1. கொள்ளு - 100 கிராம்
2. சீரகம் - 1 தேக்கரண்டி
3. மிளகு - 1 தேக்கரண்டி
4. மல்லி - 1/2 தேக்கரண்டி
5. பூண்டு - 5 பற்கள்
6. தக்காளி - 1 எண்ணம்
7. கருவேப்பிலை - சிறிது
8. மல்லித்தழை - சிறிது
9. மிளகாய் வற்றல் - 2 எண்ணம்
10. புளி -சிறிது
11. கடுகு, உளுந்து - 1/2 தேக்கரண்டி
12. மஞ்சள் தூள் - சிறிது
13. பெருங்காயம் - சிறிது
14. நல்லெண்ணெய் - தேவையான அளவு
15. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. கொள்ளை சுத்தம் செய்து, அதிலுள்ள தூசிகளை நீக்கிக் கருகாமல், கொள்ளை வறுக்கவும்.
2. வறுத்த கொள்ளை ஆறியபிறகு, மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.
3. புளியை சிறிது தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும்.
3. தக்காளி, பூண்டு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, மல்லித்தழை என்று அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
4. அரைத்த அனைத்துப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து, அதில் ஊற வைத்துள்ள புளியைக் கரைத்து வடிகட்டிச் சேர்க்கவும்.
5. அதனுடன் மூன்று டம்ளர் தண்ணீரை சேர்த்து, அத்துடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கலக்கவும்.
6. ஒரு கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய்வற்றல், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
7. கரைத்து வைத்துள்ள அனைத்தையும் தாளிசத்துடன் சேர்த்து, நன்கு நுரை வரும் வரை சூடாக்கி, நுரை வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.