இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை


4. வண்ண நிலவன் சிறுகதைகள் காட்டும் குடும்ப அமைப்பில் பெண்கள்

செ. அஜிதா

உலகெங்கும் சிறுகதை வடிவம் பத்திரிகைகள் வாயிலாக வளர்ந்தது போலவே தமிழிலும் நிகழ்ந்தது. மணிக்கொடி இதழ் மூலமே 1930-களில் சிறுகதை வடிவ அறிமுகம், பரவலும் நிகழ்ந்தது. மேலும், சரஸ்வதி, தாமரை, எழுத்து முதலான இதழ்கள் சிறுகதை வடிவத்தை முதன்மைப்படுத்தின. மேலும் சிறுகதை வடிவம் கலை நோக்கிலும், அரசியல் நோக்கிலும் வளரத் தொடங்கிய போது, அதன் பரவலும் நிலைபேறும் உறுதிப்பெற்றன.

1970-களில் பல்வேறு இதழ்களில் வண்ண நிலவனின் சிறுகதைகள் வெளிவரத் தொடங்கின. பல்வேறு இதழ்களில் வெளிவந்த எண்பத்தெட்டு சிறுகதைகள் 2001-ஆம் ஆண்டு வண்ணநிலவன் கதைககள் என்ற பெயரில் வெளியிடப்பெற்றன. வண்ணநிலவனின் சிறுகதைகள் தொடக்க நிலையில் புதுமைப்பித்தனைப் பின்பற்றி அமைந்த போதிலும், வளர்ச்சிப் போக்கில் தனித்தன்மை எய்தின. வாழ்வை ஆவணப்படுத்தும் போக்கே அவரது தனித்தன்மையாகும்.

தனி மனிதர்களின் கூடலே ‘குடும்பம்’ எனப் பெறுகின்றது. காதல், பாசம் என்பவற்றின் அடிப்படையில் குடும்பத்தின் நிலைப்பாடு அமைகின்றது. சமுதாயத்தின் பேருறுப்பாகவும், அரசு - ஆட்சி - அதிகாரம் செயல்படுவதற்கான முதன்மைக்களமாகவும் ‘குடும்பம்’ அமைந்துள்ளது.

குடும்ப அமைப்பு ஒரு மனிதரின் பிறப்பு, இறப்பு, பாலியல் மற்றும் உடல் - மனத் தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கான இடமாகத் திகழ்கின்றது. கணவன் - மனைவி, பெற்றோர் - பிள்ளை முதலான உறவு முறைகளைக் கொண்டு மகிழ்வதற்கும் குடும்பம் என்ற அலகு காரணமாகி நிற்கின்றது. எனவே பண்பாடு, சமயம், கலைகள் என மனித வாழ்வோடு தொடர்புடைய அனைத்து வளர்ச்சிக்கும் ‘குடும்பம்’ காரணமாகி அதன் இன்றியமையாமைப் புலப்படுத்துகின்றது. ப்ராய்டு, ஆடலர் போன்ற உளவியலறிஞர்கள் குடும்ப வளர்ப்பே சமுதாய வளர்ச்சியாகப் பரிணாமம் கொள்கிறது என்பர்.



குடும்பத்தில் பெண்களின் நிலை மரபைத் தழுவியே இருந்து வருகின்றது. தந்தைவழிச் சமூகநிலை தொடர்வதால், பெண்நிலை பெரிய அளவில் மாற்றமின்றியே இருந்து வருகின்றது. எனினும், வண்ணநிலவன் சிறுகதைகளில் நுணுக்கமான மாறுபாடுகளைக் காண இயலும். மரபுநிலையில் பெரிதும் துன்பங்களுக்கு இலக்கான பெண்களே படைக்கப் பெற்றுள்ளனர்.

“நமது அன்றாட வாழ்க்கையில் அனுபவிக்கும் கீழ்நிலை அனுபவங்கள் பலவிதமாக உள்ளன. பாகுபாடுகள், அவமதிப்பு, கட்டுப்படுத்துதல், ஒடுக்குதல், வன்முறை என்ற இத்தகைய கீழ்நிலைப்படுத்தும் நிகழ்வுகளை வர்க்க வேற்றுமை இன்றி, அனைத்துப் பெண்களும் அனுபவித்து வருகின்றனர். இந்த நிகழ்வுகளின் தன்மைகள் மாறலாம். ஆனால், உட்பொருள் ஒன்றே” என்று கம்லா பாசின் கூறுகிறார்.

