இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரைத் தொடர்
கட்டுரைத் தொடர் - 8

என் பார்வையில்...

முனைவர் மு. பழனியப்பன்


6. வ. சுப. மாணிக்கனாரின் வழியில் இலக்கியக் கலை

செம்மல் வ. சுப. மாணிக்கனாரின் நூற்றாண்டு விழா நிகழ்ந்து கொண்டிருக்கிறது. வள்ளுவத்தைத் தன் வாழ்நாளின் இலட்சிய நூலாகக் கொண்டு வாழ்ந்தவர் செம்மல் வ. சுப. மாணிக்கனார். அவரின் தமிழ்க்காதல் என்ற நூல் தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் நூல். அவரின் கம்பர், ஒப்பியல் நோக்கு, சிந்தனைக் களங்கள் ஆகிய நூல்கள் சிறந்த ஆராய்ச்சிப் பனுவல்கள். அவரின் எந்தச் சிலம்பு, இலக்கிய விளக்கம் ஆகியன சிறந்த கட்டுரை நூல்கள். அவரின் திருக்குறள் தெளிவுரை தமிழுக்குக் கிடைத்த மாணிக்க உரையாகும். சங்க இலக்கியங்களில் தெளிவும், திருக்குறளில் ஆழமும், காப்பியங்களில் தோய்வும் கொண்டுத் தன் ஆய்வுப்பாதையை வடிவமைத்தவர் மூதறிஞர் வ. சுப. மாணிக்கனார். அழகப்பா கல்லூரியும், அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், மதுரைப் பல்கலைக்கழகமும் அவரின் ஆளுமையால் சிறந்தன. அவரின் நடை தனித்த பாங்கினது. அவர் கையாளும் சொற்கள் நேர்த்தியானவை. சொற்சுருக்கம் அவரிடத்தில் காணப்படும் தனித்த சிறப்பு. எடுத்துக்கொண்ட பொருள் பற்றிய தெளிவான பார்வை அவரிடத்தில் அமைந்திருக்கும். ஒரு பொருள் பற்றி முன்பு சிந்தித்தாலும் அதனை மீள் பார்வை பார்க்கும் நிலையில் மறுபடிச் சிந்திக்கும் போக்கும் அவருக்கே உரிய தனிச்சிறப்பு. இரட்டைக் காப்பியங்களாக சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் அவரால் ஏற்க முடிந்தது. “சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக்காப்பியங்கள் அல்ல” என்று தன் கருத்தைத் தானே மறுக்கும் நேர்மை மிக்க ஆய்வாளர் செம்மல் வ. சுப. மாணிக்கனார்.

அவரின் இலக்கியக் கலை என்ற கட்டுரை ஒவ்வொரு இலக்கிய வாசகனும் படிக்கவேண்டிய கட்டுரை. இலக்கியக் கலை பற்றிய அவரின் கருத்து இதோ. “பல கலைகளுள் இலக்கியக்கலை சிறந்த பல கூறுகளை உடையது. இசைக்கலை உணர்ச்சியைத் தூய்மைப்படுத்தும். ஒவிய சிற்பக் கலைகள் உணர்ச்சியை ஒருமைப்படுத்தும். ஆனால் இசை முதலிய கலைகளுக்கு எண்ணத்தை விரிவுபடுத்தும் தன்மை இலக்கியக் கலைக்குப் போல இல்லை. இசைக்கலை குரல் சார்ந்தது. நாடகக் கலை மெய்சார்ந்தது. ஓவியம், சிற்பம் முதலான கலைகள் புறப்பொருள் சார்ந்தவை. இலக்கியக் கலை ஒன்றே மொழி சார்ந்தது. மொழி மனிதப் பிறப்புக்கு உரிய தனியுடைமை. எண்ணம் மொழித்துணையின்றி வளராது. எண்ண விரிவுக்கு மொழியும், மொழி விரிவுக்கு இலக்கியப் பயிற்சியும் வேண்டும்” (இலக்கிய இன்பம், ப. 50) என்று இலக்கியகலையின் ஏற்றத்தை எடுத்துரைக்கிறார் வ. சுப. மாணிக்கனார். இலக்கியக் கலை என்பது எண்ணங்களின் விரிவிற்கு உதவுவது. மொழியின் வளர்ச்சிக்கு உதவுவது. எனவே ஒரு மொழி வளரவேண்டுமானால் இலக்கிய வாசிப்பு என்பது அவசியமாகின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை.



