மணிவானதி வலைப்பூ - இணைய இதழ்களில் முத்துக்கமலம்
செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படங்கள் முதலானவற்றைத் தகவல்தொடர்பு ஊடகங்கள் என்று கூறுவர். அவ்வரிசையில் இணையத்தையும் இணைத்துக் கொள்ள வேண்டும். பிற தகவல் தொடர்பு ஊடகங்களைக் காட்டிலும் முழு வீச்சில் இணையம் வளர்ச்சியுற்று வருகிறது என்றே கூற வேண்டும். எதிர்காலத்தில் பிற ஊடகங்களைப் புறந்தள்ளிவிட்டு இது முன்னணி இடத்தைப் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.இத்துணை சிறப்பு வாய்ந்த இணையத்தின் வழி இதழ்கள் வெளி வருகின்றன. இதனை இணைய இதழ்கள் அல்லது மின்னிதழ்கள் (e- journals /e-zines) என்று குறிப்பிடுவர். அச்சு வடிவில் வெளி வருகின்ற இதழ்களைப் போலவே காலம் (நாளிதழ், வார இதழ்) மற்றும் பொருண்மை அடிப்படையில் (அரசியல் இதழ், பக்திஇதழ்) மின்னிதழ்களையும் வகைப்படுத்தலாம். அனைத்து வகை மின்னிதழ்களைப் பற்றியும் இங்குக் குறிப்பிடின் இக்கட்டுரை மிக நீளும் என்பதால் தமிழ் இலக்கியம் சார்ந்த படைப்புகளைத் தாங்கி, அச்சில் வெளிவராமல் இணையத்தில் மட்டுமே வெளிவருகின்ற முத்துகமலம் மின்னிதழ் பற்றி மட்டும் இக்கட்டுரை விளக்க முற்படுகிறது.
முத்துகமலம் இணைய இதழ் 1.6.2006ல் தேனியிலிருந்த்து திரு.எம்.சுப்பிரமணி என்பவரால் தொடங்கப்பட்டு மிக நேர்த்தியாக செயல்பட்டு வருகிறது. மாதத்தில் இருமுறைப் புதிபிக்கப்பட்டு வெளிவருகிறது. இதில் இலக்கியம் தொட்டு இக்காலம் வரையில் உள்ள அனைத்து நிகழ்வுகளையும் வெளியிட்டு வருகிறது.அறிவிப்புகள் என்று தொடங்கி விளம்பரம் செய்திடல் முடிய 29 தலைப்புகளில் உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளது.அறிவிப்புகள்.தமிழ் கருத்தரங்கம், கவியரங்கம், தமிழ்ச் சங்க கூட்டங்கள், தமிழ் நூல்,குறும்படம் மற்றும் ஆவணப்பட வெளியீடுகள் என்று தமிழ் வளர்ச்சிக்கு உதவும் அனைத்து நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்புகள் இங்கு வெளியிடப்படும்.மேலும் தமிழ் இதழியலாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் பாராட்டு நிகழ்ச்சிகள் என்று அனைத்து விதமான அறிவிப்புகளும் இடம் பெற உள்ளது.மேற்காணும் அனைத்து விதமான நிகழ்ச்சிகள் உலகில் எங்கு நடக்கவிருந்தாலும் அது குறித்த செய்திகளை இந்த அறிவிப்புகள் பகுதிக்கு அனுப்பி வைக்கலாம்.இந்த அறிவிப்புகள் முற்றிலும் இலவசமாக இப்பகுதியில் வெளியிட்டு வருகின்றனர்.ஆன்மீகம் ஆன்மீகம் ஆன்மீகம் சார்ந்த நிகழ்வுகள் இப்பகுதியில் வெளியிடுகின்றனர்.
