இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரைத் தொடர்
கட்டுரைத் தொடர் - 8

என் பார்வையில்...

முனைவர் மு. பழனியப்பன்


5. தமிழலங்காரம்

வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் முருகப் பெருமான் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர். இவர் கௌமார நெறி நின்ற சான்றோர். அவர் பாடிய புலவர் புராணம் தமிழ்ப் புலவர்கள் தம் அருமை பெருமைகளை எடுத்துரைக்கும். அவர் இயற்றிய அறுவகை இலக்கணம் தமிழ் இலக்கணத்திற்குக் கூடுதல் பெருமை சேர்ப்பது. இவர் இயற்றிய தமிழலங்காரம் தமிழின் பெருமையை எடுத்துரைப்பது. தமிழ்ப் பாடல்கள் பாடியதால் ஏற்பட்ட சாதனைகளை எடுத்துக் காட்டுவது. ஒரு நூறு பாடல்களைக் கொண்டது. இந்நூல் தமிழ் மொழியின் வெற்றியைத் தரணிக்குக் காட்டுவது.

இந்நூலில் திருச்செந்தூர் முருகப்பெருமானைப் பாடிப் பரவி நலம் பெற்ற பல புலவர்களைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. முத்துவயிரவன், பகழிக் கூத்தர், வீரபாண்டியப் புலவர், கந்தசாமிப் புலவர் என்று பலர் தமிழ்ப் பாடல்கள் பாடித் திருச்செந்தூர் முருகன் அருளைப் பெற்று வளம் பெற்றுள்ளனர். தக்க புலவர்கள் தம் பாடல்களினால் பெற்ற பெருவரத்தை வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் வழி அறிய முடிகின்றது. இவை தவிர, சரசுவதி தேவி, உமையம்பிகை, சிவபெருமான் போன்ற பல கடவுளர்களும் தமிழ்ப்பாடல்களுக்குத் தந்த பெருவளத்தையும் இந்நூலில் தண்டபாணி சுவாமிகள் குறிப்பிடடுக் காட்டியுள்ளார். இதன் காரணமாகத் தமிழால் எதுவும் முடியும் என்ற நிலையை அறிந்து கொள்ளமுடிகின்றது.

முத்துவயிரவன் என்ற புலவர் திருச்செந்தூர் முருகன் மீது முப்பதாயிரம் கீர்த்தனைகள் பாடியுள்ளார். இவர் ஒரு மாற்றுத் திறனாளி. இவர் தம் கீர்த்தனை ஒன்றில் முருகனைத்தான் காணவேண்டும் என்றும், தன்னோடு இருக்கும் மற்றவர்களும் காணவேண்டும் என்று பாடினார். அதில் “கொண்டு வா மயிலே குமர கெம்பீரனை” என்று மயிலுக்கு ஆணையிட்டார்.

இவரின் ஆணைக்கு இணங்கிய மயில் குமாரக் கடவுளைத் தன் மீதேற்றிக் கொண்டு வந்தது. அத்தோடு கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளியான முத்துவயிரவப் புலவர்க்குக் கண்பார்வையும் கிடைத்தது. கண்ணார அவர் முருகப்பெருமானைக் கண்டு மகிழ்ந்தார். தன்னையும் தந்து, கண்ணையும் தந்தது தமிழ்ப்பாடல் என்பதே தமிழுக்குக் கிடைத்த சிறப்பு.

திருச்செந்திலாண்டவர் பிள்ளைத்தமிழ் என்ற நூலைப் பகழிக் கூத்தர் இயற்றினார். அந்நூலை அரங்கேற்றம் செய்ய அவர் பல முறைகள் முயற்சித்தார். ஆனால் முயற்சி பலிக்கவில்லை. முருகப்பெருமானிடம் உன்னைப் பற்றிப் பாடிய நூலை நீயே அரங்கேற்றித் தரவேண்டும் என்றார். கனிவாய்க் கேட்ட முருகன் தன்னுடைய பதக்கம் ஒன்றை அவருக்கு நல்கினான். அதுமட்டும் இல்லாமல் மக்கள் தம் கனவில் தோன்றி, பிள்ளைத்தமிழ் நூல் அரங்கேற்றம் செய்யப்பட உள்ளது. எனவே அனைவரும் வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தான். பதக்கமும் தந்து, மக்கள் கூட்டத்தையும் அளித்தது தமிழ்ப்பாட்டு.

வீரபாண்டியப் புலவர் என்பவர் திருச்செந்தூருக்கு அருகில் உள்ள ஆற்றூரில் வசித்து வந்தார். அவரின் புலமையை அப்பகுதி மன்னன் ஒருவன் சோதித்துப் பார்க்க விரும்பினான். அவரை அழைத்து, ஒரு புளிய மரத்தின் துண்டினைக் காட்டினான். அதனைப் புலவர் தன் பாட்டால் மேலும் இரு துண்டாக்கவேண்டும் என்று மன்னன் ஒரு சோதனை வைத்தான். அப்புலவர் “எப்படியும் செந்தூர்க்கிறையவா” என்று பாடி புளியமரத்துண்டை மேலும் இரண்டாக்கினார். இதைச் செய்தது தமிழ்.



