இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்

      

73.கட்டடக்கலையின் மரபும் வளர்ச்சியும்


வி. பிரியதர்ஷினி
முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
அரசுக் கலைக் கல்லூரி (தன்னாட்சி), சேலம்.

முன்னுரை

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவையாகக் கருதப்படுபவை உணவு, உடை, உறையுள். மனிதன் பாதுகாப்புடன் வாழத் தனக்கொரு இருப்பிடம் அமைக்க எண்ணிய எண்ணம் கட்டடக்கலையின் தோற்றத்திற்கு வித்திட்டது. கட்டடக்கலை சமுதாயத்தின் பிற கலைகளும், தொழில்களும் நடைபெற இடமளிப்பது. பழந்தமிழர் பல்வேறு விதமான கட்டடங்களை அமைத்து வாழ்ந்தனர் என்பதனையும், அவை சிறந்த கலைத்திறனோடு தேவைக்கு ஏற்ற வகையில் வசதிகள் நிரம்பப் பெற்றவையாய் அமைந்திருந்தன என்பதனையும் சங்க இலக்கிய நூல்கள் நமக்குத் தெரிவிக்கின்றன. இவ்வகையில் “கட்டடக்கலையின் மரபும் வளர்ச்சியும்” என்னும் தலைப்பில் இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது.

கட்டிடக்கலை

கட்டு + இடம் = கட்டடம், கட்டிடம் என்னும் சொல்லுக்குரிய அதே பொருளில் மயக்கு வழக்காக கட்டடம் என்ற சொல் தமிழ்ப் பேரகராதியில் எவ்வாறோ இடம் பெற்றமையால் ‘கட்டட’ ஆட்சி இன்று தமிழில் அதிகமாகக் காணப்படுகிறது. எனினும் ‘கட்டிடம்’ என்பதே சரியான சொல்.

கட்டிடங்களின் வடிவமைப்பு மற்றும் கட்டிடப்பணி இவற்றுக்கானக் கலை மற்றும் தொழில்நுட்பமே கட்டிடக்கலை என்பது தெளிவு. மேலும், கட்டிடக்கலை நடைமுறை என்பது பரந்த இடத்தின் ஒட்டுறவுகள், கட்டிட அமைப்பு, ஒரு குறிப்பிட்ட சூழலுக்குள் நிலவ வேண்டிய இணக்கமான நடவடிக்கைகள், கட்டிடப் பொருள்களின் ஒருங்கமைவு மற்றும் தோற்றம், பொலிவு ஆகியவற்றைக் கட்டுமான ஒருங்கமைவுகளின் தன்னியல்பான திட்டத்திலிருந்து மாறுபடுத்தி வலியுறுத்துகிறது என்கிறது பிரிட்டானிக்கா தகவல் களஞ்சியம்.

சங்க காலத்தில் கட்டிடக்கலையில் சிறந்த வல்லுநர்கள் இருந்துள்ளனர் என்பதை,

“நாலறி புலவர் நுண்ணிதின் கயிறிட்டு
தேயங் கொண்டு தெய்வ நோக்கிப்
பெரும்பெயர் மன்னர் கொப்ப மனைவகுத்து” (நெடுநல் வரி - 76-78)

என்று நெடுநல்வாடைப் பாடல் வரிகளின் மூலம் அறிய முடிகின்றது.

கட்டிடக்கலையில் மரபு

கட்டடக்கலை மரபானது வீடுகளையும் (Dwellings) குடியிருப்புகளையும் (Settlements) இணைத்தே காணப்படுகின்றது.

கட்டிடக்கலை மரபு எனக் குறிப்பிடும் பொழுது ‘மரபு’ என்னும் சொல் பழமை, கடந்த காலம் என்னும் பொருளையும், நாட்டுப்புறம் அல்லது ஊரகம் (Rural) என்னும் விளக்கத்தையும் உணர்த்தும் அடிப்படைச் சொல்லாகவும் அமைகிறது.

மரபுக்கட்டங்களின் பற்றிய சிறப்பான செய்தியினை “தமிழக நாட்டுப்புறக் கட்டிடக்கலை மரபு” எனும் நூலின் வாயிலாக இராசு பவுன்துரை குறிப்பிடுகிறார்.



