கருணைக்கிழங்கு குழம்பு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. கருணைக்கிழங்கு - 100 கிராம்
2. பூண்டு - 10 பற்கள்
3. சிறிய வெங்காயம் - 10 எண்ணம்
4. தக்காளி - 1 எண்ணம்
5. சாம்பார் தூள் - 1 தேக்கரண்டி
6. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
7. புளி - எலுமிச்சம்பழ அளவு
8. நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
9. கடுகு - 1/2 தேக்கரண்டி
10. உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
11. வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
12. கறிவேப்பிலை - சிறிது
13. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. புளியை தண்ணீரில் ஊற வைத்துக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
2. புளிக்கரைசலுடன் தேவையான அளவு தண்ணீரைச் சேர்த்துத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
3. கருணைக்கிழங்கை கழுவித் தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டித் தண்ணீரில் போட்டு வைக்கவும்.
4. பூண்டு, வெங்காயம், தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
5. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து சிவக்க வறுக்கவும்.
6. அத்துடன் பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
7. பின்னர் தக்காளியைச் சேர்த்து சற்று வதக்கிய பின், அதில் கருணைக்கிழங்கைச் சேர்த்துக் கிளறி விடவும்.
8. அதில் சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்துக் கிளறவும்.
9. பின்னர் அதில் நாம் முன்பு தயாரித்து வைத்திருக்கும் புளித்தண்ணீர், உப்பு சேர்த்துக் கலக்கி, மிதமான நெருப்பில் வேக விடவும்.
10. கருணைக் கிழங்கு வேகும் வரை மூடி போட்டு வேக விடவும். குழம்பு நன்றாகக் கொதித்து, கிழங்கும் வெந்தவுடன் இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.