புதிதாகத் திருமணம் செய்துகொண்டு நிறைசூலியாக இருக்கும் செல்லபாப்பா (பலாப்பழம் - வ.நி.க.பக்.73-79) பலாப்பழம் தின்ன ஆசைப்படுகிறாள். மரத்தடுப்புக்குப் பின் இருக்கும் பக்கத்து வீட்டுக் குழந்தைகள் பலாப்பழம் சாப்பிடுகின்றனர். வாசனை மூக்கைத் துளைக்கிறது. பக்கத்து வீட்டுக் குழந்தை வேறு வேலையாக வந்த போது, பலாச்சுளையை அப்பெண்ணின் அம்மா கொடுத்து அனுப்பியதாக நினைக்கிறாள். அப்படி ஏதுமில்லை, அன்று மாலை கணவன் வாங்கி வருவான் என்று நினைக்கிறாள். அவளது ஆசை நிராசையாகிறது. குறைந்த வருமானம் உள்ள கணவனின் நிலை அவளது ஏமாற்றித்திற்குக் காரணமாகிறது. இதில் குடும்ப வறுமையின் விளைவு முதலில் (சூலுற்ற) பெண் மாந்தரைத் தாக்குவதைக் காணமுடிகிறது.

செல்லம்மா, செல்லையா பண்டிதரின் மனைவி. பிணம் வராததால் வெட்டியார் (ன்) பணி இல்லை. கூலி இல்லை, வீட்டில் வறுமை தாண்டவமாடுகிறது. செல்லம்மா தன் கணவனைக் குற்றங்கூறுகிறாள். “யோவ் மனுஷா! ஏதாவது மிச்சம் மிஞ்சாடி சொரணையாவது இருக்கா, பொணத்தக் காத்துக் கெடந்து, காத்துக் கெடந்து நீயும் பொணமாகிப் போயிட்டீயா? மயிரே... வீடு மொழுகலைன்று ஆடுதீரே, மூணு நாளாகுது சோத்துப் பருக்கையைப் பாத்து... இன்னிக்கி எளவு விழும். நாளைக்கி எளவு விழும்னு பத்து பகல் ராத்திரி கழிஞ்சாச்சு...” (மயான காண்டம் - வ.நி.க.பக.43-48) என்று வறுமையைக் கூறிப் புலம்புகிறாள். மேலும், அவள் கணவன் அவளைத் திட்டி இழிவுபடுத்துகிறான். இது, குடும்பத்தில் மனைவி நிலையை எடுத்துக்காட்டுவதாகும்.



‘சிவகாமி’யின் கணவன் தன் நண்பனை வீட்டுக்கு அழைத்து வருகிறான். நண்பன், தன் நண்பனின் மனைவியைக் காமவுணர்வோடு காண்கிறான், பேசுகிறான். இதைக் கணவன் உணர்ந்ததுபோல தெரியவில்லை. அவனிடமிருந்து கடன் பெறுவதையே முதன்மையாகக் கொள்கிறான். மனைவி, தன்னைக் காமவுணர்வோடு நோக்கும் கணவனது நண்பனின் செயலை வெறுக்கின்றாள். (வ.நி.க.பக் 104)

இதில் பெண் ஓர் இக்கட்டான நிலையில் உள்ளமை உணரத்தக்கது. நண்பனின் மனைவி என்ற பண்பாட்டு உணர்விலிருந்து விடுபட்டுக் காமவுணர்வோடு பார்க்கும் ஆணின் செயல் இதில் விளக்கப்படுகிறது.

குஸ்திக்குப் போகின்ற இஸ்மாயிலின் மனைவி ஆமினா, தன் குழந்தைகளின் மேல் தன் கணவன் மீதான வெறுப்பை மடைமாற்றம் செய்கிறாள். அவளது மூத்த மகள் நூர் எல்லாவற்றையும் சரி செய்து, பீடி சுற்றி, வருமானத்தைக் குடும்பம் நட்த்தக் கொடுத்துத் தந்தைக்குப் பதிலாகக் குடும்பத்தை நடத்தும் நிலை, பயில்வான் என்ற சிறுகதையில் இடம் பெற்றுள்ளது.

“இன்றைக்கும் கூட வாப்பாவுக்கு குஸ்தி இருக்கிறது. பத்துநாள் குஸ்தியாம். ஆயிரம் கிடைக்குமோ, இரண்டாயிரம் கிடைக்குமோ, எவ்வளவு பணம் வந்தால் என்ன? ஆமினாவுக்குப் புகைகிற அடுப்பும், வறட்டு இருமலும், சுத்தி சுத்திச் சலிப்பை உண்டு பண்ணுகிற இந்தப் பிள்ளைகளும்தான் மிச்சம். நூருக்கோ இருக்கவே இருக்கிறது வட்டச்சுளரும், பீடி இலைகளும். பல் தேய்த்தது முதல் படுக்கப் போவதுவரை இந்த பீடி இலைகள்தான் அவளது உலகம். ரொம்ப அமைதியான பிள்ளை அவள். பசிக்கிறது. என்று அவள் சொன்னதே இல்லை. அவள் மட்டும் இல்லையானால் வீடு என்ன ஆகியிருக்கும் என்று சொல்லவே முடியாது. முதுகு ஒடிய அவள் பீடி சுற்றப்போய் ஈரவிறகாவது புகைகிறது...” (வ.நி.க.பக்.182) எனத் தொடங்கும் பகுதி குடும்பப் பெண்ணிகளின் நிலையைப் படம் பிடிக்கிறது.