இலக்கியத்திற்குக் குறிக்கோள் என்பது முக்கியமானது. குறிக்கோள் இல்லாத இலக்கியம் இலக்கியமாகாது. இலக்கியத்திற்கும் குறிக்கோளுக்கும் உள்ள தொடர்பைப் பின்வருமாறு வ. சுப. மாணிக்கானர் காட்டுகிறார். உலகில் எவ்வுயிரும் துன்பத்தை விரும்புவதில்லை. துன்பம் செய்யும் உயிரையும் விரும்புவதில்லை. சில குறிக்கோள்களுக்காக துன்ப வரவைத் தாங்கிக் கொள்பவர்களும் கூட அத்துன்பத்தால் குறிக்கோள் நிறைவெய்தும் இன்பத்தைக் காண்கிறார்கள். அதனால் குறிக்கோள் வழிப்பட்டத் துன்பம் இன்பமாக மாறுகிறது. குறிக்கோளால் துன்பம் வந்தாலும் அதன் நிறைநிலை இன்பம் என்று காட்டுகிறார் வ. சுப. மாணிக்கனார்.

இவ்விளக்கத்தைக் கம்பராமாயணப் பாடல் ஒன்றின் வழி மெய்ப்பிக்கிறார் வ. சுப. மாணிக்கனார். கம்பராமாயணத்தில் ஒரு துன்பக் காட்சி. சீதை அசோக வனத்தில் சோக உருவமாய்த் தவம் இருக்கிறாள். அவளைத் தேடி அனுமன் வருகிறான். வந்த அனுமன் அவளைப் பணிந்து தான் கொண்டுவந்த செய்திகளைத் தெரிவிக்கிறான். அடையாளப் பொருளை வழங்குகிறான். எல்லாவற்றையும் அறிந்து கொண்ட சீதை, தன்னிலையை அனுமனுக்குத் தெரிவிக்கிறாள். அவ்வகையில் ஒரு பாடல் அமைகிறது.

“ஈண்டு நானிருந்து இன்னுயிர் மாயினும்
மீண்டு வந்து பிறந்துதன் மேனியைத்
தீண்டல் ஆவதோர் தீவினை தீர்வரம்
வேண்டினாள் தொழுதொன்று விளம்புவாய்” (சுந்தரகாண்டம் , சூளாமணிப் படலம்)


என்று சீதை இராமனிடம் ஒரு வரத்தைக் கேட்கச்சொல்லி அனுமனிடம் வேண்டுகிறாள்.

இப்பாடலின்வழி சீதைக்கு ஏற்பட்ட துன்பம் குறிக்கோள் நிறைவேறுதல் காரணமாக இன்ப முடிவைத் தந்து நிற்கும் என்பது உறுதி. நான் இலங்கையில் இருந்து மீட்கப்படாத நிலை வராது. அவ்வாறு வந்துவிட்டால், நான் மாண்டு போவேன். அவ்வாறு மாண்டு போன பின்பு, மீளவும் பிறப்பேன். பிறந்து இராமனை அடைவேன். அப்பிறவியில் இராமனை அடைந்து அவன் மேனியை நான் தொடுவேன். அந்நிலைக்கு என்னை ஆட்படுத்த இராமனிடம் ஒரு வரம் தரச் சொல் அனுமா என்பதே சீதையின் கூற்று. அடுத்தபிறவியில் சீதை இராமனதைத் தீண்டும் வரை அவள் சிறையில் இருந்த தீநிலை மாறாதாம். இராமனை மீளவும் தொட்ட பின்னரே இத்தீவினை தீரும். அது இந்தப் பிறவியிலா அல்லது அடுத்த பிறவியிலா என்பதுதான் சீதையின் கேள்வி. தன்னை அடுத்தப் பிறவிக்கு ஆயத்தப்படுத்திக் கொள்கிறாள் சீதை. இதன்வழி இப்பிறவியிலேயே இராமன் வந்துத் தன்னை மீட்பான் என்ற உறுதிப்பாடு அவளை இதுநாள் வரை உயிருடன் இருக்கச் செய்திருக்கிறது என்பதை உணர முடிகின்றது.



