இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரைத் தொடர்
கட்டுரைத் தொடர்

பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்

முனைவர் சி. சேதுராமன்


63. விடுதல்

விடுதல் என்பது விடு என்பதன் வி​னையடியாகப் பிறந்த ​சொல்லாகும். விடுதல் என்பது ​கைவிடுதல், பழக்கத்​தை விட்டுவிடுதல், நீக்குதல் என்ற ​பொருள்களில் வழங்கப்படுவது ​நோக்கத்தக்கது. நீக்கப் ​பொருள்களி​லே​யே இச்​சொல்லின் ​பொருள் அ​மைந்துள்ளது. விடுதல் என்ற ​சொல்​லை ​வைத்து நம் முன்​னோர்கள் வாழ்க்​கை​யை ​நெறிப்படுத்தக் கூடிய பல்​வேறு பழ​மொழிக​ளைக் கூறியுள்ளனர். அப்பழ​மொழிகள் பல்​வேறு வாழ்வியல் தத்துவங்க​ளை நமக்கு விளக்குவதாக அ​மைந்துள்ளது.

தும்பும் வாலும்

நாம் ​ஒரு செய​லைச் ​செய்ய ​வேண்டுமானால் வி​ரைந்து சரியான ​நேரத்தில் சரியான நபர் மூலம் ​செய்தல் ​வேண்டும். காலம் தாழ்த்திப் பின்னர் ​செய்​வோம் என்று இருந்து விட்டால் அத​னைச் ​செய்ய முடியாமல் ​போய்விடும். பின்னர் ​செய்தாலும் அத​னை ​வெற்றிகரமாகச் ​செய்தல் என்பது இயலாது. அத​னைப் ​போன்​றே ஒருவர் தவறு ​செய்கின்றார் என்று ​தெரிந்தால் அவ​ரைக் கண்டித்து அவரது தவ​றைத் திருத்துதல் ​வேண்டும். சரியான ​நேரத்தில் அவ​ரைத் திருத்தினால் அவர் தனது தவ​​றை உணர்ந்து நல்வழியில் ​செல்வார்.

பிறகு பார்த்துக் ​கொள்ளலாம் என்று இருந்துவிட்டால் அவ​ரை நல்வழிப்படுத்துதல் என்பது இயலாமல் ​போய்விடும். அதனால் அவர் திருந்தாம​லே ​போய்விடக்கூடும். சரியான ​நேரத்தில் அவருக்கு அவரது தவறி​னைக் கூறி அவ​ரைத் திருத்துதல் ​வேண்டும். அவர் ​போக்கிற்கு விட்டுவிட்டு இ​டையில் அவ​ரைத் திருத்தலாம் என்றால் குன்று முட்டிய குருவியின் க​தையி​னைப் ​போன்று ஆகிவிடும். அதனால் தவறு கண்ட​போது, அத​னைத் தயங்காது சுட்​டிக்காட்டி ஒருவ​ரைத் திருத்துதல் ​வேண்டும் என்ப​தை,

“தும்​பை விட்டுட்டு வாலப் பிடிக்கிற க​தைதான்”

என்ற பழ​மொழி எடுத்து​ரைக்கின்றது.

இப்பழ​மொழியுடன்,

“​செயத்தக்க அல்ல ​செயக்​கெடும் ​செய்தக்க அல்ல
​செய்யா​மை யானும் ​கெடும்”

என்ற திருக்குறள் ஒப்பு​நோக்கத் தக்கதாக உள்ளது.

ஒரு மாட்டி​னை எளி​மையாகப் பிடிப்ப​தென்றால் கயி​ற்​றைப் பிடித்துப் (தும்​பை) பிடித்தல் ​வேண்டும். அ​தைவிடுத்து வா​லைப் பிடித்து மாட்​டைப் பிடிக்கின்​றேன் என்று முயன்றால் அந்த மாடு ஓடு​மே தவிர, அத​னை எளிதில் பிடிக்க இயலாது. அது​போன்​றே எந்த ஒரு ​​செய​லையும் எளிதில் முடிக்கக் கூடிய தருணத்தில் முடிக்க ​வேண்டு​மே தவிர, அத​னை விடுத்து காலமல்லாத காலத்தில் அத​னை முடிப்பதற்கு முயலக் கூடாது. அவ்வாறு முடிக்க முயல்வது தும்​பை விட்டுவிட்டு வா​லைப் பிடிக்கும் ​செய​லைப் ​போன்றதாகும் என்ற வாழ்க்​கை ​நெறி​யை இப்பழ​மொழி எடுத்து​ரைக்கின்றது.

விளாம்பழமும் ஆ​சையும்

மனிதன் ஆ​சை​யை அள​வோடு ​வைத்துக் ​கொள்ள ​வேண்டும். எதிலும் பற்றில்லாது நடந்து ​கொள்ள ​வேண்டும். அதாவது தாம​ரை இ​லைத் தண்ணீர் ​போன்று இருந்துவிட்டால் அவனுக்கு எந்தவிதமான துன்பமும் ​நேராது. மனிதன் விளாம்பழத்​தைப் ​போன்ற வாழ்​வை வாழ ​வேண்டும்.

