இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரைத் தொடர்
கட்டுரைத் தொடர்

பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்

முனைவர் சி. சேதுராமன்


50. ஏற்றத்தாழ்வு

வாழ்க்​கையில் நிகழும்​போது நிகழ்வுகளில் நாம் அ​​னைவரும் ​​​பொதுநலத் தன்​மையுடனும், ​பெருந்தன்​மையுடனும் நடந்து ​கொள்ள​வேண்டும். ​வேண்​டியவர், ​வேண்டாதவர், நண்பர், ப​கைவர் என்று ​வேறுபாடு காட்டுதல் கூடாது. அங்ஙனம் ​வேறுபாடு காட்டுவ​தை வழக்கில் பாரபட்சம் காட்டுதல் என்று கூறுவர், பாரபட்சம் என்ப​தை ஏற்றத்தாழ்வு பாராட்டுதல் என்றும் கூறுவர், ஒருத​லைச்சார்பாக நடந்து ​கொள்ளுத​லையும் பாரபட்சம் பார்த்து நடத்தல் என்பர்.

உயர்ந்த பதவி வகிப்​போர் அ​னைவருக்கும் பொதுவான நி​லையிலிருந்து நீதி வழங்கு​வோர் ஆகிய யாராக இருந்தாலும் ​வேறுபாடு பாராது அ​னைவ​ரையும் சமமாகக் கருதி நடத்துதல் ​வேண்டும். பாரபட்சம் காட்டாது நடந்து ​கொள்ளுத​லை நடுநி​லை​மையுடன் நடத்தல் என்றும் கூறலாம். பாரபட்சம் இன்றி நடத்தல் கூடாது என்பது குறித்து நமது முன்​னோர்கள் பழ​மொழி வாயிலாகப் பண்பட்ட ​நெறிக​ளை நமக்கு வழங்கியுள்ளனர். இப்பழ​மொழிகள் நம் வாழ்க்​கை​யைச் ​செம்​மைப்படு தூதும் வழிகாட்டு ​நெறிகளாக அ​மைந்திலங்குகின்றன.



ப​சையும் கத்தியும்

இவ்வுலகில் அ​னைவரும் அ​​னைத்துத் தரப்பு மக்களிடமும் சரிசமமாகப் பழகுவதில்​லை, ஒவ்​வொருவரிடமும் ஒவ்​வொரு விதமாக இடத்திற்குத் தகுந்தாற்​போன்று நடந்து கொள்வர், பணம் ​வைத்திருப்​போரிடம் ஒருவிதமாகவும், பணமில்​லாதவர்களிடம் ஒருவிதமாகவும், பதவியில் உள்​ளோரிடம், பதவி இல்லாதாரிடம் என ஒவ்​வொருவரிடமும் ஒவ்​வொரு விதமாகவும் பழகுவர். அவ்வாறு பழகுவதும் மட்டுமல்லாது தாங்கள் இருக்கும் இடத்திற்கு அவர்கள் வரும்​போது பலர் இருந்தாலும் அவர்க​ளை மட்டும் தனி மரியா​தை கொடுத்து நடத்துவர். இதத​கைய இழிந்த பாராபட்சமான ​செய​லை,

“ப​சையுள்ள பக்கம்தான் கத்தி​போகும்”

என்ற பழ​மொழி ​தெளிவுறுத்துகிறது. இப்பழ​மொழி​யை,

“ச​தையுள்ள பக்கம்தான் கத்தி ஆடும்”

என்று ​வேறுவிதமாகவும் கூறுவர்.



ப​சையுள்ள பக்கம் என்பது பணம், பட்டம், பதவி, அதிகாரம் உள்​ளோர் என்ப​தைக் குறிக்கும் குறியீட்டுச் ​​சொல்லாகும், இ​வை இருப்​போரைக் கண்டவர்கள் அவர்களிடம் காரியங்க​ளைச் சாதித்துக் ​கொள்வதற்காக நடிப்பாகப் பழகுவர். உண்​மையாகப் பழக மாட்டார்கள் தங்களின் காரியம் நடக்க ​வேண்டும் என்பதற்காக​வே நடிப்பார்கள். அவர்களின் ​போலியான ​செயல்பாட்​டைப் படம்பிடிப்பதாக இப்பழ​மொழி அ​மைந்துள்ளது.

