இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரைத் தொடர்
கட்டுரைத் தொடர் - 8

என் பார்வையில்...

முனைவர் மு. பழனியப்பன்


2. படைப்பவரும், காப்பவரும், அழிப்பவரும் திருமால்

தமிழில் படைக்கப் பெற்றுள்ளள தூது இலக்கியங்கள் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே நிகழும் தூது போவனவாக இருக்கின்றனவோ இல்லையோ தமிழைப் படிப்பவருக்கும் படைப்பவருக்கும் இடையே தூது செல்வனவாக உள்ளன. படைப்பாளரையும் படிப்பவரையும் இணைப்பது இலக்கியங்கள்தானே. இலக்கியங்கள் தரமுடையனவாக இருந்தால் படிப்பவரை அவை கவர்ந்து விடுகின்றன. தூது இலக்கியங்கள் தூது சென்று வெற்றியடைந்தனவோ இல்லையோ, படைப்பாளர்களையும் படிப்பவரையும் இணைத்து இலக்கிய இன்பம் பெறச் செய்வதில் வெற்றி பெற்றுவிடுகின்றன.

தமிழ் விடு தூது என்ற இலக்கியத்தின் வழியாகத் தமிழ் இலக்கிய வரலாற்றின் கால வரிசை முறையை அறிந்து கொள்ளமுடிகின்றது. அழகர் கிள்ளை விடு தூது வழியாகச் மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவைப் பற்றி அறிந்து கொள்ள முடிகின்றது.

கூடல் திருநகரில் ஏடு அலர் தாரான் எழுந்தருளி ஆடலுடன்... தல்லாகுளம் வந்தது

என்று சித்திரைத் திருவிழா நடந்த முறையை, நடந்த இடங்களை அழகர் கிள்ளைவிடு தூது சுட்டிக் காட்டுகின்றது. தல்லாகுளம் என்ற இடத்தை, தேனூர் மண்டபத்தில் திருமால் எழுந்தருளும் நிலையை, அழகர் கிள்ளைவிடு தூது பதிவு செய்துள்ளது. இதன் காரணமாகச் சித்திரை விழாவின் பழமையை நாம் உணர்ந்து கொள்ள முடிகின்றது. இப்படித் தூது இலக்கியங்கள் தமிழில் தனித்த இடத்தைப் பெறுகின்றன.

அழகர் கிள்ளை விடு தூது என்ற இலக்கியத்தை எழுதியவர் பலபட்டடை சொக்கநாதப் புலவர் ஆவார். தலைவி ஒருத்தி அழகர் கோயிலில் உள்ள அழகரை விரும்பிக் காதல் கொள்கிறாள். அழகரிடம் அவர் அணிந்திருக்கும் மாலையை வாங்கி வரத் தூது அனுப்புகிறாள். தலைவி வளர்த்த கிளியும் தலைவியை ஏமாற்றாது அழகர் மலைக்கு வந்து அழகரிடம் மாலை கேட்டு நிற்கிறது. நன்றி உணர்வு மிக்க கிளி அது. அழகர் அருகில் இருக்கும் நேரங்களில் கீர்த்தனம் பாடும் கிளி அது. அழகரோடு நாச்சியார் பக்கத்தில் அமர்ந்து இருந்தால் அவர்களின் சிநேகத்தைக் கெடுக்காமல் நாச்சியாரின் கைகளில் அமர்ந்து அழகு செய்யும் கிளி அது. அந்தக் கிளியைப் பார்த்து, நீ ஏன் இங்கு வந்தாய் என்று கேட்டால் அதற்கு அக்கிளி “மணிமாலே உன்னை வணங்க வந்தேன் என்று சொல்லும்”. ஆண்டாள் அருகே இருப்பதை அறிந்து கொண்டு அவள் அணிந்துக் கொடுத்த மாலையைத் தரச் சொல்லி தெலுங்கில் அழகருடன் பேசும் கிளி அது. ஆண்டாளின் தமிழுக்கு நம் தமிழ் ஈடாக இயலாது என்று கிளி தெலுங்கில் பேசுகிறதாம். ஆகவே இக்கிளியே பொருத்தமானது என்று கருதித் தலைவி அதனைத் தூதாக விடுத்தாள்.



அழகர் கிள்ளை விடு தூதில் பெருமாளின் பெருமைகளைப் பலபடப் பேசுகிறார் பலபட்டடைச் சொக்கநாத புலவர். அவற்றில் சில பகுதிகள் அவரின் கவி நுட்பத்தைக் காட்டுகின்றன.

உலகைக் காக்கும் பணியைத் திருமால் செய்கிறார். உலகைக் காக்கும் பணியை அவர் செய்கிறார் என்றால் உலகை உருவாக்கும் பணியை யார் செய்கிறார் என்ற கேள்வி எழும். உலகை உருவாக்கும் பணியை பிரம்மா செய்கிறார் என்று பதில் சொல்ல இயலும். இருந்தாலும் உலகைக் காக்கும் திருமாலே, உலகைப் படைக்கவும் செய்கிறார் என்ற கருத்தைப் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் நிறுவுகின்றார்.

திருமால் பிரம்மாவின் தொழிலையும் செய்கிறார் என்று கொள்வோம். அழித்தல் தொழிலைச் சிவபிரான்தானே செய்கிறார். அழித்தல் தொழிலையும் திருமாலே செய்வதாகக் காட்டுகிறார் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்.

