தக்காளி குருமா
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. வெங்காயம் – 2 எண்ணம்
2. தக்காளி – 2 எண்ணம்
3. சாம்பார் பொடி – 3/4 தேக்கரண்டி
4. மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
5. உப்பு – தேவையான அளவு
6. தேங்காய் துருவல் – 1/4 கப்
7. பச்சை மிளகாய் – 5 எண்ணம்
8. சோம்பு – 1/2 தேக்கரண்டி
9. வறுகடலை – 1 மேசைக்கரண்டி
10. எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
11. பட்டை – 1 சிறிய துண்டு
12. கிராம்பு – 2 எண்ணம்
செய்முறை:
1. தேங்காய், சோம்பு, பச்சை மிளகாய், வறுகடலை ஆகியவற்றைச் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
2. கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், பட்டை, கிராம்பு போட்டுத் தாளிக்கவும்.
3. பின்னர் அதில், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
4. பின்பு பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து மேலும் சில நிமிடங்கள் வதக்கவும்.
5. தக்காளி குழைந்தவுடன் சாம்பார்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
6. அரைத்த தேங்காய் மசாலாவை ஊற்றி, அதில் தண்ணீர் சேர்த்து, உப்பு சரிபார்த்துக் கொள்ளவும்.
7. நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும்.
குறிப்பு:இட்லி, தோசை, பூரி, சப்பாத்திக்கு தக்காளி குருமா சிறப்பாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.