இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை


7. வல்லிக்கண்ணனின் “மூக்கப்பிள்ளை வீட்டு விருந்து” கதையில் சமூகம்

வி. கவிதா

முன்னுரை

சிறுகதை இலக்கியம் ஒருவகையில் வாழ்வின் நடப்பியலாகக் காட்டுகிறது. கற்போருக்குப் பொழுது போக்காகக் சுவையூட்டுவதோடு மட்டும் சிறுகதையின் பங்கு நின்று விடுவதில்லை. நடப்பியல் செய்திகளைத் தருவதால் சிறுகதை மக்கள் வாழ்வை, பண்பாட்டை ஆராய உதவும் கருவியாகின்றது. சமூகத்தில் உள்ள மக்கள் பிரச்சனையைத் தமது கதைகளில காட்டுகிறார். மனிதன் தன் இனத்துடன் இணைந்தும் பிணைந்தும் வாழும் இயல்புடையவன். அவன் கூடிக் கலந்து வாழ்வதில் சமூகம் உருவாகிறது.

சமூகம்

சமுதாயம் என்பதற்குச் சமூக அறிஞர்கள் பல்வேறு விளக்கங்களைத் தருவார்கள். “சமுதாயம் என்பது கூடி வாழும் மனிதக் கூட்டத்தைக் குறிப்பதாக அமைகின்றது. சமூகம் என்பது மக்களின் தொகுதியாகும். பல குடும்பங்களின் இணைவால் சமூகம் உருவாக்கம் பெறுகிறது. தனி மனிதருடைய வாழ்க்கை சமூகத்தோடு ஒத்து வாழ வேண்டும் என்பதை வல்லிக்கண்ணன் படம் பிடித்துக் காட்டுகிறார்.

மூக்கப்பிள்ளையின் மனச்சான்று

“மூக்கப்பிள்ளையின் மனச்சான்று உறுத்தல் கொடுக்கத் தொடங்கியது. காரணம், செய்தித்தாள்களில் வந்த செய்திகள், பயணச்சீட்டு வாங்காமல் இரயில் பயணம் செய்த ஒருவர், பல ஆண்டுகள் கழித்துப் பயணக் கட்டணத்துடன் அபராதமும் வட்டியும் சேர்த்து நிருவாகத்தினருக்கு அனுப்பி வைத்தார்” (1) என்பதே செய்தியாகும். இத்தகைய செய்திகள் மூக்கப்பிள்ளையின் மனத்துள் பதிந்து வேலை செய்யத் தொடங்கின.



மூக்கப்பிள்ளையின் பண்பு

“கடைக்காரர்கள் சில்லறை கொடுக்கும் போது அதிகமாய்க் கொடுத்தால், அதிகப் பணத்தைத் திருப்பிக் கொடுத்திடுவார். ‘ஊரான் அவர் பொதுச் சொத்தைச் சுரண்டியதில்லை; தனிநபர் எவரையும் ஏமாற்றியதுமில்லை” (2) இவ்வாறு முதலில் மூக்கப்பிள்ளையின் பாத்திரத்தை அறிமுகப்படுத்தி அவர்தம் பண்பை விளக்கக் கதையைத் தொடங்குகிறார் வல்லிக்கண்ணன்.

தனியனாய் இருக்கும் மூக்கப்பிள்ளை

“சிவபுரத்தில் சுகவாசியாய் வாழ்ந்தவர், மூக்கப்பிள்ளை. சமூகத்துடன் ஒட்டி வாழாமல் விலகியிருந்தவர் ஊர்ப் பொதுக்காரியங்களில் பங்குகொள்ளாதவர் எனினும், ஊர் இழவு, திருமணங்களில் வேண்டா வெறுப்பாய்த் தலைகாட்டுவார். விருந்துச் சாப்பாட்டில் பங்கு பற்றமாட்டார்” (3). ஆனால், ‘ஊர் வழக்கம்’ ஒன்றை மட்டும் தட்டாமல் ஏற்க வேண்டியதாயிற்று. அதனால் அவருக்கு ஏற்பட்ட மன உறுத்தலைச் சில நிகழ்ச்சிகளால் கதாசிரியர் தொpவிக்கிறார்.

