இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்

      

60.தமிழ் இலக்கணத்தில் தொல்காப்பியரும் மொழி வளர்ச்சியும்


ம. தங்கேஸ்வரி
முனைவர் பட்ட ஆய்வாளர்,
கந்தசாமிக் கண்டர் கல்லூரி, ப. வேலூர், நாமக்கல் மாவட்டம்.

தமிழின் தொன்மை

தென்னிந்தியாவில் வழங்கும் திராவிட மொழிகளுள்ளேத் தமிழ்மொழி தனிப்பட்ட சிறப்புடையதாக விளங்குகின்றது. அதன் சிறப்பியல்புகளுள் ஒன்று ஒருவர் கண்ணையும் தப்ப முடியாததாக உள்ளது. தெலுங்கு மொழியை எடுத்துக் கொண்டால், அதன் ஆதியிலக்கியமாகிய நன்னைய பாரதம் என்ற நூல் கி.பி.11-ம் நூற்றாண்டில் தோன்றியதாகும். கன்னட மொழியை எடுத்துக் கொண்டால் அதன் ஆதியிலக்கியமாகிய ‘கவிராஜமார்க்கம்’ என்ற நூல் கி.பி. 9-ம் நூற்றாண்டில் தோன்றியதாகும். மலையாள மொழியை எடுத்துக் கொண்டால் அதன் ஆதியிலக்கியமாகிய ‘ராமசரிதம்’ என்ற நூல் கி. பி.14-ம் நூற்றாண்டில் தோன்றியதாகும். ஆனால் தமிழ் மொழியின் ஆதியிலக்கியங்களோ, இப்போது அறுதியிட்டிருக்கின்றபடி கிறித்துவப்பதத்தின் ஆரம்ப காலத்திலே தோன்றியதாகும். இலக்கியங்களின் திருந்திய வடிவங்களையும், செய்யுளழகுகளையும் முதிர்ந்த பக்குவத்தையும் நோக்கினால், கிறித்துவப்பதத்திற்கு மிகமிக முற்பட்ட காலத்தே தமிழிலக்கியங்கள் தோன்றி உள்ளதை அறியலாம்.

பொருண்மைச் சிறப்பு

இத்தொன்மை பற்றி, தமிழ் மக்களாகிய நாமனைவரும் பெருமை கொள்வது இயல்பே. திராவிட வகுப்பில் பிற மொழிகட்குரிய ஆதியிலக்கியங்களெல்லாம் வடமொழி நூல்களில் இருந்து வந்தவை. உதாரணமாக, தெலுங்கு நூல்களுள் காலத்தால் முந்திய நன்னைய பாரதம் என்ற நூல் வடமொழியிலுள்ள வியாச பாரதத்தைப் பின்பற்றியதாகும். தமிழிலக்கியங்களுள் காலத்தால் முந்தைய நூல்கள் இவைப்பற்றியது அல்ல. இயற்கையொடு ஒன்றி நின்று இயற்கை நலன்கள் அனைத்தையும் ஆழ்ந்து நுகரும் உணர்ச்சிகளையும், பொருள்களை நுணுகி ஆராய்ந்தறியும் அறிவாற்றலும் உடைய தமிழ்ப் புலவர்கள் தாமே புதுச்செய்யுள்களை இயற்றினர். புறநானூறு என்ற சங்க காலத்துத் தொகை நூலை எடுத்துக் கொண்டால் கண்ணுள்ள செய்யுட்கள் வடமொழி நூலொன்றினைப் பின்பற்றி இயற்றப்பட்டது எனக் கூற முடியாது. இதுபோலவே பிற தொகை நூல்களும் அமைந்துள்ளன. பொருண்மை பற்றிய சிறப்பியல்பு பெரும்பாலும் தமிழ் மொழிக்கெனத் தனியுரிமை பெற்றுப் பிறமொழி நூற்கருத்துக்களோடு ஒப்புமையுடையதாய் இருக்கிறது. தெலுங்கு முதலிய பிறமொழிக்குரிய ஆதியிலக்கியங்கள் வடமொழியிலக்கணங்களைப் பின்பற்றிய செய்யுட்களால் இயன்றுள்ளன. ஆனால் தமிழ் மொழியிலுள்ள ஆதியிலக்கியங்களாகிய எட்டுத்தொகை நூல்களோ தமிழிற்கே சிறந்துரியனவாய் வடமொழியிலக்கண இலக்கியங்களில் காணமுடியாத இலக்கணச் செய்யுளில் அமைந்துள்ளது. அகவற்பா, கலிப்பா, வெண்பா, முதலியன தமிழிற்கேத் தனித்துரிய செய்யுள் வகைகளாம். தமிழ் மக்களது கருத்து நிகழ்ச்சிக்கும், தொன்றுதொட்டு வந்து வழக்கு நிரம்பிய தொடரமைதிக்கும், தமிழ் மக்களது செவியுணர்விற்கொத்த இசையினிமைக்கும் பொருந்துமாறு அமைந்து உள்ளது. தமிழிற்கேத் தனியுரிமையென முத்திரையிடப் பெற்று உள்ளது.




