இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரைத் தொடர்
கட்டுரைத் தொடர்

பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்

முனைவர் சி. சேதுராமன்


27. கெடு மற்றும் கேடு

கேடு என்பதற்குத் துன்பம், துயரம் என்ற பல்வேறு பொருள்கள் உண்டு. கெடு – என்பதே கேடு என்று நீண்டு துன்பம் (முதல் எழுத்து நீண்டு) எனும் பொருளில் மக்களால் வழங்கப்பட்டு வருகின்றது. கெடு – என்பது பிறரைக் கெடு – அழி என்ற பொருளில் ஆளப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஒருவர் மற்றொருவரைப் பார்த்து, ‘‘டேய் தம்பி. அவன் நல்லவன். அவனோட சேர்ந்து அவனையும் நீ கெடுத்து விடாதே’’ என்று கூறுவது நடைமுறையில் உள்ளது. தீயது தீயதுடன் சேரும் போது ஒன்றும் ஏற்படாது. ஆனால் தீயது நல்லவற்றுடன் சேரும் போது தீயது வலிமையுடையதாக இருப்பின் நல்லதும் கெட்டுவிடும். ஒரு குடத்தில் பால் இருக்கிறது. அதில் நாகப்பாம்பின் விஷத்தை ஓரிரு துளிகள் கலந்து விட்டால் குடத்தில் உள்ள முழுமையான பாலும் கெட்டுவிடும். அவ்வாறு கெடுவதால் கேடுவரும். நல்லவன் தீயவனாகிக் கெடுகின்ற போது அவனுக்குத் துன்பம் நேரும். கெடுதல் நினைத்தால் அதனால் வரும் கேடு பிறருக்கு மட்டுமல்லாது அவனையே வந்து சாரும். கெடுவதும் கேடும் அவரவர் செயல்களிலேயே உள்ளது.

இத்தகைய தீமை பயக்கும் கெடுதல் கேடு ஆகியவை பற்றிய கருத்துக்களை பழமொழிகளில் வைத்து நமது முன்னோர்கள் பண்பாட்டு நெறிகளை விளக்கியுள்ளனர்.



கேடுநினைப்பவன் கெடுதல்

எந்தச் சூழலிலும் பிறரைக் கெடுக்கக் கூடிய செயல்களில் ஒருவர் ஈடுபடக் கூடாது. அதோடு மட்டுமன்றி பிறருக்குக் கெடுதல் செய்யுமாறு மற்றவரைத் தூண்டுவதும் தவறான செயலாகும். பிறருக்குக்கேடு மனத்தாலும் நினைக்கக் கூடாது. அது தனக்குக் கெடுதலை வரவழைக்கும் செயலாகும்.

சிலர் தங்களுக்குப் பிடிக்காதவர்களைப் பழிவாங்குவதற்காகக் கெடுதல் செய்வர். தங்களால் அவர்களுக்குக் கேடு செய்ய முடியாவிட்டாலும், பிறரின் மூலமாகவும் செய்வர். பிறரைத் தூண்டிவிட்டுக் கேடு செய்பவர் கீழான நிலையை அடைவர். அங்ஙனம் கெடுதல் நினைப்பவர் கேடடைவர். அதனால் பிறருக்குக் கேடோ கெடுதலோ செய்யவும் செய்விக்கவும் நினைக்கக் கூடாது என்பதை,

‘‘கெடுவான் கேடுநினைப்பான்’’

என்ற பழமொழி எடுத்துரைக்கிறது.

தான் கெடவேண்டும் என்று நினைப்பவனே பிறருக்குக் கேடு நினைப்பான். அதனால் எக்காரணத்தைக் கொண்டும் பிறருக்குக் கெடுதலை நினைக்கக் கூடாது என்று இப்பழமொழி நமக்குத் தெளிவுறுத்துகிறது.



நினைக்கும் கேடு தூக்கும் கல்

நாம் நலமாக எந்தவிதக் கேடும் இன்றி வாழ வேண்டுமென்றால் பிறருக்குக் கெடுதல் நினைத்தல் கூடாது. மகாபாரதத்தில் வரும் துரியோதனன் பல கேடுகளைப் பாண்டவர்களுக்குச் செய்தான். முடிவில் யாராலும் நினைத்துப் பார்க்க இயலாத கேட்டை அடைந்தான். அவன் மட்டுமன்றி அவனுடன் இருந்த, சேர்ந்த உற்றார், உறவினர் ஆகிய அனைவரும் ஒருங்குடன் அழிந்தனர்.

