இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரைத் தொடர்
கட்டுரைத் தொடர்

பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்

முனைவர் சி. சேதுராமன்


38. வீடு

மனிதன் மகிழ்வாக வாழ உணவு, உடை, உறையுள் இவை மூன்றும் தேவை. இவற்றை வாழ்வின் அடிப்படைத் தேவைகள் என்பர். இத்தேவைகள் மனிதனுக்கு நிறைவேறினால் மகிழ்ச்சி ஏற்படும். இதில் ஏதாவதொன்றில் குறைவு நேரிடின் மன அமைதியின்மை ஏற்படும். உறையுளை இருப்பிடம் என்றும் வீடு என்றும் குறிப்பிடுவர். வீடு என்பதற்கு குறிப்பாகப் பல்வேறு நிலைகளில் வேறு பொருள் வழங்கப்பட்டு வருகின்றன.

வீடு என்பதற்குச் சிலர் “வீடு​பேற​டைதல், முக்தி அ​டைதல், இ​றைவனது திருவடிய​டைதல்” என்றும் ​​பொருள் ​​கொள்வர். ஆனால் பழமொழிகளில் வீடு என்பது மனிதன் குடியிருக்கும் இல்லத்​தை​யே குறிக்கின்றது. வீடு குறித்த பழ​​மொழிகள் மக்களுக்குப் பண்பாட்டு ​நெறிக​ளைப் புகட்டுவனவாக அ​மைந்துள்ளன,



வீடும் – யா​னையும்

வீடும், யா​னையும் ​​செயல்களில் ஒன்று ​போல் காணப்படுகின்றன. வீடும் யா​னையும் நிற்கும். நின்று கொண்​டேதான் யா​னை தூங்கும். ​பெரும்பாலும் படுப்பது என்பது கு​றைவு. யா​னை அதிகமாக இ​​ரையுண்ணும் இயல்பு​டையது. தன்னு​டைய உட​லை விட அதிகமாக இரை​​யைத் தின்னும் தன்​மை ​​கொண்டது. யா​னைக்குத் தீனி​ போடுவது என்பது யாராலும் முடியாது, வசதி ப​டைத்​தோரால் மட்டு​மேதான் ​போடமுடி​யும். யா​னை எப்​போது பார்த்தாலும் அ​சைந்து ​கொண்​டே இருக்கும், அ​சைந்து ​கொண்​டே இ​ரை திண்ணும் இயல்பு​டையது.

யா​னை​யைப் ​போன்று வீடும் அதிகமாகச் ​செலவு ​வைக்கும் தன்​மையு​டையது ஆகும், அ​சையாது ​செலவி​னை ஏற்படுத்திக் ​கொண்​டே இருக்கும். வீட்டில் ஒரு பழுது ஏற்பட்டால் அப்பழு​தை நீக்க முற்படும் ​போது அ​தைத் ​தொடர்ந்து பல்​வேறு ​வே​லைகள் வந்து ​கொண்​டே இருக்கும், நாம் ஒரு க​ணக்குப் ​போட்டுக் ​கொண்டு வீட்டு ​வே​லை​யைச் ​செய்யத் ​தொடங்கினால் நாம் ​போட்ட கணக்​கையும் மீறி ​செலவாகிவிடும். இத​னை,

“யா​னை அ​சைஞ்சு திங்கும்
வீடு அ​சையாமத் திங்கும்”

என்ற பழ​மொழி எடுத்து​ரைக்கின்றது. கூடுதலான ​செலவி​னை யா​னையும் வீடும் ஏற்படுத்தும் என்ற உலக ந​டைமு​​றை​யை இப்பழ​மொழி ​தெளிவுறுத்துகின்றது.