சீதையின் இந்த நம்பிக்கை, துன்பச் சூழலில் அமைந்தாலும், வரப்போகிற இன்பத்திற்கு வரவேற்பு நல்குவதாக உள்ளது. இதுவே இலக்கிய வாழ்க்கை தரும் இன்பம். குறிக்கோளுக்காகத் துன்பப்பட்டாலும் அதன் நிறைநிலை இன்பமே என்று அமைவது இலக்கியம். இதுவே இலக்கியக் கலை ஆகின்றது. இதைப் போன்றே மற்றொரு குறிக்கோள் காட்சியையும் சிலப்பதிகாரத்தில் இருந்து காட்டுகிறார் செம்மல் வ. சுப. மாணிக்கனார்.

“கடுங்கதிர் வெம்மையிற் காதலன் தனக்கு
நடுங்குதுயர் எய்தி நாப்புலர வாடித்
தன்துயர் காணத் தகைசால் பூங்கொடி
இன்றுணை மகளிர்க்கின்றி யமையாக்
கற்புக்கடம் பூண்டஇத் தெய்வம் அல்லது
பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலமால்” (சிலப்பதிகாரம், அடைக்கலக்காதை)


என்பது குறிக்கோள் சார்ந்த சிலப்பதிகாரப் பாடலடிகள் ஆகும்.

கண்ணகியும், கோவலனும் மதுரைக்கு நடந்து வருகின்றனர். அப்போது கடுமையான வெயில்நேரம். இவ்வெயிலில் தனக்குக் கால் சுடுகிறதே என்று அவள் கவலைப்படவில்லை. தன் கணவனுக்குக் கால் சுடுமே என்று கவலை கொள்கிறாள். தன் கணவன் நீர்த்தாகத்தால் அல்லல்படுகிறானே என்று அவள் கவலைப்பட்டாள். தன் துயர் காணாது, கணவன் துயர் கண்டு இரங்கிய தகைசால் பூங்கொடி அவள். கற்புடைய பெண்களுக்கு உரிய இயல்பு என்பது கணவனுக்கு ஏற்படும் துன்பத்தைப் பொறுத்துக் கொள்வமையும், தனக்கு வந்த துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளுதலும் ஆகிய பண்புகள் ஆகும். இதன் காரணமாகக் கண்ணகி துயர் பட்டாலும் அவள் கற்புக் குறிக்கோளை அடைந்த நிலையில் இன்பம் கண்டவளாகின்றாள். இவை போன்ற எண்ண விரிவுகளுக்கு இடம் அளிப்பது இலக்கியக் கலை ஆகும். இலக்கியக் கலை குறித்து மேலும் பல கருத்துகளைத் தெரிவிக்கிறார் வ. சுப. மாணிக்கனார்.



“வாழ்வு என்பது எண்ணத்தால் அமைவது. நல்லெண்ணத்தால் வளர்வது. அல்லெண்ணத்தால் வீழ்வது. எவ்வகை வாழ்வுக்கும் எண்ணங்களே மூலங்கள். எண்ண விரிவு செயல் விரிவாக வாழ்வு விரிவாக முகிழ்க்கின்றது... அமைதியான ஆற்றலான, ஒருமையான, எண்ண வளர்ச்சிக்குக் கலைகளே சிறந்த பற்றுக்கோடு. இயல், இசை, நாடகம், ஓவியம், சிற்பம் முதலான கலைகள் தீய எண்ணங்களைக் கலைக்கின்றன. அலைந்து திரியும் மனநிலைகளை ஒருமைப்படுத்துகின்றன. ஓடிப்பாயும் அளவிறந்த உணர்ச்சிகளை அளவு படுத்துகின்றன” என்று கலைகளின் இயல்பினைக் கூறுகிறார் வ. சுப.மாணிக்கனார். இவ்வகையில் மனித வளர்ச்சிக்கு உதவுவது எண்ண வளர்ச்சி. எண்ண வளர்ச்சிக்கு உதவுவது இலக்கியக் கலை. இலக்கியக் கலை வளர்ச்சிக்கு உதவுவது மொழி. இதன் மறுநிலையில் மொழியால் கலை வளர்கிறது. கலையால் மனித உள்ளம் வளருகிறது என்று தலைகீழ்ப்பாடமாகவும் இதனைக் கொள்ளலாம்.



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/serial/p8f.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License