பாண்டவர்கள் துரியோதனனிடம் நல்லவிதமாக நடந்து கொண்டாலும் அவன் பாண்டவர்களிடம் நல்லவிதமாக நடந்து கொள்ளவில்லை. கெடுதலே அவர்களுக்கு நினைத்துச் செய்து வந்தான். அதனால்தான் அவன் பல துன்பங்களை அடைந்தான்.

நீவிர் செய்யும் கேடுகளைப் பொறுத்துக் கொள்வதால் அக்கேடு செய்தவரையே சென்றடையும். அதனால் எந்தக் காரணங்கொண்டும் பிறருக்குக் கேடு செய்தலோ செய்யத் தூண்டுதலோ கூடாது. கேடு நினைப்பவர் கேடடைவைர். இதனை,

‘‘மறந்தும் பிறன்கேடு சூழற்க. சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு’’

என்று வள்ளுவப் பெருந்தகை அறிவுறுத்துகிறார். வள்ளுவரின் இத்தகைய கருத்தினை,

‘‘நினைக்கிற கேடு தனக்குத்
தூக்குற கல்லு தலைக்கு’’

என்ற பழமொழி வலியுறுத்துவதாக அமைகிறது.

ஒருவன் பிறரைக் கெடுப்பதற்காகக் கேடு நினைத்தால் அக்கேடு அவன் தலையிலேயே வந்து முடியும். இரண்டு கைகளாலும் கல்லைத் தூக்குபவன் தலைக்கு மேல் தூக்கி கைநழுவ விட்டுவிட்டால் அக்கல் அவன் தலையிலேயே விழுந்து அவனைத் தாக்கி அழிக்கும். அது போன்றே கேடும் ஆகும். அதனால் பிறருக்குக் கேடு நினைத்தல் கூடாது என்ற பண்பாட்டு நெறியை இப்பழமொழி தெளிவுறுத்துகிறது.



தன்வினையும் – ஓட்டைப் பானையும்

பிறருக்கு எந்தவிதமான கெடுதலைச் செய்கின்றோமோ அதுவே நமக்கும் கிடைக்கும் ஒருவன் செய்த கெடுதல் அவனையே வந்துதாக்கும். இதை உணர்ந்து மனிதர்கள் வாழ்ந்தால் உலகில் அமைதியும் இன்பமும் நிலைத்திருக்கும். இதனை,

‘‘தன்வினைத் தன்னைச் சுடும்
ஓட்டைப் பானை வீட்டைக் கெடுக்கும்’’

என்ற பழமொழி எடுத்துரைக்கிறது.

பிறருக்கு ஒருவன் செய்த கெடுதல் (தன்வினை) அவனையே திரும்ப வந்து சேரும். உடைந்து போன ஓட்டைப் பானை வீட்டின் அழகைக் கெடுக்கும் அது மட்டுமல்லாது அதில் நீர் ஊற்றினால் ஒழுகி வீட்டைக் கெடுக்கும். அதனால் அந்த உடைந்த பானையை வீட்டில் வைக்காது அதனைத் தூர எறிந்துவிடுவர். உடைந்து போன பானை போன்றதே கேடும். உடைந்துபோன பானை எங்ஙனம் எதற்கும் உதவாதோ அதுபோன்றே கேடும் உதவாது. இதனை உணர்ந்து அனைவரும் கேட்டினையும் கெடுதலையும் நினைக்காது வாழ்தல் வேண்டம் என்ற நல்ல வாழ்க்கைக் கருத்தினை இப்பழமொழி நமக்கு நல்குகின்றது.

கெடுதலையும், கேட்டையும் மனதால் நினைத்தல் கூடாது. செய்தலும் கூடாது. நாம் மகிழ்வாக வாழ வேண்டுமெனில் இத்தகைய தீய பழக்கங்களை விடுத்து உயர்ந்த நற்சிந்தனையுடன் வாழ்தல் வேண்டும். கேட்டையும் கெடுதலையும் பிறருக்கு நினைக்காது மகிழ்வுடன் வாழ்வோம். வாழ்வில் தென்றல் வீசும்.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/serial/p5aa.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License