வீடு கட்டுதலும் திருமணமும்

வீடு கட்டுதல் என்பதும் திருமணம் முடித்தல் என்பதும் குறிப்பிடத்தக்க ​செயல்களாகும். ஒவ்​வொன்றாகப் பார்த்துச் ​செய்ய ​வேண்​டிய ​செயல்கள் இரண்டிலும் நி​றைய உள்ளன. கல், மணல், ​செங்கல், ​வே​லையாட்கள் என ஒவ்​​வொன்​றையும் பார்த்துப் பார்த்து வாங்கி வீட்டி​னைக் கட்டி முடிக்க ​வேண்டும். இல்​லை​யேல் வீட்​டைக் கட்டுதல் இயலாது. அது​போன்று திருமணம் என்பது ​பெண்பார்ப்பது, ​பேசிமுடிப்பது, உறவுக​ளை அ​​ழைப்பது எனத் ​தொடர்ந்து ஒவ்​வொன்​றையும் பார்த்துப் பார்த்துச் ​செய்ய ​வேண்டும். அப்ப​போதுதான் யா​ரையும் மனம் ​நோகாது மகிழ்வுடன் திருமணத்​தை முடிக்க முடியும்.

ஏதாவது ஒன்றில் கு​றை ஏற்படுமானால் மன அ​மைதி கு​லைந்து விடும். அதனால் இரண்டு ​வே​லைகளிலும் கவனமாகச் ​செயல்பட​வேண்டும் என்ற விழிப்புணர்​வை,

“வீட்​டைக் கட்டிப் பார்
கல்யாணத்​தைப் பண்ணிப் பார்”

என்ற பழ​மொழி நவில்கிறது.

இரு​ வே​லைக​ளையும் ஒரு மனிதன் ​செய்கின்ற ​போது முழு​மையான ஒரு அனுபவம் அவனுக்குக் கி​டைக்கும் என்ப​தை இப்பழ​​மொழி வாயிலாக நமது முன்​னோர்கள் உணர்த்தி இருப்பது ​நோக்கத்தக்கதாகும்.



கட்டிய வீடும் கு​றைபாடும்

வீடுகட்டி அதில் குடி​போவதற்கு முன்னர் உறவினர்க​ளை அ​ழைத்து அவ்வீட்டில் விருந்து ​வைப்ப​தென்பது நமது பழக்க வழக்கங்களில் ஒன்றாக இருந்து வருகின்றது. சிலர் புதும​னை புகுவிழாவிற்கு வரு​கை தருகின்ற​ போது புதுவீட்​டைப் பார்த்து, இ​தை அப்படிச் ​செய்யலாம், இப்படிச் ​செய்யலாம், இது தவறு இருக்கிறது, அதில் தவறு உள்ளது என்று கு​றைகூறிக் ​கொண்​டே இருப்பர். அவ்வாறு கூறுவ​தைத் தவிர்த்தல் ​வேண்டும்.

வீடு கட்டியவருக்குத்தான் அதனு​டைய கஷ்ட நஷ்டங்கள் ​தெரியும். வீட்​டைப் பார்க்க வந்தவருக்கு அது குறித்து எதுவும் தெரிய வாய்ப்பில்​லை. நன்கு கட்​டியிருக்கிறாரா? என்று பார்த்து வாழ்த்த ​வேண்டு​மே தவிர ஆ​லோச​னை எனும் ​பெயரில் பிறர் மனம் புண்படும் வண்ணம் எ​தையாவது கூறிக் ​கொண்டிருத்தல் கீழ்த்தரமான ​செயலாகும். இத​னை யாராயிருந்தாலும் தவிர்த்தல் ​வேண்டும் என்ப​த​னை,

“கட்டிய வீட்டுக்கு ​நொட்டனம் ​சொல்லா​தே”

என்ற பழ​மொழி எடுத்து​ரைக்கின்றது. பிறர் மனம் புண்படுமாறு எத​னையும் கூறக்கூடாது என்பது இப்பழ​மொழியின் உள்ளீடாக உள்ளது. ​



