இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சுவையான தகவல்கள்
வலைப்பூக்களில் முத்துக்கமலம் குறித்த தகவல்கள்


மணிவானதி வலைப்பூ - இணைய இதழ்களில் முத்துக்கமலம்

செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படங்கள் முதலானவற்றைத் தகவல்தொடர்பு ஊடகங்கள் என்று கூறுவர். அவ்வரிசையில் இணையத்தையும் இணைத்துக் கொள்ள வேண்டும். பிற தகவல் தொடர்பு ஊடகங்களைக் காட்டிலும் முழு வீச்சில் இணையம் வளர்ச்சியுற்று வருகிறது என்றே கூற வேண்டும். எதிர்காலத்தில் பிற ஊடகங்களைப் புறந்தள்ளிவிட்டு இது முன்னணி இடத்தைப் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.இத்துணை சிறப்பு வாய்ந்த இணையத்தின் வழி இதழ்கள் வெளி வருகின்றன. இதனை இணைய இதழ்கள் அல்லது மின்னிதழ்கள் (e- journals /e-zines) என்று குறிப்பிடுவர். அச்சு வடிவில் வெளி வருகின்ற இதழ்களைப் போலவே காலம் (நாளிதழ், வார இதழ்) மற்றும் பொருண்மை அடிப்படையில் (அரசியல் இதழ், பக்திஇதழ்) மின்னிதழ்களையும் வகைப்படுத்தலாம். அனைத்து வகை மின்னிதழ்களைப் பற்றியும் இங்குக் குறிப்பிடின் இக்கட்டுரை மிக நீளும் என்பதால் தமிழ் இலக்கியம் சார்ந்த படைப்புகளைத் தாங்கி, அச்சில் வெளிவராமல் இணையத்தில் மட்டுமே வெளிவருகின்ற முத்துகமலம் மின்னிதழ் பற்றி மட்டும் இக்கட்டுரை விளக்க முற்படுகிறது.

முத்துகமலம் இணைய இதழ் 1.6.2006ல் தேனியிலிருந்த்து திரு.எம்.சுப்பிரமணி என்பவரால் தொடங்கப்பட்டு மிக நேர்த்தியாக செயல்பட்டு வருகிறது. மாதத்தில் இருமுறைப் புதிபிக்கப்பட்டு வெளிவருகிறது. இதில் இலக்கியம் தொட்டு இக்காலம் வரையில் உள்ள அனைத்து நிகழ்வுகளையும் வெளியிட்டு வருகிறது.அறிவிப்புகள் என்று தொடங்கி விளம்பரம் செய்திடல் முடிய 29 தலைப்புகளில் உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளது.அறிவிப்புகள்.தமிழ் கருத்தரங்கம், கவியரங்கம், தமிழ்ச் சங்க கூட்டங்கள், தமிழ் நூல்,குறும்படம் மற்றும் ஆவணப்பட வெளியீடுகள் என்று தமிழ் வளர்ச்சிக்கு உதவும் அனைத்து நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்புகள் இங்கு வெளியிடப்படும்.மேலும் தமிழ் இதழியலாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் பாராட்டு நிகழ்ச்சிகள் என்று அனைத்து விதமான அறிவிப்புகளும் இடம் பெற உள்ளது.மேற்காணும் அனைத்து விதமான நிகழ்ச்சிகள் உலகில் எங்கு நடக்கவிருந்தாலும் அது குறித்த செய்திகளை இந்த அறிவிப்புகள் பகுதிக்கு அனுப்பி வைக்கலாம்.இந்த அறிவிப்புகள் முற்றிலும் இலவசமாக இப்பகுதியில் வெளியிட்டு வருகின்றனர்.ஆன்மீகம் ஆன்மீகம் ஆன்மீகம் சார்ந்த நிகழ்வுகள் இப்பகுதியில் வெளியிடுகின்றனர்.