வீரபாண்டியப் புலவரின் வாழ்வில் மற்றொரு முறையும் முருகன் அவர் பாடிய தமிழுக்காக உதவி செய்தான். வீரபாண்டியப் புலவருக்கு ஒரு மகள் இருந்தாள். அம்மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து, மணமுடித்தார் வீரபாண்டியனார். ஆனால் மகளின் வாழ்க்கை இனிமையாக இல்லை, மருமகன் கடல்கடந்து கண்காணாத இடத்திற்குச் சென்றுவிட்டான். வீரபாண்டியப் புலவர் திருச்செந்தூர் முருகனிடம் வேண்டுகோள் வைத்தார். ஆயிரத்து எட்டு அண்டங்களை ஆண்ட சூரபதுமனிடம் தூது சென்ற வீரபாகுத் தேவரை என் மகளுக்காக மருமகனிடம் தூதாக அனுப்பி அவள் வாழ்வு நலமாக அமையச் செய்வாய் என்றார். இவ்வேண்டுகோளுக்காக, முருகப்பெருமான் சூரபதுமனைத் தூதாக அனுப்பி வீரபாண்டியனார் மகளின் வாழ்வு சிறக்கப் பணியாற்றினர். அன்றும் தூது நடந்தது தமிழ், இன்றும் தூது நடக்கிறது என்றும் தூது நடக்கும் தமிழ்.இதுவே தமிழின் சிறப்பு.

கந்தசாமிப்புலவர் என்பரும் திருச்செந்தூர் முருகனைத் தமிழில் பாடி பற்பல பயன் பெற்றுள்ளார். அதனையும் காட்டியுள்ளார் தண்டபாணி சுவாமிகள். ஒருமுறை கந்தசாமிப்புலவர் சேர மன்னன் ஒருவனைப் பார்க்கச் செல்வதாக இருந்தார். இதற்காக முருகப்பெருமானிடம் சேர நாடு செல்லத் துணைக்கு வரும்படி பாடலால் அழைக்கிறார். இப்பாடலைக் கேட்ட முருகன் சேர மன்னனின் கனவில் சென்று கந்தசாமிப் புலவர் வருவதை உரைக்கிறான். இதன் காரணமாகக் கந்தசாமிப் புலவருக்குச் சேரமன்னன் பெருத்த வரவேற்பு அளிக்கிறான். அதுமட்டும் இல்லாது கந்தசாமிப் புலவருக்குப் பல வெகுமதிகள் அளிக்கிறான். இவ்வாறு தமிழால் கந்தசாமிப்புலவரின் வாழ்க்கை வளம்பெற்றது.

கந்தசாமிப் புலவர் வெற்றிலை போடும் பழக்கம் உடையவர். அவர் திருச்செந்தூர் கடற்கரையில் இருந்தபடி வெற்றிலையைப் போட்டுக் கொண்டே முருகன் மீது பாடல்களைப் பாடினார். அருகிருந்து முருகப்பெருமான் இப்பாடல்களைக் கேட்டார். அவ்வாறு கேட்கும்போது கந்தசாமிப் புலவர் துப்பிய வெற்றிலைச் சாறு முருகப்பெருமானின் தலையில் கட்டப் பெற்றிருந்த பரிவட்டத்தில் தெரிக்கிறது. தவித்துப் போனார் கந்தசாமிப்புலவர். இதே எச்சில் திருச்செந்தூர் கோயிலின் உள் உள்ள முருகப்பெருமான் ஆடையிலும் காணப்பட்டது கண்டு எல்லோரும் அதிசயித்தனர். இந்த அளவிற்குத் தமிழுக்காக எச்சிலையும் ஏற்ற பெருமானாக முருகப்பெருமான் விளங்கினார் என்று வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பாடுகிறார்.

“முச்சிலும் செங்கைக் கழங்கும் கொள்வார் தம்மை மூரிச் சிறார்
மெச்சிய சிற்றில் வியன் வீதிச் செந்திலில் மேய செவ்வேள்
நச்சியவாறு தமிழால் துதிக்குமோர் நாவலன் தன்
எச்சிலும் கீழ் விழலாகதென்று ஆடையில் ஏந்தினனே”

என்று இதனைப் பாடலாக வரைகிறார் வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள்.

கழங்கு ஆடும் செல்வச் சிறுமியர்கள் தம் கரங்கள் சிவக்கும்படி கட்டிய சிற்றில்கள் பலவாக இருக்கும் திருச்செந்தூரில் வாழும் செந்தில் ஆண்டவர், தமிழ்ப் பாக்களால் துதிக்கும் புலவரின் எச்சிலும் கீழே விழுந்திடக் கூடாது என்று ஆடையில் ஏந்தினான் என்றால் தமிழுக்கு எவ்வளவு உயர்வு என்று பாடுகிறார் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்.



இவ்வாறு தமிழ்ப் பாக்கள் வல்லமை உடையன. தமிழ் மொழி வல்லமை உடைய மொழி என்று நூறு பாடல்களிலும் அவர் உறுதியாக உரைக்கிறார். அதுமட்டும் இல்லாமல் உயிர்களிடத்து அன்பு வேண்டும் என்று காட்டிய மொழி தமிழ்மொழி என்பதால் இன்னும் அம்மொழிக்குப் பெருமை அதிகம் என்கிறார் வண்ணச்சரபனார்.

“ஒளவை வள்ளுவன் ஆதியர் விண்ட தென்னூல், ஊன் முழுப்பாவம் எனவே அடிக்கடி ஒதிடுமே”

என்ற பாடலடியைப் படைத்துத் தமிழின் பெருமையை அவர் உயர்த்துகிறார். ஒளவையாரும், வள்ளுவரும் புலால் உணவு சாப்பிடுவது தவறு என்று உரைத்துள்ளதால் தமிழே தலைசிறந்த மொழி என்று வலியுறுத்துகிறார் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்.

இவ்வாறு பல்வேறு வரலாறும், வளமும் கொண்ட தமிழ் மொழி நாளும் வளர தமிழ் நூல்களை, தமிழ்ப் பண்பாட்டைக் காத்து வருவது தமிழ்ச்சமுதாயத்தின் தலையாய கடமையாகின்றது.



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/serial/p8e.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License