கட்டிட வளர்ச்சி

நாகரீக வளர்ச்சியின் படிநிலையில் கட்டிட வளர்ச்சி மிகுந்த சிறப்பிடம் பெற்றுள்ளது. அவ்வகையான வளர்ச்சியில் நீர்த்தேக்க வளைவு, வீடுகள், செங்கல், கட்டிடம், தானியக்கூடம், மண்டபம் எனப் பலவாறு வளர்ச்சி அடைந்துள்ளது.

நீர்த் தேக்கங்களை வளைவாக அமைப்பது வழக்கம். அவ்வாறு வளைவாக அமைத்தால் நீரின் விசைவேகம் கட்டுப்படும் என்கிற தொழில் நுட்பத்தைப் பழந்தமிழர் அறிந்திருந்தனர் என்பதை,

“எண்ணாட் திங்கள் அணைய கொடுங்கரை
தெண்ணீட் சிறுகுளம்” (புறநானூறு 118 : 2-3)

என்ற புறநானூற்று தொடரின் மூலம் அறிய முடிகிறது.

செங்கற் கட்டடங்கள்

சுடுமண் ஆகிய செங்கற்களை மண் அல்லது சுண்ணக்கலவைக் கொண்டு அடுக்கி எழுந்த சுவர்களை இட்டிகை என்று பண்டையக் காலத்தில் கூறினர். இதனை,

“இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென
மணிப்புறாத் துறந்த மரஞ்சேர் மாடக்
கெழதணி கடவுள் போகலின்” (அகநானூறு 167 : 1-3)

என்ற அகநானூற்றுப் பாடலடிகளில் மூலம் கோயில் சுவர்கள் உயர்ந்து இருந்தமையும், மரவிட்டங்கள் இருந்தமையும் அறிய முடிகிறது.

வீடுகளின் மேல் தளத்தில் நிலா முற்றங்களும், திறந்த வெளி மாடங்களும் இருந்தன. இந்தத் திறந்த வெளி மாடங்களில் நிலவின் பயனை அனுபவித்து மகிழ்ந்து வாழ்ந்தனர் சங்கத் தமிழர்கள்

“நிரைநிலை மாடத்து அரமியம் தோறும்” (மதுரைக்காஞ்சி - 451 வரி)

“நிலவுப் பயன் கொள்ளும் நெடுவெண் முற்றம்” (நெடுநல்வாடை - 95 வரி)

என நிலா முற்றங்களைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

வானிலிருந்து விழுகின்ற வெப்பம் வெளியே போவதற்கும், காற்று இல்லங்களுக்குள் நுழையவும் ஏற்ற வகையிலான வசதிகளையும் தொழில்நுட்ப முறையில் வீடுகளில் நிலா முற்றங்கள் பண்டையத் தமிழர்களால் கட்டப்பட்டுள்ளன.

எழுநிலை மாடங்களைக் கொண்ட பெரும் மாளிகைகள் தமிழகத்தில் முற்காலத்தில் இருந்துள்ளன. இதனை,

“இடஞ் சிறந்துயரிய எழுநிலை மாடம்” (முல்லைப்பாட்டு - 86 வரி)

என்ற முல்லைப் பாட்டுபாடல் வரியின் மூலம் அறியலாம்.



தானியக் கூடுகள்

வீடுகளில் தானியங்களைச் சேமித்து வைக்க உதவும் தானியக் கூடுகள் மிக உயரமாக ஏணி வைத்து ஏற வேண்டிய நிலையில் அமைக்கப்பட்டிருந்தன. இதனை,

“ஏணி எய்தா நீள்நெடு மார்பின்
முகடு துமித்து அடுக்கிய பழம்பல் உணவின்
குமரி மூத்த கூடு ஒங்கு நல்இல்”(பெரும்பாணாற்றுபடை 245-247)

என்ற பாடல் வரிகளின் மூலம் அறிய முடிகிறது. மேலும், தானியங்களைத் தலைப்பகுதியிலிருந்துக் கொட்டுவதற்குரிய திறந்த தலையுடன் தானியக் கூடுகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தன.

மண்டபம்

கோயில் கோபுரத்திற்கு அடுத்தப்படியாக மண்டபங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. பொதுவாக மண்டபங்களை தாங்கி நிறுத்தவே தூண்கள் கட்டப்பட்டன. இந்தத் தூண்களின் எண்ணிக்கை மண்டபங்களுக்கு ஏற்ப நான்முகன் இருக்கை, வெற்றிமண்டபம், மங்கல மண்டபம், சித்தமண்டபம், தாமரை இதழ், நிருத்தமண்டபம், கொலுமண்டபம், அலங்கார மண்டபம், மறைமண்டபம் என மண்டபங்களின் பெயர்கள் மாறுபடுகின்றன.

