இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரைத் தொடர்
கட்டுரைத் தொடர்

பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்

முனைவர் சி. சேதுராமன்


52. கூத்தாடி

மனிதர்கள் அவரவர் ​செய்கின்ற ​தொழிலின் அ​டிப்ப​டையி​லே​யே அவரவர்க்குப் ​பெயர்கள் வழங்கப்பட்டன. கிராமப்புறங்களில் ஒவ்​வொரு குடும்பத்திற்கும் ஒரு ​பட்டப் ​பெயர் வழங்கப்பட்டு வருவதும் ​நோக்கத்தக்கது. ​செக்கு ​வைத்து எண்​ணெய் ஆட்டிக் ​கொடுக்கின்றவர் வீட்​டை ​செக்குக்கார வீடு என்றும் அரிசிக்க​டை ​வைத்திருப்பவர் வீட்​டை அரிசிக் க​டைக்கரார் வீடு என்றும் சுண்ணாம்பு விற்பவர் வீட்​டை சுண்ணாம்புக்கார வீடு என்றும் கூறுவது இன்றும் வழக்கமாக இருந்து வருகின்றது.

அது​போன்​றே க​லைஞர்களுக்கும் ​பெயர்கள் வழங்கப்பட்டன. பண்​டைக்காலத்தில் க​லைஞர்களுக்கு விறலி, பாணன், பாடினி, ​பொருநன், கூத்தர், சிறுபாணன், ​பெரும்பாணன் என்ற ​பெயர்கள் வழங்கப் ​பெற்றன.

இப்​​பெயர்கள் ஒவ்​வொன்றும் காரணப் ​பெயர்களாக அ​மைந்திருப்பது ​நோக்கத்தக்கது. ஏ​தேனும் ஒரு காரணம் பற்றி​யே ஒவ்வொருவருக்கும் ​பெயர்கள் வழங்கப் ​பெற்றது. பழங்காலத்தில் நாடகங்க​ளைக் கூத்து என்று ​பெயரிட்டு வழங்கினர். நாடகத்தில் நடிக்கும் நடிகர்க​ளை கூத்தர் என்று அ​ழைத்தனர். இன்றும் நாடகத்​தைக் கூத்து என்று வழங்கும் வழக்கம் கிராமப்புறங்களில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஒரு காலத்தில் கூத்தர்கள் உயர்வாகக் கருதப்பட்டனர். மக்களால் மதிக்கப்பட்டனர். ஆனால் காலப்​போக்கில் அவர்களது வாழ்க்​கை சிதிலம​டைந்ததன் காரணமாக அவர்களும் அக்க​லையும் இழிவாகக் கருதப்பட்டன. சமுதாயத்தில் மக்கள் அவர்களுக்கு உரிய மதிப்​பை அளிக்கவில்​லை. கூத்தில் நடித்த கூத்தர்க​ளைக் கூத்தாடி என்றும் கூத்தாடிப் பயல் என்றும் கூறி அவர்க​ளை இழிவுபடுத்தினர். காலப்போக்கில் அவர்களது வாழ்க்​கை மாறிய​தையும் அவர்களது மதிப்பு சமுதாயத்தில் கு​றைந்த​தையும் நமது முன்​னோர்கள் பழமொழிகளில் பதிவு ​செய்துள்ளனர். அ​வை க​லைஞர்களின் வாழ்க்​கை​யையும் அவர்களது ​தொழில் நி​லை​யையும் புலப்படுத்துவனவாக உள்ளன.



கூத்தாடுதல்

சமுதாயத்தில் நாடக நடிகர்கள் இன்றும் மதிப்புக் கு​றைவாக​வே நடத்தப்பட்டு வருகின்றனர். அவர்கள் இழிந்தவர்களிலும் இழிந்தவர்களாகக் கருதப்பட்டனர். ஊரில் உள்ளவர்கள் எல்​லோருக்கும் அவர்கள் எடுபிடி ​வே​லை ​செய்தாக ​வேண்டிய நி​லை இன்றும் உள்ளது. அவர்க​ளைக் க​லைஞன் என்று பாராது தங்களின் கீழ் ​வே​லை ​செய்யும் அடி​மை என்​றே மக்கள் கருதுகின்றனர். அவர்கள் என்னென்ன ​செய்யுமாறு கூறுகிறார்க​ளோ அவ்வா​றெல்லாம் ​செய்ய ​வேண்டும். அப்​போதுதான் அவர்களுக்கு மீண்டும் அடுத்த வாய்ப்புக் கி​டைக்கும். அவ்வாறு இல்​லை​யெனில் அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு ஓரங்கட்டப்படுவர்.

சில சமயங்களில் க​லைஞர்கள் ஆடும் ​போது இப்படி ஆடு அப்படி ஆடு என்று அவர்க​ளைச் சுதந்திரமாகச் ​செயல்படவிடாது இ​டையூறு ​செய்து ​கொண்​டே இருப்பர். உடலாலும் உள்ளத்தாலும் அவர்கள் காயப்படுத்தப்படுவர். அத்த​கைய நி​லையில் அவர்களால் ஒன்றும் ​செய்ய இயலாது. அவர்க​ளைப் ​போன்​றே ஊரில் ​பொருளாதார நி​லையில் வளங்குன்றியிருப்​போர் ஊரார் ​சொல்லுகின்ற வண்ணம் ​வே​லைக​ளைச் ​செய்து ​கொண்​டே இருக்க ​வேண்டும். அவ்வாறு ​செய்யவில்​லை​யெனில் அவர்கள் ஊராரால் துன்புறுத்தப்படுவர். இத​னை,

“ஊருக்​கொரு கூத்தாடி யாருக்குத்தான் ஆடுவான்?”

