தக்காளிக் குழம்பு
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. நாட்டுத் தக்காளி - 2 எண்ணம்
2. பெங்களூர் தக்காளி - 2 எண்ணம்
3. பச்சை மிளகாய் - 1 எண்ணம்
4. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
5. பூண்டு - 2 பல்
6. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
7. மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
8. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
9. தனியாத்தூள் - 2 தேக்கரண்டி
10. கடுகு - 1/2 தேக்கரண்டி
11. உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
12. கறிவேப்பிலை - சிறிது
13. மல்லித்தழை - சிறிது
14. எண்ணெய் - 3 கரண்டி
15. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. தக்காளி, வெங்காயம், மல்லித்தழையைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
3. ஒரு கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
4. பின்னர் அதில், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
5. வெங்காயம் நன்றாக வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் போட்டு வதக்கவும்.
6. அடுத்து அதில் நறுக்கிய தக்காளித் துண்டுகளைப் போட்டு, உப்பு சேர்த்து நன்கு மசிய வதக்கவும்.
7. பச்சை வாசனை போனதும், சீரகத்தூள் சேர்த்து சில நிமிடம் வதக்கி, தேவையான அளவு தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும்.
8. எண்ணெய் பிரிந்து வந்ததும், மல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.