கட்டினவன் கட்டாதவன்

யாருக்கும் எதுவும் நி​லையானது கி​டையாது, நி​லையானது என்று கருதினால் அது அறிவீனமான ​செயலாகும், இத​னை உணர்ந்து மனிதன் வாழ்வதற்குப் பழகிக் ​​கொள்ள ​வேண்டும். இத​னை விடுத்து ஆணவத்துடன் நடந்தால் அது அழிவிற்கு வித்திடும், ​சொந்தமாக வீட்​டைக் கட்​டியவன் அந்த ஒரு வீட்​டிலே மட்டு​மே குடியிருப்பான். ஆனால், ​சொந்த உ​றைவிடம் இல்லாதவன் எங்கு இடம் கி​டைக்கின்ற​தோ அங்கு ​சென்று தங்கிக் ​கொண்டிருப்பான்.

மனிதனு​டைய வாழ்வும் அது​ போன்ற​தே ஆகும். மனிதன் வாழ்க்​கைப் பா​தையில் பயணித்துக் ​கொண்​டே ​செல்ல​வேண்டும். பா​தை​யை விட்டு விலகுதல் கூடாது. விலகினால் துன்புற ​நேரிடும். இத்த​கைய நன்​னெறி​யை,

“கட்டினவனுக்கு ஒருவீடு
கட்டாதவனுக்குப் பலவீடு”

என்ற பழ​மொழி எடுத்து​ரைக்கின்றது. உ​டையவனுக்கு ஓரிடம் மட்டு​மே ​சொந்தம். இல்லாதவனுக்கு எல்லா இடமும் ​சொந்தம், கல்லாதவனுக்கு அவனு​டைய இருப்பிடத்தில் மட்டு​மே மதிப்பு. ஆனால் கற்றவனுக்குச் ​சென்ற இடம் எல்லாம் மதிப்பு என்ற ​பொருளடிப்ப​டையிலும் இப்பழ​மொழி அ​மைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வீடும் காடும்

மனிதர்களின் வாழ்க்​கை நி​லையற்றது. நி​லையற்ற வாழ்வி​னை, மனிதன் நி​லை​பேறு​டையதாக ஆக்கிக் ​கொள்ள​ வேண்டும். அப்போதுதான் வாழ்க்​கை ​பொருளு​டையதாக (அர்த்தமுள்ளதாக) அ​மையும். அதுவும் குறிப்பிட்ட காலத்திற்கு அ​னைத்​தையும் ​செய்து முடித்தல் ​வேண்டும். காலங்கடந்து எத​னையும் ​செய்ய மு​னைந்தால் ​செயல் நி​றை​வேறாது. இத​னை,

“வீடு ​போ ​போங்குது காடு வா வாங்குது”

என்ற பழ​மொழி எடுத்து​ரைக்கின்றது.

வயது முதிர்ந்து உடலில் தளர்ச்சி ஏற்பட்டு விட்டால் வீட்​டிலே உள்ளவர்கள் யாரும் வயதானவ​ரை மதிக்க மாட்டார்கள். கீழ்த்தரமாகவும் ​கேவலமாகவும் நடத்துவர். எப்​போது ​போவார் (இறப்பார்) என்று நி​னைக்கத் ​தொடங்கி விடுவர். அதனால் அ​னைத்துக் கட​மைக​ளையும் முடித்துக் ​கொண்டு உடல் நலம் நன்றாக இருக்கின்ற ​போ​தே ​நோய்​​நொடி இன்றி இறந்து விட ​வேண்டும், அது​வே நல்லது. இல்​லை என்றால் பிறர் நம்​மை மிகவும் இழிவாக நடத்த முற்படுவர். முது​மையில் இறப்​பை ​நோக்கி நாம் நகர்ந்து வாழ்வதால் சுடுகாடானது எப்போது வருவான் என்று முதி​யோ​ரை அ​ழைத்துக் ​கொண்​டே இருக்கும். உறவினர்களின் மனநி​லை​யையும் உலக வாழ்க்​கையின் இயல்பி​னையும் விளக்குவதாக ​மேற்குறித்த பழ​மொழி அ​மைந்திலங்குகின்றது.