​மேலும் இவ்விழி பண்பு​டை​யோர் வசதிவாய்ப்பில்லாத சராசரி மனிதர்களிடம் கீழ்த்தரமாக நடந்து ​​கொள்வர். அவர்க​ளை மனிதர் என்ற நி​லையில் கூட மதிக்க மாட்டார்கள். அவ்வாறு நடந்து ​கொள்வது மனிதமாண்​மைப் கு​லைக்கும் ​செயலாகும். அறிஞர் ​பெர்னாட்ஷாவின் வாழ்வில் நடந்த சம்பவம் இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக அ​மையும்.

ஒருமு​றை ​பெர்னாட்ஷா அவர்கள் த​னை விருந்திற்க​​ழைத்த நண்பரின் வீட்​றெகுச் ​சென்றார். அங்கு செல்வந்தர் பலர் இருந்தனர். ஷா அவர்கள் எப்​போதும்​ போல எளி​மையான கசங்கிய உ​டையி​லே​யே ​சென்றார்.

​பெரிய ​செல்வந்தர்க​ளை வர​வேற்று அவர்களிடம் ​பேசிக் ​​கொண்டிருந்த நண்பர் ஷா வருவ​தைக் கண்டும் அவ​ரை வர​வேற்கவில்​லை. அவ​ரைப் பார்க்காதது ​போன்​றே நடந்து ​கொண்டார். ஷா அவர்கள் அருகில் ​சென்றாலும் அவரது நண்பர் அவ​ரை ‘வா’ என்று வர​வேற்கவில்​லை. இத​னைப் பார்த்த ஷாவிற்கு மிகுந்த வருத்தம் ஏற்பட்டது.

வருத்தமுற்ற ஷா தனது நண்பனுக்குப் பாடம் புகட்ட ​வேண்டும் என்று நி​னைத்தார். உட​னே அவ்விடத்​தைவிட்டு ​வெளி​யேறினார். ஆ​டைக​ளை வாட​கைக்கு விடும் க​டைக்குச் ​சென்று அழகான ஆ​டைக​ளை வாட​கைக்கு எடுத்து அணிந்து ​கொண்டு விருந்து நடக்கும் தனது நண்பரது வீட்டிற்குச் ​சென்றார்.

‘​கோட்சூட்டுடன் விருந்திற்கு வந்த ஷா​வைப் பார்த்த அவரது நண்பர் ஓ​டோடி வந்து அவ​ரை வர​வேற்றார், ஷாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. ஷா​வை வர​வேற்று அ​​ழைத்துச் ​சென்ற அவரது நண்பர் அவ​ரைத் தன்னு​டைய பிற நண்பர்களிடம் அறிமுகப்படுத்தினார்.

உணவு உண்ணும் இடத்திற்கு அ​ழைத்துச் ​சென்று உண்ண ​வைத்தார். அப்​போது’ஷா’ உண​வை உண்ணாது தனது ​​கோட், ​தொப்பி ஆகியவற்றின் மீது அள்ளி அள்ளி ​வைத்தார். விருந்திற்கு வந்திருந்த விருந்தினரகள் முகம் சுளித்தனர். ஷாவின் நண்பர் தவறிப் ​போய், “மிஸ்டர் ஷா நீங்கள் என்ன ​செய்து ​கொண்டிருக்கிறீர்கள்? இவ்வாறு நடந்து​ கொள்வது உங்களுக்​கே அசிங்கமாகத் ​தெரியவில்​லையா?” என்று மிகுந்த வருத்தத்துடன் ​கேட்டார்.