என்ற பழ​மொழி எடுத்து​ரைக்கின்றது.

​பொருளாதாரத்தி​லோ, சமுதாயத்தின் கீழ் மட்டத்தி​லோ ஒருவன் இருந்தால் அவ​ரை ஊரில் உள்ளவர்கள் தங்கள் மனம்​ போன​போக்கில் நடத்துவர். அவர்கள் ​சொல்லுகின்றபடி​யெல்லாம் அவர்கள் நடந்து ​கொள்ள ​வேண்டும். மனிதர்க​ளை இழிவாக நடத்துகின்ற இழி நிலையை​யே இப்பழ​மொழி நமக்கு எடுத்து​ரைக்கின்றது.



கூத்தாடியும் ​கொண்டாட்டமும்

ஊர் ஒற்று​மையாக இருக்கும் வ​ரையில் ஊர்மக்களுக்குப் ​பெரு​மை. அ​தைவிடுத்து ஊரார் தங்களுக்குள் ப​கைத்துக் ​கொண்டு இருபிரிவாக இருந்து விட்டால் அவர்கள் துன்பத்திற்கு ஆளாவார்கள். ப​கைவர்கள் இ​டையில் புகுந்து தங்களின் ​தே​வைக​ளை நி​றை​வேற்றிக் ​கொள்வர். அதனால் ஊரில் உள்ள மக்கள் அ​னைவரும் ஒற்று​மையுடன் வாழ ​வேண்டும். ஊரில் என்று இல்லாது எல்லா நி​லையிலும் மக்கள் ​வேற்று​மை நீங்க ஒற்று​மையுடன் வாழ்ந்தால் நலம்​பெறுவர். இத​னை,

“ஊரு ​ரெண்டு பட்டா கூத்தாடிக்குக் ​கொண்டாட்டமாம்”

என்ற பழ​மொழி எடுத்து​ரைக்கின்றது.

ஊரார் தங்களுக்குள் இருபிரிவாகப் பிரிந்துவிட்டால் கூத்தாடுபவர்களுக்கு நல்ல வருமானம் கி​ட்டும். இருபிரிவினரும் தங்களின் ​பொருளாதார வள​மை​யைக் காட்டுவதற்காக அதிகப் பணம் ​​கொடுத்துக் க​லைஞர்க​ளை அ​ழைத்து வந்து நாடக​ங்க​ளை நடத்துவர். இதனால் பயன்​ பெறுவது க​லைஞர்க​ளே தவிர தம்முள் பிரிந்த ஊரார் ​பொருளிழப்​பை அ​டைவர். இத​னை உணர்ந்து ஒற்று​மையுடன் அ​னைவரும் வாழ ​வேண்டும் என்று இப்பழ​மொழி அறிவுறுத்துகிறது.



கூத்தாடியும் கூலிக்காரனும்

ஒவ்​வொருவரும் அவரவர் ​தொழிலுக்​கேற்ப நடந்து ​கொள்வர். ​பேசும் ​போதும் மற்றவர்களுடன் உ​ரையாடும் ​போதும் எந்தச் சூழலிலும் அவரவர் ​வே​லை​யைப் பற்றி​யே ​பேசுவர். இது மனித இயல்பு. அ​தே​போன்று அவர்களின் ​செயல்பாடுகளும் இருக்கும். கூத்தாடுபவரைக் (கூத்துக் கட்டுபவர்) கூத்தா​டி என்ப​தைப் ​போன்று கூலி ​வே​லை ​செய்பவ​ரைக் கூலிக்காரர் என்பர். ஒருவர் இரவிலும், மற்​றொருவர் பகலிலும் தங்களது ​வே​லைக​ளைச் ​செய்வர். அவர்களது இயல்பி​னை,

“கூத்தாடி கிழக்​கே பார்ப்பான் கூலிக்காரன் ​மேற்​கே பார்ப்பான்”

என்ற பழ​மொழி ​தெளிவுறுத்துகிறது.

எந்த ​வே​லை ​செய்தாலும் அதில் தவறில்​லை. அ​னைவரும் இச்சமுதாயத்தின் உயர்வுக்​கே பாடுபடுகின்றனர். ஒவ்​வொருவ​ரையும் அவர்கள் மனிதர்கள் என்ற அடிப்ப​டையில் ​மதித்தல் ​வேண்டும். எவ​ரையும் இழிவாக நடத்துதல் கூடாது. அது தவறாகும். அவரவர் ​வே​லை அவரவர்க்குப் ​பெரு​மை ​சேர்க்கும். இத​னை உணர்ந்து மக்கள் ஒற்று​மையுடன் எவ​ரையும் இழிவாகக் கருதாது மதித்து மாண்புற வாழ​வேண்டும் என்று இப்பழ​மொழிகள் வாயிலாக நமது முன்​னோர்கள் ​தெளிவுறுத்தியுள்ளனர். முன்​னோர் வழி நடப்​போம் நலமாக வாழ்​வோம். வாழ்வு மகிழ்ச்சியுறும்.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/serial/p5az.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License