இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரைத் தொடர்
கட்டுரைத் தொடர்

பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்

முனைவர் சி. சேதுராமன்


39. காரியம்

தமிழில் ஒவ்​வொரு ​சொல்லுக்கும் இடத்திற்​கேற்றாற் ​போன்று ஒவ்​வொரு ​பொருள் வழங்கப்படுகிறது. இது தமிழின் சிறப்பிற்கு எடுத்துக்காட்டாக அ​மைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இயற்​சொல், திரி​சொல், தி​சைச்​சொல், வட​சொல் என்று ​சொற்கள் தமிழில் பலவாறு வழங்கப்டுவதும் குறிப்பிடத்தக்கது. அவ்வாறு வழங்கப்படும் சொற்களுள் ஒன்​றே காரியம் என்ற ​சொல்லாகும். இக்காரியம் என்பது வழக்கில் இறந்தவர்களுக்குச் ​செய்யும் ஈமக்கடன்க​ளைக் குறிப்பதற்கு வழங்கப்பட்டு வருவது நி​னைத்தற்குரியது. இத்த​கைய இறப்புச் சடங்கி​னைப் ​பெரிய காரியம் என்று குறிப்பிடுவர்.

​பெரிய காரியம் என்பது இறப்பி​னைக் குறித்தும் மக்களி​டை​யே வழங்கப்பட்டு வருகின்றது. இறப்பு வீட்டிற்குச் ​சென்று வந்தவ​ரைப் பார்த்து எங்​கே ​போய்விட்டு வருகிறீர்கள் என்று ​கேட்டால் அவர் ‘நான் ஒரு ​பெரிய காரியத்திற்குச் ​சென்று வருகி​றேன் என்று கூறுவார். ​கோவிலில் ​​செய்யப்படும் ​செயல்மு​றைக​ளைக் ​கோவில் காரியம் என்று குறிப்பிடுவர், ​கோவிலில் ந​டைமு​றைச் ​செயல்க​ளைச் ​செய்பவர்க​ளைக் காரியக்காரர்கள் என்று கூறுகின்றனர்.

பாரதி பு​துமைப்​பெண்​​ணைப் பற்றிக் குறிப்பிடும்​போது,

“காத​லொருவ​னைக் ​கைபிடித்​தே அவன்
காரியம் யாவினும் ​கை​கொடுத்​தே”

என்று காதலனின் ​செயல்களுக்கு உதவி ​செய்து வாழ​வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

காரியம் என்பது – ​செயல் என்றும் காரியம் ​செய்பவர் – காரியக்காரர் என்றும் வழங்கப்படுவது ​நோக்கத்தக்கது. இக்காரியம் என்ற ​சொல்​லை ​வைத்துப் பல பழ​மொழிகள் மக்களி​டை​யே வழக்கில் வழங்கி வருகின்றன. அ​வை வாழ்வியல் ​நெறிக​ளை மக்களுக்குப் புகட்டுவனவாக அ​மைந்துள்ளன.



ஆரியக் கூத்தும் – காரியமும்

மனிதர்களுள் சிலர் எந்தச் சூழலிலும் தங்களது ​செயல்களி​​லே​யே கவனமாக இருப்பர். அத்த​கையவர்க​ளைக் காரியக்காரர்கள் என்பர். அவர்கள் மனதில் தங்களின் ​செய​லை​யே நி​னைத்துக் ​கொண்டிருப்பர். இவ்வாறு இருப்ப​தைச் சிலர் தமது ​கொள்​கையாகக் கருதுவர். நமது ​செயல்களில் விழிப்புணர்வுடன் இருப்ப​தென்பது​ வேறு தன்னலத்துடன் இருப்ப​தென்பது​ வேறு. எது எப்படி இருப்பினும் அ​னைவரும் கவனமுடனும் விழிப்புடனும் இருப்ப​தே வாழ்வில் முன்​னேற்றம் அ​டைவதற்குரிய வழியாகும்.

