இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்

      

53. தமிழ் இலக்கணத்தில் உறுப்புச்செய்யுள்


செ. சுமதி
முனைவர் பட்ட ஆய்வாளர்,
கந்தசாமிக் கண்டர் கல்லூரி, ப. வேலூர்.

முன்னுரை

“வழக்கின் மரபியலின் நேர்ந்து வழுவாது
இழுக்கி வடவெழுத்தை இன்பம் வழுக்காது
முன்னையோர் பாட்டில் பயின்ற மொழியன்றோ
சொன்ன உறுப்பின் துணிபு”

என்று வரையறுக்கப்பட்ட வெண்பா பாட்டியலில் ‘உறுப்புச்செய்யுள்’ வகை என்று கூறப்பட்டுள்ளதை நம்மில் பலரும் அறிவர். இவ்விலக்கணத்தின் படி உறுப்புச் செய்யுளில் வரும் சொற்கள் மூன்று இயல்புகளை உடையனவாய் இருத்தல் அவசியம். அவையாவன.

1. வழக்கிலும் மரபிலும் பொருந்தாமல் இருப்பது

2. வடமொழி எழுத்துக்கள் கலவாமல் இருப்பது

3. இன்பம் நிரம்பிச் சான்றோர் செய்யுள்களில் பயின்று வந்த சொல்லுடமை

இந்த மூன்று இயல்புகளையும், தெளிவாக உணர்ந்து கொள்ளுதல் மிகவும் அவசியம் ஆகும். ‘வழக்கு’ என்பது ‘செய்யுள் வழக்கு’, ‘உலக வழக்கு’ என்ற இரண்டையும் குறிக்கும். ‘மரபு’ என்பது தொல்காப்பியத்தில் வகுக்கப் பட்டுள்ள (மரபியலில்) நியமங்களைக் குறிக்கும். ‘வடவெழுத்து’ என்பது வடமொழிக்கே உரித்தான சிறப்பாக அமைந்த எழுத்துக்கள். வருக்க எழுத்துக்கள் பலவும், ‘ஸ’ போன்ற எழுத்துக்களும் விரவிவரலாகாது. இயல்பாகவேச் செய்யுள்களில் அமைந்திருப்பது போன்று இன்பம் அளிக்கக்கூடியச் சொற்களைக் கொண்டே ஆளப்படுதல் வேண்டும்.

இப்படிப்பட்டச் சொற்கள் அமைந்த கவியை ‘உறுப்புச் செய்யுள்’ என்று பெயர் கூறி அழைப்பது என்ன காரணம் என்ற கேள்வி எழுதல் இயல்பே ஆகும்.

குற்றமற்ற உறுப்பு

காவியச் சரீரமாகிய சொல் தொகுதிக்குச் சொற்கள் உறுப்பாதல் தெளிவே. இவ்வாறு வரக்கூடிய சொற்களில் ஒருசில நல்லியல்பு கொண்டு இயன்று வரும் செய்யுளை ‘உறுப்புச் செய்யுள்’ என வெண்பா பாட்டியலாசிரியர் அழைத்தார் எனத் தோன்றுகிறது.

வீரசோழியம் எவ்வகைச் சொற்கள் ‘குற்றமற்ற உறுப்பு’ எவ்வகைச் சொற்கள் ‘பழிக்கப்பட்ட உறுப்பு’ என்பதை இரண்டு காரிகைகளால் உணர்த்துகின்றது.

“சார்ந்த வழக்கொடு தப்பா
வடவெழுத் தைத்தவிர்த்துத்”

என்று வரக்கூடிய 144-ம் காரிகையில் குற்றமற்ற உறுப்பு விளக்கப்படுகின்றது. ‘தப்பா’ என்ற சொல்லை ‘தமிழ் மரபினோடுங்கூடி’ என்று விளக்கப்பட வேண்டும். இதனை ‘தமிழினோடுங் கூடி’ என வீரசோழிய உரைக்காரர்கள் விளக்குவர். சொற்கள் திரிந்து பொருள் கூறாமல், இயல்பாகவே விளக்குவதாய் இருத்தல் வேண்டும்.