இந்து, கிறிஸ்த்து, இஸ்லாம் மதம் என்ற அனைத்து மதக்கருத்துக்களையும் இதில் நம்மால் காணமுடியும். பகுத்தறிவு பகுத்தறிவு ஆன்மீகச் செய்தியை வெளியிட்டுவரும் இவ்விதழில் பகுத்தறிவுச் செய்திகளும் பரவலாக வெளியிட்டு வருகிறது.மூடப்பழக்கங்களை கடுமையாகச் சாடுகின்றன. இதில் ஒரு சில கட்டுரைகள் நல்லமுறையில் எழுதப்பட்டுள்ளன். ஆராயப்பட்டுள்ளன.பொன் மொழிகள்- பழமொழிகள்- ஆன்மீக மொழிகள் பொன்மொழிகள் எனற தலைப்பிலும் பல மொழிகளைச்சார்ந்த அறிஞர் பெருமக்களின் பொன்மொழிகள் இடம் பெற்றுள்ளன்.
அடையாளம், கதைகள் என்ற தலைப்பில் உலக பேராசிரியர்களின் வாழ்க்கை வரலாறும்,சிறுகதைகளும் வெளியிட்டு வருகிறது.
கட்டுரைகள் தரமான கட்டுரைகள் இந்த இணைய இதழில் வெளிவருகின்றன.அவற்றில் சொற்பொழிஞர்-அண்ணா -முனைவர் சே.கல்பனா, மின் குழுமம் ஒரு பார்வை-முனைவர் துரை. மணிகண்டன், முடிவில்லாப் போராட்டம்-உருத்திரன் கணபதிபிள்ளை, அகப்பாடல்களில் புறச் செய்திகள் -முனைவர் மு. பழனியப்பன், உண்மை என்ன? - தொடர்-வேந்தன் சரவணன். மகாகவி ஸ்ரீ நீலகண்ட தீட்சிதர் -அப்பையா கணபதி, நகரத்தார் உறவு முறைப்பெயர்கள்-முனைவர் மு. பழனியப்பன் என பலர் கட்டுரைகள் எழுதி வருகின்றனர்.
கவிதைகள் இன்று வெளிவரும் அனைத்து இதழ்களிலும் கவிதை இல்லாமல் இல்லை. அந்த வகையில் முத்துக்கமலம் இணைய இதழில் கவிதைகள் வெளிவருகின்றன. வேண்டும்! அமைதி வேண்டும்!! -மாரிமுத்து காதல் உண்மையானது...? -மு.சந்திரசேகர். நாளை நன்மை இல்லை...! -சக்தி சக்திதாசன். வெட்கம் கொண்டு வெண்ணிலா... -ஆர். கனகராஜ்.இவர்களைப் போன்று இன்னும் பலர் எழுதி வருகின்றனர்.சிரிக்க சிரிக்க இப்பகுதில் முழுக்க முழுக்க சிரிப்பு மட்டுமே வெளியிடப்படுகிறது.
அவனுக்கு சுத்தமா படிப்பு வரலீங்க...- குரு.சுப்ரமணியன், கண்ணதாசனின் நகைச்சுவைகள், அப்பாவி சுப்பையா பதில்கள். -தொடர்- தேனி.எஸ்.மாரியப்பன், கல்யாணம் ஆனதும் சொல்லி அனுப்பு. -குரு.சுப்ரமணியன், மாமியாரைத் தீர்க்கனும்னா...?-தஞ்சை தாமு, உங்க தாத்தாவைக் குதிரை விரட்டுதே... -குரு.சுப்ரமணியன், மருத்துவ நகைச்சுவைகள் -தேனி.எஸ்.மாரியப்பன், காந்திஜியின் நகைச்சுவை -தேனி.எஸ்.மாரியப்பன் மற்றும் பலர் எழுதி வருகின்றனர்.
மகளிர் மட்டும் பகுதியில் பெண்களுக்கு மட்டுமே உரிய சிறப்பான செய்திகளை வெளியிட்டு வருகிறது. குறிப்பாக, இந்துமதம் சொல்லும் உயரிய பெண்களின் கடமைகள், மணமக்களுக்கு எய்ட்ஸ் சோதனை, ஆக்ரோஷமான பெண்களுக்கு ஆண் குழந்தை, பெண் குழந்தை பெற்றால் பரிசு போன்ற பல அரியச் செய்திகளையும் வாசகர்களுக்கு வழங்குகிறது.
