திடீர் மோர்க் குழம்பு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. லேசாக புளித்த மோர் - 1 கப்
2. கடலை மாவு - 2 தேக்கரண்டி
3. கடுகு - 1/4 தேக்கரண்டி
4. உளுந்து - 1/4 தேக்கரண்டி
5. சீரகம் - 1/4 தேக்கரண்டி
6. பெருங்காயத்தூள் - சிறிது
7. மஞ்சள் தூள் - சிறிது
8. மிளகாய் - 2 எண்ணம்
9. எண்ணெய் - 2 தேக்கரண்டி
10. கறிவேப்பிலை - சிறிது
11. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. சிறிது தண்ணீரில் கடலை மாவு, மோர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கட்டி இல்லாமல் கரைத்து வைக்கவும்.
2. மிளகாயைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், கடுகு, உளுந்து, சீரகம், பெருங்காயத்தூள், மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
4. தாளிசத்துடன் கடலை மாவு, மோர்க் கரைசலைச் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி வைக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.