பழிக்கப்பட்ட உறுப்பு

குற்றமற்ற உறுப்புகளின் மறுதலை இயல்புகள் இவ்விடத்தே கூறப்பட்டுள்ளன. மறுதலையில்புகளாவன.

1. வழக்கோடு மாறுபடுதல்

2. இன்பமின்மை

3. வடவெழுத்துப் பயின்று வரல்

4. சான்றோர் செய்யுள்களில் பயின்று வாராமை

5. பொருள் மருண்டிருத்தல்

இவ்வியல்புகளை உட்கொண்டு வெண்பா பாட்டியலின் ஆசிரியரும்,

“துணிதற் கரிது பொருளென்றும் சோர்வு
பணிவுற்ற சொன்மெற் படுத்தும்-அணிப் பொருட்டால்
மற்றுமுண் டென்றும் உரைப்போர் வழுச் சொல்லின்
இற்றன்றோ பாவின் இழுக்கு”

இதுபோன்று இலக்கண விளக்கப் பாட்டியல் ஆசிரியரும் சூத்திரம் செய்தனர்.

மேலும் நவநீதப் பாட்டியலில் மேற்குறித்த வீரசோழியக் காரிகை (145) பெரும்பாலும் வேறுபாடின்றி வந்துள்ளமை குறிப்பிடத் தக்கது. இதில் பழித்த உறுப்பின் இயல்புகளே எடுத்துச் சொல்லப்படுகிறது. பழைய உரையும் இக்கருத்தினையே ஆதரிக்கின்றது. இச்செய்யுளின் உண்மை வடிவம்,

“தெற்ற வழக்கொடு தேர்ந்துணர்
விற்கின் பஞ் செய்தலின்றிப்
பற்றி வடநூல் எழுத்துக்க
ளைப்பழை யோருரையின்
மற்றிவை இல்லையென் றோத
லுடன்படல் மாலியலாற்
பெற்றி யுடைச் சொற் பழித்த
வுறுப் பென்று பேசுவாரே
என்பதனால் வேண்டும்”

வீர சோழிய உரைகாரர் கூறுவனவற்றுள் ஒரு சில கூற்றுக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியவையாக உள்ளன. இவ்வுறுப்புக்களால் நிரம்பின உடல் (சொல்லின் தொகுதி அல்லது செய்யுள்) குற்றமுடையது என்பதாகும்.

மொழியின் வரம்பினை வகுத்துக் கூறும் இலக்கணக் கருத்திலும் வடமொழிக்கு நமது மொழி பெரிதும் கடமைப்பட்டிருக்கின்றது. ஆயின் மணிப்பிரவாளத்துக்கும் விரவியலுக்கும் வடமொழி மொழி எழுத்துகள் இருக்கும் எனில் இவ்விலக்கணம் கீழ்க்கணக்கு முதலாகிய செய்யுள்களுக்கு மட்டுமே என்று அறிய வேண்டும். அவைகள் அதாவது ‘பழித்த சொற்கள்’,

“அன்றுள்ளா னொரு குரிசிலைப் புகழ்ந்து
செய்யுங் கவியுள் மறந்தேயும் வரப்பெறாவெனக் கொள்க”



பரசு செய்யுள்

மேற்கண்ட கூற்றின் மூலமாகக் கவிஞர்கள் காவியம் இயற்றும் பொழுது பழித்து உறுப்புகள் வராமல் பார்த்துக் கொள்வது ஒரு பெரும் நியதியாகக் கொள்ள வேண்டும். ‘புகழ்ந்து செய்யுங்கவி’ என்பதனையே நவநீதப் பாட்டியலின் பழையவுரை (82) ‘பரசு செய்யுள்’ எனக் குறிக்கின்றது. பிறிதோர் இயல்பை அது கருத்திற் கொள்ளுதலும் அமையும்.