சமையலறை இப்பகுதியில் சமையல் தொடர்பான அனைத்துச் செய்திகளும் இடம்பெற்றூள்ளன். சில இனிப்பான சமையல் செய்முறைக் குறிப்புகள், கார வகைகள் சில காரமான சமையல் செய்முறைக் குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
மனம் திறந்து என்ற பகுதியில் வாழ்க்கையில் வெளிப்படையாக இருந்து விட்டால் எந்தத் துயரும் வராது. அதனைப் போக்கவே இப்படி ஒரு தலைப்பைத் தேர்ந்த்தெடுத்துள்ளனர். வாழ்க்கையைச் சுவையாக மாற்றிக் கொள்ள... -சக்தி சக்திதாசன், நாளிதழ்களுக்கு சில ஆலோசனைகள்... -சித்தூர்.எஸ்.முருகேசன், மீதமாகும் சாப்பாட்டை வீணாக்கலாமா? -மணிகண்டன், அட நமக்குத் தெரியாமப் போச்சே... -தாமரைச்செல்வி போன்றோர்கள் எழுதி வருகின்றனர்.
விவாதக்களம் நாணயத்திற்கு இரண்டு பக்கங்களிருப்பது போல் எதை எடுத்தாலும், இன்றைய சமுதாயத்தில் இரு வேறு நிலைகள் இருக்கின்றன. இந்த இரண்டுக்குமே ஆதரவும் இருக்கிறது, எதிர்ப்பும் இருக்கிறது. இந்த இரண்டையும் விவாதக்களம் என்ற சிறப்புப் பகுதியில் வெளியிட்டு வருகிறது. அரசியல், சினிமா மற்றும் பிறர் மனம் வருந்தக் கூடிய தலைப்புகளைத் தவிர்த்து பிற தலைப்புகளில் விவாதக்களம் காண இருக்கிறது. வாசகர்கள் தெரிவிக்கும் இரண்டு நிலையிலும் சிறப்பான விவாதக் கருத்துக்கள் தேர்வு செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.
புத்தகப் பார்வை இப்பகுதில் புதிய நூல்கள் பற்றிய முழு விபரங்களும் இடம் பெற்று வருகின்றன. புத்தகப் பார்வைக்கு புத்தகங்கள் அனுப்ப விரும்பும் பதிப்பாளர்கள் / ஆசிரியர்கள் புத்தகத்தின் இரண்டு பிரதிகளாக அனுப்பி வைக்க வேண்டும். இப்பகுதியில் புதிதாக வெளியிடப்படும் குறும்படங்கள் /ஒளி-ஒலியுடனான தமிழ் பாடங்கள் போன்றவைகளுக்கான மதிப்புரைகளும் இடம் பெறுகிறது. குறும்படங்கள் / ஒளி-ஒலியுடனான தமிழ் பாடங்கள் அனுப்ப விரும்பும் வெளியீட்டாளர்கள் / இயக்குனர்கள் / விற்பனையாளர்கள்,தங்களுடைய குறும்படங்கள் / ஒளி-ஒலியுடனான தமிழ் பாடங்கள் அடங்கிய குறுந்தகட்டை (CD) இரண்டு பிரதிகளாக அனுப்பி வைக்க வேண்டும்.
இவையில்லாமால், கல்லூரிவாசல், குறுந்தகவல், மருத்துவம், கிறுக்குத்தனம், குறும்புகள், தமிழ் வலைப்பூ, உதவிக்களம், சுவையான தீர்ப்புகள், நிகழ்வுகள், கிடைக்கப் பெற்றோம், உங்கள் கருத்து, ஆசிரியர்குழு, விளம்பரம் செய்திட என பல்வேறு தலைப்புகளில் கருத்துக்கள் இந்த முத்துகமலம் இதழில் வெளியிடப்படுகிறது.
மற்றய இணையத்தளத்தினை விட பல புதிய தலைப்புகளில் கருத்துக்களை வெளியிட்டுத் தமிழின் புகழை உலக நாடுகளுக்கு அனுப்பும் ஒப்பற்ற பணியைச் சிறப்புடன் செய்து வருகிறது.
இத்தகவல் வலைப்பூவில் இடம் பெற்றுள்ள இணைய முகவரி: