இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரைத் தொடர்
கட்டுரைத் தொடர் - 8

என் பார்வையில்...

முனைவர் மு. பழனியப்பன்


8. சிவபெருமான் ஆடிய வையை ஆடல்

சிவபெருமான் ஆடிய திருவிளையாடல் அறுபத்துநான்கு ஆகும். இதனைத் திருவிளையாடல் புராணம் அழகிய பாடல்களாகப் பதிவு செய்துள்ளது. பரஞ்சோதியார் பாடிய திருவிளையாடல் புராணம் 3362 பாடல்களை உடையது. திருவிளையாடல் புராணப் பாடல்கள் எளிமையும் இனிமையும் நிரம்பின. ஆரம்ப நிலையில் தமிழ் படிக்க முயல்பவர்கள் கூட இப்புராணத்தைப் படித்து இன்புற இயலும். அந்த அளவிற்கு எளிமைத் தமிழ்நடை கொண்டது திருவிளையாடல் புராணம்.

ஆண்டவன் ஆடிய ஒவ்வொரு திருவிளையாட்டும் ஒவ்வொரு வகையில் சிறந்தது. வந்திக் கிழவிக்காக வைகைக்கரையை அடைக்கச் சென்ற திருவிளையாட்டு சொல்லவும், ரசிக்கவும் இனிமை உடையது. மண் சுமந்த படலம் என்ற பெயரில் அமைந்துள்ள இத்திருவிளையாட்டு மிகவும் சிறப்பானது.

வைகை ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது. அதன் வெள்ளம் அளவு கடந்து மதுரைக்குள் பாய்ந்து மதுரை மக்களைத் துன்பத்தில் ஆழ்த்தியது.

இதன் காரணமாக மதுரை மக்கள் அனைவரையும் வைகை ஆற்றின் கரையைப் பலப்படுத்தச் சொல்லி ஆணையிடுகிறான் அரசன். வீடுகளில் இருந்த ஆண்மக்கள் ஒவ்வொருவரும் இப்பணியில் ஈடுபட்டு மதுரையைக் காக்க முனைகின்றனர். வீட்டில் ஆண்மக்கள் இல்லாதவர்கள் கூலியாளை அழைத்துத் தமக்கு ஒதுக்கப் பெற்ற இடத்தைப் பலப்படுத்த முனைகின்றனர். அன்று கூலியாள்களும் கிடைக்கவில்லை.

வந்திக் கிழவிக்கு கணவன் இல்லை, குழந்தைகள் இல்லை, உறவினர் இல்லை, நட்புடையோர் இல்லை, மற்றவர்கள் இல்லை, எனவே, அவள் கரையை அடைக்க வழி காணாது தவித்தாள். தன் தவிப்பை மதுரைச் சொக்கநாதரிடம் அவள் முறையிட்டாள்.

“பிட்டு விற்று உண்டு வாழும் பேதையேன் இடும்பை என்பது
எட்டுணையேனும் இன்றி இரவி எங்கு எழுகென்றிருந்த நான்
மட்டு நின்னருளால் இங்குவைகினேன் இன்று வந்து
விட்டதோ இடையூறு ஐயமீனவன் ஆணையினாலே”


என்று அவள் கலங்குகிறாள்.