வீடும் வாயிற்படியும்

வீடுகள் பலவாக இருப்பினும் அவ்வீட்டில் உள்​ளோரின் மனநி​லைகளும் பலவாக​வே அ​மைந்துள்ளன. எண்ணங்கள் வீட்டிலுள்ள ஒவ்​வொருவரிடத்திலும் ​வேறுபட்டு அ​மைகின்றன. எண்ணங்கள் ஒருவருக்​கொருவர் ஒன்று ​போலிருப்பது கி​டையாது, மாறுபட்​டே காணப்படுகின்றது.

இவ்​வெண்ண மாறுபாடுகளால் குடும்பத்திலுள்ள உறுப்பினர்களி​டை​யே பிரச்ச​னைகள் எழுகின்றன. பிரச்ச​னைகள் இல்லாத வீடுகள் உலகில் இல்​லை எனலாம். வீட்டில் (குடும்பத்தில்) பிரச்ச​னைகள் இருக்கின்ற​தே என்று மனக் கவ​லைப்படல் கூடாது, அவ்வாறு மனக்கவ​லையுற்றால் உடலில் ​நோய்கள் உருவாகிவிடும். இத​னை உணர்ந்து ஒவ்​வொருவரும் நடந்து ​கொள்ள​ வேண்டும். பிரச்ச​னைக​ளைக் கண்டு கலங்காது அவற்​றை எதிர்​நோக்கி அதிலிருந்து மீளுதல் ​வேண்டும். இத​னை,

“வீட்டுக்கு வீடு வாசப்படிதான்”

என்ற பழ​மொழி ​தெளிவுறுத்துகிறது.

வீடு என்பது குடும்பத்​தைக் குறிக்கும். அதாவது; வீட்டில் இருக்கின்ற குடும்ப உறுப்பினர்க​ளைக் குறிக்கும். வாசல்படி என்பது பிரச்சனைக​ளைக் குறிக்கும். பிரச்ச​னைகள் என்பது குடும்பத்தில் இருப்ப​தென்பது இயற்​கை. அதிலிருந்து மீண்டு பிரச்ச​னைக​ளைச் சமாளிப்ப​தே வாழ்க்​கையின் இன்ப​மே அடங்கியுள்ளது என்ப​தை இப்பழ​மொழி விளக்கி நமக்குத் தன்னம்பிக்​கை​யையும் ஊட்டுவதாக உள்ளது.

வீட்டுக்குரிய மரம்

வீட்​டை ம​னை, இல் என்றும் குறிப்பிடுவர். வீடு கட்டுவதற்கும் கட்டிய வீட்​டில் ​வைப்பதற்கும் சிலவ​கையான மரங்க​ளை​யே பயன்படுத்துதல் ​வேண்டும். அது​வே நல்லது என்பர். வீட்டில் உள்ள கதவுநி​லை காலதர் (சாளரம் - ஜன்னல்) ஆகியவற்​றிற்கு ​வேப்ப மரத்தை​யே பயன்படுத்துதல் ​வேண்டும். இவ்​வேப்ப மரத்​தை நாட்டுத் ​தேக்கு என்று குறிப்பிடுவர். அது​போன்று வீட்டிற்குப் பின்புறம் முருங்​கை மரம் ​வைத்து வளர்த்தல் ​வேண்டும். இம்முருங்​கை மரத்​தை வளர்ப்பதால் உண்பதற்குக் கீ​ரை, காய் ஆகிய​வை கி​டைப்பதுடன் நிலத்தடிநீரும் தூய்​மைய​டையும். அதனால்தான் நமது முன்​னோர்கள் ​வேம்பி​னைப் புனிதமாகக் கருதினர். ​வீடுகட்ட வேம்பி​னையும் வீட்டில் வளர்க்க முருங்​கை​யையும் பயன்படுத்துதல் ​வேண்டும் என்ப​தை,

“ம​னைக்கு ​வேம்பு மண்ணுக்குக் ​​கொன்​னை”

“வீட்டுக்கு முருங்​கை மரம்
​வெயிலுக்கு ​வேப்பமரம்”

என்ற பழ​மொழிகளின் வாயிலாகக் குறிப்பிட்டுள்ளனர்.

