கருணைக் குழம்பு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. கருணைக் கிழங்கு - 1/4 கிலோ
2. சின்ன வெங்காயம் - 10 எண்ணம்
3. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
5. மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
6. தேங்காய் - 1 மூடி
7. புளி - எலுமிச்சை அளவு
8. சீரகம் - 2 தேக்கரண்டி
9. எண்ணெய் - தேவையான அளவு
10. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. கருணைக்கிழங்கை வேக வைத்து வட்டமாகத் துண்டு செய்து கொள்ளவும்.
2. வெங்காயம், மிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
3. புளியைத் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
4. தேங்காயை அரைத்துப் பாலாக எடுத்து வைக்கவும்.
5. சீரகத்தை வறுத்துப் பொடித்து வைக்கவும்.
6. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் சீரகம், மஞ்சள் தூள் போட்டுத் தாளிக்கவும்.
7. தாளிசத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
8. வதக்கியவற்றுடன் புளிக்கரைசல், உப்பு போட்டு அடுப்பில் வைத்து மூடிக் கொதிக்க வைக்கவும்.
9. நன்றாகக் கொதித்ததும் தேங்காய்ப் பால், வேக வைத்த கிழங்கை சேர்த்து மிதமான நெருப்பில் கொதிக்க வைக்கவும்.
10. குழம்பில் எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.