அதற்குப் ​பெர்னாட்ஷா சிரித்துக் ​கொண்​டே, ‘நண்ப​ரே! இதி​லொன்றும் தவ​றே இல்​லை. ​யோசித்துப் பாருங்கள் நீங்கள் எனக்கா மதிப்பளித்தீர்கள்? இந்த ஆடம்பரமான ஆ​டைகளுக்குத்தா​னே மதிப்பளித்தீர்கள். முதன் முதலில் எளிய ஆ​டையுடன் தங்கள் வீட்டிற்கு வந்த​போது என்​னை வா​வென்று வர​வேற்கவில்​லை. நீங்கள் வர​வேற்பீர்கள் என்று ஆவலுடன் நான் காத்துக் ​கொண்​டே இருந்​தேன். ஆனால் நான் வசதி வாய்ப்பற்றவன் எளியவன் என்று கருதி என்​னைப் பார்த்தும் பார்க்காதது​போல் ​சென்று விட்டீர்கள். நான் ஆடம்பரமாக ஆ​டை அணிந்து வந்ததால்தான் என்​னைத் தங்கள் நண்பர் என்று பலரிடமும் அறிமுகப்படுத்திக் ​கொண்டீர்கள். அதனால்தான் எனக்கு மதிப்பளித்த ஆ​டைக்கு உணவளித்துக் ​கொண்டிருக்கி​றேன். என்​னைவிட என் ஆடம்பரத்திற்​கே மரியா​தை ​ ​கொடுத்தீர்கள். அதனால் அதற்குக் காரணமான ஆ​டைகள் உண்ப​தே மிகவும் ​​பொருத்தமாகும்” என்று கூறினார். இத​னைக் ​கேட்ட நண்பர் ​வெட்கத்தால் கூனிக்குறுகினார், தன்னு​டைய பாரபட்சமான நடத்​தையால் ஏற்பட்ட இழிநி​லை குறித்து வருந்தினார். ஏற்றத்தாழ்வு பாராட்டாது அ​னைவ​ரையும் சமமாகக் கருதிப் பழகுதல் ​வேண்டும் என்ற பண்பாட்டு ​நெறி​யை இப்பழ​மொழி நமக்குத் ​தெளிவுறுத்துகிறது.

ஆலும் அரசும்

எப்​போதும் ஒ​ரேநி​லையில் மனிதன் வாழ ​வேண்டும். சமய சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற தமது பழக்க வழக்கங்​க​ளை மாற்றிக் ​கொள்ளக் கூடாது. ​மேலும் எப்​போதும் ​போல் அ​னைவரிடமும் பழகுதல் ​வேண்டும். அ​தைவிடுத்து ஏற்றத்தாழ்வு பாராட்டி மாறுபாட்டுடன் நடந்து ​கொள்ளக் கூடாது. ஆனால், சில மனிதர்கள் தங்களுக்கு எங்கு பயன் கி​டைக்கின்ற​தோ அந்தப்பக்கம் ​சென்றுவிடுவர். இத்த​கைய குணம் ​கொண்​டோர் ​எப்​போதும் பாரபட்சமாக​வே நடந்து ​கொள்வர். அவர்க​ளைப் பார்த்து,

“ஆலு பழுத்தா அங்கிட்டு அரசு பழுத்தா இங்கிட்டா”

என்று ​கேட்பர்.

ஆலமரம் பழுத்திருக்கும்​ போது அந்த மரத்திற்கும் ஆலமரம் பழுத்து ஓய்ந்தவுடன் அரசமரம் பழுத்தவுடன் அந்த மரத்​தை நாடியும் பற​வைகள் ​செல்லும். அது​போன்று மனிதர்களுள் சிலர் எங்கு தங்களுக்கு லாபம் கி​டைக்கின்ற​தோ அங்கு ​நோக்கிச் ​செல்வர். எது குறித்தும் அவர்கள் கவ​லையுற மாட்டார்கள். இப்பழ​மொழி,

“அற்ற குளத்தில் அறுநீர்ப்பற​வை ​போல்”

என்ற பழம்பாடலின் வரிக​ளை நி​னைவுறுத்துவதாக அ​மைந்துள்ளது. மனிதர்கள் பாராபட்சம் பாராது எப்​போதும் ஒரே நி​லையில் நிற்றல் ​வேண்டும் என்ப​தை இப்பழ​மொழி நமக்குத் ​தெளிவுறுத்துகிறது.

​ நேரிய வடி​யே வாழ்வின் ஒளி; பிறர் மன​தைப் புண்படுத்தாது புரிதலுடன் நடக்கும் பண்​பே உயரிய மனிதப் பண்புடன் நடந்து ​கொள் ​வேண்டும் என்று இப்பழ​மொழிகள் வாயிலாக, நமது முன்​னோர்கள் வலியுறுத்தியுள்ளனர். மாண்புடன் நடந்து மனிதர்களாக ​வீழ்​வோம்! வாழ்வும் மிகழ்வாக அ​மையும்.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/serial/p5ax.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License