இத்த​கைய விழிப்புணர்வுச் சிந்த​னை​யை,

“ஆரியக் கூத்தாடினாலும் காரியத்துல கண்ணா இருக்கணும்”

என்ற பழ​மொழி எடுத்து​ரைக்கின்றது.

ஆரியக்கூத்து என்பது மூங்கில் கழிக​ளை இ​டை​வெளிவிட்டு ஊன்றி அதில் கயிற்றி​னைக் கட்டி அக்கயிறின் ​மேல் சிறு மூங்கில் கழி​யை எடுத்துக் ​கொண்டு நடப்பதும் அக்கயிறின் ​மேல் நின்று வித்​தைகள் ​செய்து காட்டுவ​தையும் குறிக்கும். இவ்வாறு கயிற்றில் நடக்கும்​ போது த​ரையில் அமர்ந்து சிறு முரசி​னை ஒலிப்பர். இந்த ஆரியக் கூத்து கண்​ணையும் மன​தையும் ஒருங்​கே கவரும் தன்​மை ​கொண்டதாகும். இது​போன்று எது நிகழ்ந்தாலும் நாம் விழிப்புணர்வுடன் இருந்து ​செயலாற்ற ​வேண்டும் (காரியத்தில் கண்ணாக இருத்தல்) என்ற விழிப்புணர்வுச் சிந்த​னை​யை இப்பழ​மொழி ​மொழிகிறது. எப்​போதும் கவனமாகச் ​செயல்படுபவன் எந்தவித இ​டையூறுகளுக்கும் ஆளாக மாட்டான் என்ப​தையும் இப்பழ​மொழி வாயிலாக நமது முன்​னோர்கள் ​மொழிந்துள்ளனர்.



பதறாத காரியம்

எந்தச் ​செய​லைச் ​செய்தாலும் திட்டமிட்டுச் ​செய்தல் ​வேண்டும். எப்படிச் ​செய்ய ​வேண்டும்? எதற்காக, யாருக்காக, ஏன் என ஒவ்​வொன்றாக சிந்தித்துச் சிந்தித்து விழிப்புணர்வுடன் எந்த ஒரு ​செய​லையும் ​செய்தல் ​வேண்டும். அவ்வாறு சிந்தித்துச் ​செயலாற்றவில்​லை எனில் எந்த ஒரு ​செய​லையும் மனநி​வைடன் முடித்தல் முடியாது. வள்ளுவரும்,

“எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்ப திழுக்கு”

என்று குறிப்பிடுகின்றார்.

மனஅ​மைதியுடன் திட்டமிட்டுப் ​பொறு​மையாக ஒரு ​செய​லைச் ​செய்தால் அச்​செயல் முழு​மையாக ​வெற்றிய​டையும். மனப் பதற்றத்துடனும் முடிக்க ​வேண்டும் என்ற அவசரத்துடனும் ஒரு ​செய​லை நாம் ​செய்தால் அது முழு​மை ​பெறாது​போய்விடும். அவரப்பட்டு எச்​செய​லையும் நாம் ​செய்ய முயலக்கூடாது. இத்த​கைய வாழ்வியல் ​நெறி​யை,

“பதறாத காரியம் சிதறாது”

என்ற பழ​மொழி எடுத்து​ரைக்கின்றது.

பதற்றமின்றி மன அ​மைதியுடன் திட்டமிட்டுச் ​செயல்படும் ​செயலானது எவ்விதக் கு​றையுமின்றி சிறப்பாக நி​றைவுளூம். அதனால் மனப்பதற்றம​டையாது திட்டமிட்டுச் ​செயல்க​ளைச் ​செய்ய ​வேண்டும் என்ப​தை இப்பழ​மொழி நமக்கு அறிவுறுத்துகிறது.

பதற்றம் அ​டையும்​போது மனமும் நமது எண்ணங்களும் ஒரு நி​லைப்படாது. அதனால் நமது ​செயல்களில் கவனம் ​செலுத்த முடியாது. கவனச் சிதறல் ஏற்படும். உடல் நலத்​தையும் இப்பதற்றமானது பாதிக்கும். அதனால் எந்த ஒரு ​செய​லையும் பதற்றம​டையாது திட்டமிட்டுச் ​செய்தல் ​வேண்டும் எனும் வாழ்க்​கை ​நெறி​யை நமது முன்​னோர்கள் இப்பழ​மொழி வாயிலாக ​மொழிந்துள்ளனர்.