‘உத்படர்’ எனும் ஆசிரியர் தமது அலங்கார விளக்கத்தில் உபநாகரீகம், கிராமியம், பருஷம் என்ற மூன்றுவகை நெறிகளை உணர்த்துகின்றார். இவற்றுள் ‘பரு‘ம்’ என்பது ‘பரசு’ செய்யுள் எனப்பட்டது. ‘பரு‘ம்’ என்பது ‘கடுஞ்சொல் என்று பொருள்படும். இச்சொற்களே பழித்த உறுப்பிற்குரியனவாகும். மேலும் பழிக்கப்பட்ட உறுப்பிற்கு உதாரணமாக,

“தெளிந்த வழக்கொடு சிறந்த பொருள் படூஉம்
இன்பம் ஒரீஇ வடவெழுத்தே மிக்கு
முதிர்சொற் புணர்க்கா தெதிர் சொற் புணர்த்து
மாலுறச் செய்தல் வழுவா மென்பர்” (பாடடியல் 126)

என்ற இலக்கண விளக்கப் பாட்டியலுடையாரின் செய்யுளைக் கூறலாம்.

நூல்கள் காலத்திற்குக் காலம் அதிகப்பட்டுக் கொண்டுடே வரும், அதன் போலவே மொழியின் வளர்ச்சியும் அதற்கேற்ப வேறுபட்டுக் கொண்டே வரும். இவ்விரண்டையும் கருத்தில் கொண்டு அவ்வப்போது நூல்களை இயற்றுவதுதான் நன்மை பயக்கும். காலவேறுபாட்டைத் தவிர, தேச வேறுபாடும் இலக்கணத்தை வேறுபடுத்தும்.

தற்காலத்தில் எத்தனையோ புதிய வழக்கு நாம் பேசும் பேச்சிலும், படிக்கும் நாளிதழ்களிலும், நூல்களிலும் வழங்கி வரும் மரபுகளைத் தொகுத்துக் கொடுத்து இலக்கணம் வரைதல் அவசியம் ஆகும். இலக்கணம் என்பது அதன் ஆசிரியன் வாழ்ந்த காலத்திற்கும், அதற்கு முன்பும் உள்ள மொழி வழக்கு அனைத்தையும் வகைப்படுத்திக் கூற முயல்வதாகும்.

இவ்வாறு இயற்றப்பட்ட தற்காலத் தமிழ் இலக்கணத்தோடு அமைந்து விடாமல், பூர்வ காலம் தொட்டு, இன்று வரை உள்ள இலக்கியங்களை எல்லாம் நன்கு கற்று அவற்றைச் சங்க காலம், பக்தி நூற்காலம் முதலிய பகுதிகளாகப் பிரித்து அந்தந்த காலத்திற்குரிய இலக்கணங்களை இயற்றுதல் மிக அவசியமாம்.



தற்காலத்தில் எத்தனையோப் புதிய வழக்கு நாம் பேசிவரும் பேச்சுக்களிலும், பத்திரிகைகளிலும் நூல்களிலும் வழங்கி வரும் மரபுகளைத் தொகுத்துக் கொடுத்து இலக்கணம் வரைதல் அவசியம் ஆகும்.

வடமொழியில் தண்டியாசிரியர் ‘காவியங்களின் சரீரமும் அலங்காரங்களும் தொல்லாசிரியர்களால் காட்டப்பட்டுள்ளன. ‘கருதிய பொருளைப் புலப்படுத்தும் சொல்லின் தொகுதியே சரீரமாவது’ என்று கூறினார். இவர் கூறியதையே வீர சோழிய நூலாரும் கூறியுள்ளதைக் காணலாம்.

மேற்கூறிய கூற்றுக்களின் மூலமாக தமிழ் இலக்கணத்தில் ‘உறுப்புச் செய்யுள்’ இன்னது என்பதனை நாம் ஒருவாறு உணரமுடிகிறது.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://muthukamalam.com/essay/seminar/s3/p53.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License