முருங்கைக்கீரை சாம்பார்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. சுத்தப்படுத்திய முருங்கைக் கீரை – 1 கப்
2. துவரம் பருப்பு – 100 கிராம்
3. எண்ணெய் – 2 தேக்கரண்டி
4. தக்காளி – 1 எண்ணம்
5. மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
6. வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
7. கடுகு – 1/4 தேக்கரண்டி
8. சீரகம் – 1/2 தேக்கரண்டி
9. மிளகாய் வற்றல் – 1 எண்ணம்
10. மிளகாய்த்தூள் – 1/2 மேசைக்கரண்டி
11. மல்லித்தூள் – 1/4 மேசைக்கரண்டி
12. புளி – எலுமிச்சை அளவு
13. உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
1. பருப்பை மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
2. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும்.
3. இத்துடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
4. தக்காளி வதங்கியதும், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
5. இதில் முருங்கைக் கீரையை சேர்த்து அரை நிமிடம் வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
6. கீரை வெந்ததும் துவரம் பருப்பு, புளித் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
7. பச்சை வாசனை போனதும் இறக்கிப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.