உப்புமா
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. வறுத்த ரவை – 1 கப்
2. வெங்காயம் – 1 எண்ணம்
3. பச்சை மிளகாய் – 3 எண்ணம்
4. இஞ்சி – சிறு துண்டு
5. மஞ்சள்தூள் – சிறிது
6. தேங்காய்த் துருவல் – 2 மேசைக்கரண்டி
7. உப்பு - தேவையான அளவு
தாளிக்க
8. எண்ணெய் – தேவையான அளவு
9. நெய் – 1/2 தேக்கரண்டி
10. கடுகு – 1/2 தேக்கரண்டி
11. கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
12. மிளகு – 1/2 தேக்கரண்டி
13. சீரகம் – 1/2 தேக்கரண்டி
14. கறிவேப்பிலை – சிறிது
15. முந்திரிப்பருப்பு - 6 எண்ணம்
செய்முறை:
1. ஒரு கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, கடலை பருப்பு, மிளகு. சீரகம், முந்திரி ஆகியவற்றைச் சேர்த்துப் பொன்னிறமானதும், கறிவேப்பிலை சேர்க்கவும்.
2. பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
3. வெங்காயம் இலேசாக வதங்கியவுடன், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
4. அதன் பிறகு தேங்காய்த் துருவல் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
5. அதில் ரவையைப் போல் இருமடங்கு தண்ணீர், உப்பு சேர்த்து மூடி தண்ணீர் நன்றாக கொதிக்க வைக்கவும்.
6. பின் வறுத்த ரவையைக் கொதிக்கும் தண்ணீரில் கொட்டி, கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கிளறவும்.
7. உப்புமா நன்றாக வெந்தவுடன் நெய் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.