இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரைத் தொடர்
கட்டுரைத் தொடர்

பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்

முனைவர் சி. சேதுராமன்


18. சொல்லும் செயலும்

மக்கள் பலநிலைகளில் செயல்களுக்குத் தகுந்தாற்போன்றும் சூழல்களுக்குத் தகுந்தாற் போன்றும் பேசுவர். அவர்ளின் சொல்லுக்கும் செயலுக்கும் பொருத்தம் இருக்கிறதா? எனில் இல்லை என்றே கூறலாம். ஒழுக்கத்தைப் பற்றி விரிவாகப் பேசுவர். பல உதாரணங்களைப் பல அறிஞர்களின் நூல்களில் இருந்து எடுத்துக் காட்டுவர். ஆனால் அவர் தாம் பிறருக்குக் கூறும் அறிவுரைகளில் ஒன்றையேனும் கடைப்பிடித்து நடக்க மாட்டார்கள். ஏன் இந்த நிலை? இதற்குப் பல காரணங்கள் உண்டு. மனிதர்களுக்குத் தகுந்தாற்போன்றும், இடம், சூழல்கள் ஆகியவற்றிற்கு ஏற்பவும் மனிதர்களின் பேச்சு அமைகின்றது.

மனிதனின் உருவத் தோற்றத்திற்கும் பேச்சிற்கும் செயலுக்கும் தொடர்பு இருக்கிறதா? எனில் தொடர்பில்லை என்றே பதில் வருகிறது. நன்றாக உடை உடுத்தி இருப்பார். ஆனால் பேசும் பேச்சுக் கீழ்த்தரமானதாக இருக்கும். சிலர் கிழிந்த உடை உடுத்தி இருப்பார். ஆனால் அவர் நல்லவிதமாகப் பேசுவார். இன்னும் சிலரோ தோற்றத்திலும் பேச்சிலும் நல்லவர்களாகக் காட்சியளிப்பர். ஆனால் அவர்களின் செயல் மிகவும் கீழ்த்தரமானதாக இருக்கும். இத்தகைய மனிதர்களின் பண்பினை வெளிப்படுத்துவதாகப் பழமொழிகள் அமைந்திருப்பது வியப்பிற்குரிய ஒன்றாகும்.



ஊருக்கு உபதேசம்

அனைவருக்கும் இன்று எளிதில் கிடைக்கும் ஒன்று அறிவுரை. பெரியவர் முதல் சிறியவர் வரை அவரவர்களுக்குத் தகுந்தாற் போன்று அறிவுரைகளை மற்றவருக்குக் கூறுகின்றனர். இங்ஙனம் அறிவுரை கூறுபவர்கள் முதலில் தாங்கள் கூறிய வண்ணம் தம் வாழ்வில் நடக்கின்றனரா? எனில் இல்லை எனலாம். ஒரு சிலர்தான் பின்பற்றுகின்றனர். மற்றவருக்குக் கூறும் முன்னர் அதனைத் தாம் கடைபிடித்தல் வேண்டும். அப்போதுதான் அவ்வறிவுரைக்கு மதிப்பு ஏற்படும். பிறரும் அதனைக் கேட்டு நடப்பர். ஆனால் பலர் அவ்வாறு நடப்பதில்லை. சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக இருப்பர். அவர்களிடம் சென்று, ‘‘என்ன நீங்கள் சொன்னதற்கும் செயல்படுவதற்கும் பொருந்தாமல் இருக்கிறதே? நீங்கள் இவ்வாறு நடக்கலாமா?’’ என்று கேட்டால் அவர்,

‘‘ஊருக்குத்தான் உபதேசம்
உனக்கும் எனக்கும் இல்லைன்னானாம்’’

என்று கூறுவர். இதனைப் பற்றி வேடிக்கையாக ஒரு கதை மக்களிடத்தில் வழங்கப்படுகின்றது.



ஒரு பேச்சாளர் ஒருவர் இருந்தார். அவர் எதைப் பேசினாலும் பிறர் மனதில் பதியுமாறு பேசுவார். இதனைப் பலரும் ரசித்துக் கேட்பர். அவர் ஒருமுறை தனது மனைவியுடன் ஒரு கூட்டத்திற்குச் சென்றார். அக்கூட்டத்தில் வரதட்சணை வாங்கக் கூடாது என்பது குறித்து மிகவும் உணர்ச்சிகரமாகப் பேசினார்.

வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் குற்றம். அவர்களுக்கு வாழ்வில் நிம்மதி கிடைக்காது. அவ்வாறு வரதட்சணை வாங்குபவர் நரகத்திற்குத் தான் செல்வர் என்று பேசியதைக் கேட்ட மக்கள் அவரைப் பாராட்டினர்.

அவருடைய மனைவி தனது கணவனைப் பெருமை பொங்கப் பார்த்தார். அவரும் தனது கணவரைப் பாராட்டினார். மறுநாள் அவர்களிருவரும் தங்களது மகனுக்குப் பெண் பார்க்கப் பெண் வீட்ற்குச் சென்றனர். பெண்ணும் பிடித்து விட்டது. பெண் வீட்டாருக்கும் மாப்பிள்ளையைப் பிடித்து விட்டது.

அடுத்துப் பெண் வீட்டார் செய்ய வேண்டிய செய்முறைகள் குறித்தும் வரதட்சணை குறித்தும் பல நிபந்தனைகளை மகனின் சார்பாக பேச்சாளர் கேட்டார். அதனைக் கேட்டதும் அவரின் மனைவிக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவரது மனைவி அவரைத் தனியே அழைத்துச் சென்று,

‘‘என்னங்க என்ன இப்படிப் பெண்வீட்டாரிடம் வரதட்சணை கேட்கிறீர்கள். நீங்க நேற்று மேடையில அப்படி வீராவேசமா பலருக்கும் அறிவுரை கூறிப் பேசினீங்க இன்று இப்படி நடந்துக்குறீங்க! கொஞ்சங்கூட இது சரியில்லைங்க’’ என்றார்.

இதனைக் கேட்ட பேச்சாளர், மனைவியைப் பார்த்து, ‘‘அடிப்போடி கூறு கெட்டவளே, விவரம் கெட்டவளா இருக்கியே. ஊருக்குத் தான்டி உபதேசம். உனக்கும் எனக்கும் இல்லைடி’’ என்று கூறினார். மனைவி வாயடைத்துப் போனார்.

அறிவுரை என்பது பிறருக்கத்தான் தமக்கு இல்லை என்பதுபோல் பலரும் இன்று நடந்து கொள்கின்றனர். இது கயமைத்தனமாகும். இத்தகைய கயமைத் தனமுள்ளவர்களின் உளக்கீழ்மையை இப்பழமொழி எடுத்துரைப்பதாக உள்ளது. தாங்கள் சொன்னவற்றை முதலில் தாங்கள் கடைபிடித்து வாழ்ந்ததால்தான் காந்திமகான், புத்தர், ஏசுபெருமான் உள்ளிட்டோர் கூறியவற்றை அனைவரும் தட்டாது கேட்டு நடந்தனர். ஆனால் இன்று அத்தகையோர் குறைந்து விட்டதனால் அறிவுரை கூறினாலும் அதனைக் கேட்டு யாரும் நடப்பதில்லை என்பதை உணர்த்துவதுடன் அறிவுரை கூறும் முன்பு தாம் அவற்றைக் கடைப்பிடித்து நடத்தல் வேண்டும் என்ற வாழ்வியல் நெறியையும் இப்பழமொழி நமக்கு எடுத்துரைக்கின்றது.



படிப்பதும் - இடிப்பதும்

பலரின் சொல்லும் செயலும் முரண்பட்டுக் காணப்படும். இனிமையாகவும், உயர்ந்த கருத்துக்களையும் கூறுவர். ஆனால் அதற்கு மாறாக மிகவும் கீழ்த்தரமான செயல்களைச் செய்வர். இராவணன் சாமகீதம் பாடுவதில் வல்லவன். சிவபக்தன். சிவவழிபாடு செய்த பின்னரே அனைத்தையும் செய்வான். இசையில் வல்லவன். வீரம் நிறைந்தவன். இப்படிப்பட்டவன் உயர்ந்தவனாகத்தானே இருக்க வேண்டும். அவனது செயலோ கீழ்த்தரமாக இருந்தது.



தன் மனைவி இருக்கப் பிறன் மனைவியைக் கவர்ந்தான். இராவணனது இவ்விழி செயலை,

‘‘பேசுவது மானம் பேணுவது காமம்
கூசுவது மானிடரை நனிநம கொற்றம்’’

என்று கும்பகர்ணன் வாயிலாகக் கம்பர் குறிப்பிடுகின்றார்.

இராவணனைப் போன்று சொல்லுக்கும் செயலுக்கும் ஒவ்வாது நடப்போரின் பண்பினை,

‘‘படிக்கிறது இராமாயணம்
இடிக்கிறதெல்லாம் பெருமாள் கோயில்’’

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.