மதுரையில் எக்கவலையும் இல்லாமல் சொக்கநாதர் அருளால் பிட்டு விற்றுக் கொண்டே பிழைத்து வந்த வந்திக் கிழவியின் வாழ்வு நேற்று வரை இனிதாகத்தான் இருந்தது. சூரியன் எந்தப்பக்கம் உதித்தால் எனக்கென்ன என்று கவலைப்படாமல் இருந்த இக்கிழவியின் வாழ்வில் இன்று துன்பம் வந்தது. மீன் கொடியை உடைய பாண்டியனின் வெள்ளம் தடுக்கும் ஆணையால் கரை அடைக்க ஆள் இல்லாததால் துன்பம் வந்து சேர்ந்தது. மதுரை நாயகனே நீயே இத்துன்பத்தைத் தீர்ப்பாய்” என்று வந்திக் கிழவி இறைவனிடம் வேண்டினாள். இவளின் வருத்த மொழிகள் சிவபெருமானை எட்டின. அவர் தானே கூலியாளாக மண் சுமக்கக் கிளம்பினார். கசங்கிய அழுக்கேறிய ஆடை, தலையில் சிம்மாடு, அதன் மீது கவிழ்க்கப்பட்ட கூடை, தோளில் மழுங்கிய மண்வெட்டி என்ற கோலத்தில் இறைவன் மதுரை வீதியில் கூலியாளாக வந்தான். வந்தவன் இறைவன் கூலி கொடுத்து என்னை வேலைக்கு எடுத்துக் கொள்பவர் யாராவது இங்குஉண்டா? என்று கூறிக் கொண்டே வந்தார். இந்தச் சொற்கள் அமுதம் என வந்தியின் காதுகளில் விழுந்தன. அவள் மகிழ்ந்தாள். குழந்தை பெறாதவள் குழந்தையைப் பெற்றது போலக் கூலியாள் ஒருவனைக் கண்டு மகிழ்ந்தாள். கூலிக்குப் பதிலாகப் பிட்டு தருவதாக உடன்படிக்கை ஏற்பட்டது. தாய்ப்பால் அமுதம் போன்று இருந்த பிட்டினை வந்திக்கிழவி தர வயிறு நிறைய உண்டார் கூலியாளாகிய பெருமான். உண்ணும் பொழுது தான் உண்ணும் உணவு சோமசுந்தரப் பெருமானுக்கு உரியது என்று சொல்லிக் கொண்டார். இதன் பின் அவர் கரையை அடைக்க வேண்டிய இடம் காட்டப் பெற்றது. தான் வந்தியின் கூலியாள் என்பதைப் பதிவு செய்துவிட்டு அவர் கரையை அடைக்க முனைந்தார். அப்போது அவர் ஆடிய திருவிளையாட்டு எல்லாத் திருவிiளாயடல்களையும் விட நகைச்சுவை தருவது. கரையை அடைக்க வந்தவர், அந்தத் தொழிலைச் செய்யாமல் என்னென்னவோ செய்தார். அவற்றைப் பரஞ்சோதி முனிவர்அழகாகக் காட்டுகிறார்.

“வெட்டுவார் மண்ணைமூடி மேல்வைப்பார் பாரமெனக்
கொட்டுவார் குறைத்தெடுத்துக் கொடுபோவார் சுமடுவிழத்
தட்டுவார் சுமையிறக்கி எடுத்ததனைத் தலைபடியக்
கட்டுவார் உடன்சுமந்து கொடுபோவார் கரைசொரிவார்”


அந்தக் கூலியாள் மண்ணை வெட்டுகிறார். பின்பு தட்டில் அம்மண்ணை அள்ளுவார். அதனைத் தலையில் வைப்பார். பாரம் அதிகமாக இருக்கிறது என்று தட்டைக் கீழே இறக்கி மண்ணைக் கொஞ்சம் தள்ளுவர். மீண்டும் எடுத்து வைக்க முயலுவார். அப்போது தலையில் இருந்த சும்மாடு கீழே விழுந்துவிடும். அவர் சும்மாட்டைச் சரி செய்வார். அதன் பின் மண்தட்டை எடுத்துத் தலையில் வைப்பார். சற்று தூரம் நடப்பார். கொண்டு போய் மண்ணைக் கொட்டியதாகப் பேர் செய்வார்.



இப்படியே ஒருமுறை, இருமுறைதான் மண்ணைக் கொட்டியிருப்பார். அதற்குள் இவருக்குச் சோர்வு வந்துவிடுகிறது. பக்கத்தில் இருந்த ஆலமரத்தின் அடியில் படுத்து உறங்க ஆரம்பித்து விட்டார். சிறிது கண்ணயர்ந்தார். இது ஆலமரத்தடியில் தட்சிணாமூர்த்தி பிரான் நிட்டையில் இருந்த தோற்றம் போல இருந்தது. உடன் இருந்தவர்கள் சனகாதி முனிவர்கள் போல் காட்சி தந்தனர். இவரின் யோக நிட்டைக்கு இடையூறு செய்யாமல் அவர்கள் மௌனமாக வேலை பார்த்தனர். உறங்கிய தட்சிணாமூர்த்திப் பிரான் பின்பு எழுந்தார். மீளவும் பசிப்பது போலிருந்தது. உடனே வந்திக் கிழவி இருந்த இடத்திற்குச் சென்று, பிட்டை வாங்கிக் கேட்டு உண்டார். மீளவும் வெட்டும் பணியைத் தொடங்கினார்.

இப்போது வேறு திருவிளையாட்டை ஆரம்பிக்கிறார்.

“எடுத்த மண்கூடையோடும் இடறி வீழ்வார் போல் ஆற்றின்
மடுத்திட வீழ்வார் நீத்திவல்லை போய்க் கூடைதள்ளி
எடுத்து அகன்கரை மேல்ஏறி அடித்தடித்து ஈரம்போக்கித்
தொடுத்த கட்டவிழ்ப்பார் மீளத்துன்னுவர் தொடுவர் மண்ணை”


மண்கூடையோடு சென்றவர் விழுபவர் போல விழுந்தார். இதன்காரணமாக வையைஆற்றில் மண்கூடை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறது. உடனே அதனைக் கைப்பற்ற அந்தக்கூலியாள் நீச்சலடித்துச் செல்கிறார். கூடையை ஒரு வழியாகக் கைப்பற்றி விடுகிறார். அந்தக் கூடையைக் கரைக்குக் கொண்டுவந்து அதன் ஈரம் போகும்படி மணலில் அடிக்கிறார். இதன் காரணமாக மண்சுமக்கும் கூடையின் கட்டுகள் நெகிழ்கின்றன. அதனை இறுக்கக் கட்டும் வேலையைப் பார்க்கிறார். பிறகு மண்ணைத் தொடலாமா வேண்டாமா என்று யோசித்து நிற்பார்.



மண்சுமக்கும் கூடையைச் சரி செய்தாகிவிட்டது. அடுத்து எதைச் சரி செய்யலாம் என்று அவர் மனம் எண்ணுகிறது. மண்வெட்டியைச் சரி செய்கிறார். மண்வெட்டியைச் சுழற்றுகிறார். மண்வெட்டியின் ஆப்பினை அசைத்துப் பிடுங்கி மீளவும் அடிக்கிறார். இதற்குள் பசி வந்து விடுகிறது. மடியில் கட்டி வைத்திருந்த பிட்டினை எடுத்து உண்கிறார். அருகிருந்தவர்களுக்கும் அந்தப் பிட்டினைத் தந்து அவர்களின் வேலையையும் கெடுக்கிறார். இப்படி எல்லா வேலைகளும் நடைபெறுகின்றன. ஆனால் கரை அடைக்கும் வேலை மட்டும் நடைபெறவில்லை. வந்திக் கிழவியின் கரை அடைக்கப்படவில்லையே என்று கணக்காளர்கள் கேட்கும் நிலையில் இவர் அசையாது சும்மா நிற்கிறார். இதனைக் கண்ட அவர்கள் மிரளுகிறார்கள்.

“பித்தனோ இவன்தான் என்பார் அல்லது பேய்கோட்பட்ட
எத்தனோ இவன்தான் என்பார் வந்தியை அலைப்பான் வந்த
எத்தனோ இவன்தான் என்பார் இந்திரசாலம் காட்டும்
சித்தனோ இவன்தான்என்பார் ஆரென்று தெளியோமென்பார்”


மண்அள்ள வந்த கூலியாள் பித்தனா, பேய் பிடித்தவனா, வந்திக் கிழவியை எத்திப் பிழைக்க வந்தவனா, அல்லது இந்திரவித்தை செய்யும் சித்தனா யார் என்று அவர்களுக்த்தெரியவில்லை. உங்களுக்காவது தெரிகிறதா. வந்தவர் யார் என்று...?



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/serial/p8h.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License