தூண்

தூண் என்பது ஒன்றைத் தாங்கி நிற்பது என்ற பொருளில் வழங்கப்படுகின்றது. இதனை சால்பூன்றிய தூண் எனத் திருக்குறள் வரையறுக்கின்றது. மேலும், தூண் என்ற சொல்லுக்கு இணையாகக் கால் என்ற சொல்லும் சங்க இலக்கியங்களில் பயின்று வந்துள்ளன. இதனை,

“பகுதியுகுவிற் பல்படைப் புரிசை
எருவை நுகர்ச்சியூவ நெடுந்தூண்” (புறம் - 224)

என வரும் புறநானூற்று அடிகளிலும்

“அருங்குடி நெடுந்தூண் போலி” (அகம் - 220)

என வரும் அகநானூற்று அடிகளிலும்

“வெடிபடா வொடி தூண்” (பரி - 4:20)

என வரும் பரிபாடல் வரியிலும் தூண் என்ற சொல் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.



நகரங்களின் அமைப்பு

தற்காலம் கணினிக்காலமாக மாறிய நிலையில் எல்லா அறிவியல் வளர்ச்சிகளையும் எட்டிவிட்ட நிலையில் நம்முடைய நகர அமைப்பு இன்னும் சீர் செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. ஆனால், பண்டைய காலத்தில் நகரங்கள் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தன எனவும் காவற்காடும், வயல்களும் சூழ்ந்த காஞ்சி மாநகரம் தாமரை பூப்போல காட்சி அளித்ததெனப் பெரும்பாணாற்றுப்படைக் கூறுகிறது.

“நீல்நிற உருவின் நெடியோன் கொப்பூழ்
நான்முக ஒருவற் பயந்த பல்இதழ்
தாமரை பொருட்டின் காண்வரத் தோண்றி” (பெரும் : 402-405)

பல இதழ்களை உடைய தாமரை மலரின் நடுவே உள்ள பொருட்டினைப் போல செங்கற்களால் கட்டப்பட்டு விளங்கும் உயர்ந்த மதில்களை உடையவைக் காஞ்சி மாநகரம் என்று காஞ்சி மாநகரின் நகரமைப்பைப் பெரும்பாணாற்றுப்படை பாடல் வரிகள் மூலம் அறியலாம்.

முடிவுரை

சங்ககாலம் தொட்டுக் கட்டிட வளர்ச்சி, கோயில் கட்டடங்கள், மண்டபம், தூண் போன்றவை மக்களின் வாழ்வியலோடு ஒன்றாகக் கலந்து அவற்றின் பண்பாட்டு மரபுகள் வளர்ச்சியடைந்திருப்பதையும் அறிந்து கொள்வதற்கு பெரும் துணையாக நின்றது. இதன்வழி பழந்தமிழர் அறிவியல் திறனையும், தொழில்நுட்பத் திறனையும் அறிந்து கொள்ள முடிகிறது.

பார்வை நூல்கள்

1. தெய்வநாயகம் . கோ, தமிழர் கட்டிடக்கலை, நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் (பி) லிட்., சென்னை - 600 098.

2. இராசு பவுன் துரை, தமிழக நாட்டுப்புறக் கட்டடக்கலை மரபு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

3. தட்சிணாமூர்த்தி. அ, தமிழர் நாகரீகமும் பண்பாடும், யாழ் வெளியீடு, சென்னை - 600 040.

4. பாலசுப்பிரமணியன் கு.வெ., புறநானூறு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை - 600 098.

5. பாலசுப்பிரமணியன் கு.வெ., அகநானூறு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை - 600 098.

6. பாலசுப்பிரமணியன் கு.வெ., பரிபாடல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை - 600 098.

7. பாலசுப்பிரமணியன் கு.வெ., சங்க இலக்கியம் பத்துப்பாட்டு முழுமையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை - 600 098.

8. பிரிட்டானிக்கா தகவல் களஞ்சியம் தொகுதி 1.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/seminar/s3/p73.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License