மோர் குழம்பு
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. கட்டியான மோர் -1 கப்
2. வெண்டைக்காய் - 6 எண்ணம்
3. மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி
4. உப்பு -தேவையான அளவு
5. கறிவேப்பிலை - சிறிது
6. தேங்காய் எண்ணெய் -2 தேக்கரண்டி
7. கடுகு - 1/2 தேக்கரண்டி
8. வெந்தயம் -3/4 தேக்கரண்டி
9. தேங்காய்த் துருவல் -1/2 கப்
10. பச்சை மிளகாய் - 4 எண்ணம்
11. சீரகம் -3/4 தேக்கரண்டி.
செய்முறை:
1. தேங்காய்த்துருவல், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி அதில் மஞ்சள் தூள், கறிவேப்பிலை, நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
3. பின்னர் அதில் அரைத்த விழுதைச் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
4. அத்துடன் மோரைச் சேர்த்து மிதமான நெருப்பில் கொதிக்க விடவும்.
5. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்துச் சேர்த்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.