தமிழின் தனிப்பண்பு

இலக்கியத் தொன்மையாலும், இலக்கியப் பொருண்மையாலும் இலக்கியத்துக்குரிய செய்யுள் மரபாலும் திராவிட மொழிகளுக்குள்ளே தமிழ்மொழி சிறப்புடையதாகும். தமிழ்மொழியின் இயற்கையில் அமைந்த தத்துவமொன்றே இச்சிறப்பியல்களாகப் பரிணமித்தது என்றே அமைந்துள்ளது. இத்தத்துவத்தை “Individuality” அல்லது “Genius” என்று ஆங்கில அறிஞர் கூறுவர். இப்பண்பு யாவர்க்கும் எளிதில் வேறுபட்டுக் காணக்கூடியதாய் அமைந்து இருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மொழியின் சரிதத்தை ஒரு வகையாக நாம் அறியலாம். தமிழ் மொழியின் பண்பு சரிதத்தில் ஓரிடத்தேனும் காணப்படாமற் போகவில்லை. மொழி வளர்ச்சியின் கதியையும், இலக்கிய வளர்ச்சியின் கதியையும் ஒருவாறு நெறிப்படுத்தப்படுகிறது. இயற்கைச் சக்திகளை வெல்லவேண்டுமாயின் இயற்கைச் சக்திகளைக் கொண்டே வெல்லுதல் வேண்டும். இயற்கைச் சக்திகளை ஒரு நெறிப்படுத்த வேண்டுமாயின், அவ்வியற்கைச் சக்திகளைக் கொண்டே அவ்வாறு செய்ய முடியும். இயற்கைச் சக்திகளுக்கு அடங்கினாலன்றி, இயற்கையை வெல்லுதல் கூடாது. பண்பு ஒரு கடுந்தளை போன்றதாயின், வளர்ச்சியென்பதும் அபிவிருத்தியென்பதும் இல்லாமல் போய்விடும். இவ்விரண்டும் இல்லையெனில், வெகு சீக்கிரத்தில் கேடு விளையும் என்பது எண்ணம். கேடு ஏதும் வராது வளர்ந்தோங்கி வந்த தன்மையினாலும் அவ்வப்போது புதியனவாக எழுந்த நூல்களாலும் மொழிவளர்ச்சியினாலும் மேற்குறித்த தனிப்பண்பு மொழி வளர்ச்சி முதலியவற்றிற்கு இடையூறு விளைவிக்காதபடி பயன்பட்டு வந்தது. சமுதாய வளர்ச்சியிலே இரண்டு வகையான சக்திகள் உள்ளன. ஒன்று வளர்ச்சியை மட்டும் குறியாக உடையதாய்ப் பிறிதொன்றனையுங் கணியாதபடி நம்மை ஈர்த்துச் செல்லும் சக்தி, இதனை “Liberalism” என்ற ஆங்கில பதத்தால் குறிப்பிட்டால் எளிதில் அறியலாம்.

