பனீர் பட்டர் மசாலா
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பனீர் – 1/4 கிலோ
2. பச்சைப் பட்டாணி – 150 கிராம்
3. பெரிய வெங்காயம் – 200 கிராம்
4. தக்காளி – 200 கிராம்
5. பச்சை மிளகாய் – 3 எண்ணம்
6. மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
7. இஞ்சிப்பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
8. சீரகம் – 1/2 தேக்கரண்டி
9. வெண்ணெய் – 100 கிராம்
10. மல்லித்தூள் – 3 தேக்கரண்டி
11. மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி
12. முந்திரி – 100 கிராம்
13. மல்லித்தழை – சிறிது
14. எண்ணெய் – தேவையான அளவு
15. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் சீரகம் போட்டு வெடித்ததும், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
2. பின்னர் அதில் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும், பச்சை வாசனை நீங்கியதும், அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
3. அத்துடன் மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பனீர், பச்சைப் பட்டாணி என அனைத்தையும் சேர்த்து வதக்கி வேகவிட வேண்டும்.
4. அத்துடன் உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் வேக வைக்க வேண்டும்.
5. கடைசியாக இறக்கும் பொழுது வெண்ணெய், முந்திரிப் பருப்பு சேர்த்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.