உலகு அழிதலும், அழித்தபின் உருவாக்கலும், உருவாக்கிய பின் காத்தலும் என்ற முத்தொழில்கள் முக்கியமானவை. இவற்றைத் திருமாலே செய்கிறார் என்று தன் கவிதையால் மாயம் செய்கிறார் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்.

அங்கண் உலகு
உண்ட கனிவாயன் --- உறையும் திருவயிற்றான்,
கொண்டபடி ஈன்ற கொப்பூழான் -பூமி
அளந்த திருத்தாளான் அன்று ஏற்ற கையன்

என்பது அழகர் கிள்ளை விடு தூதில் வரும் அடிகள் ஆகும். இவ்வடிகள் அழித்தல், ஆக்கல், காத்தல் அனைத்தையும் திருமாலே செய்வதாகக் குறிக்கின்றன.

கண்ணன் சிறு குழந்தையாக இருந்த பொழுது செய்த திருவிiளாயாடல்களில் ஒன்று மண்ணை உண்ணும் திருவிளையாட்டு ஆகும். தன் தாய் யசோதை வெண்ணையைத் தான் உண்ணத் தராத கோபத்தில் கண்ணன் மண்ணை உண்கிறான். அவன் மண்ணை உண்டதைக் கண்ட யசோதை ஓடிவந்து அவன் உண்ட மண்ணை உதிர்க்க வைக்கிறாள். வாயைத் திறந்துக் காட்டச் சொல்லுகிறாள். கண்ணனும் வாயைத் திறக்கிறான். கண்ணனின் வாயில் அவன் உண்ட மண்ணைக் காணவில்லை. யசோதைக்கு அனைத்து உலகங்களும் கண்ணன் வாயில் இருப்பது தெரியவருகிறது. இந்த அரிய காட்சியை யசோதை காண்கிறாள், பிரமிக்கிறாள்.

எனவே உலகின் அழிவுநிலையில் தன் வாயில் அவற்றை உண்டார் கண்ணபிரான். எனவே உலகை அழிநிலையில் தனக்குள் அடக்கி உலகைக் காக்கும் பெரும்பணியை அவர் செய்வதால் ருத்ரனின் பணியும் அவர் பணியாகின்றது. உண்ட உலகங்களைத் தன் வயிற்றுக்குள் பதமாக வைத்துத் திருமால் காக்கின்றார்.

வயிற்றுக்குள் அமிழ்ந்திருக்கும் உலகங்களை எப்படி வெளிப்படுத்தித் தோற்றம் செய்வது. தோற்றுவிப்பதும் திருமாலின் கடனல்லவா. கொண்டபடி ஈன்ற கொப்பூழான் என்று அதற்கும் திருமாலே காரணம் என்று உரைக்கிறது அழகர் கிள்ளைவிடு தூது. கண்ணன் உலகங்களை எந்த வரிசையில் விழுங்கினானோ அதே வரிசையில் வெளிப்பட வைக்க திருமால் எண்ணம் கொள்கிறார். தன் வயிற்றின் கொப்புழ்ப் பகுதியில் இருந்துத் தாமரை ஒன்றை எழச் செய்கிறார் திருமால். எழுந்த தாமரையில் பிரம்மாவைப் படைப்புக் கடவுளாக நியமிக்கிறார் திருமால். இதன் காரணமாக உலகைத் தோற்றம் செய்வதற்கும் ஆதியாக இருப்பது திருமாலே என்பது பலபட்டடைச் சொக்கநாதரின் கருத்து.



இவ்வாறு படைத்த பல உலகங்களை அவை சரியாக உள்ளனவா என்று அளந்து பார்க்கும் அளப்பரிய பணியும் திருமாலுக்கு உரியதாகும். பூமி அளந்த திருத்தாளன் என்று அழகர் கிள்ளை விடு தூதில் திருமால் காக்கும் பணி காட்டப்பெறுகிறது. உலகங்கள் சரியாக இயங்குகின்றனவா என அளக்கத் தன் கால்களை அளவீட்டுக் கருவியாகத் திருமால் பயன்படுத் அளந்து காக்கிறார்.

திருமாலை இந்தக் காக்கும் பணியைச் செய்யச் சொல்லிச் சொன்னவர் யார் என்று யாராவது கேட்டால் அதற்குப் பதிலையும் தருகிறார் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்.

அன்று ஏற்ற கையன் - என்று மாவலிச் சக்கரவர்த்திக்கு உலகைக் காப்பேன் என்று திருமால் கைகளில் நீர் ஊற்றிச் சத்தியம் செய்து தந்ததாகக் குறிக்கிறார் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர். இதன் காரணமாக உலகை அழித்தும், பிறப்பித்தும், காத்தும் முக்கடமைகளைச் செய்து வருபவர் திருமால் என்பதை உறுதியாக உரைக்கிறது அழகர் கிள்ளை விடு தூது. மூன்றடிக்குள் முத்தொழிலையும் அடக்கி அந்த முத்தொழில்களையும் திருமாலே செய்கிறார் என்று சான்றுகளும் காட்டும் கவி வல்லமை பலபட்டடைச் சொக்கநாதப் புலவரின் பெரு வல்லமையாகும்.



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/serial/p8b.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License