உடனடி இட்லி சாம்பார்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. துவரம்பருப்பு - 25 கிராம்
2. பாசிப்பருப்பு - 25 கிராம்
3. கடலைப்பருப்பு - 25 கிராம்
4. தக்காளி - 1 எண்ணம்
5. பச்சை மிளகாய் - 1 எண்ணம்
6. சின்ன வெங்காயம் - 4 எண்ணம்
7. சாம்பார் பொடி - 1 மேஜைக்கரண்டி
8. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
9. பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
10. மல்லித்தழை - சிறிது
11. உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
12. எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
13. கடுகு - 1/2 தேக்கரண்டி
14. உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
15. சின்ன வெங்காயம் - 4 எண்ணம்
16. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
1. அடுப்பில் வாணலியை வைத்துச் சூடானதும் துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு மூன்றையும் போட்டு நன்கு வறுத்து சிறிது நேரம் ஆறவிடவும்.
2. மூன்று பருப்புகளும் ஆறிய பிறகு மிக்சியில் திரித்துப் பொடியாக்கிக் கொள்ளவும்.
3. திரித்து வைத்துள்ள பொடியைச் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
4. தக்காளியை பொடிதாகவும், வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் நீளவாக்கிலும் வெட்டி வைக்கவும்.
5. வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றிச் சூடானதும் முழு வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
6. தக்காளி நன்கு வதங்கியதும் அதனுடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறவும்.
7. பிறகு உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து மசாலா வாடை போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
8. பிறகு கலக்கி வைத்துள்ள பொடியை சேர்த்து மல்லித்தழையும் சேர்த்து அடுப்பை அணைத்து இறக்கிச் சாம்பாரை வேறு பாத்திரத்துக்கு மாற்றிக் கொள்ளவும்.
9. தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைக் கொண்டு தாளித்துச் சாம்பாரில் கலந்து பரிமாறலாம்.
குறிப்பு:
திரித்து வைத்திருக்கும் பொடியைச் சேர்த்துக் கொதிக்க வைக்க கூடாது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.