பெருமாளின் புகழ் பாடும் நூல் இராமாயணம். அதனைப் படித்துக் கொண்டே பெருமாளின் கோவிலை இடிப்பது குணக்கேடான செயலாகும். இவ்வாறு சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக மனிதன் நடக்கக் கூடாது என்ற பண்பாட்டு நெறியையும் இப்பழமொழி வாயிலாக நமது முன்னோர்கள் நமக்கு எடுத்துரைத்து இருப்பது போற்றுதற்குரியதாகும்.



சொல்வதும் செய்வதும்

நல்லனவற்றை யாராவது கூறினால் அதனை எடுத்துக் கொள்ள வேண்டும். பலர் நல்ல கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாது அவர்கள் ஏன் நமக்கு மட்டும் நல்ல கருத்துக்களைக் கூற வேண்டும் என்று காரணங்களைத் தேடிக் கொண்டிருப்பர். உலகில் எல்லோரும் ஏற்கக் கூடிய உண்மைகளைக் கூட அவர்களால் ஏற்க இயலாது அவர்கள் காரணம் காண முயல்வர். இத்தகையவர்களின் இயல்பினை,

‘‘தோசையைத் திண்ணுடான்னா
தோசையில இருக்கிற ஓட்டையை
எண்ணிக் கொண்டிருந்தானாம்’’

என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது.

பசிப்பவனுக்கு உண்ணத் தோசையைக் கொடுத்தால் அவன் உண்ணாது அதில் உள்ள துளைகளை எண்ணிக் கொண்டிருப்பது சொல்லுகின்ற கருத்துக்களை விட்டுவிட்டு அவருக்குத் தோன்றுகின்றவற்றையே செய்து கொண்டிருப்பர். இத்தகையோர் யாருடைய கருத்துக்களையும் ஏற்றுக் கொள்வதில்லை. பிறர் சொல்லுகின்ற கருத்தில் மனதைச் செலுத்த மாட்டார்கள். இவர்களின் இத்தகைய பண்பினையே இப்பழமொழி மொழிகின்றது.



சொல்வதும் கேட்பதும்

நம்மில் சிலர் நாம் என்ன சொன்னாலும் கேட்டுக்கொண்டே இருப்பர். எதற்கும் மறுப்புக் கூறாது புரிந்ததுபோல் கேட்பர். சரி அவருக்கு நாம் கூறியவை நன்றாகப் புரிந்து விட்டது என்று கருதினால் அவரோ ஆமாம் இவ்வளவு நேரம் என்னமோ சொன்னீர்களே? என்ன சொன்னீர்கள்? நான் கவனிக்கவில்லை. எனக்கு மீண்டும் கூறுங்கள் என்று கேட்பர். சரி அவர் கேட்கிறாரே என்று மீளவும் கூறினால் திரும்பவும் புரியவில்லை என்று புரியாத வினாக்களைக் கேட்டுக் கொண்டே இருப்பர். இவர்களின் இத்தகைய மனநிலையை,

‘‘விடிய விடியக் கதைகேட்டு
சீதைக்கு ராமன் சித்தப்பன்னானாம்’’

என்ற பழமொழி எடுத்துரைக்கிறது.

இராமனின் மனைவி சீதை. இஃது அனைவருக்கும் நன்கு தெரியும். ஆனால் எதனையும் புரிந்து கொள்ளாத மனநிலை கொண்டவர்கள் தவறாகவே புரிந்து கொள்வர். இத்தகைய மனப்பண்பை உடையவர்களைத் திருத்துவது என்பது அரிது. அவர்கள் திருந்த மாட்டார்கள். அத்தகையோரை நன்கு புரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற் போல் நடந்து கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்துத்தலையும் இப்பழமொழி வாயிலாக நம் முன்னோர்கள் செய்துள்ளனர்.

சொல்லும் செயலும் முரண்படாது வாழ்வில் நடந்து கொள்ள வேண்டும். சொல் வேறு, செயல் வேறு என்றிருந்தால் நம்பகத்தன்மை குறைந்து பிறர் நம்மை மதிக்காத நிலைமை ஏற்படும். நமது தன் மதிப்பும் தரமும் குறைந்து நாளடைவில் சமுதாயத்தில் மதிப்பிழந்து விடுவோம். அதனால் சொல்வதைச் செய்து செய்வதைச் சொல்லி நேர்பட வாழ்வோம். வாழ்வு வளமுறும்.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/serial/p5s.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License