினாள். சென்னை எழும்பூரில் ரயிலில் ஏறியவள் மதுரையில் இறங்கினாள். மீனாட்சி அம்மன் கோயில் முன் வந்தாள். கண் தெரியாதவர்கள், ஊனமுற்றவர்கள், ஞானம் பெற்றவர்கள் கோயிலைச் சுற்றி அமர்ந்து இருந்த அனைவரையும் கண்டாள். தனக்காக ஒதுக்கப்பட்ட இடமோ என எண்ணி துண்டை விரித்துக் குழந்தையைப் போட்டாள். மானுடத்தின் நாணயங்கள் துண்டில் கீழே விழுந்தன.

முடிவுரை

சு. சமுத்திரம் படைத்த சிவகாமி வயிற்றுக்கும் வாய்க்கும் போராடுபவள் அல்ல. உண்பதும் உடுப்பதும் உறங்குவதும் மனிதப்பிறவியின் இலட்சியமாகாது என்பதை உணர்ந்தவள். அடிமை எனும் அடைப்புக்குறியை அழிப்பவள். குடும்பச் சிக்கலில் சிக்காது விழிப்புணர்வுடன் அறிவுப்பூர்வமாகச் சிந்தித்துச் செயல்பட்டவள். சமுதாயத்தில் 'மானுடத்தின் நாணயங்கள்' எனும் மனிதர்களின் நன்மதிப்பைத் தேடிச் சென்றவள்.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/seminar/s2/p37.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License