கணவனின் அடக்கு முறைக்கு உள்ளான அந்த அவள் (துருவங்கள்) தன் சொந்த ரசனையற்ற வாழ்வை வெறுக்கிறாள். “அவனுக்கும் அவளுக்கும் எதிலுமே ஒட்டவில்லை. இரண்டு பேருடைய ருசியும், ரசனைகளும் விருப்பு வெறுப்புகளும் நேர் எதிர்மாறாக இருந்தன.” (வ.நி.க.பக்.301.) “எப்போதோ, உனக்கும் எனக்கும் உள்ள உறவு அறந்தது என்று சொல்லிவிட்டு ரயிலேறிப் போயிருக்கலாம். இவளால் ஏன் அப்படிச் செய்ய முடியாமல் போயிற்று? அப்படிக் கண்டித்துக் கொண்டு போகமுடியாமல் தடுத்தது எது? இந்தக் குழந்தைக்காகவா? இல்லை உலகம் சொல்லும் பழிச்சொல்லுக்காகவே? (வ.நி.க.பக்.307) குடும்பத்தின் மீதான பொறுப்புணர்வின் அவளை வேண்டாத கணவனோடு வாழச் செய்கிறது. பொறுப்புணர்வின் சுமை அவளை வருத்துகின்றது. மனைவியை அடிமையாகவே நடத்தும் கணவனின் இயல்பை ‘பொறுப்புணர்வு’ என்ற மரபு இயல்பு (Unconcious behaviour) தாங்கி நிற்கச் செய்கிறது. இது குடும்பவுணர்வின் ஆதிக்க இயல்பு எனக் கொள்ளத்தக்கது.



பிள்ளை இல்லாத பெண் (மெஹ்ருன்னிசா) கணவனுக்குப் பெண் பார்த்து மணம் முடிக்கிறாள். கணவன் மீரான் வேறு வழியின்றித் தனிக் குடித்தனம் செய்கிறான். மெஹ்ருன்னிசா பழைய வீடு சிதைந்தபோதும், அங்கிருந்து செல்லவில்லை. தனிமையில் வாழ்கிறாள். மெஹ்ருன்னிசாவின் வீட்டில் வேலை செய்யும் கருத்த ஆயிஷாவோ ஆதறவற்றவள். ஆக்குப்புரை தவிர பிற ஏதும் அறியாதவள். அவளும் மாரடைப்பால் இறந்திட மென்மையும், இசை ஆர்வமும் கொண்ட மெஹ்ருன்னிசா தனிவாழ்வு வாழ்கிறாள்.

பதினான்கு ஆண்டுகளாகப் பிள்ளை பேறற்ற மெஹ்ருன்னிசா தன் கணவனுக்கு வேறு மணம் முடிக்க முடிகிறது. தனக்கான மாற்றுவழியைத் தெரிவு செய்ய இயவில்லை. பெண்ணடிமை உணர்வு, ஆணின் மகிழ்வை மட்டுமே நாடுவதாக அமைகிறது. மெஹ்ருன்னிசா வீட்டுச் சமையல்காரப் பெண் ஆயிஷா திருமணமும், குடும்ப வாழ்வும் அறியாமலே சமையலறை வாழ்வோடு முடிந்து போகிறாள். பெண்களின் துயர் குடும்ப வாழ்வின் இயல்பாக அமைந்துள்ளமை எண்ணத்தக்கது. (வ.நி.க. பக்.441-453)

குடும்ப அமைப்பில் கணவனது பொருளாதாரப் பற்றாக்குறையின் விளைவுகள் யாவற்றையும் சகித்துக்கொண்டு வாழ்வதும், தனக்காக வாழாமல் கணவனுக்காகப் பொறுமையாகவும், நிதானமாகவும் இருப்பதும் வண்ணநிலவன் சிறுகதைகளின் வழியாக உரை முடிகிறது. மேலும், இவரது சிறுகதைகளில் துயர் கொண்ட பெண்களே குடும்ப அமைப்பில் இடம் பெறுகின்றனர். குடும்பம் என்ற அமைப்பு பெண்களுக்கு எதிரானதாகவே இருந்து வருகிறது என்பதையும் நம்மால் உணர இயலும்.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/seminar/s2/p4.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License