முருங்கைக்காய் சாம்பார்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. துவரம் பருப்பு – 150 கிராம்
2. சின்னவெங்காயம் – 10 எண்னம்
3. தக்காளி – 2 எண்ணம்
4. முருங்கைக்காய் – 1 எண்ணம்
5. பச்சை மிளகாய் – 1 எண்ணம்
6. கடுகு – 1 தேக்கரண்டி
5. வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
6. பெருங்காயத்தூள் – சிறிது
7. புளி - நெல்லிக்காய் அளவு
7. கருவேப்பிலை - சிறிது
8. மல்லித்தழை - சிறிது
9. எண்ணெய் - தேவையான அளவு
10. உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. புளியைச் சிறிது தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.
2. பருப்பை தண்ணீர் சேர்த்து வேக வைத்து, பின்னர் அதனை மசித்து வைக்கவும்.
3. கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு சேர்த்து கடுகு பொரிந்தவுடன் வெந்தயம் சேர்த்து வறுக்கவும் அதில் சிறிது பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
4. அடுத்து நாம் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
5. அதில் கருவேப்பிலையைப் போட்டு வதக்கவும்.
6. அதில் நறுக்கி வைத்த தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
7. பின்னர் அதில் நறுக்கி வைத்திருக்கும் முருங்கைக்காய் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும்.
8. அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் மூடி போட்டு வேக வைக்கவும்.
9. காய் நன்கு வதங்கியதும், அதில் அரைத்து வைத்துள்ள சாம்பார் பொடி போட்டு நன்கு கலந்து விடவும்.
10. கரைத்து வைத்துள்ள புளித் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.
11. வேக வைத்து, மசித்த பருப்பைச் சேர்க்கவும்.
12. கடைசியாகத் தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்துவிட்டு நன்கு கொதிக்கவிட்டு இறக்கலாம்.
குறிப்பு: இட்லி, தோசை, சப்பாத்திக்கு இந்தக் குருமா ருசியாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.