திணை அரிசி காய்கறி உப்புமா
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. திணை அரிசி - 1 கப்
2. துவரம் பருப்பு - 50 கிராம்
3. மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
4. சீரகத் தூள் - 1 தேக்கரண்டி
5. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
6. உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
7. காரட், பீன்ஸ், பட்டாணி - 1 கப்
8. தேங்காய்த் துருவல் - 1 மேசைக்கரண்டி
9. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
10. கறிவேப்பிலை - 1 கீற்று
11. கடுகு - 1/2 தேக்கரண்டி
12. உளுந்து - 1/2 தேக்கரண்டி
13. எண்ணெய் - தேவையான அளவு
14. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. வெங்காயம் மற்றும் காய்கறிகளைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
2. துவரம் பருப்பைக் கரகரப்பாகப் பொடித்து கொள்ளவும்.
3. திணைஅரிசியோடு கரகரப்பாக பொடித்த துவரம் பருப்பையும், மிளகு சீரகத்தூளையும் சேர்த்து வைக்கவும்.
4. ஒரு கடாயில் எண்ணெய்யைக் காய வைத்துக் கடுகு போட்டு வெடித்ததும், உளுந்து போட்டுச் சிவந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
5. அடுத்து அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, காய்கறிகளைப் போட்டு வதக்கி உப்பு சேர்த்து 2 1/2 கப் தண்ணீர் ஊற்றவும்.
6. தண்ணீர் கொதிக்கும்போது திணை அரிசி, துவரம்பருப்பு, மிளகு சீரகப் பொடியைச் சேர்த்துக் கிளறி வெந்ததும் இறக்கவும்.
7. பின்னர் அதில் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறிப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.