இந்து, கிறிஸ்த்து, இஸ்லாம் மதம் என்ற அனைத்து மதக்கருத்துக்களையும் இதில் நம்மால் காணமுடியும். பகுத்தறிவு பகுத்தறிவு ஆன்மீகச் செய்தியை வெளியிட்டுவரும் இவ்விதழில் பகுத்தறிவுச் செய்திகளும் பரவலாக வெளியிட்டு வருகிறது.மூடப்பழக்கங்களை கடுமையாகச் சாடுகின்றன. இதில் ஒரு சில கட்டுரைகள் நல்லமுறையில் எழுதப்பட்டுள்ளன். ஆராயப்பட்டுள்ளன.பொன் மொழிகள்- பழமொழிகள்- ஆன்மீக மொழிகள் பொன்மொழிகள் எனற தலைப்பிலும் பல மொழிகளைச்சார்ந்த அறிஞர் பெருமக்களின் பொன்மொழிகள் இடம் பெற்றுள்ளன்.

அடையாளம், கதைகள் என்ற தலைப்பில் உலக பேராசிரியர்களின் வாழ்க்கை வரலாறும்,சிறுகதைகளும் வெளியிட்டு வருகிறது.

கட்டுரைகள் தரமான கட்டுரைகள் இந்த இணைய இதழில் வெளிவருகின்றன.அவற்றில் சொற்பொழிஞர்-அண்ணா -முனைவர் சே.கல்பனா, மின் குழுமம் ஒரு பார்வை-முனைவர் துரை. மணிகண்டன், முடிவில்லாப் போராட்டம்-உருத்திரன் கணபதிபிள்ளை, அகப்பாடல்களில் புறச் செய்திகள் -முனைவர் மு. பழனியப்பன், உண்மை என்ன? - தொடர்-வேந்தன் சரவணன். மகாகவி ஸ்ரீ நீலகண்ட தீட்சிதர் -அப்பையா கணபதி, நகரத்தார் உறவு முறைப்பெயர்கள்-முனைவர் மு. பழனியப்பன் என பலர் கட்டுரைகள் எழுதி வருகின்றனர்.

கவிதைகள் இன்று வெளிவரும் அனைத்து இதழ்களிலும் கவிதை இல்லாமல் இல்லை. அந்த வகையில் முத்துக்கமலம் இணைய இதழில் கவிதைகள் வெளிவருகின்றன. வேண்டும்! அமைதி வேண்டும்!! -மாரிமுத்து காதல் உண்மையானது...? -மு.சந்திரசேகர். நாளை நன்மை இல்லை...! -சக்தி சக்திதாசன். வெட்கம் கொண்டு வெண்ணிலா... -ஆர். கனகராஜ்.இவர்களைப் போன்று இன்னும் பலர் எழுதி வருகின்றனர்.சிரிக்க சிரிக்க இப்பகுதில் முழுக்க முழுக்க சிரிப்பு மட்டுமே வெளியிடப்படுகிறது.

அவனுக்கு சுத்தமா படிப்பு வரலீங்க...- குரு.சுப்ரமணியன், கண்ணதாசனின் நகைச்சுவைகள், அப்பாவி சுப்பையா பதில்கள். -தொடர்- தேனி.எஸ்.மாரியப்பன், கல்யாணம் ஆனதும் சொல்லி அனுப்பு. -குரு.சுப்ரமணியன், மாமியாரைத் தீர்க்கனும்னா...?-தஞ்சை தாமு, உங்க தாத்தாவைக் குதிரை விரட்டுதே... -குரு.சுப்ரமணியன், மருத்துவ நகைச்சுவைகள் -தேனி.எஸ்.மாரியப்பன், காந்திஜியின் நகைச்சுவை -தேனி.எஸ்.மாரியப்பன் மற்றும் பலர் எழுதி வருகின்றனர்.

மகளிர் மட்டும் பகுதியில் பெண்களுக்கு மட்டுமே உரிய சிறப்பான செய்திகளை வெளியிட்டு வருகிறது. குறிப்பாக, இந்துமதம் சொல்லும் உயரிய பெண்களின் கடமைகள், மணமக்களுக்கு எய்ட்ஸ் சோதனை, ஆக்ரோஷமான பெண்களுக்கு ஆண் குழந்தை, பெண் குழந்தை பெற்றால் பரிசு போன்ற பல அரியச் செய்திகளையும் வாசகர்களுக்கு வழங்குகிறது.

சமையலறை இப்பகுதியில் சமையல் தொடர்பான அனைத்துச் செய்திகளும் இடம்பெற்றூள்ளன். சில இனிப்பான சமையல் செய்முறைக் குறிப்புகள், கார வகைகள் சில காரமான சமையல் செய்முறைக் குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

மனம் திறந்து என்ற பகுதியில் வாழ்க்கையில் வெளிப்படையாக இருந்து விட்டால் எந்தத் துயரும் வராது. அதனைப் போக்கவே இப்படி ஒரு தலைப்பைத் தேர்ந்த்தெடுத்துள்ளனர். வாழ்க்கையைச் சுவையாக மாற்றிக் கொள்ள... -சக்தி சக்திதாசன், நாளிதழ்களுக்கு சில ஆலோசனைகள்... -சித்தூர்.எஸ்.முருகேசன், மீதமாகும் சாப்பாட்டை வீணாக்கலாமா? -மணிகண்டன், அட நமக்குத் தெரியாமப் போச்சே... -தாமரைச்செல்வி போன்றோர்கள் எழுதி வருகின்றனர்.

விவாதக்களம் நாணயத்திற்கு இரண்டு பக்கங்களிருப்பது போல் எதை எடுத்தாலும், இன்றைய சமுதாயத்தில் இரு வேறு நிலைகள் இருக்கின்றன. இந்த இரண்டுக்குமே ஆதரவும் இருக்கிறது, எதிர்ப்பும் இருக்கிறது. இந்த இரண்டையும் விவாதக்களம் என்ற சிறப்புப் பகுதியில் வெளியிட்டு வருகிறது. அரசியல், சினிமா மற்றும் பிறர் மனம் வருந்தக் கூடிய தலைப்புகளைத் தவிர்த்து பிற தலைப்புகளில் விவாதக்களம் காண இருக்கிறது. வாசகர்கள் தெரிவிக்கும் இரண்டு நிலையிலும் சிறப்பான விவாதக் கருத்துக்கள் தேர்வு செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.

புத்தகப் பார்வை இப்பகுதில் புதிய நூல்கள் பற்றிய முழு விபரங்களும் இடம் பெற்று வருகின்றன. புத்தகப் பார்வைக்கு புத்தகங்கள் அனுப்ப விரும்பும் பதிப்பாளர்கள் / ஆசிரியர்கள் புத்தகத்தின் இரண்டு பிரதிகளாக அனுப்பி வைக்க வேண்டும். இப்பகுதியில் புதிதாக வெளியிடப்படும் குறும்படங்கள் /ஒளி-ஒலியுடனான தமிழ் பாடங்கள் போன்றவைகளுக்கான மதிப்புரைகளும் இடம் பெறுகிறது. குறும்படங்கள் / ஒளி-ஒலியுடனான தமிழ் பாடங்கள் அனுப்ப விரும்பும் வெளியீட்டாளர்கள் / இயக்குனர்கள் / விற்பனையாளர்கள்,தங்களுடைய குறும்படங்கள் / ஒளி-ஒலியுடனான தமிழ் பாடங்கள் அடங்கிய குறுந்தகட்டை (CD) இரண்டு பிரதிகளாக அனுப்பி வைக்க வேண்டும்.

இவையில்லாமால், கல்லூரிவாசல், குறுந்தகவல், மருத்துவம், கிறுக்குத்தனம், குறும்புகள், தமிழ் வலைப்பூ, உதவிக்களம், சுவையான தீர்ப்புகள், நிகழ்வுகள், கிடைக்கப் பெற்றோம், உங்கள் கருத்து, ஆசிரியர்குழு, விளம்பரம் செய்திட என பல்வேறு தலைப்புகளில் கருத்துக்கள் இந்த முத்துகமலம் இதழில் வெளியிடப்படுகிறது.

மற்றய இணையத்தளத்தினை விட பல புதிய தலைப்புகளில் கருத்துக்களை வெளியிட்டுத் தமிழின் புகழை உலக நாடுகளுக்கு அனுப்பும் ஒப்பற்ற பணியைச் சிறப்புடன் செய்து வருகிறது.

இத்தகவல் வலைப்பூவில் இடம் பெற்றுள்ள இணைய முகவரி:

http://manikandanvanathi.blogspot.in/2009/04/www-muthukamalamcom.html

வலைப்பூவிலிருந்து தொகுப்பு: - வி. பி. மணிகண்டன்.

*****



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/interesting/special/tamilblogs/p1.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License