தக்காளி சாம்பார்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. துவரம்பருப்பு - 1/4 கப்
2. பாசிப்பருப்பு - 1/4 கப்
3. வெங்காயம் - 1 எண்ணம்
4. தக்காளி - 4 எண்ணம்
5. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
6. மல்லித்தழை - சிறிது
7. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
8. கடுகு - 1/4 தேக்கரண்டி
9. உளுந்து - 1/4 தேக்கரண்டி
10. பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
11. கறிவேப்பிலை - சிறிது
12. உப்பு - தேவையான அளவு
13. எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
2. துவரம்பருப்பு, பாசிப்பருப்பு ஆகியவற்றைத் தண்ணீர் ஊற்றி, மஞ்சள்தூள் கலந்து குழைவாக வேகவைக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
4. தாளிசத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
5. பின் நறுக்கி வைத்த தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.
6. வேக வைத்த பருப்புகளைச் சேர்த்து கொதி வரவும், மல்லித்தழை தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.