காலிபிளவர் பட்டாணி குருமா
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. காலிப்ளவர் - 1 சிறியது
2. பச்சைப் பட்டாணி - 50 கிராம்
3. தக்காளி - 1 எண்ணம்
4. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
5. மல்லித்தூள் - 2 மேசைக்கரண்டி
6. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
7. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
8. தேங்காய் துருவல் - 25 கிராம்
9. உப்பு - தேவையான அளவு
10. மல்லித்தழை - சிறிது
வறுத்து பொடிக்க:
11. பட்டை - 1 துண்டு
12. கிராம்பு - 2 எண்ணம்
13. சோம்பு - 1 தேக்கரண்டி
தாளிக்க:
14. எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
15. பட்டை - 1 துண்டு (சிறியது)
16. கிராம்பு - 1 எண்ணம்
17. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
18. கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை:
1. பச்சைப் பட்டாணியை 4 மணி நேரம் ஊற வைத்து, பின்னர் வேக வைத்துத் தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
2. முதலில் 300 மில்லி வெந்நீரில் முழு காலி பிளவரை போட்டு 5 நிமிடம் மூடி வைக்கவும். 5 நிமிடம் கழித்து காலிபிளவரை எடுத்துப் பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.
3. தக்காளியை சிறிய துண்டுகளாகவும், வெங்காயத்தை நீளவாக்கிலும் வெட்டி வைக்கவும்.
4. கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சோம்பு மூன்றையும் பொன்னிறமாக வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.
5. தேங்காயையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
6. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். பிறகு கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
7. வெங்காயம் பொன்னிறமானதும் பட்டை, கிராம்பு பொடி, வெட்டி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
8. நன்கு வதங்கியதும் காலிபிளவருடன் சிறிது தண்ணீர் தெளித்து வேகும் வரை நன்கு வதக்கவும்.
9. காலிபிளவர் நன்கு வெந்ததும் வேக வைத்துள்ள பட்டாணி, மிளகாய் தூள், சீரகத்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறிவிடவும்.
10. அதனுடன் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கொதிக்க விடவும்.
11. மசாலா வாடை மறையும் நிலையில், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்துக் கொதிக்க விடவும்.
12. குழம்பு கெட்டியானதும் மல்லித்தழையைச் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.