காலிபிளவர் குழம்பு
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. காலி பிளவர் - 1 எண்ணம்
2. மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
3. சீரகம் - 1 கரண்டி
4. சோம்பு - 1 கரண்டி
5. பட்டை - 2 சிறிய துண்டு
6. கிராம்பு - 4 எண்ணம்
7. மிளகாய் வற்றல் - 3 எண்ணம்
8. மல்லி - 2 கரண்டி
9. தக்காளி - 1 எண்ணம்
10. கடுகு - 1 கரண்டி
11. உளுத்தம் பருப்பு - 1 கரண்டி
12. சின்ன வெங்காயம் - 7 எண்ணம்
13. இஞ்சி பூண்டு விழுது - 1 கரண்டி
14. தேங்காய்த் துருவல் - 1/4 கப்
15. எண்ணெய் - தேவையான அளவு
16. உப்பு - தேவையான அளவு
17. கருவேப்பிலை - சிறிது
18. மல்லித்தழை - சிறிது.
செய்முறை:
1. காலிபிளவரை துண்டுகளாக நறுக்கி நன்கு சுத்தம் செய்து கழுவிக் கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் தண்ணீர், உப்பு மற்றும் மஞ்சள் தூள் போட்டுக் கொதிக்க வைத்து, அதில் காலிபிளவரைப் போட்டுச் சிறிது நேரம் ஊற வைக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் சோம்பு, சீரகம், உளுத்தம் பருப்பு, பட்டை, கிராம்பு, மல்லி, மிளகாய் வற்றல், சின்னவெங்காயம், கருவேப்பிலை ஆகியவை சேர்த்து வதக்கவும்.
4. வதக்கிய பொருட்களைச் சிறிது நேரம் ஆற வைத்து, அதனுடன் தேங்காய்த் துருவல், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
5. குக்கரில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், பொடியாக நறுக்கிய தக்காளி, கடுகு சேர்த்து வதக்கவும்.
6. கொதிக்க வைத்த தண்ணீரில் உள்ள காலிபிளவரின் தண்ணீரை வடித்துவிட்டு, அதனைக் குக்கரில் வதக்கிய பொருட்களுடன் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
7. தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு போட்டு குக்கரை மூடி 3 அல்லது 4 விசில் வரும்வரை வேக வைக்கவும்.
8. குழம்பு தயாரானதும் மல்லித்தழை தூவி பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.