இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்

      

72.ஆற்றுப்படை நூல்களில் அறச்சிந்தனை


தி. ச. பிரபு
ஆய்வியல் நிறைஞர்,
கந்தசாமிக் கண்டர் கல்லூரி, வேலூர், நாமக்கல் மாவட்டம்.

முன்னுரை

நமது சங்க இலக்கியங்களில் ஒன்றான பத்துப்பாட்டு நூலானது அக்கால அரசுமுறை, போர்க்களம், வீரர் குணம், போர்மறம், காதல் அறம், ஈகைச் சிறப்பு, இல்லற மாண்பு என வாழ்க்கையின் பல கூறுகளைப் படம் பிடித்துக் காட்டும் காலக் கண்ணாடியாகும். அப்பத்துப் பாட்டு நூல்களில் அறத்தினை மேம்படுத்திக் கூறுவது ஆற்றுப்படை நூல்கள் மட்டுமே. “தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்” என்ற நோக்கில் பரிசில் பெற்ற பாணன் பரிசில்பெற வருவோனுக்கு வழிகாட்டி ஆற்றுப்படுத்துவது ஆற்றுப்படையாகும். இந்நூலானது தமிழக மக்களை வாழ்க்கைப் பாதையில் தவறின்றி நடக்க உதவும் அறவழி நூலாக அமைகிறது. அவ்வாற்றுப்படை நூல்களின் மூலம் வெளிப்படும் அறங்களைப் பற்றிக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பாணர் மரபில் அறம்

இனக்குழுச் சமூகத்தில் பின்பற்றப்பட்ட பாதீடு என்ற பகுத்துண்னும் முறையின் எச்சமே ஆற்றுப்படை நூல்களில் பாணர் மரபினர் பின்பற்றப்படும் அறமாகும். ஏனெனில், ஆற்றுப்படை நூல்களில் பாணன் ஒருவன் தன்னலம் கருதாமல் தான் பெற்ற இன்பத்தை மற்றவரும் பெறவேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். தன்னைப் போல் வறுமையில் வாடும் மற்றொரு பாணனும் வளம்பெற நினைக்கும் அவனது குணமும், செயலும் இனக்குழச் சமூகத்தில் பின்பற்றப்பட்ட பாதீடு முறையின் எச்சச்செயலாகும். இவ்வாறானது உடைமைச் சமூகத்திலும் பின்பற்றப்படுவது சிறப்புக்குரியது.

ஆற்றுப்படை நூல்களில் அறச்சிந்தனை

சங்ககாலத் தமிழகத்தில் மக்கள் பிரிவினை தொழில் அடிப்படையில் அமைந்திருந்தது. கலை வாழ்வுக்கென சமூகத்தில் ஒரு சாராரை ஒதுக்கி வைத்திருந்தனர். அத்தகையவர்களாகிய பாணர், கூத்தர், விறலியர் ஆகியோர் ஆடல், பாடல்களில் சிறந்து இசை, நடன, நாடகக் கலைகளை வளர்க்க முற்பட்டனர். இக்கலைஞர்கள் பெரும்பாலும் வறுமையில் வாடினாலும் இக்கலைஞர்களுக்கு உதவும் வகையில் சில மன்னர்களும் வள்ளல்களும் பரிசுப் பொருளைத் தந்து பாணர்களையும், அவர்களின் கலைகளையும் வளர்த்தனர். இம்மன்னர்கள் பெரும் செல்வாக்கைப் பெற்றிருந்தாலும் தன்னை நாடி வந்த பாணர்களைத் தன் சுற்றத்தாரைப் போல அரவணைத்து உபசரிக்கும் அறப்பண்பாளனாக விளங்கியுள்ளார்கள் என்பதைப் பாணன் கூற்று வாயிலாகவேப் புலனாகிறது. இதனைப் பின்வருமாறு ஆராயத்தக்கன.

வந்தோரை வரவேற்றல்

இல்லறத்தில் சிறப்பான அறம் தம் இல்லத்திற்கு வந்தோரை இன்முகமாக வரவேற்கும் முறையாகும். இவ்வறமானது பொருநர் ஆற்றுப்படையில பாணன் ஒருவன் “காலையில் அரசவைக்கு நான் செல்லுகையில் அரசன் எம்மைச் சேய்மைக் கண்னே கண்டபோது ‘வருக வருக’ என ஆர்வத்தோடு இன்முகமாகக் கூவுதலால் யாங்களும் போய் அவ்விடத்தில், யாங்கள் செய்யவேண்டியவற்றை முறைப்படி செய்து முடித்தோம் என்று கூறுவதிலிருந்து கரிகால் சோழன் வந்தோரை உபசரிக்கும் நல்ல அறப்பண்பாளன் என்பது புலனாகிறது.



கொடுஞ்சொல் கூறாமை

அறம் என்பது சமூக உறவுகளில் ஈடுபடுகின்ற குழு மற்றும் தனி நபர்களுக்காக உருவானதாகும். இத்தகைய உறவுகளுக்கு அடிப்படையானவை தொடர்பு சாதனங்களாகும். மொழி அன்று தோன்றுவதற்கு இத்தகைய தொடர்பு சாதனத்தின் அவசியமேயாகும். எனவே, மொழியின் பேச்சுச்செயல் மிகுந்த அறமுக்கியத்துவம் வாய்ந்தது என்கிறார் திரு. ராஜ்கௌத்தமன். திருவள்ளுவரும் ‘கடும்சொல்’ கூறாமைப் பற்றி பின்வரும் குறள் மூலம் கூறியுள்ளார்.

“அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்”

ஆற்றுப்படை நூல்களிலும் பாணரை அரசன் உபசரிக்கும் போது அரசன் கடுஞ்சொல் கூறாமல் இனிய மொழிகள் பேசப்பட்டதை “இனிய முகமன் மொழிகள் பல பேசித்தன் கண்ணீர் கானத்தகும் அணித்தாகிய இடத்தே என்னை இருக்கச் செய்தான்” என்ற பாணன் கூற்று மூலம் புலனாகிறது.

அருளோடு நோக்குதல்

தன்னிடம் பொருள் கேட்டு வந்துவிட்டாரே என்று அரசனிடம் சினம் கொள்ளாமல் வந்தாரை இனிய மொழிகள் பேசியும், தனது அருட்பார்வையால் நோக்கியும் புரிந்தான் என்ற செய்தியை,

“பருகு அன்ன அருகா நோக்கமோடு
உருகு பவைபோல் என்பு குளிர்கொளீஇ”

என்று பொருநர் ஆற்றுப்படை வரிகள் மன்னனின் சிறந்த அறச்செயலை உணர்த்துகிறது.

விருந்தோம்பல்

இல்லறத்தில் முதன்மையான அறம் விருந்தோம்பல். இது தமிழருக்குரிய அறமாகவும் கருதப்படுகிறது. திருவள்ளுவரும் “விருந்தோம்பல்” என்ற அதிகாரத்தில் நாள்தோறும் தனது இல்லத்துக்கு வந்த விருந்தினரைப் போற்றுகின்றவனுடைய வாழ்க்கையானது துன்பத்தால் கேடுறுவதில்லை என்கிறார்.

“வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று”

இந்த விருந்தோம்பல் அறமானது ஆற்றுபடை நூல்களில் ஓங்கி காணப்படுகிறது. இதனைப் பின்வரும் பாணன் கூற்று மூலம் உணரத்தக்கன.

உண்ணுதற்குரிய காலம் அறிந்து எம்மை அழைத்துச் செம்மறியாட்டின் இறைச்சியையும், இரும்பு நாராசத்தைக் கோத்துச் சுடப்பட்ட கொழுத்த இறைச்சியாகிய பரிய தசைத்துண்டத்தையும் தின்னுங்கள்! தின்னுங்கள்! எனப் பன்முறையும் எம்மை வற்புறுத்திக் கொடுத்தலான்.



பரிசுகொடுத்தல்

தன்னை நாடிவந்த இரவலர்களுக்குப் பரிசு கொடுத்தல் அரசனின் சிறந்த கடமையாகும். இக்கடமையை மீறுபவன் அரசன் ஆகமாட்டான். அது அறமும் ஆகாது. ஆற்றுப்படை நூல்களில் கூறப்படும் அரசன் பாணர்களுக்குப் பரிசில் நல்கும் பண்பாளனாக உள்ளான். இதனை, “யாங்கன் எங்கள் பழைய ஊருக்கு மீண்டும் செல்ல எண்ணுகின்றோம் என்று மெல்லக் கூறினோம். அதுகேட்டு நீயிர் விரைவில் எம் கூட்டத்தை விட்டுப் போகின்றீரோ? எனக்கூறி எம்மை வெகுண்டான் போன்று வருந்தும்படி பார்த்து உடுக்கைக் கண் போன்ற அடியையுடைய கன்றுகளோடு பிடியானைகளையும் களிற்று யானைகளையும் நீவிர் விரும்பிய ஆடைகளையும் கொள்வீராக” என்று கரிகால் சோழன் கூறியதாகப் பாணன் கூறுவதிலிருந்து அறிய முடிகிறது.

பாலின அறம்

நமது சமுதாயத்தில் பொதுவாகப் பெண்கள் எதும் அறியாதவளாய் வீட்டிற்குள்ளே முடங்கிக் கிடக்கும் பெண்ணாகக் கருதப்படுகிறாள். ஆனால் ஆற்றுப்படையிலே சித்தரிக்கப்படும் பெண்கள் ஆண்களுக்கு நிகராக அனைத்துக் கலைகளையும் அறிந்தவளாக உள்ளாள். ஆண்களுக்கு நிகராகவும் கருதப்படுகிறாள். இதனை,

“பெடைமயில் உருவின் பெருந்தகு பாடினி
பாடின பாணிக்கு ஏற்ப நாடொறும்”

என்ற பொருநர் ஆற்றுப்படை வரிகள், பாணர் போலவே பாடினியும் கலைகள் பெற்றவளாகத் தெரிகிறது. எனவே ஆற்றுப்படை நூலில் ஆணும் பெண்ணும் சமம் என்ற பாலின அறமே மேலோங்கியுள்ளது எனலாம்.



முடிவுரை

ஆற்றுப்படை நூலை நாம் பொதுவானக் கண்ணோட்டத்தோடு பார்க்கமால் அறநிலையில் பார்க்கும் பொழுது கடும்சொல் கூறாமை, அருளோடு நோக்கல், விருந்தோம்பல், பரிசுகொடுத்தல் மற்றும் பாலின அறம் என பலவும் தெரிய வருகிறது. மேலும் பாணர் மரபினர் பின்பற்றும் ஆற்றுப்படுத்துதல் அறமானது இனங்குழுச் சமூகத்தில் பாதீடு முறையின் எச்சச்செயல் என்பதும் புலனாகிறது. பொருளாதார நிலையில் உயர்ந்தவராயினும், தாழ்ந்தவராயினும் அறச்செயலை மேற்கொண்டு சமூகத்தில் அறப்பண்பாட்டை நிலைநாட்டியுள்ளனர் என்பதும் இதன்மூலம் தெரிய வருகிறது.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/seminar/s3/p72.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License