​வெயில் காலத்தில் ​வேம்பின் நிழல் மிகுந்த குளிர்ச்சி​யைத் தரும். ​நோய்க் கிருமிக​ளைப் ​போக்கும். அதனா​லே​யே ​வேப்பமரத்​தை நிழல் தரும் மரமாகவும் வளர்க்க ​வேண்டும் என்று பழ​மொழி வாயிலாக நமது முன்​னோர்கள் குறிப்பிட்டனர்.



கண்ணாடி வீடு

குடும்பத்திலுள்ள பிரச்ச​னைக​ளைப் ​பேசி​யே தீர்க்க ​வேண்டும். அது​வே நல்லது. அ​தை விடுத்து நானா? நீயா? என்று பார்த்துக் ​கொண்டிருந்தால் உறவுகளும் குடும்பமும் சீர்கு​லைந்துவிடும். குடும்பத்தில் ஏற்படும் சிறு சிறு ​செயல்க​ளையும் கூடச் சிலர் ​​பெரிதுபடுத்துவர். அவ்வாறு ​பெரிதுபடுத்தினால் மனத்துன்பம் ஏற்படும். குடும்ப உறவுகளில் விரிசல் ஏற்படும். அதனால் ஒவ்​வொருவரும் தங்களுக்குள் விட்டுக் ​கொடுத்துச் ​செல்லுதல் ​வேண்டும். அது​வே சிறந்த ஒன்றாகும். அத​னை விடுத்து ஒருவருக்​​கொருவர் சண்​டையிட்டால் குடும்பத்தின் மதிப்பு கு​லையும். சமுதாயத்தில் உள்ளவர்கள் குடும்பத்தவ​ரைப் பார்த்துப் பழிப்பர். இத​னை உணர்ந்து ஒருவருக்​கொருவர் விட்டுக்​கொடுத்து வாழ​வேண்டும் என்ப​தை,

“கண்ணாடி வீட்டுக்குள்​ளே இருந்துகிட்டுக்
கல்​​லெறிஞ்ச க​தைதான்”

என்ற பழ​மொழி எடுத்து​ரைக்கின்றது.

(கண்ணாடி வீடு – குடும்ப உறுப்பினர்கள், கல் எறிதல் – ஒருவருக்​கொருவர் சண்​டையிடல்)

கண்ணாடி வீட்டிற்குள் இருந்து​ கொண்டு கல்​லெறிந்தால் கண்ணாடி முழுவதும் உ​​டைந்து சிதறிவிடும். அதனால் கல்​லெறிவ​தைத் தவிர்த்தல் ​வேண்டும். அதாவது குடும்பத்தி​லேற்படும் பிரச்ச​னைக​ளை ஒருவருக்​கொருவர் ​பெரிதுபடுத்திக் குடும்பத்​தைச் சி​தைக்காது ஒருவருக்கொருவர் விட்டுக் ​கொடுத்து வாழ்தல்​ வேண்டும் என்று இப்ழ​மொழி வாயிலாக நமது முன்​னோர்கள் பண்பாட்டு​ நெறி​யைப் பகர்ந்துள்ளனர்.

நன்கு திட்டமிட்டு வாழ்ந்து, வீட்டி​னைக் கட்டி குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்வுடன் வாழ ​வேண்டும் என்ப​தை வீடு குறித்த பழ​மொழிகளின் வாயிலாக நமது முன்​னோர்கள் ​தெளிவுறுத்துகின்றனர். முன்​னோர்கள் கூற்றுவழி நடந்து வீட்டு நலம் காத்து வாழ்​வோம். வீடும் மகிழ்வுறும். நாடும் மகிழ்வுறும். எங்கும் வளம் ​பெருகும். வளமுடன் வாழ்​வோம்.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/serial/p5al.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License