தட்டைப் பயறு மசாலா
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. தட்டைப் பயறு – 2 கப்
2. வெங்காயம் – 1 எண்ணம்
3. தக்காளி – 4 எண்ணம்
4. இஞ்சி – 1 துண்டு
5. பூண்டு – 6 பற்கள்
6. பச்சை மிளகாய – 2 எண்ணம்
7. பிரியாணி இலை – 1 எண்ணம்
8. கிராம்பு – 2 எண்ணம்
9. பட்டை – 1/2 துண்டு
10. சீரகம் – 1 தேக்கரண்டி
11. மிளகாய்த் தூள் – 3/4 தேக்கரண்டி
12. மல்லித்தூள் – 2 தேக்கரண்டி
13. மிளகுத்தூள் – 1/2 தேக்கரண்டி
14. மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
15. மல்லித்தழை – சிறிது
16. உப்பு – தேவையான அளவு
17. எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
1. தட்டைப்பயறை வெதுவெதுப்பான நீரில் குறைந்தது மூன்று நேரம் ஊற வைக்கவும்.
2. ஊற வைத்த தட்டைப்பயறைக் கழுவிப் பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர், உப்பு சேர்த்து வேகவைக்கவும்.
3. வேகவைத்த பயறைத் தண்ணீர் வடித்து வைக்கவும்.
4. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும்.
5. பின்பு அதில் தக்காளியைப் போட்டு நன்கு மசியும் வரை வதக்கி இறக்கிக் குளிர வைக்கவும்.
6. வதக்கிய கலவை நன்கு குளிர்ந்ததும், அதனுடன் சிறிது தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
7. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், பிரியாணி இலை, சீரகம், கிராம்பு, பட்டை சேர்த்துத் தாளிக்கவும்.
8. தாளிசத்துடன் அரைத்து வைத்ததைச் சேர்த்து, அத்துடன் மிளகுத்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.
9. பின் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, வேக வைத்துள்ள தட்டைப் பயறை சேர்த்துக் கலவை சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.
10. கடைசியில் நறுக்கி வைத்திருக்கும் மல்லித்தழையைத் தூவிக் கொள்ளவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.