ஊர் வழக்கம்

“ஒரு வீட்டில் திருமணம் நடந்தால், பலநாள் கழித்து. ‘நல்ல மாசத்துப் பழம்’ என்று சில பழங்களை ஊர் முழுதும் வீடு தேடிக்கொடுப்பார்கள். ‘மறு வீட்டுப் பலகாரம்’ என்று இனிப்புகளையும் வழங்குவார்கள். இஃது ஊர் வழக்கம். பெரியவர் எவரேனும் இறந்தால், மகன் அல்லது பேத்தி ஊருக்குக் ‘கடலை போடுவது’ வழக்கம். இவற்றைப் பெரும்பாலும் எல்லா வீட்டாரும் மறுக்காமல் ஏற்றுக்கொள்வார்” (4). ‘நாங்கள் என்னத்தைத் திரும்பச் செய்யப் போகிறோம்’ என்று சிலர் மறுத்து விடுவதுமுண்டு.

பெளர்ணமி விரதம்

“இவற்றையெல்லாம் வாங்கும் தாம் ஊராருக்கும் உறவுக்காரர்களுக்கும் திருப்பித்தர வாய்ப்பில்லையே! ஊர் கூட்டிச் சாப்பாடு போடச் சந்தர்ப்பம் வராதே!’ என்று எண்ணினார், மூக்கப்பிள்ளை. இவை வட்டி இல்லாக் கடன். ஒருவர் செய்தால், மற்றவர் எப்பொழுதாவது அதைத் திருப்பிச் செய்ய வேண்டும். தமக்கு அந்த வாய்ப்பு இல்லை. அதனால் ஊரார் பழிப்புக்கும் வசவுக்கும் ஆளாக வேண்டிவரும். இவ்வாறு அவர் நெடிது எண்ணினார். அதன் முடிவாய்ச் சித்திரா பெளர்ணமியன்று இரவில் ஊருக்கு விருந்து வைக்க வேண்டும்: ஊர்க்கடனைத் தீர்க்க வேண்டுமென முடிவு செய்தார்” (5). அன்று சித்திரபுத்திர நயினார் நோன்பும் வருகிறது. உடனே செயல்படத் தொடங்கினார். மூக்கப்பிள்ளை.

சம்பிரதாயத்ததைப் பின்பற்றவில்லை

“சமையல்காரர் இருவரை அழைத்தார். தேவையான பொருள்களுக்குப் பட்டியல் போட்டு வாங்கினார். தம் எண்ணத்தை விருந்து அன்றைக்கு அனைவருக்கும் தொவித்தால் போதுமென்று நினைத்தார்.

மூக்கப்பிள்ளை பெளர்ணமி நாளன்று காலை. ‘அழைப்புக்காரன்’ ஆறுமுகத்தை அழைத்து. சிவபுரம் சுகவாசிகள் எல்லார் வீட்டிற்கும் போய், ‘சித்தரா பெளர்ணமி சித்திரா அன்னச் சிறப்புச் சாப்பாடு” (6) என்று சொல்லி அழைக்குமாறு ஏற்பாடு செய்தார்.



விருந்தினரை எதிர்பார்த்தல்

“அன்று மாலை வீட்டில் விளக்குகளை ஏற்றி வைத்ததுக் கொண்டு உணவு பரிமாறத் தயாராய் இருந்தார் மூக்கப்பிள்ளை. இரவு ஒன்பது மணிவரை எவரும் வரவில்லை. மூக்கப்பிள்ளை மனம் குமுறினார். மீண்டும் அழைக்குமாறு ஆறுமுகத்தை அனுப்பினார். தாம் நினைத்ததை நிறைவேற்ற முடியவில்லையே என்ற ஆதங்கம் மூக்கப்பிள்ளைக்கு இருந்தது” (7).

ஆறுமுகம் திரும்பி வந்து, ‘சிவபுரத்தில் ஒரு வீட்டில் விசேஷம், விருந்து என்றால் ஊரார் பல சம்பிரதாயங்களை எதிர்பார்க்கிறார்கள் என்றான்.

ஊரார் வழக்கு

“முதலில் வீட்டுக்காரரே நேரில் ஒவ்வொருவரையும் பார்த்துச் செய்தி சொல்லி அழைக்க வேண்டும்: “சாப்பாட்டையும் நம் வீட்டிலேயே வைத்துக் கொள்ளுங்கள்” என்று வலியுறுத்த வேண்டும். விசேஷத்திற்கு முதல் நாள் இன்னார் வீட்டு விசேஷம். சாப்பாட்டிற்கு அழைத்திருக்கிறோம்’ என்று சொல்ல வேண்டும். விசேஷத்தன்று உணவு நேரத்தில், ‘ஐயா, சாப்பிட வாங்க, இலை போட்டாச்சு’ என்று அழைக்க வேண்டும்.. அழைக்கப்பெற்றவர் வருகிறாரோ இல்லையோ, அழைப்பு மட்டும் விடுபடக்கூடாது. ஊராரின் சடங்குகள், சம்பிரதாய வழக்கங்களில் ஒத்துப் போகாதவராயிற்றே மூக்கப்பிள்ளை!” (8)

மூக்கப்பிள்ளை இந்தச் சம்பிரதாயங்களுள் எதையும் கடைப்பிடிக்காததால் சிவபுரம் சுகவாசிகள் எவரும் விருந்திற்கு வரவில்லை.