தொல்காப்பியரது கல்வி பெருமை

தொல்காப்பியர் இயற்றிய பெருநூல் ‘தொல்காப்பியம்’ எனப் பெற்ற சிறந்த தமிழ் இலக்கண நூலாகும். இதன் சிறப்புப் பாயிரத்திலே ‘ஐந்திரம் நிறைந்த தொல் காப்பியன்’ என ஆசிரியர் குறிப்பிடுகிறார். ‘ஐந்திரம்’ என்ற வடமொழி வியாகரணங்களுள் ஒன்றென்பதும், பாணினீய வியாகரணத்திற்குக் காலத்தால் முற்பட்டது. சர்வவர்மன் என்பவர் இயற்றிய காதந்த்ரமும், வேதங்களுக்குரிய ப்ராதிசாக்கியங்களும் இவ்வைந்திர வியாகர முறையைப் பின்பற்றியது என டாக்டர் பர்ணல் கூறுவர். தொல்காப்பியர் வடமொழியை நன்கு பயின்றவரென்பதும், அதனுள் உள்ள ஒன்பது வியாகரங்களுள் ஒன்றாகிய ஐந்திரத்திலே நிறைந்த புலமையுடையதாகத் திகழ்கிறது. வட மொழியறிவையும், ஐந்திரப் புலமையையும் மாத்திரந் துணையாகக் கொண்டு தமது பேரிலக்கணத்தைத் தொல்காப்பியர் இயற்றினார். முதலாவது அவர் காலத்துத் தமிழ் கூறு நல்லுலகத்துள்ள உலக வழக்கையும் செய்யுள் வழக்கையும் நன்கு ஆராய்ந்து ‘நல்லுலகு’ என்ற செந்தமிழ் நிலத்தையும் அதனொடு சேர்ந்த பன்னிரு நிலங்களையும் எனக் கொள்ளுதல் வேண்டும். எனவே தமிழ்நாடுகளுடைய இருவகை வழக்குகளையும் ஆராய்ந்தார். இரண்டாவதாக செந்தமிழ் நிலத்து வழக்குகளையும் அவற்றை ஆராய்ந்தெழுதிய நூல்களையும் தமது நூலுக்குச் சிறப்புரிமை உடையதாகக் கருதி அவற்றை தொல்காப்பியர் பன்முறை நன்கு கற்று அதன் உண்மை நிலையைக் கண்டார். மூன்றாவதாக தம் நூலுக்குரிய பொருட்களை நெடுங்காலமாகச் சிந்தித்து முற்ற ஆராய்ந்து தெளிந்தார். ஆராய்ச்சிகளைத் துணை கொண்டு தொல்காப்பியர் தமது பேரிலக்கணத்தை இயற்றினார். இவரோடு உடன் கற்ற பனம்பாரனார், “வடவேங்கடந் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து
வழக்குஞ் செய்யுளுமாயிரு முதலின்
எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடிச்
செந்தமி ழியற்கை சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலந்தொகுத் தோனே”

எனத் தாம் இயற்றிய சிறப்புப் பாயிரத்தில் கூறியுள்ளார்.



மொழி வளர்ச்சியில் வாணிகம்

‘மொழி வளர்ச்சி’ தான் எத்தகையதென நோக்குதல் வேண்டும் எனவும் மிக பூர்வகாலந்தொட்டு, நம் தமிழ்நாடு வாணிகத்தில் மிகச் சிறந்த ஒன்றாகத் திகழ்ந்தது. கிரேக்கர்களும் ரோம் நகரத்தினரும், அராபியரும், சீனதேசத்தவரும் வாணிகத்தின் பொருட்டுத் தமிழ்நாடு வந்து, தங்கள் பண்டங்களைக் கொண்டு தங்கள் தேசத்திற்குச் சென்று வருவார்கள்.

“குடதிசை மருங்கின் வெள்ளயிர் தன்னொடு
குணதிசை மருங்கிள் காரகில் துறந்து”
என வரும் சிலப்பதிகார அடிகள் இவ்வாணிகத்தின் தன்மைகளை விளக்குகிறது. அயல்நாட்டினருள் ஒரு சிலர் தமிழ்நாட்டில் பலவிடங்களிலும் நிலையாய் குடியேறினர். இவர்கள் வாழ்வதற்கு என தனியே அமைக்கப்பட்ட ஊர்ப்பகுதிகளும், காவிரிப் பூம்பட்டிணம் முதலிய நகரங்கள் இருந்தனவென்பது

“கயவாய் மருங்கிற் காண்போர்த் தடுக்கும்
பயனற வறியா யவன ரிருக்கையும்”

எனச் சிலப்பதிகாரம் கூறுகிறது. அயல்நாட்டு வணிகர்கள் கூட்டுறவினால் தமிழ் மொழி நல்ல பயன் அடைந்திருக்க வேண்டும். தமிழ்ச் சொற்கள் அனைத்திற்கும் சொல்லாக்கங்காட்டும், நூலொன்று தக்க ஆராய்ச்சிப் பயனாக வெளிப்படுமாயின், அப்பொழுது பிறமொழி மக்களால் தமிழ் அடைந்துள்ள வளத்தினை அறியக்கூடும். எழினி என்ற சொல்லைத் தமிழறிஞர்கள் அறிவர். இச்சொல் “திரைச்சீலை” என்று பொருள்படும். இது ‘யவனிகா’ என்ற சொல்லின் திரிபாகும். எனவே இச்சொல் யவனர்களோடு தொடர்புடையதாகும். இதன் மூலம் தமிழ் இலக்கணத்தில் தொல்காப்பிய மொழி வளர்ச்சியையும் அறிய முடிகின்றது.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://muthukamalam.com/essay/seminar/s3/p60.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License