காரியமும் கழு​தையும்

மனிதர்களில் பலர் மனக்​கோணல் உ​டையவர்களாக உள்ளனர். யார் எக்​கேடு​கெட்டுப் ​போனாலும் பரவாயில்​லை. தன்னு​டைய காரியம் (​செயல்) நி​றை​வேறினால்​ போதும் என்று கருதும் மனிதர்க​ளே இன்று அதிகம். தனது ​செயல்கள் நி​றை​வேறும் வ​ரையில் மற்றவர்களிடம் ​பேசி நடித்துக் காரியத்​தை முடித்துக் ​கொள்வர். அவ்வாறு காரியம் நி​றை​வேறியவுடன், “நீங்க யாரு?” எனக்குத் ​தெரியா​தே?” என்று ​கேட்டு அதிர்ச்சிக்குள்ளாக்குவர்.

இத்த​கையவர்கள் உண்​மை​யானவர்கள் கி​டையாது. நட்பு, உறவு ஆகியவற்றிற்குத் து​ரோகம் இ​ழைக்கும் து​ரோகிகள் ஆவர். இவர்களின் இயல்​பை,

“உள்ளத்தில் ஒன்று ​வைத்துப்
புறத்தி​லே ஒன்​றைச் ​செய்து
நல்லவன்​போல் நடிப்பார் ஞானத்தங்க​மே
அவர் நாடகம் என்ன ​சொல்​வேன் ஞானத்தங்க​மே”

என்று புலவ​ரொருவர் குறிப்பிடுவர்.

இத்த​கை​யோ​ரைப் பாரதியார் நடிப்புச் சு​தேசிகள் என்று குறிப்பிடுவார்.

இவர்களின் இழி ​செய​லை,

“காரியம் முடியறவ​ரைக்கும் கழு​தையும் காலப்பு​டினானாம்”

என்ற பழ​மொழி எடுத்து​ரைக்கின்றது.

தனக்கு ​வேண்டி​யவை நடந்து முடிகின்ற வ​​ரையில் இத்த​கைய இழிகுணம் ​கொண்​டோர் நடித்துக் ​கொண்டிருப்பர் என்று இப்பழ​மொழி கூறுகிறது. யாராக இருந்தாலும் அவர்க​ளை அடுத்திருந்து அவர்க​ளைக் ​கொண்டு நமது குறிக்​கோ​ளை நி​றை​வேற்றிக் ​கொள்ள ​வேண்டும். அவன் எத்த​கைய இழிகுணம் ​கொண்​டோனாக இருந்தாலும் அது குறித்துக் கவ​ரையுறாமல் அவ​ரைப் பயன்படுத்திக் ​கொண்டு இலக்​கை அ​டைய ​வேண்டும். இதற்காகத் தயங்கக் கூடாது என்று ​வேறு வ​கையிலும் இப்பழ​மொழிக்குப் ​பொருள் கூறுவர்.

குறிக்​கோள் நி​றை​வேற ​வேண்டு​மே தவிர அது யாரால் முடிந்தாலும் சரி. எப்பாடுபட்டாவது ஒருவன் தனது இலக்​கை அ​டைதல் ​வேண்டும் என்றும் ​பொருள் ​கொள்வதற்கு இப்பழ​மொழி இடம் தருகிறது.

நல்ல ​செயல்க​​ளைச் ​செய்து நல்​லோர் ​போற்ற வாழ ​வேண்டும் என்ற பண்பாட்டுக் கூறுக​ளை இப்பழ​மொழிகளின் வாயிலாக நமது முன்​னோர்கள் எடுத்து​ரைத்துள்ளனர். நாளும் நற்​செயல்க​ளைச் ​செய்​வோம்: நலமுடன் வாழ்​வோம்; வாழ்வில் வசந்தம் வீசும்.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/serial/p5am.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License