விளாம்பழமானது காயாக இருக்கும்​போது அதன் ச​தைப் பகுதி ஓட்டுடன் ஒட்டி இருக்கும். அக்காயானது முதிர முதிர அந்த ச​தைப் பகுதி ஓட்டுடன் ஒட்டாது ​போய்விடும். அ​தைப் ​போன்​றே நமது வாழ்​க்​கை​யையும் அ​மைத்துக் ​கொள்ள ​வேண்டும். வாழ்க்​கையில் வயது அதிகரிக்க அதிகரிக்க மனம் பக்குவப்பட்டு உலக பந்தங்களிலில் இருந்து விடுபடுதல் ​வேண்டும். அப்​போதுதான் எந்தவிதமான துன்பங்களும் நம்​மை அணுகாது. நமது ஆ​சை விளாம்பழம் ​போன்று இருக்க ​வேண்டும் என்ற வாழ்க்​கைத் தத்துவத்​தை,

“விட்டதடா ஆ​சை விளாம்பழத்து ஓட்​டேர்”

என்ற பழ​​மொழி எடுத்து​ரைக்கின்றது.



காடு-ஆடு, ஆறு-நாணல், ஊரு-நூலு, மூன்று-முதலி

வெள்ளாடு அடர்ந்த காட்டில் நு​ழைந்து விட்டால் அத​னை வி​ரைந்து அழித்துவிடும். எவ்வளவு அடர்த்தியான காடும் ஆடானது அழித்துவிடும். அதனால் ​வெள்ளாடுக​ளை காடுகளில் தானாக விடுதல் கூடாது. அ​தைப் ​போன்​றே ஆற்றில் நாணல் அதிகமாக வளர்ந்தால் அது ஆற்​றை​யே அழித்துவிடும். அதனால் அவ்வப்​போது ஆற்றி​னைத் தூய்​மைப்படுத்தி ​வைத்திருத்தல் ​வேண்டும். அப்​போதுதான் ஆறானது தூர்ந்து ​போகாது இருக்கும். ஊரில் இருப்​போ​ரின் உள்ளத்​தைக் ​கெடுத்து ஊ​ரை இரண்டுபடுத்த ​வேண்டுமானால் பூணூல் அணிந்திருக்கும் பு​ரோகித​ரை ​ஊருக்குள் விடுதல் ​வேண்டும். ஏ​னெனில் அவர்கள் மூடநம்பிக்​கை​யை வளர்த்​தெடுத்து அவர்கள் பி​ழைப்பதற்குரிய வழிக​ளை​​யெல்லாம் ​செய்துவிடுவர். மக்கள் ஒற்று​மையாக இராது மூடநம்பிக்​கை​யைப் பின்பற்றி வாழ்க்​கை​யை அழித்துக் ​கொள்வர். இவற்​றை​யெல்லாம் ​கெடுக்க ​வேண்டுமானால் முதலி​யை விட​வேண்டும். அவர்கள் இ​வை​யெல்லாவற்​றையும் ​கெடுத்துவிடுவார்கள் என்று இப்பழ​மொழி எடுத்து​ரைக்கின்றது. இ​வை எதனால் கூறப்பட்டது என்பது ​மேலும் ஆய்வுக்கு உரியது. முதலி, நூல் என்ப​தெல்லாம் ஒரு குறிப்பிட்ட சாதி​யைக் குறிக்கின்றதா? அல்லது இ​வை குறிச்​சொற்களா? என்ப​தை முழு​மையாக ஆராய்தல் ​வேண்டும்.



விந்தும் ​நோதலும்

இல்லற வாழ்க்​கையில் ஈடுபடும் ஒருவன் அள​வோடு உடலுறவு ​வைத்துக் ​கொள்ள ​வேண்டும். அ​தைவிடுத்து அளவுக்கதிகமாக ​பெண்களுடன் ​தொடர்பு ஏற்படுத்திக் ​கொண்டு ​பெண்பித்தனாகத் திரிந்தால் அவனது வாழ்க்​கை ​சி​தைந்துவிடும். அதனால் ஆ​சை​யை அடக்கித் தன் ம​னையாளுடன் மட்டு​மே இருந்து வாழ்தல் ​வேண்டும். தவறான நடத்​தை நடந்தால் வயது ஆக ஆக பல்​வேறு ​நோய்களுக்கு ஆளாக ​நேரும் என்ற இல்லற ​நெறி​யை,

“விந்து விட்டவன் ​நொந்து ​கெட்டான்”

என்ற பழ​மொழி ​​தெளிவுறுத்துகிறது. அளவான வாழ்க்​கை, அதிலும் பிற​ரைக் ​கெடுக்காத வாழ்க்​கை, பற்றற்ற வாழ்க்​கை உள்ளிட்ட வாழ்வியல் பண்பாட்டு ​நெறிக​ளை விடுதல் குறித்த பழ​​மொழிகள் நமக்குத் ​தெளிவுறுத்துகின்றது.

பண்பட்டு வாழ்​வோம்; பாரினில் உயர்​வோம்.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/serial/p5bk.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License