சம்பிரதாய மீறல்

“மூக்கப்பிள்ளை மனம் தளரவில்லை; தம் எண்ணத்தை மடைமாற்றம் செய்தார்; ஆறுமுகத்தை அழைத்தார்; “நீ வடக்கூர், கீழூர்ப் பக்கம் சென்று, அங்கே உள்ள ஏழை எளிய பிள்ளைகளை இங்கே வரச்சொல். ஐயா வீட்டில் நயினார் நோன்பு வழிபாடு, சித்திரான்ன பிரசாதம் என்று சொல்லி அனுப்பி வை. ஆண்டுக்கு ஒரு நாள் அவர்கள் புதுமையாய் நிறைவாய் சாப்பிடட்டும்” (9) என்றார்.

மூக்கப்பிள்ளையின் தத்துவம்

“செய்தது வீணாகக் கூடாது. சுகவாசிகளுக்கு உணவு அளிப்பதை விட ஏழை எளியவர் வயிற்றுக்குச் சோறு போடுவது மிகப்பெரிய விஷயம்” (10) என்று தத்துவம் பேசினார், மூக்கப்பிள்ளை.

அழைக்கப்பெற்றவர்கள் வந்து சாப்பிட்டிருந்தால் அவரிடம் இந்தத் தத்துவம் பிறந்திருக்குமா?



மூக்கப்பிள்ளையின் பொன்மொழி

‘இருக்கிற சுகவாசிகளுக்கே மேலும் மேலும் விருந்தளிப்பதை விட ஏழைபாழைகள் வயிற்றுக்குச் சோறு போடுவது மிகப்பெரிய விஷயமாகும்’ (11) என்ற பொன்மொழியை உதிர்த்தது, மூக்கப்பிள்ளையின் மனம்.

முடிவுரை

சிறுகதை என்பது சமூத்தில் உள்ள பிரச்சனைகளை எடுத்துக்காட்டுவதாகும். வல்லிக்கண்ணன் சிறுகதையில் தனிமனிதனுடைய வாழ்க்கை சமூகத்தோடு ஒத்து வாழவேண்டும் என்பதை படம் பிடித்துக் காட்டுகிறது. மூக்கப்பிள்ளை வீட்டு விருந்து சிறுகதையில் நாட்டு வழக்கம் ஊர்மரபு பற்றிய செய்திகள் குறிப்பிடப்படுகிறது. சமூகத்தில் தனியனாய் இல்லாமல் ஊரோடு ஒத்துவாழவேண்டும் என்ற கருத்தின்படி வாழவேண்டும் ஊரில் உள்ளவர்களுக்கு விருந்தளிப்பவர்களுக்கு விருந்தளிப்பதைவிட ஏழை எளியவர்களுக்கு உணவளிப்பதே சிறந்தது என்ற கருத்து இக்கதையின் மூலம் அறியப்படுகிறது.

அடிக்குறிப்பு

1. மூக்கப்பிள்ளை, வல்லிக்கண்ணன். ப.191.

2. மூக்கப்பிள்ளை, வல்லிக்கண்ணன். ப.192.

3. மூக்கப்பிள்ளை, வல்லிக்கண்ணன். ப.193.

4. மூக்கப்பிள்ளை, வல்லிக்கண்ணன். ப.194.

5. மூக்கப்பிள்ளை, வல்லிக்கண்ணன். ப.197.

6. மூக்கப்பிள்ளை, வல்லிக்கண்ணன். ப.198.

7. மூக்கப்பிள்ளை, வல்லிக்கண்ணன். ப.199.

8. மூக்கப்பிள்ளை, வல்லிக்கண்ணன். ப.200.

9. மூக்கப்பிள்ளை, வல்லிக்கண்ணன். ப.201.

10. மூக்கப்பிள்ளை, வல்லிக்கண்ணன். ப.201.

11. மூக்கப்பிள்ளை, வல்லிக்கண்ணன். ப.201.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/seminar/s2/p7.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License